சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Friday, May 20, 2016

மீண்டும் உயிர் பெறும் வூலி மமத்!!!

பூமியில் அழிவடைந்த உயிரினங்களான டைனோஸர்கள், வுலி மமத், டூடோ போன்றவை மீண்டும் பூமியில் புத்துயிர் பெற்று வாழ ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

கற்பனைகளை நாம் தவளவிடும்போதே விஞ்ஞானிகள் அதனை நடக்க வைக்க திட்டமிட்டுவிட்டார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துவிட்ட உயிரினங்கள் தொடர்பாக பல்வேறு தகல்களை வெளியிட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் அவற்றை பூமியில் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.



டைனோசோர்கள், டூடோ, வூலி டைனோஸர் போன்ற பல விலங்குளின் எச்சங்களைக் கொண்டு அவ்வுயிரினம் தொடர்பில் நீண்டாகலமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முற்றாக அழிவவடைந்துவிட்டதாக நம்பபப்படும் வூலி மமத் என அழைக்கப்படும் மயிர்களைக்கொண்ட ஒரு வகை யானையும் ஒன்று.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக அறிவியில் உலகம் நம்பபும் டைனோஸோர்களின் எச்சங்கள் கிடைப்பது போல விஞ்ஞான ரீதியாக அண்மையில் அதாவது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் வரையில் வாழ்ந்த வூலி மமத்களின் எச்சங்களும் மீட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த வூலி மமத்தினையும் மீண்டும் உயிர்கொடுத்து பூமியில் நடமாடவிடும் முயற்சியினை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தினை ரஷ்ய மற்றும் கொரிய விஞ்ஞானிகள் முன்னெடுக்கின்றனர்.

குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியாது. அது கடவுள் நம்பிக்கை மற்றும் வேறுபல காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மறைந்த உயிரினத்தினத்திற்கு புத்துயிர் இந்த திட்டத்திற்கு எதிர்காலத்தில் எதிர்ப்புக்ள வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகின் முதலாவது குளோனிங் முறையிலான 'டோலி' எனும் ஆட்டை உருவாக்கிய தண்டுக் கலம் தொடர்பான விஞ்ஞானி சேர் இயன் வில்மட் இத்திட்டம் தொடர்பில் கூறுகையில், வரலாற்றுக்கு முந்தைய விலங்கினை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜுரஸ்ஸிக் பார்க் திரைப்படத்தின் மூலமாகவே இந்த சிந்தனை தோன்றியதாகவும் இத்திட்டத்தினால் அழிவடைந்த விலங்கினை மீண்டும் உலகில் நடமாடச் செய்யமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையில் மீட்கப்பட்டுள்ள மமத்தின் எச்சங்களிலிருந்து செயற்திறன்மிக்க டி.என்.ஏ.யினை பெறுவது சவாலான ஒரு வியடம். ஆனால் இதனை மீறி அவற்றைப் பெற்றால் பிரயோசமானதும் ஆர்வமானதுமான விடயங்களை மேற்கொள்ள முடியும்.



கடந்த வருடம் சைபீரியாவிலிருந்து குளிரில் உறைந்த நிலையில் மீட்கப்பட்ட மமத்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றில் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட யூகா என்ற குழந்தை பெண் மமத் ஒன்று உள்ளது. இதுவே சுமார் 39 ஆயிரம் வருடங்கள் பழைமையானது. தற்போது இந்த யூகா ஜப்பானில் கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மாதிரிகள் சிலவற்றை தென் கொரியா மற்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளில் பல ஆயிரம் வருடங்களாக பனியில் உறைந்தவை. குளிரில் விரைவாக டி.என்.ஏ சிதைவடையக்கூடியது. எனவே இம்மாதிரிகளிலிருந்து செயற்திறனான டி.என.ஏ.யை பெறுவது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக அமையும் எனத் கூறியுள்ளார் சேர் இயன் வில்மட்.

முளைய வளர்ப்பு முறையினை விட நவீன தண்டுக் கல தொழில்நுட்பத்தினால் உறைந்த கலங்களிலிருந்து சிறந்த கலங்களை பிரித்தெடுக்கலாம். இந்த முறையில் ஏற்கெனவே எலி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தண்டுக் கல தொழில்நுட்பம் 50 வருடங்களுக்கு முன்னர் வளர்ச்சி பெற்றிருந்தால் வூலி மமத்தினை உருவாக்கியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உறைந்த உடலிலிருந்து சிறந்த கலங்கள் பிரித்தெடுக்க முடியாவிட்டால் மீண்டும் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்கான சாத்தியம் குறைவு எனக் கூறப்படுகின்றது.

இருப்பினும் இத்திட்டம் சாத்தியப்பட்டால் பாடப் புத்தகங்களில் மட்டும் பார்த்தறிந்த வூலி மமத்தினை நாம் நேரிலும் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகும் என்பது அறிவியல் உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது.

(இவ்வாக்கம் ஏற்கனவே பாத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

-அமானுல்லா எம். றிஷாத்.
(இந்த வலைப்பூவிலிருந்து ஈ அடிக்கும் பட்சத்தில் எழுதியவரின் பெயரையும் சேர்ந்து ஈயடிக்குமாறு ஈயடிச்சான் தொழில்நுட்பவியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.)

Friday, June 21, 2013

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்? : நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.


சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதி;த்ததன் பின்னர் அது உண்­மையா? பொய்யா? என்ற பட்­டி­மன்றம் நடத்­தாத குறை­யாக பல விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.


இக்­குற்­றச்­சாட்டு இன்­றில்லை பல கால­மா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் முற்­றுப்­புள்ளி இல்­லாமல் நீண்டு செல்லும் இந்த விட­யத்தில் அண்­மையில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வித­மாக தக­வ­லொன்று வெளி­யா­கி­யுள்­ளது.


நீல் ஆம்ஸ்ட்ரோங் உண்­மையில்  சந்­தி­ர­னுக்கு செல்­ல­வில்லை எனவும் அது என் கண­வ­ரினால் பட­மாக்­கப்­பட்ட திரைப்­ப­டமே என முறைந்த முன்னாள் ஹொலிவூட் இயக்­கு­ன­ரான ஸ்டேன்லி கியூப்­ரிக்கின் மனைவி தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் கூறப்­ப­டு­கி­றது.


அதா­வது முதன் முத­லாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் போது நேரடி ஒளி­ப­ரப்பு என அமெ­ரிக்கா காண்­பித்த வீடி­யோ­வா­னது ஏற்­க­னவே படப்­பி­டிப்பு தள­மொன்று அமைத்து பட­மாக்­கப்­பட்ட காட்சி எனவும் அதில் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.


விஞ்­ஞானப் புனை­க­தை­களில் அதிக ஆர்வம் கொண்ட ஹொலிவூட் திரைப்­ப­டத்­துறை கலை­ஞர்கள் குறித்த படப்­பி­டிப்பை அமெ­ரிக்க படைகள் மட்டும் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சில நாட்­க­ளாக செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட செட் ஒன்றில் வைத்து பட­மாக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.


அமெ­ரிக்­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் ஏமாற்­றிய அந்த நிலவில் பதிக்கும் காட்­சியில் உண்மைத் தன்மை இல்லை என ஏற்­க­னவே அமெ­ரிக்க விஞ்­ஞானி ரால்ப் ரெனி, விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர் பில் கேசிங் உள்­ளிட்ட உலகின் பல அறி­வி­ய­லா­ளர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.


