சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Friday, December 28, 2012

அப்பிளின் அதி நவீன (i)Watch


தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல.

அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல.

ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxide) பூச்சைக் கொண்ட மேற்பரப்புடன் கூடிய ஓ.எல்.ஈ.டி வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.ஓ.எஸ் மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது.

இன்னும் உத்தியோகபூர்வமில்லா இச் சாதனம் தொடர்பில் தொழிநுட்ப உலகின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.
இதேவேளை இதேபோன்ற தொழிற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய பெபெல் என்ற கடிகாரம் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : கவிந்தன்

Thursday, December 27, 2012

Oppan Gangnam Style : இணைய வரலாற்றில் புதியதோர் சாதனை


உலக அழிவு அச்சத்தில் உலகமே அதிர்ச்சியில் உறைந்தாலும் யூடியூப்பில் 1 பில்லியன் தடவைக்கு அதிகமாக அதிர்ந்தே தீருவேன் என கங்கணம் கட்டி சாதனைமிகு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளது Oppan Gangnam Styleபாடல்.

பப்பா பப்பா
பப்பா பப்பா
பாப்பாப பா பபப... என கொலைவெறியாக்கிக்கொண்டிருந்த Y this Kolawery பாடலை எம்மவர்களிடம் மறையச்செய்ததோடு உலக நாடுகளில் ஒவ்வொரு பிரதேசத்திலும் பிரபல்யமாக இருந்த பாடல்களை பின் தள்ளிய இந்த கங்ணம் பாடல் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வந்த நாளான்று யூடியூப் வரலாற்றில் மட்டுமன்றி இணைய வரலாற்றிலேயே புதியதோர் சாதனையை ஆரம்பித்தது இந்த கங்ணம் பாடல்.

அதாவது கடந்த 21.12.2012 அன்று இலங்கை நேரப்படி இரவு 9.20 மணியளவில் உலகமே உலக அழிவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க யூடியூப்பில் பாடல் 1 பில்லியனாவது தடவை பார்க்கப்பட்ட முதலாவது வீடியோவாக பாதிவாகி புதியதோர் சாதனைபடைத்தது. மேலும் யூடியூப்பில் அதிக 'டுமைநள' பெற்ற வீடியோவாகவும் கிண்ணஸ் உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது எங்கும் எதிலும் கங்ணம் என்றாகிவிட்ட சமாதானத்திற்குரிய பாடலான Oppan Gangnam Style பாடல் PSY 6 என்ற தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடலே. இப்பாடலை (பார்க் ஜெய்-சேங்) Park Jai-Sang, (யூ கன்-ஹையுங்) Yoo Gun-Hyung எனும் இருவரே எழுதி தயாரித்தனர். இதில் பார்க் ஜெய்-சேங் என்பரே வீடியோவில் தோன்றி நடனமாடியுள்ளார்.

கங்ணம் என்பது கொரியாவிலுள்ள Seoul எனும் பிரதேசத்திலுள்ள ஒரு இடத்தின் பெயர். Oppan Gangnam Style என்பதனை ஆங்கிலத்தில் 'Big Brother is Gangnam Style' எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் வரும் ழுppய என்ற சொல் கொரிய நாட்டில் பெண்களால் வயதான சகோதரன் அல்லது வயதான ஆண் தோழர்களை அழைக்கும் வார்த்தை.

மேலும் இப்பாடலானது கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அவ்வாறான கொள்கையுடன் இருக்கும் அந்த பிரதேசத்து மக்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல். (அதான் நம்ம ஏரியாவிலும் இந்த பாட்டு ரொம்ப பேமஸோ...)

கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதி வெளியான இப்பாடல் ஆரம்பத்தில் கொரியாவிலும் மேலும் ஒரு சில நாடுகளிலே பிரபல்யமாகி இருந்தது. இருப்பினும் சில வாரங்கள் கழித்தே உலக நாடுகளில் உச்சக்கட்ட வரவேற்பினை பெறத் தொடங்கியது. குறிப்பாக 09.15.2012 பின்னரே ஏனெனில் அதுவரையில் சுமார் 250 மில்லியன் தடவைகள் மட்டுமே யூடியூப்பில் பார்வையிடப்பட்டிருந்த கங்ணம் அடுத்த 3 மாதங்களில் மட்டும் 750 மில்லினுக்கும் அதிக தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு திடீரென இந்த பாடல் உலக நாடுகளில் பிரபல்யமாவதற்கு இப்பாடலிலுள்ள ஈர்ப்பு ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. என்றாலும் குறிப்பாக இந்தியா, இலங்கை, பங்களதேஷ் மற்றும் இன்னும் சில ஆசிய நாடுகளிலுள்ளவர்களை முணுமுணுக்கச் செய்த பெருமை நடந்து முடிந்த ரீ20 உலக்கிண்ண போட்டிகளும் கிறிஸ் கைலும் என்பது உறுதி.

