சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Sunday, September 29, 2013

ராஜா ராணி - விமர்சனம்

கதை, திரைக்கதை, இயக்கம் - அட்லி
நட்சத்திரங்கள் - ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்தியராஜ், சத்யன்
இசை - ஜீவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு - ஜோர்ஜ். சீ. வில்லியம்ஸ்
எடிட்டிங் - அன்டனி எல். ரூபன்
தயாரிப்பு - பொக்ஸ் ஸ்ரூடியோ

ஆர்யா - நயன்தாரா திருமண அழைப்பிதழிலிருந்து விளம்பரமும் கூடவே எதிர்பார்ப்பையும் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸையும் சுமந்து வந்திருக்கும் திரைப்படம் ராஜா ராணி.



ட்ரெய்லர் மற்றும் விளம்பரங்களில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா? இல்லையா? என்றால் நிச்சயமாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Made for each other என்று யாரும் பிறக்கிறதில்லை. அது வாழ்ந்து காட்டுறதுலதான இருக்கிறது என்பதுதான் ராஜா ராணி படத்தின் கதை.

ஆர்யா - நயன்தாரா திருமணத்தில் படம் ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலிருந்தே ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் ஒத்துப்போகவில்லை. அது ஏன்? எதுக்காக என்கிற விடயத்தை திரைக்கதையில் சிறப்பாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.

ஆர்யா - நயன் இருவரும் திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்கிறார்கள். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஆர்யாவும் சோகமாகவே இருக்கும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.



தங்களது குடும்பத்திற்காக திருமணம் செய்தவர்கள் அதுவரையில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிராகவும் இருந்த இருவருது காதலும் பிளாஷ்பெக்கில் தெரியவருகிறது.

இதில் சந்தோஷமான நயன் - ஜெய் காதலில் ஜெய் இறக்கிறார். நயன் சோகத்தில் ஆழ்கிறார். கலகலப்பான ஆர்யா - நஸ்ரியா காதலில் நஸ்ரியாவை கண் முன் பறிகொடுத்து தவிக்கிறார் ஆர்யா.

இருந்தாலும் கண்களை கசக்கிக்கொண்டே இல்லாமல் ஆர்யா, நயன், சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்யன் என அனைவரும் கலகப்பூட்டுகிறார்கள்.

ஆர்யா - நயன்தாரா காதல், ஆர்யா - நஸ்ரியா காதல், நயன்தாரா - ஜெய் காதல் இம்மூன்று காதலையும் அலுப்பில்லாமல் அசரடிக்க வைக்கிறது படம். மூன்று காதல் என்றாலும் உலகத் தரம் என்ற பெயரில் திரைக்கதையில் மண்டையை காயவிடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



கொமடியை எதிர்பார்த்துப்போன படத்தில் எதிர்பாராமல் நல்ல கதையையும் அதில் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ரசிகர்களை ஆட்சி செய்கிறார்கள் ராஜா ராணி குழுவினர்.

அறிமுக இயக்குநர் அட்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநர் என்பதை காட்டவோ என்னவோ அடிக்கடி சிவாஜி படத்தினை ஞாபகப்படுத்திறார். ஷங்கரைப்போலவே பாடல் காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். திரைக்கதையும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

வலுக்கட்டாயமான சண்டைகள் இன்றி வலுவான திரைக்கதையில் அசத்துகிறார் அடலி. வெல்கம் டூ கொலிவூட்.



வசனங்களும் பல இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக ஒரு பொண்ணு அழுதா ஏமாத்தப்போறான்னு அர்த்தம். அதுவே ஒரு பையன் அழுததான்னா ஏமாந்துட்டான்னு அர்த்தம், யார் அழுதா கண்ணு வேர்க்குது,  நண்பன்ல ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்டாலே நல்லவன்தான் போன்ற வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

நாயகன் ஆர்யா கல்யாணத்துக்கு முன் பின் இரண்டிலும் உடல் மொழி வேறுபாட்டில் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் அழவும் வைக்கிறார்.

நயன்தாரா நீண்ட இடைவெளியின் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அசரடிக்கிறார். வந்து போகும் நாயகியாக இல்லாமல் ரெஜினாவாக பிரதிபலிக்கிறார்கள். சிரிப்பிலும் அழுகையிலும் அழகிலும் கொள்ளைகொள்கிறார்.



ஜெய் - நயன் ஜோடி பெரியளவில் பொருந்தவில்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது. ஜெய் சிரிக்க வைத்துச் செல்கிறார். ஆனால் கதையில் எதிர்பார்த்த முடிவாக இவரது பாத்திரம் அமைந்துள்ளது.

பல இடங்களில் இன்னுமொரு நயன்தாராவாகத் தெரிகிறார் நஸ்ரியா. நன்றாக நடிக்க வாய்ப்பு. சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பிரதர் பிரதர் என ஆர்யாவையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கிறார். இனி பெண்கள் பிரதர் என அழைத்தால் பசங்க சந்தோஷப்படுவார்கள்.