இந்­நி­லையில் கியூப்­ரிக்கின் மனை­வியின் தகவல் மேலும் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.


உல­கி­லேயே விண்­வெளி ஆராய்ச்­சி­க­ளுக்கு வித்­திட்டு முன்­னோ­க­ளாக திகழ்ந்­ததும் நில­வினைப் பற்­றிய ஆராய்ச்­சி­களை முதன் முதலில் ஆரம்­பித்­ததும் சோவியத் யூனி­யன்தான். அவர்கள் 1930ஆம் அண்­டி­லேயே நிலவின் மீதான ஆரா­ய்ச்­சி­களை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும்  நில­விற்கு விண்­க­லத்­தினை முதன் முதலில் ஆளில்லா  விண்­க­லத்­தினை அனுப்­பி­ய­துடன் இரு­ப­துக்கும் மேற்­பட்ட ஆளில்லா விண்­க­லங்­களை சந்­தி­ர­னுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.


இதன் உச்­சக்­கட்­ட­மாக 1957ஆம் ஆண்டு "லைகா" எனும் நாயை வைத்து சந்­தி­ர­னுக்கு  விண்­க­ல­மொன்­றினை அனுப்­பினர். இதுவே உயி­ரி­ன­மொன்று சந்­தி­ர­னுக்கு சென்ற முதல் சந்­தர்ப்­ப­மாகும். இவர்கள் அனுப்­பிய "லைகா" நாயா­னது எது­வித ஆபத்­து­மின்றி புவிக்கு திரும்­பி­ய­த­னை­ய­டுத்து உல­கமே சோவியத் யூனியன் பக்கம் தலை நிமிர்ந்து பார்த்­தது. இந்த வெற்­றி­களைத் தொடர்ந்து மனி­த­னையும் சந்­தி­ர­னுக்கு அனுப்ப முடிவு செய்­தது.


இதற்­காக சோவியத் யூனி­யனைச் சேர்ந்த மூன்று பேரை சோதனை முயற்­சி­யாக நில­விற்கு அனுப்பும் முயற்­சியின் போது அவர்­களை ஏற்­றிச்­சென்ற ரொக்கெட் புறப்­பட்ட சில மணி நேரத்­தி­லேயே வெடித்துச் சித­றி­யது. அதில் பய­ணித்த மூவரும் உயி­ரி­ழந்­தனர். இதனால் மூன்று உயிர்­களை காவு­கொண்ட வருத்­தத்தில் சோவியத் யூனியன் மனித உரி­மைக்கு எதி­ராக செயற்­பட்­ட­தாக கூறி நில­விற்கு மனி­தர்­களை அனுப்பும் சோதனை முயற்­சி­யி­லி­ருந்து பின் வாங்­கி­யது.


இந்­நி­லையில் சோவியத் யூனி­ய­னுடன் பனிப் போரி­லி­ருந்த அமெ­ரிக்கா சந்­திரன் தொடர்­பான ஆராய்ச்­சியில் முன்­னிலை பெற முடிவு செய்து நில­வுக்கு மனி­தர்­களை அனுப்பும் திட்­டத்­தினை துரிப்­ப­டுத்­தி­யது.  பின்னர் நீல் ஆம்ஸ்ட்­ரோங்கை விண்ணில் நிலவை நோக்கி அனுப்பி மண்ணில் மைந்­த­னாக பெய­ரெ­டுத்­தது அமெ­ரிக்கா.


ஆனால் அந்த பெய­ருக்கு தகுதி உடை­ய­து­தானா அமெ­ரிக்கா என கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது நீல் ஆம்ஸ்ட்­ரோங்கின் நிலவை நோக்­கிய அமெ­ரிக்­காவின் பயணம். அந்த பய­ணத்தை அன்று 1969 ஜுலை 16ஆம் திகதி நேர­டி­யாக சந்­தி­ரனில்  கால்­ப­திக்கும் காட்­சியை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா. ஆனால் அந்த காட்சி ஒரு திரைப்­ப­ட­மாக்க உரு­வாக்­கிய விஞ்­ஞானப் புனைக்­கதை போன்­றது என பலரும் கூறு­கி­றார்கள்.


ஏன் அமெ­ரிக்­காவின் வீடியோ பதிவு உண்மை இல்லை என்ற பல­மான கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. வடி­வே­லுவின் பாணியில் பேய் இருக்கா? இல்­லையா? பார்த்­தி­ருங்­காய்ங்­களா? பார்க்­கல்­லையா? என்­ற­வா­றானா கேள்­விகள், நீல் ஆம்ஸ்ட்ரோங் விட­யத்­திலும் ஏற்­படக் காரணம் என்ன? அப்­படி என்ன விட­யங்கள் தவ­றான விதத்தில், அந்த நிலவில் கால் பதித்த வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளது எனக் அறி­வி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றார்கள் என பார்ப்போம்.


#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?

#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?

#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?

#அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?

#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல்  ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான தர்க்க ரீதி­யான வாதங்­களும் அறி­வியல் ரீதி­யான வாதங்­களும் அறி­வி­ய­லா­ளர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த நிகழ்வு நடை­பெற்று சுமார் 44 ஆண்டுகள் நிறைவு பெறும் தறுவாயிலும் அதன் உண்மைத் தன்மை குறித்த சர்ச்சை கள் நிலவுவது துரதிர்ஷ்டமே.

ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவின் கால் பதித்த நிகழ்வு தொடர்பில் நாசாவிற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நாசா தவிர்த்து வந்ததாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உண்டு.

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்புகின்ற இவ்விடயத்திற்கு உண்மையில் யார் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்தார் என்ற விடையுடன் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதுவரை சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பதுதான் பதில்.

-அமானுல்லா எம். றிஷாத்


Tuesday, June 11, 2013

பாடசாலைக்கு சென்று படித்து வரும் ரோபோ

அமெ­ரிக்­காவில் இரு­தய கோளாறினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மாண­விக்குப் பதி­லாக ரோபோ ஒன்று பாட­சா­லைக்கு சென்று படித்து  வரு­கின்­றது.

அமெ­ரிக்­காவில் சவூத் கரோ­லினா அரு­கே­யுள்ள சுமேடர் நகரைச் சேர்ந்­தவள் லெஸி (9). இவள் அங்­குள்ள ஒரு தனியார் பாட­சா­லையில் படித்து வரு­கிறாள். பிற­வி­யி­லேயே இரு­தய கோளா­றினால் பாதிக்­கப்­பட்ட இவளால் சரி­வர பாட­சா­லைக்கு செல்ல முடி­ய­வில்லை.

இதனால் பாடங்கள் பாதிக்­காமல் இருக்க அவ­ரது பெற்றோர் அவ­ளுக்கு புது­வி­த­மான ரோபோ  ஒன்றை வாங்கி கொடுத்­துள்­ளனர். தற்­போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதி­லாக பாட­சா­லைக்கு சென்று பாடங்­களை படித்து வரு­கி­றது. 'வி.ஜி.ஓ.' என அழைக்­கப்­படும் இந்த ரோபோ 4 அடி உய­ரமும், 18 இறாத்தல் எடையும் கொண்­டது.