கிறிஸ் கைலின் கங்ணம் நடனத் தொடர்ந்து கங்ணம் என்ற வார்த்தை பயன்படுத்ததா ஊடகங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு கைலையும் கங்ணத்தையும் இணைத்து செய்திகள் அப்போது வெளியானதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கி மூன் இப்படலை உலக சமாதானத்திற்காக பாடலாக இனம் கண்டு உத்தியோகபூர்வ அறிவித்து அந்ந நிகழ்வில் கங்ணம் நடத்தையும் ஆடினார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானி பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கிரிக்கெட், உதைபாந்தாட்ட வீரர்களும் சில முக்கிய நிகழ்வுகளில் கங்ணம் நடத்தை ஆட கங்ணம் அனைவரது மனதிலும் ஆளப்பதிய காரணமாயிற்று. இதனால் உலகின் பல பாகங்களிலும் கங்ணம் பாடல் கவனத்திற்குரிதாக மாறியது.

இப்பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து மோர்பிங் மூலம் ஏராளமான பதிப்புக்கள் வெளியானது. இதில் உலக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல் என அனைத்து துறையிலும் மக்களை ஆட்கொண்டவர்களை பயன்படுத்தியதில் இந்த கங்ணம் மக்களை இலகுவாக ஆட்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்தது.

மேலும் கங்ணம் பாடலை வைத்து அரசியல் குறும்படம், உலக அழிவை விளக்கும் படம் என பல்வேறு இடங்களில் தாக்கம் செலுத்தி வெற்றி கொடி நட்டு உலகறிந்த நபராக மாறியுள்ள PSY என்றழைக்கப்படும் பார்க் ஜெய்-சேங் இது தொடர்பில் கூறுகையில்,

கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அவ்வாறான கொள்கையுடன் இருக்கும் அந்த பிரதேசத்து மக்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல்.

ஆரம்பத்தில் இதற்காக பல்வேறு மிருகங்களின் அசைவுகளை நடமாக்க முயற்சித்து இறுதியில் குதிரையின் அசைவுகளை நடனமாக்கினோம். அந்த குதிரை மிகப் பெரும் வெற்றியீட்டிக்கிறது என்றார்.

இந்த வெற்றியை அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா, ஜப்பான், இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உட்பட 30 மேற்பட்ட நாடுகளின் பாடல் தரவரிசைப்படுத்தலில் தொடர்ச்சியாக பல வாரங்கள் நீடித்து அத்தாட்சிப்படுத்தியது கங்ணம்.

உண்மையில் இப்பாடலை பார்த்த, கேட்ட அனைவரினதும் ஏகோபித்த முடிவு இந்த பாட்டுல ஏதோ இருக்கத்தான் செய்யுது நீங்களே கொஞ்சம் கேட்டுப்பாருங்க... என்பதுதான்.

இவ்வாறு குதிரையில் உலகைச் சுற்றி வெற்றி கண்டிருக்கும் கங்ணம் நடனத்தை புது வருடப்பிறப்பன்று ஜேர்மன் நாட்டு தலைநகரான பேர்லினிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரண்டர்பேர்க் வாசலில் 1 மில்லின் பேர் ஒன்றாக கங்ணம் நடனமாடி புதுவருடத்தினை வரவேற்க தயாராகியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் வருடப்பிறப்பை ஆரம்பிப்போம் Oppan Gangnam Style...

-அமானுல்லா எம். றிஷாத்

Saturday, December 22, 2012

21ஆம் திகதி...


உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை ஏற்படுத்திக்கொண்டிந்த 21ஆம் திகதி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையின் நாளாக விடிந்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

கடந்த சில வாரங்களாகவே அனைத்து நாடுகளிலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி மக்களை ஆட்டிப் படைத்த 21.12.2012 தினமான நேற்று என்னதான் நடந்நது என்றால் வடிவேலுவின் பாணியில் கையை விரித்துக்கொண்டு ஒண்ணுமே இல்லை என்கிறார்கள் அனைவரும்.