சந்தானம் வழக்கம் போல பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்கள். குணச்சித்திர கதாபாத்திரம் போல பின்னப்பட்டள்ளது. இவரது வசனங்கள் பலவற்றுக்கு அரங்கில் நல்ல வரவேற்பு.

சத்தியராஜ் தனது கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார். அளவாகவே வந்து போகிறார். சத்தியனும் அதுபோலவே.

ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் அசத்தல் ரகம். தேவையான இடங்களிலமைந்த பாடல்களால் யாரும் வெளியேறவில்லை. ஜோர்ஜின் ஒளிப்பதிவு படத்தினை மெருகூட்டுகிறது. ரூபனின் எடிட்டிங்கும் நச்சென்று இருக்கிறது. காட்சிகள் தொய்வாகத் தெரியவில்லை.

ஆர்யாவும் நயனும் ஏன் முதல் நாளிலிருந்தே முறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற ஓரு சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகமாக உண்டு.

மொத்தத்தில் எதிர்பார்த்த கொமடியில் எதிர்பாராத திரைக்கதை மற்றும் கதையால் திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவரையும் குடும்ப ஆட்சி செய்கின்றது இந்த ராஜா ராணி.

-அமானுல்லா எம். றிஷாத்

இந்த விமர்சனம் மெட்ரோ நியூஸ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2326

Friday, September 20, 2013

உடலைவிட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் எப்போது உடலைச் சேரும்?

போன உயிர் மீண்டும் வருவ­தில்லை என்­பதே மனி­தர்­க­ளி­டையே பர­வ­லாக காணப்­படும் நம்­பிக்கை. எனவே நாமும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­கவே இருக்­கிறோம். இறப்­புக்கு பின்­ன­ரான வாழ்க்கை என்­பது நம்­பிக்கை சார்ந்த விட­ய­மா­கவே உள்­ளது.



அது­போ­லவே மரித்த பின்­னரும் உயிர்­பெற வைக்கும் தொழில்­நுட்பம் விரைவில் கண்­டு­பி­டிக்­கப்­படும் என்­பதும் சில­ர­து ­நம்­பிக்­கை­யா­க­வுள்­ளது. அந்த நம்­பிக்­கையில் இறந்த பின்னர் தங்­க­ளது உடலை பாது­காப்­ப­தற்கு பலரும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இவ்­வாறு இறந்த உடல்­களை பாது­காக்க நிறு­வ­னங்­களும் உண்டு. அங்கு இறந்த உடல்­களை பழு­த­டை­யாது பாது­காத்து வைக்­கப்­படும்.

எவ்­வாறு பாது­காக்­கப்ப­டு­கின்­றது?
ஒருவர் இறந்­து­விட்டார் என்­பதை சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர் குறித்த நிறு­வனம் உட­லி­லுள்ள இரத்தத்­தினை 'பம்' செய்­வ­தற்கு முயற்­சிப்பர். உடலில் பல்­வேறு இர­சா­யன பதார்த்­தங்­களை செலுத்தி மூளை பழு­த­டை­வ­தையும் இரத்தம் உறை­யா­மலும் பாது­காக்­கப்­படும்.

பின்னர் உடலானது நீர் குளி ர­டையும்  வெப்பநிலையை அடைந்­ததும் குளிரில் உடல் பாது­காப்­ப­தற்­கு­ரிய நிலையை அடைந்­து­விடும். இதன்­போது உட­லி­லுள்ள இரத்தம் நீக்­கப்­படும். பின்னர் -130 செல்­ஸி­யஸில் குளி­ராக்­கப்­பட்டு கொள்­க­லனின் உடல் வைக்­கப்­பட்டு –196 செல்­ஸியல் குளிர் நிலை­யி­லுள்ள நைத­ரசன் தாங்­கியில் பேணப்­படும்.



தற்­போது அமெ­ரிக்­காவில் இப்­படி சுமார் 150 உடல்கள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளதாக கூறப்படுகின்றது. இதில் 80 உடல்­களின் தலை அல்­லது மூளை மட்­டுமே பாது­காக்­கப்­பட்­டள்­ளது. எவ்­வா­றெ­னினும் தற்­போது உயி­ருடன் உள்­ள­வர்­களில் 1000ற்கும் அதி­க­மானோர் தங்­க­ளது உடலை பாது­காக்க குறித்து நிறு­வ­னங்­களை பணித்­துள்­ளனர்.


இத்­திட்டம் வெற்­றி­பெ­றலாம் என ஏன் நம்­பு­கின்­றனர்?
இத்­திட்­டத்தில் ஆர்­வ­மிக்­க­வர்கள் இது தொடர்பில் கூறு­கையில், இத்­திட்டம் வெற்­றி­ய­ளிக்க வாய்ப்­புள்­ள­மைக்கு 3 கார­ணங்கள் கூறு­கின்­றனர். முத­லா­வது உடல் பாது­காக்­கப்­படும் போது ஒட்­சி­சனின் மட்­டத்­தினை பேணி மூளை சிதை­வ­டை­வது குறைக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக தேவை­யான அளவில் குறைந்த வெப்­ப­நி­லையில் (குளிரில்) உடல் பேணப்­ப­டு­வதால் கலங்கள் மற்றும் இழை­யங்கள் தர­மி­ழக்­காமல் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.