இதன் முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ரோபோவில் கெமரா மற்றும் இணைய வச­தியும் உள்­ளது. பாட­சா­லைக்கு செல்­லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்­த­ப­டியே கம்ப்­யூட்­டரில் மவுஸ் மூலம் இயக்­கு­கிறாள்.

வகுப்­ப­றைக்கு செல்லும் ரோபோ வின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்­யூட்­டரில் தெரி­கி­றது. அதே வேளை, வகுப்­ப­றையில் ஆசி­ரி­யர்கள் நடத்தும் பாடங்­களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடி­யோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்­யூட்­டரில் ஒளி­ப­ரப்பும். அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசி­ரி­யர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாண­வர்­க­ளையும் பார்த்து தெரிந்து கொள்­கிறாள்.

இதை வைத்து வீட்டில் இருந்­த­ப­டியே பாடம் படித்து பரீட்சை எழுதி வரு­கிறாள். இந்த ரோபோ­வுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்­கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு 'இளவரசி வி.ஜி.ஓ.' என அன்புடன் பெயரிட்டு இருக்கிறாள்.

By: Metronews.lk

Saturday, June 8, 2013

3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்படும் கார் இன்னும் இரு வருடங்களில் வீதியில் ஓடும்

தொலை­தூ­ரத்தில் உள்­ள­வர்­க­ளுடன் தொலை­பேசி மூலம் பேசு­வ­தற்கு கற்றுக் கொண்ட மனிதன் பின்னர் காகித ஆவ­ணங்­களை பெக்ஸ் மூலம் அனுப்பத் தொடங்­கினான்.

அதன்பின் இணையம் ஊடாக புகைப்­ப­டங்கள், வீடியோ மற்றும் பல்­வேறு மென்­பொ­ருட்­களை அதன் தரம் மாறாமால் அனுப்பும் தொழில்­நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இப்­போது இவற்­றை­யெல்லாம் பின்­தள்ளும் விதத்தில் 3டி பிரிண்டிங் எனும் முப்­ப­ரி­மாண அச்­சிடல் இயந்­தி­ரங்கள் மூலம் முப்­ப­ரி­மாண பொருட்­க­ளையும் அனுப்பும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

அமெ­ரிக்­காவில் அண்­மையில் துப்­பாக்­கி­யொன்று 3டி பிரிண்டிங் மூலம் அனுப்­பப்­பட்­டது. இந்­த­வ­ரி­சையில் 3டி பிரிண்டிங் மூலம் உரு­ வாக்­கப்­பட்ட கார் இன்னும் இரு வரு­டங்­க­ளுக்குள் வீதியில் ஓடும் என்­கி­றது ஸ்ட்ராடேஸிஸ் எனும் இஸ்­ரே­லிய நிறு­வனம்.

கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் எனும் நிறு­வ­னத்­துடன் இணைந்து இக்­காரை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையில் மேற்­படி நிறு­வனம் ஈடு­பட்­டுள்­ளது.

இந்த காருக்கு என URBEE 2 பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. “ 3டி பிரிண்டிங் மூலம் உரு­வாக்­கப்­பட்ட கார் வீதிக்கு வரும்நாள் வெகு தொலைவில் இல்லை. எரி­பொருள் சிக்­கனத் தன்­மை­யு­டை­ய­தாக இந்த காரை நாம் தயா­ரிக்­கிறோம்” என கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் நிறு­வ­னத்தை சேர்ந்த ஜிம் கோர் தெரி­வித்­துள்ளார்.

வழக்­க­மான கார்கள் நூற்­றுக்­க­ணக்­கான அல்­லது ஆயி­ரக்­க­ணக்­கான சிறிய பாகங்­களைக் கொண்­டுள்ள போதிலும் URBEE 2 காரா­னது 40 பாகங்களையே கொண்டிருக்கும்.

இதனால் இக்காரை 3 பிரிண் டிங் மூலம் உருவாக்குவது சாத் தியமானதாகும்” என அவர் கூறி யுள்ளார்.



Wednesday, June 5, 2013

உருண்டையான கார்

ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.

இச்வான் நூர் எனும் இக்கலைஞர் 1953 ஆம் ஆண்டின் வொக்ஸ்வொகன் பீட்டில் காரொன்றை இவ்வாறு பாரிய உருண்டை வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அண்மையில் ஹொங்கொங்கில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இந்த கார் உருண்டையை இச்வான் நூர் காட்சிப்படுத்தினார்.

இது முன்னர் வீதியில் ஓடிய கார் என்று நம்புவதற்கு கடினமான வகையில் முழு உருண்டை வடிவில் இக்கார் உருமாற்றப்பட்டுள்ளது. இக்காரின் சமிக்ஞை விளக்குகள் போன்ற சிறிய பாகங்கள்கூட அகற்றப்படவோ நீக்கப்படவோ இல்லை. அனைத்து பாகங்களையும் உள்தள்ளி அல்லது சற்று வெளித்தள்ளி இந்த உருண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

50 வயதான இச்வான் நூர், ஏற்கெனவே மற்றொரு வொக்ஸ்வொகன் காரை செவ்வகமாக உருமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, May 30, 2013

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ் : எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.


'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.

தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.

அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

By : AM. Rizath / Metronews

Wednesday, May 29, 2013

இது சைவ முட்டை : அமெரிக்காவில் தாவரங்களிலிருந்து முட்டை தயாரிப்பு

அமெரிக்க உணவு நிறுவனம் கோழி முட்டைக்கு பதிலாக தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, "ஹாம்டன் க்ரீக் புட்ஸ்' நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் உதவியுடன் முட்டை தயாரித்து வருகிறது.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர்  கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள் முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட்டை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

Tuesday, May 28, 2013

மணிக்கு 263 கி.மீ வேகத்தில் ரொக்கெட் துவிச்சக்கரவண்டியை செலுத்தி சாதனை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மணிக்கு 263 கி.மீ வேகத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.


பிரான்கொய்ஸ் கிஸ்ஸி என்ற இளைஞனே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது சாதாணரமான துவிச்சக்கரவண்டி போன்றதுததான். ஆனால் இதில் ஹைட்ரஜன் பேரொக்சைடில் இயங்கும் ரொக்கட் சாதனத்தைப் பொருத்தி பிரான்கொய்ஸே இந்த துவிச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார்.


இந்த துவிச்சக்கரவண்டியைக்கொண்டு பிரானஸின் வடகிழக்கு பகுதிலுள்ள மன்ச்ஹொவுஸ் என்ற இடத்திலுள்ள பழைய ரன் வே ஒன்றிலே இச்சாதனை நிகழத்தப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் சென்ற இந்த துவிச்சக்கரவண்டிக்கு 'ரொக்கெட் துவிச்சக்கரவண்டி' என பிரான்கொய்ஸ் பெயரிடப்பட்டுள்ளது.