எதிர்பார்ப்புக்கள் பலவற்றை ஒன்று சேர்த்து நடந்தேறிய சில சம்பவங்களுடன் முடிச்சுப் போட்டு 21ஆம் திகதி உலக அழிவு என்ற மாயை அனைவரிடத்திலும் மாயா இனத்தவர்களின் பெயரில் தோற்றுவித்ததில் யார் இலாபமடைந்தார்களோ இல்லையோ சில ஊடகங்கள்; தங்களை பிரபல்யப்படுத்திக்கொண்ட வகையில் அவர்களுக்கு இலாபமே.

சாதாரணமாக நடைபெறும் சிறிய சம்பவங்கள் கூட சில வாரங்களாக 21ஆம் திகதியுடன் இணைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விண்ணிலிருந்து பறக்கும் கற்கள், பூமியதிர்ச்சி, கடல் பாம்புகளின் படையெடுப்பு, மீன் மழை, சிவப்பு மற்றும் மஞ்சள் மழை என அத்தனையும் பூமியில் நிகழவிருக்கும் பாரிய அழிவின் அறிகுறிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டு மக்களை பயமுறுத்தச் செய்தது.

ஆனால் நடந்தேறிய அத்தனை சம்பவங்களும் சாதாரணமானவையே அன்றி அவை எதுவும் அசாதாரண நிகழ்வுகள் அல்ல.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பாகங்களிலும் நடைபெறும் சிறிய விடயங்களைக் கூட தெரிந்துகொள்ளும் அளவிற்கு தொடர்பாடல் வளர்ந்து உச்சத்தை அடைந்திருப்பதனால் நடைபெறும் சம்பவங்களை இலகுவில் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறதே தவிர அவை எதுவும் விசித்திரமாகவோ புதுமையாகவோ நடைபெறுகின்ற சம்பவங்கள் அல்ல.

இதுவரையிலான தகவல்களின் படி உலகின் எந்த பாகத்திலும் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்பதை இந்த செய்தியினை வாசித்துக்கொண்டிருக்கும் போதே உணர முடிகின்றதல்லவா?

பெரும்பாலானவர்களின் மனதில் வேரூன்றியிருந்த உலக அழிவை பொய்யாக்கி மாயன்களுக்கு புதிய நாட்காட்டியை உருவாக்க வேண்டிய நாளே இது என்பதை உண்மையாக்கிய நாளாக மாறியிருக்கின்றது இந்த 21ஆம் திகதி.

3 நாள் தொடர்ச்சியான இருள்

நிலைமை இவ்வாறிருக்க புதிதாகவொரு கட்டுக்கதையை மீண்டும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் சிலர். அதாவது துருவமாற்றத்தின் காரணமாக பூமியில் அசாதாரண சுழற்சி ஏற்பட்டு தொடர்ச்சியாக இம்மாதம் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் புவியை இருள் சூழ்ந்துகொள்ளும் என கிளப்பிவிட்டிருக்கிறது சில மத அமைப்புக்கள்.

இப்போதுதான் உலக அழிவு பீதியிலிருந்து மக்கள் விடுபட்டிருக்கிறார்கள் அதற்கும் மீண்டும் ஒரு புரளியா என அலுத்துக்கொள்ள வேண்டியதொரு சமாச்சரமே அன்றி வேறேதுமில்லை என்று நம்பிக்கை தருகிறார் நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், உலகம் அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.

அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.

இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை. இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மாயா இனத்தவரின் கொண்டாட்டங்கள்

உலக அழிவுக்கு பிரதான ஆதாரமாக மாயன் நாட்காட்டியே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் மாயா இனத்தவரோ 21ஆம் திகதியை வெகு சிறப்பாக தங்களது பாரம்பரிய நிகழ்வுகளுடன் கொண்டாடி மகிழ்ந்து மாயன் நாட்காட்டிக்கு விடைகொடுத்துள்ளனர்.

400 வருட காலம் நிறைவடைந்து புது யுகம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டே மாயா இனத்தவர்களின் பாரம்பரிய வழிமுறையில் தங்களது மகிழ்ச்சியை ஆடிப்பாடி வெளிப்படுத்தியுள்ளனர்.

