Total Pageviews

71,491

Monday, May 20, 2013

புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் 'QE2'

'QE2' எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல்லானது கேம்பிரிட்ஜிலுள்ள மைனர் கோள் நிலையத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.7 மைல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம் திகதி இரவு 959 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியை இவ்விண்கல் கடந்து செல்லவுள்ளது. மேலும் இவ்விண்கல்லினால் புவிக்கு ஆபத்துகளும் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விண்கல் தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் பிரதம ஆராய்ச்சியாளர் கலாநிதி லேன்ஸ் பென்னர் கூறியுள்ளார்.

இவ்விண்கல் முதன் முதலில் 1998ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


By AM.Rizath/Metronews