இது குறித்து பிரான்கொய்ஸ் கூறுகையில், ஹைட்ரஜன் பேரொக்சைட் நிரப்பப்பட்டிருக்கும் ரொக்கெட் மூலமே இந்த சைக்கிள் மிக வேகமாக ஓடுகிறது. இதனால் எதுவிதமான தீங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே துவிச்சக்கரவண்டியில் மணிக்கு 242.6 கி.மீ வேகத்தில் சென்றமையே சாதனையாக இருந்தது. இச்சாதனை 2002ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செயற்கை புற்கள் பதிக்கப்பட்ட செருப்புகள்

வெறுங்காலுடன் புற்களில் நடந்து செல்வதற்கு பலரும் விரும்புவதுண்டு.  இதை கருத்திற்கொண்ட பிரித்தானிய நிறுவன மொன்று, செயற்கை புல் பதித்த செருப்புகளை தயாரித்துள்ளது.


புற்களைப் போன்று மிருதுவானதாக இந்த செயற்கை புற்களும் உள்ளன. இதை அணிந்துகொண்டு நடக்கும்போது புற்கள் மீது நடக்கும் உணர்வு ஏற்படுமாம்.


ஆண்கள், பெண்களுக்காக வெவ்வேறு வகையான பாதணிகளை பயர்பொக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

Friday, May 24, 2013

விண்வெளி குப்பைகளுடன் ஈக்குவடோர் செய்மதி மோதியது

ஈக்குவடோர் நாட்டின் ஒரேயொரு செய்மதியான 'பேகஸோ' விண்வெளிக் குப்பைகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து அச்செய்மதியிருந்து மீண்டும் சமிக்ஞைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஈக்குவடோர் விண்வெளி முகவரகம் ஈடுபட்டுள்ளது.

இச்செய்மதி ஒரு மாதத்துக்கு முன்னர் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அச்செய்மதி நேற்று விண்வெளி சிதைவுடன் மோதியுள்ளது. பூமியிலிருந்து 650 கி.மீ. உயரத்தில் இச்செய்மதி பூமியை வலம்வந்துகொண்டிருந்தது.

1985ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்றின் சிதைவுகளுடன் ஈக்குவடோரின் செய்மதி மோதியுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அச்செய்மதியிலிருந்து மீண்டும் சமிக்ஞைகளை பெற முடியுமா என்பதை 3 அல்லது 4 நாட்களின் பின்னரேஅறிய முடியும் என ஈக்குவடோர் விண்வெளி முகவரகத்தின் தலைவரான ரொனி நாடர் தெரிவித்துள்ளார்.

Monday, May 20, 2013

20 விநாடிகளுக்குள் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்யும் கருவி : 18 வயதான யுவதியின் கண்டுபிடிப்பு


செல்லிடத் தொலைபேசி பற்றரிகளை 20 விநாடிகளுக்குள் சார்ஜ் செய்யக்கூடிய கருவியொன்றை 18 வயதான யுவதியொருவர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் இஷா குராய் எனும் யுவதியே இக்கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இக்கருவிக்கு சுப்பர் கெப்பாசிட்டர் (Super Capacitor) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

செல்லிடத் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்வதற்காக மணித்தியாலக் கணக்காக காத்திருக்கும் நிலையை மாற்றக்கூடிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கருவியை கண்டுபிடித்தமைக்காக இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியின்போது இஷாவுக்கு இன்டெல் இளம் விஞ்ஞானிக்கான விருதும் 50 ஆயிரம் டொலர் பணப் பரிசும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதைக் கண்டுபிடிப்பதற்கு உநது சக்தியாக இருந்தது எதுவென தொலைக்காட்சி செவ்வியொன்றின்போது இஷாவிடம் வினவப்பட்டது. எனது செல்லிடத் தொலைபேசி பற்றரி எப்போதும் சார்ஜ் இறங்கியிருப்பதே எனக்கு இக்கண்டுபிடிப்புக்கான சிந்தனையைத் தூண்டியது என அவர் பதிலளித்தார்.

எதிர்காலத்தில் கார்களுக்கான பற்றரிகளையும் விரைவாக சார்ஜ் செய்வதற்கு தனது கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என இஷா கருதுகிறார்.

By : Metronews

மார்க் ஷக்கர்பேர்கின் நாய் உட்பட பேஸ்புக்கில் 10 சத வீதமான பயனர்கள் மனிதர்களல்ல : ஆய்வின் முடிவு


இன்று இணையத்தை அறியாதவர்கள் கூட பேஸ்புக்கை அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களிடம் அது வியாபித்து சுமார் 1.11 பில்லியன் பயனர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

உலக சனத்தொகையுடன் பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை ஒப்பிடுகையில் 7 பேருக்கு ஒருவர் பேஸ்புக்கினைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் emarketer எனும் இணைய சந்தை நிறுவனமொன்று மேற்கொண்ட ஆராய்ச்யிலிருந்து வெளிவந்த தகவல் மிகவும் விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

அதாவது இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் படி 1.11 பில்லியன் பேஸ்புக் பயனர்களில் 889.3 மில்லியன் பயனர்கள் மட்டுமே மனிதர்களாம். மேலும் பேஸ்புக் பயனர்களில் மார்க் ஷக்கபேர்கின் பீஸ்ட் எனும் நாய் உட்பட 10 சத வீதமானவை மனிதர்களல்லதவை என அவ்வாய்வறிக்கை குறிப்பிடுகிறது.

மார்க் ஷக்கர்பேர்க்கின் செல்லப்பிராணியான பீஸ்ட் எனும் நாயினை 1.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சமூக இணையத்தளங்களில் மிக அதிகளவான பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கில் இவ்வாண்டின் புதிய பயனர்கள் இந்தியா, பிரேசில், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலேயே அதிகளவில் காணப்படுகிறது.

ஏனைய நாடுகளிலிருந்து வரும் பயனர்கள் வளர்ச்சி வீதமானது 30 சத வீதமானவை மட்டுமே எனக் ஆய்வு தெரிவிக்கின்றது.

By AM.Rizath / Metronews
______________________________________________________________________________


Study: 10% of FB user are not human including Zuckerberg's dog


They know the Facebook who don't know even internet. FB has now attracted almost 1.11 billion users. the comparison between world population and FB users are 7:1 ratio.



புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் 'QE2'

'QE2' எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல்லானது கேம்பிரிட்ஜிலுள்ள மைனர் கோள் நிலையத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.7 மைல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம் திகதி இரவு 959 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியை இவ்விண்கல் கடந்து செல்லவுள்ளது. மேலும் இவ்விண்கல்லினால் புவிக்கு ஆபத்துகளும் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விண்கல் தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் பிரதம ஆராய்ச்சியாளர் கலாநிதி லேன்ஸ் பென்னர் கூறியுள்ளார்.

இவ்விண்கல் முதன் முதலில் 1998ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By AM.Rizath/Metronews

ரஷ்ய விஞ்ஞானிகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை பூமி திரும்பியது


ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை போன்றவை நேற்று பூமி திரும்பியது.


செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகளிடத்தில் நம்பிக்கைகள் அதிகரித்துவருகின்றது. இதனால் செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சிகளும் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியான ரஷ்யாவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ரஷ்ய விஞ்ஞானிகள் எலி, பல்லி மற்றும் உள்ளிட்ட உயிரனங்களை 'பயோன்-எம்' என்ற விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பினர்.


இதன் மூலம் புவி ஈர்ப்பு இல்லாத விண்வெளியில் உயிரினங்களின் இதயம், நரம்பு, தசை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய ரஷ்ய விஞ்ஞானிகள் முற்பட்டுள்ளனர்.