மூன்­றா­வ­தாக குளி­ராக்கல் முறை­யி­லி­ருந்து முற்­றாக உடலை பாது­காக்­க­மு­டி­யா­விட்­டாலும் விரைவில் நனோ தொழில்­நுட்­பத்தின் மூலம் இதற்கும் தீர்வு கிடைக்குமென நம்புகின்றனர்.



விஞ்­ஞா­னிகள் இனங்கண்­டுள்ள பிரச்­சினைகள்
–5 செல்­ஸியஸ் வெப்­ப­நிலையில்  நீரில் உடல் பாது­காக்­கப்­படும் போது கலங்கள் குளிரில் உறைந்து ஐஸ் கட்­டி­க­ளாக மாறி­விடும். இவை நீரின் அடர்த்­தியை விடக் குறைந்­தது. இதனால் அதி­க­ளவில் பிரி­கை­ய­டைந்து கல மென்­சவ்­வுகள் கடு­மை­யாக பாதிப்­ப­டையும்.

ஆனால், குளி­ராக்கல் முறையில் அவ்­வா­றில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­போ­திலும் அவற்­றிற்­கான ஆதாரம் எது­வு­மில்லை என வொஷிங்டன் பல்­க­லைக்கழக குளிரில் கலம் மற்றும் இழையங்­களை பாது­காக்கும் தொழில்­நுட்ப நிபுணர் கலா­நிதி டயங்கோ கஓ தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், குளி­ராக்கு­தலில் சிறிய பூச்­சிகள் மற்றும் இல­கு­வான இழை­யங்­களை பாது­காக்­கலாம். ஏனெனில் அவை அளவில் சிறி­யவை என்­பதால் கையாள்­வது இல­கு­வா­னது. ஆனால் எவ்­வாறு உடல்­களை பாது­காப்­பது எனத் தெரி­ய­வில்லை என்றார்.

உட­லி­லுள்ள பாகங்­களை பாது­காக்க முடியும். ஆனால் அவற்­றினை மொத்த உட­லாக பாது­காப்­பது கடினம். ஏனெனில் ஒவ்­வொரு உறுப்பும் ஒவ்­வொரு வெப்­ப­நி­லையில் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

சாதா­ர­ண­மாக மூளையை பாது­காக்க வேண்­டு­மென்றால் அதி­லுள்ள 12 பிரி­வு­க­ளையும் வெவ்வேறு நிலை­களில் பாது­காக்க வேண்­டிய தேவை உள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.



உயிர் திரும்பக் கிடைக்­குமா?
வளரும் தொழில்­நுட்­பத்­தினால் எதிர்­கா­லத்தில் உடல்­களை சிறப்­பாக பாது­காக்க முடிந்­தாலும் வய­தாதல் மற்றும் நோய்­க­ளினால் கலங்கள் பாதிப்­புக்­குள்­ளாகும். நரம்­புகள் தொடர்­பான சிக்­கல்கள், கலங்­க­ளி­லுள்ள புரத இழப்பு என இன்னும் ஏரா­ள­மான சவால்கள் உண்டு. அவற்­றுக்­கான தீர்வு கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

எனவே குளி­ராக்­கல் முறையை மேம்­ப­டுத்தி உடலை பதப்­ப­டுத்­தி­னாலும் தற்­போ­தைக்கு இறந்த உட­லுக்கு உயிரை வழங்­கு­வ­தற்­கான எந்­த­வொரு சாத்­தி­யக்­கூ­று­களும் விஞ்­ஞா­னி­க­ளிடம் இது­வ­ரையில் இல்லை என்றே சொல்­லலாம்.

இதேவேளை எதிர்காலத்தில் அவை நடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உடலை பாதுகாக்க தயாராகிவிட்டாலும் எந்தவொரு விஞ்ஞானிகள் அமைப்பும் குளிராக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என கலாநிதி கஓ தெரிவித்துள்ளார்.

அதேபோல குளிராக்கல் பதப்படுத்தல் முறையினை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இந்த உடல்களுக்கு எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எப்போதும் வளாந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது.

–அமானுல்லா எம்.றிஷாத்


இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, September 8, 2013

எரிகல் பொழிவு ஆபத்தானவையா? ; இலங்கையில் ஏற்பட்ட எரிகல் பொழிவினை நீங்களும் இரசித்தீர்களா?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது.

 சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.



அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.



இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.

ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.



நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது. சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.

அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.

இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.



இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.



ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.

நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

 –அமா­னுல்லா எம்.றி­ஷாத்

இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.