கடந்த மாதம் விண்வெளிக்கும் அனுப்பட்ட 45 எலிகள் மற்றும் 15 பல்லிகள் உள்ளிட்ட மேலும் சில உயிரினங்கள் நேற்று தரையிறக்கப்பட்டது. இதேவேளை திரும்பு வந்த உயிரினங்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றில் எத்தனை உயிருடன் உள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் எதனையும் விஞ்ஞானிகள் வெளியிடவில்லை.

AM. Rizath/Metronews

5 ஜி தொழிற்நுட்பத்தினை பரீட்சித்த சம்சுங் : ஒரே செக்கனில் முழுப்படத்தையும் தரவிறக்கும் வேகம்

5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதி வேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 5 ஜி தொழில்நுட்பமானது பரீட்சித்துப் பார்கையில் இதன் வேகம் செக்கனுக்கு ஜிகா பைட் வேகம் கொண்டது என ஆதாரபூர்வமாக அறிய முடிந்ததாக சம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் கூறுகையில், இப்புதிய 5ஆம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி இப்போது வணிக ரீதியான சந்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்த முடியாது.

சாதாரணமாக இந்த 5 ஜி தொழில்நுட்பத்தின் இணைய வேகமானது 4 ஜி போன்று பல நூறு மடங்கு அதிகமானது. எனவே வாடிக்கையாளர்களுக்கு 3டீ கேம்ஸ், உயர் ரக துல்லிய விடீயோக்கள் உள்ளிட்ட பாரிய தரவு பரிமாற்ற சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இக்கம்பில்லா தொழில்நுட்பத்தின் மூலம் கூடிய தூரத்திற்கு விரைவான தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம் என தென் கொரியாவை மையமாகக்கொண்ட நிறுவனம் சம்சுங் தெரிவித்துள்ளது.

உலகின் அதிகளவான 4 ஜி வாடிக்கையாளர்களைக்கொண்ட நாடு தென கொரியாவாகும். தற்போது அங்கு 20 மில்லியன் 4 ஜி வாடிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

AM. Rizath / Metronews

இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்'

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மனல் டொரஸ் என்ற ஆடை வடிவமைப்பாளரே இச்சாதனத்தை கண்டுபிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த துணிகள்-தெளிப்பானைக் கண்டுபிக்க லண்டனிலுள்ள இம்பரியல் கல்லூரியின் விஞ்ஞானிகளின் உதவியையும் பெற்றுள்ளார் மனல் டொரஸ்.

பொலிமர் கலவையினால் உருவாக்கப்பட்ட கலவையைக் கொண்டு குறித்த சாதனத்தின் மூலம் 15 நிமிடங்களில் ஒரு டீசேர்ட்டினை உருவாக்குகிறார் மனல். இந்த ஆடையை கழுவி மீண்டும் அணிந்துகொள்ளமுடியும் எனத் தெரிவிக்கிறார் மனல்.

இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், இதனை விட சிறந்த ஒரு துணிக்கலவையினை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இவரது கண்டுபிடிப்பினை எதிர்வரும் வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பெஷன் நிகழ்வொன்றில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இச்சாதனத்தை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்வதோடு இதற்காக ஒரு நிறுவனத்தையும் ஆரம்பிக்கவுள்ளார் மனல்.

இனி துணிகளைக் கொண்டு தைத்து அதை உடுத்துவதை மறந்து ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம் போல இருக்கே..


By AM.Rizath/Metronews

பக்டீரியாவிலிருந்து டீசல் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு


உல­கி­லுள்ள மிகச் சில விட­யங்­களைத் தவிர்த்து ஏனை­ய­வற்­றிற்கு பிர­தி­யீடு என்­பது ஒருநாள் சாத்­தி­ய­மாகும் என்­பதை ஞாப­கப்­ப­டுத்­து­வதாய் சில சம்­ப­வங்கள் அவ்­வப்­போது நடை­பெ­று­வ­துண்டு.

அந்த வகையில் அண்மையில் விஞ்­ஞா­னிகள் பிர­தி­யீடு என்ற விட­யத்தை ஞாப­கப்­ப­டுத்­திய மற்­று­மொரு விட­யமாய் அமைந்­துள்­ளதே பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசல் என்ற புத்தம் புதிய சாதனை முயற்சி.

மனிதன் உயிர் வாழ நீர், நிலம், உணவு, ஒக்­ஸிஜன் என்­பது போன்ற அத்­தி­ய­வ­சி­ய­மான சில விட­யங்கள் தேவைப்­ப­டு­கின்­றது. அது­போ­லவே இன்று மனிதன் இல­கு­வா­கவும் ஆடம்­ப­ர­மா­கவும் உயிர் வாழ்­வ­தற்கு பல விட­யங்கள் அவ­சி­யமாய் இருக்­கின்­றது.

அவற்றில் எரி­பொ­ரு­ளுக்­கான தேவை­யென்­பது தவிர்க்க முடி­யா­த­தொன்று. இந்­நி­லையில் தற்­போது பாரி­ய­ளவில் தேவைப்­படும் மூல­மாக பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரி­பொ­ருட்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் எதிர்­கால சந்­ததிக்கு இவ்­வகை எரி­பொ­ருட்கள் கிடைக்­காது போய்­விடும் என்­பது விஞ்­ஞா­னி­களின் கருத்து.

இருப்­பினும் அவற்­றுக்கு மாற்­றீ­டாக இன்­று­வ­ரையில் எது­வி­த­மான நிரந்­தரத் தீர்­வு­களும் கிடைக்­க­வில்லை. இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் உயி­ரி­னங்­களைப் போல இவ்­வகை எரி­பொ­ருட்­க­ளையும் கையி­ருப்பில் இருப்­ப­வற்றை பாது­காப்­பதைத் தவிர புதி­தாக உரு­வாக்க முடி­ய­வில்லை.



இதனால் எதிர்­கால சந்­த­திகள் பயன்­ப­டுத்த தேவை­யான ஆனால் அழிந்­து­கொண்­டி­ருக்கும் விட­யங்­களில் ஒன்­றாக இன்று எரி­பொ­ருட்கள் மாற்­ற­ம­டைந்­து­விட்­டது. இந்­நி­லையில் விஞ்­ஞா­னி­களின் அண்­மைய கண்­டு­பி­டிப்­பொன்று சற்றே திருப்­தியை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது எனலாம்.

அதா­வது ஈ கோலை எனும் ஒரு வகை பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசலை உரு­வாக்கி இங்­கி­லாந்து விஞ்­ஞா­னிகள் அடுத்த சந்­த­தியின் நகர்­வுக்கு நம்­பிக்கை அளித்­துள்­ளனர். தற்­போது பரீட்­சார்­த்த அளவில் வெற்றி பெற்றுள்ள இத்­திட்டம் விரைவில் பாரி­ய­ளவில் சாத்­தி­யப்­படும் என ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பக்டீரியா உலகில் முதல் தோன்­றிய உயிர் வடி­வ­மாகும். பக்­டீ­ரி­யாக்­களில் பல வகை உண்டு. அவ்­வா­றானா வகைகளில் ஒன்றே இந்த ஈ கோலை எனப்­படும் பக்­டீ­ரியா. இவ்­வகை பக்­டீ­ரி­யாக்கள் மனி­தனின் பெருங்­கு­டலில் பெரு­ம­ளவில் காணப்­படும். இவை k2 விற்­ற­மினைத் தயா­ரித்து உட­லுக்கு நன்மை பயக்க வல்­லது. இதே­வேளை ஈ கோலை­யி­லுள்ள மற்­று­மொரு வகை பக்­டீ­ரியா, உண­வுகள் அல்­லது குடி நீர் ஊடாக வயிற்­றுக்குள் சென்றால் வயிறு சம்­மந்­த­மான பாதிப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

இந்த பக்­டீ­ரி­யா­வினை தற்­போது இல­கு­வாக பெருக்கம் செய்து பாது­காக்க முடியும். இவ்­வாறு ஆராய்ச்­சி­க்கூ­டங்­களில் வளர்க்கும் பக்­டீ­ரி­யாவின் மர­ப­ணுவில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தியே விஞ்­ஞா­னிகள் டீச­லினை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

இவ்­வாறு தயா­ரிக்­கப்­படும் டீச­லா­னது. சாத­ர­ண­மாக நாம் பயன்­ப­டுத்தும் குரூட் எண்­ணெயில் இருந்து பிரித்து எடுக்­கப்­படும் டீசலைப் போன்றே இருக்கும். இவற்­றுக்­கி­டை­யி­லான வித்­தி­யாசம் மிக மிகக் குறைவு என்­கி­றார்கள் இதனை கண்­டு­பி­டித்த இங­்கி­லாந்­தி­லுள்ள எக்­செடர் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சிக்­குழு தெரி­விக்­கின்­றது.

எனவே இந்த உயி­ரியல் வகை எரி­பொ­ரு­ளான டீச­லைக்­கொண்டு தற்போது பயன்பாட்டிலுள்ள டீசல் வாக­னங்­களை இயக்­கவும் முடியும். இதன்­போது வாக­னத்தின் எஞ்­சி­னுக்கு ஒரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­கி­றார்கள்.

இது குறித்து எக்­செடர் பல்­க­லைக்­க­ழக உயி­ரியல் விஞ்­ஞான துறை பேரா­சி­ரியர் ஜோன் லவ் கூறு­கையில், இக்­கண்­டு­பி­டிப் பின் மூலம் தற்­போது புழக்­கத்­தி­லுள்ள டீசல் வாக­னங்­களின் எஞ்சினில் எது­வித மாற்­றமும் செய்ய வேண்­டி­ய­தில்லை. வணிக ரீதி­யான எரி­பொ­ருட்­களைப் போலவே இந்த உயி­ரியல் எரி­பொ­ருளும்.

வணிக ரீதி­யாக இந்த உயி­ரியல் எரி­பொ­ருளை வெளி­யிட்டு இப்­போ­தி­லி­ருந்து பயன்­ப­டுத்­தினால் 2050ஆம் ஆண்­ட­ளவில் 80 வீதத்­தினால் பச்சை வீட்டு வளைவு ஏற்­ப­டு­வ­தனைத் தவிர்க்­கலாம். எனவே இவ்­வகை எரி­பொருள் உலகின் சுற்­றுப்­புறச் சூழ­லையும் பாது­காக்கும் எனத் தெரி­வித்­துள்ளார்.

நிலைமை இவ்­வா­றி­ருக்க தற்­போதைய நிலை­மையில் பாரி­ய­ளவில் ஈ கோலை பக்­டீ­ரியா மூலம் டீசல் தயா­ரிப்­ப­தில் பல தடைகள் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது 200 லீட்டர் பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து ஒரு மேசைக்­க­ரண்டி அள­வான டீச­லையே தற்­போது தயா­ரிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

எனவே பல்­லா­யிரம் லீட்­டர்­களை குறைந்த உற்­பத்திச் செலவில் எவ்­வாறு தயா­ரிப்­பது என்­பதே தற்­போது ஆராய்ச்­சி­யா­ளர்கள் முன்­னுள்ள சவால் ஆகும். முடிந்­த­வ­னுக்கு நீரும் நெருப்­பாகும் என்­ப­தனை அடிக்­கடி உணர்த்தும் விஞ்­ஞா­னி­க­ளுக்கு விரைவில் இது சாத்­தி­ய­மா­வது திண்ணம்.

இது தொடர்பில் இத்­திட்­டத்­திற்கு அனு­ச­ரணை வழங்கும் செல் ப்ரொஜக்ட் என்ட் டெக்­னொ­லொ­ஜியின் முக்­கிய உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான ரொப் லீ கூறு­கையில், தற்­போது இக் கண்­டு­பி­டிப்பில் பல தடைகள் இருப்­பினும் எதி­கா­லத்தில் தேவை­மிகு டீச­லாக மாறி சூழ­லையும் பாது­காக்­கின்ற உயி­ரியல் எரி­பொருள் கண்­டு­பி­டிப்பில் பங்­கா­ளி­யாக இருப்­பதில் பெரு­மை­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை உயி­ரியல் எரி­பொருள் என்­பது உல­கிற்கு ஒரு புத்தம் புதிய விட­ய­மில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே பக்­டீ­ரி­யா­வி­லி­ருந்து டீசல் திட்டம் சாத்­தி­ய­மா­ன­தொன்று என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும்.

இலங்­கை­யில் கூட 2006ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கிளி­சரின் மரத்­தி­லி­ருந்து உயி­ரியல் எரி­பொருள் உற்­பத்தி செய்­யலாம் எனக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. மேலும் தற்­போது இந்­தி­யா­விலும் சில பகு­தி­களில் காட்­டா­ம­ணக்கு எண்ணெய் சேர்க்­கப்­பட்ட டீசல் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

கன­டாவில் கடந்த வருடன் 15 பேர் பய­ணிக்கக் கூடிய விமானம் ஒன்று கடுகு எண்ணெய் மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு இயக்கி சாதனை படைக்­கப்­பட்­டது.

இது மட்­டு­மின்றி சோளத்­தி­லி­ருந்தும் எரி­பொருள் தாயா­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால் இது போன்ற உயி­ரியல் எரி­பொ­ருட்கள் பரந்தள வில் உற்பத்தி செய்ய பல்­லா­யி ரம் ஏக்கர் காணி­களில் தேவை­யான தாவ­ரங்­களைப் பயி­ரிட வேண்டி ஏற்­படும். எனவே உற்­பத்திச் செல­வுகள் அதி­க­மாக இருக்கும் என்பதுடன் பயிர் நிலங்களுக்கும் பயிர்களுக்கு மான முக்கியத்துவம் குறைந்து விடவும் வாய்ப்புண்டு. ஏனெ னில் எரிபொருளின் தேவை என்பது உயிரின் தேவை போல மாறிவிட்டதே காரணம்.

ஆனால் பக்டீரியாவிலிருந்து டீசல் என்ற திட்டம் அவ்வாறில்லை என்பதால் ''பக்டீரியா டீசல்'' உற்பத்தி தொழிற்சாலைகள் விரைவில் நிறுவப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உண்டு.ஏற்கனவே பக்டீரியாவினைக் கொண்டு தயாராகும் ஈஸ்ட், சீஸ், யோகட், சோய் சோர்ஸ், பிக்கிள் மற்றும் வைன் என பலவகைப் பொருட்களை உண்டு, பருகி மகிழ்வதைப் போல விரைவில் பக்டீரியாவினூடாக ஆரோக்கியமான சூழலில் எம்மை வாகனங்களில் பயணம் செய்ய வைக்கவும் அறிவியல் உலகம் தயாரிகிவிட்டது. நாமும் அனுபவிக்க மட்டுமாவது தாயாராகிவிடுவோம்!

-அமானுல்லா எம்.றிஷாத்

Thursday, May 9, 2013

செவ்வாய்க்கு போகலாம் வாங்க.. : இலவச அழைப்பு விடுக்கும் டச்சு நிறுவனமும் பயணத்திற்கு தயாராகும் ஆர்வலர்களும்


முன்­னொரு காலத்தில் ஆற்றைக் கடந்து அடுத்த கிரா­மத்­திற்கு செல்­வதே பாரிய இலக்­காக இருந்­தது. ஆனால் இன்று விஞ்­ஞா­னத்தின் வளர்ச்­சியில் ஆகா­யத்தைக் கடந்து அடுத்த கிர­கத்­திற்குச் செல்­வதே சாதா­ரண இலக்­காக மாற்றம் பெற்று வரு­கின்­றது.

அப்­ப­டி­யா­ன­தொரு பாரிய இலக்கை நோக்­கிய பய­ண­மொன்று டச்சு நிறு­வ­ன­மொன்­றினால் திட்­ட­மிட்­ட­படி வெற்­றி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­படி என்ன உலகை தாண்டும் திட்டம் என எண்­ணு­கின்­றீர்­களா?

அப்­ப­டி­யெனில் உங்கள் எண்ணம் சரி­யா­னதே. ஏனெனில் புவி­யி­லி­ருந்து செவ்வாய்க் கிர­கத்­திற்கு குடி­யேறும் திட்டம் ஒன்றே அது.

அதா­வது, புவி­யி­லுள்ள அனைத்துப் பாகங்­க­ளி­லு­முள்ள மக்­களில் செவ்வாய் கிர­கத்­திற்கு சென்று, வாழ்ந்து அங்­கேயே இறக்க விரும்பும் மனி­தர்­களை இல­வ­ச­மாக அழைத்துச் செல்ல "Mars One" என்ற இலாப நோக்­கற்ற டச்சு நிறு­வ­ன­மொன்று தயா­ரா­கி­யுள்­ளது. இத்­திட்­டத்­திற்கும் அந்­நி­று­வனம் "Mars One" எனப் பெய­ரிட்­டுள்­ளது.

கடந்த 2011ஆம் நெதர்­லாந்தைச் சேர்ந்த பாஸ் லேண்ட்ஸ்டோப் மற்றும் அர்னோ ஏ. வீல்டர்ஸ் என்­ப­வர்கள் பல முன்­னணி அறி­வி­ய­லா­ளர்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன் "Mars One" திட்­டத்­தினை உரு­வாக்­கினர். இவர்­களே இந்­நி­று­வ­னத்தின் நிறு­வ­னர்­க­ளாவர்.

செவ்வாய் கிர­கத்தில் மனி­தர்கள் வாழலாம் என்ற நம்­பிக்கை வலு­வ­டைந்து வரு­கி­றது. எனவே இந்­நி­று­வ­ன­மா­னது மனி­தர்கள் செவ்­வாயில் வாழ குடி­யி­ருப்பை நிறுவி அங்கு மனி­தர்­களை அழைத்துச் செல்ல முடிவு செய்­துள்­ளது. இதனை முற்­றிலும் இல­வ­ச­மாக செய்­யவும் முன்­வந்­துள்­ளது.

இதற்­கான பயணம் 2022ஆம் ஆண்டில் புவி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 2023ஆம் ஆண்டு புதி­யதோர் கிர­கத்தில் தரை இறங்கி புதிய தடம் பதிக்கும் மனி­தர்கள் புதி­யதோர் சந்­த­தி­யி­ன­ரையும் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளனர்.

இது குறித்த தக­வல்­களை முதன் முதலில் கடந்த வருடன் 2012 ஆண்டு மே மாதம் 31ஆம் திக­தியே அதி­கா­ர­பூர்­வ­மாக ஊட­கங்கள் மூலம் உல­கிற்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

அதி­க­ரிக்கும் ஆர்­வ­லர்கள்
இதற்­காக http://applicants.mars-one.com எனும் இணை­யத்­தளம் பிரத்­தி­யே­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ணை­யத்­த­ளத்தின் மூலம் பயணம் தொடர்­பான தக­வல்­களை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதில் செவ்வாய் கிரகம் செல்லும் ஒரு வழி டிக்­கட்­டினை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்­காக ஆர்­வ­மிக்­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளது. முதற்­கட்டத் தேர்வு இவ்­விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்தே இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­காக கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் விண்­ணப்­பங்­களை அனுப்ப ஆர்­வ­லர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

அன்­றி­லி­ருந்த அடுத்த 4 நாட்­களில் உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான விண்­ணப்­பங்கள் கிடைத்­துள்­ளது. இதுவே "Mars One" திட்டம் வெற்­றி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­கான வித்­தினை விதை­துள்­ளது. இந்த ஆர்வ வித்­துக்­களை செவ்­வாயில் மர­மாக்­கு­வதே "Mars One" இன் திட்டம்.

இதில் ஆச்­ச­ரியம் என்­ன­வெனில் இள­வ­ய­தி­னரே அதி­க­ளவில் செவ்வாய் செல்­வ­தற்கு நாட்டம் காண்­பிக்­கின்­றனர். குறிப்­பாக 18--30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள். மேலும் சீனா­வி­லி­ருந்தே அதி­க­மான விண்­ணப்­பங்கள் இது­வ­ரையில் கிடைத்­துள்­ளது. இது தவிர அமெ­ரிக்கா, ஜேர்மன், கனடா, ஸ்வீடன், ஸ்பெய்ன் உள்­ளிட்ட மேலும் பல நாடு­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­பங்கள் அதி­க­ளவில் வரு­வ­தனை "Mars One" இணை­யத்­தளம் காட்­டு­கின்­றது. இலங்­கை­யி­லி­ருந்து கடந்த மாதம் 30ஆம் திகதி வரையில் விண்­ணப்­பங்கள் எதுவும் அனுப்­பப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விண்­ணப்­பிக்கும் திகதி எப்­போது முடி­வ­டையும் என தெரி­விக்­கப்­ப­டாத இந்­நி­லையில் ஆரம்­ப­கட்­ட­மாக விண்­ணப்­பிப்­போரின் தொகைக்­கொண்டு பார்க்­கையில் மேலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­க­ணக்­கானேர் இப்­ப­ண­யத்­திற்கு ஆர்வம் காட்டி விண்­ணப்­பிப்­பார்கள் என "Mars One" நிறு­வு­னர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.


இத்­த­னைக்கும் இப்­ப­யணம் ஆபத்தும் பலத்த சவால்­மிக்­கதும் என தெரிந்த பின்னர் கிடைக்­கப்­பெற்­றதே.

தேர்வு முறை
இதே­வேளை அதி­க­ள­வான விண்­ணப்­பங்கள் கிடைத்­தாலும் அவர்கள் அத்­தனை பேரையும் செவ்வாய் கிர­கத்­திற்கு அழைத்துச் செல்­வ­தென்­பது சாத்­தி­ய­மில்லை. காரணம் இது மிகவும் சவால்­மிக்க பயணம் என்­ப­துடன் செல­வு­மிக்க பயணம் என்­பதும் குறிப்­பி­டத்­தக்கது.

எனவே வரும் விண்­ணப்­பங்­க­ளி­லி­ருந்து சிறந்த ஆரோக்­கியம், மொழித் தேர்ச்சி, குழு­வாக செயற்­ப­டுத்தும் தன்மை, பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் ஆற்றல் மற்றும் மேலும் பல திற­மை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஆட்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு 7 வரு­டங்கள் பயிற்­சிகள் அளிக்­கப்­பட்டு பய­ணத்­திற்கு தயார் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இத்­திட்­டத்தில் ஆங்­கிலம், ஸ்பானிஸ், டச், அரபு, இந்­தோ­னேஷியன், ஜப்பான், சீன மொழிகள் போன்­றவை பயன்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டாலும் ஆங்­கி­லமே பொது மொழி­யாகக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

பணம் திரட்டும் நட­வ­டிக்­கைகள்
செலவு அதி­க­மிக்க இப்­ப­ய­ணத்­திற்­காக முதற் கட்­ட­மாக 6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை திரட்ட குறித்த நிறு­வனம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­காக செவ்வாய் கிர­கத்­திற்கு சென்றன் பின்னர் அங்­குள்ள நட­வ­டிக்­கை­களை படம்­பி­டித்து வெளி­யிடும் தொலைக்­காட்சி உரி­மத்தை அதிக விலைக்கு விற்­க­வுள்­ளது.

மேலும் "Mars One" திட்­டத்தின் பிரத்­தி­யேக இணை­யத்­த­ளத்தின் மூலம் நன்­கொடை பெறவும் ஏற்­பாடு செய்­துள்­ளது. இல­வ­ச­மாக ஒரு வழி டிக்­கெட்­டினை செவ்வாய் கிர­கத்­திற்கு வழங்­கு­வ­தற்­காக தெரிவு செய்­யப்­படும் இத்­திட்­டத்­திற்கு விண்­ணப்­பிக்க மட்டும் கட்­டணம் அற­வி­டப்­ப­டு­கின்­றது. விண்­ணப்­பிக்கும் நாட்­டினைப் பொறுத்து விண்­ணப்ப கட்­டணம் 7-25 அமெ­ரிக்க டொலர்கள் வரை அற­வி­டப்­ப­டு­கின்­றது.

செவ்­வாயில் குடி­யே­று­வது சாத்­தி­யமா?
சாத்­தி­யமா? முடி­யுமா? என்­ப­தெல்லாம் முயற்­சி­யற்ற மூடர்­க­ளுக்கே வரும் என்­பது போல உள்­ளது "Mars One" இன் திட்­டங்கள். ஏனெனில் செல­வு­மிக்க இத்­திட்­டத்­தினை செல­வு­களை குறைத்து நேரத்தை மீதப்­ப­டுத்தி, அங்­குள்ள வளங்­களின் மூலம் மீள புவிக்கு வராது செவ்­வா­யி­லேயே வாழும் மனி­தர்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய தேவை­களை எது­வித அர­சியல் தலை­யீ­டுகள் இன்றி செயற்­ப­டுத்து அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்­ளனர் "Mars One" திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­வர்கள்.

இதற்கு மேலும் இது­வெல்லாம் சாத­ர­ண­மான வீண் முயற்­சிகள் என்­ப­துடன் செவ்­வாயில் குடி­யே­று­வ­தெல்லாம் சாத்­தி­யமா? என்று அறி­வி­ய­லையும் அறி­வி­ய­லா­ளர்­க­ளையும் கிண்டல் செய் யும் ஒரு வகையான சமூகமும் இருக் கத்தான் செய்கிறது. அவர்களுக்கு புரி யவா போகிறது. முயற்சிகளினதும் தேட லினதும் முடிவில் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி.

மூச்சு எடுப்பதும் விடுவதும் சாதாரண மாகத்தான் தோன்றும் ஆனால் அவற்றை நிறுத்திவிட்டால்.... ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு பின்னர் சிந்திந்தால் புரியும் அதன் தேவை. அதுபோலவே அறிவியலில் எடுக்கப்படும் முயற்சிகளும் தேடல்களும. அது முயற்சிகள் மூலம் தேடல்களின் சுவாரஸ்யத்தினை உணர்ந்தவர்களுக்கே புரியும்.

எனவே விரைவில் செவ்வாயில் குடியேறி புவியிலுள்ளவர்களை வாய் பிளக்க வேடிக்கை பார்க்க வைக்கும் திட்டமாகவே அமையும் இந்த MARS ONE என்பதே ஏற்பாட்டாளர்களினதும் ஆர்வலர்களினதும் தற்போதைய நம்பிக் கையாக உள்ளது.

-அமானுல்லா எம்.றிஷாத்


இக்கட்டுரையானது 03.05.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

இதன் தற்போதைய நிலவரம் -

இலவசமாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப் பயணமாக செல்ல உலகின் பல பாகங்களிலிருந்தும் 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பத்துள்ளனர். இதில் சுமார் 10 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் அடக்கம். 

Tuesday, April 30, 2013

செவ்வாய் கிரகத்தில் இலவசமாக குடியேற 20 ஆயிரம் விண்ணப்பங்கள்


இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு நிரந்தரமாக குடியேற்றும்  திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாட்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது.

'Mars One' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டதிற்கு உலகம் முழுவதிலிருந்து இதுவரையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் அதிகளில் சீனாவிலிருந்தே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 18 - 30 வயதிற்கிடைப்பட்டவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இலவசமாக ஒரு வழி டிக்கெட்டினை செவ்வாய் கிரகத்திற்கு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மட்டும் கட்டணம் அறவிடப்படுகின்றது. விண்ணப்பிக்கும் நாட்டினைப் பொறுத்து விண்ணப்ப கட்டணம் 7-25 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக தவல்களை http://applicants.mars-one.com/ என்ற இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் இதுவரையில் இலங்கையிலிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 22, 2013

Bad News : Google Play Storeயை தாக்கிய புதிய மல்வெயா


Google Play Storeஇலுள்ள 32 எப்ஸ்களை Bad News எனும் புதிய மல்வெயா ஒன்று தாக்கியுள்ளதாக இணைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மல்வெயா தாக்கத்திற்குள்ளான 32 எப்ஸ்களை இதுவரையில் 2 மில்லியன் முதல் 9 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மல்வெயா தாக்கத்திற்குள்ளானதாக இனங்காணப்பட்ட 32 எப்ஸ்களை ரஷ்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான உக்ரைன், பெலரூஸ், ஆர்மேனியா மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தே 50 வீதத்திற்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போது மல்வெயா தாக்கத்திற்குள்ளான 32 எப்ஸ்களும் Google Play Store இலிருந்து நீக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்வாறு Google Play Store, மல்வெயா பாதிப்புக்குள்ளாவது இது முதல் தடவையல்ல. இதற்கு முதல் 2012ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டது.  இது தொடர்பிலான தகவல்களை மெக்கபெ நிறுவனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


AM.Rizath/Metronews