பேர்காஜ் கிராமத்தில் கூடியோருக்கு ஏமாற்றம்

இதேவேளை மாயன் நாட்காட்டியின் படி உலகம் அழியப்போவதனை நம்பி பிரான்ஸிலுள்ள பேர்காஜ் கிராமத்தில் கூடியிருந்த மக்கள் பலத்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து தங்களது சொந்த இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் அழியும் போது பேர்காஜ் கிராமத்திற்கு வேற்றுக்கிரக வாசிகளால் விண்கலம் அனுப்பப்படும் அதில் ஏறியோர் உயிர் பிழைக்கலாம் என்ற வதந்தியால் அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவ்வூருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அங்கு சென்றுள்ளனர். இறுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதனால் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கைகொட்டி மகிழ்ந்துள்ளனர்.

ஆனாலும் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அமைந்த இந்த உலக அழிவு சர்ச்சையில் சில உயிர்கள் பலியானதுடன் சிலர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டதும் வருத்தமே.

மாயன் நாட்டியின் படி உலகம் அழிவது உறுதி எனவே அதற்கு முதல் கூட்டாக இறந்துவிடலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியான போலி வார்த்தைகளை நம்பி ஆர்ஜென்டீனாவில் சுமார் 150 பேர் கூட்டாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

இதற்காக மாயன் கோவில் அமைந்துள்ள மலைகளின் உச்சியை தேர்ந்தெடுத்து ஆங்காங்கே படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆர்ஜென்டீனா அரசு பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு பாதுகாப்புப் படையின் உதவியுடன் மலைகளுக்கு செல்வோரை தடுத்து நிறுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி சீனாவில் சில மத அமைப்புக்கள் உலகம் அழியப் போவதனால் உங்களது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என மக்களை ஏமாற்றியவர்கள் என 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உலகின் பல பாகங்களிலும் வௌ;வேறு வகையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மக்கள் கொண்டாட்டம்

எது எவ்வாறான போதும் உலக அழிவு என்பது தற்போதைக்கு இல்லை என்ற நிம்மதிப் பெருமூச்சை பல நாடுகளில் வெளியாகியுள்ளதை அவர்களது கொண்டாட்டங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

இங்கிலாந்தில் சில பகுதிகளில் தொடர்ச்சியாக 24 மணிநேரம் மழை பெய்தமையினால் அதனை அண்டிய இன்னும் சில பகுதிகளில் காரிருள் சூழ்ந்ததில் அங்கு சில மணி நேரம் அச்சம் நிலவியுள்ளது. பின்னர் அங்கும் மக்கள் வழமைக்கு திரும்பி தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் கொண்டாடியுள்ளனர்.

இதேபோல உலகில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக மெக்ஸிகோ, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற இடங்களிலும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் கொண்டாட வேண்டி இந்நாள் வதந்திகள் பரப்பியோரை வெட்கிட்கச் செய்துள்ளதுடன் இனி வரப்போகும் இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அச்சுறுத்தி விழிப்படையச் செய்திருக்கிறது இந்த 21.

-அமானுல்லா எம். றிஷாத்



Friday, December 21, 2012

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி


ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை விஞ்ஞானம்.

மனிதன் வாழ பூமியை தவிர ஏதுவான கிரகங்கள் உள்ளனவா என பல்லாயிரக்கணக்கான ஆய்வாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தின் மீது எப்போதுமே ஆராய்ச்சியாளர்களுக்கு தனி மோகம் உண்டு. காரணம் செவ்வாய் கிரகத்தில் பல வருடங்களுக்கு முன்பு நீர் இருந்ததாக நம்பப்படுவதே.

இதற்காக ஏற்கனவே பல செயற்கைக் கோள்களையும், ரொபோட்களையும் விண்ணிக்கு அனுப்பியுள்ள நாசா விஞ்ஞானிகள், கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி கியூரியோசிட்டி என்ற ரொபட்டிக் விண்கலத்தினை பல்வேறு கனவுகளுடன் வெற்றிகரமாக அனுப்பியது.

யானை போய் அதன் வால் பொறுத்த கதையாக பல தடவைகள் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது பல விண்கலங்கள் வெடித்துச் சுக்குநூறாகியுள்ளது.

ஆனால் இந்த கியூரியோசிட்டி விண்கலமானது விஞ்ஞானிகளின் கனவுகளை வழக்கம் போல சுக்குநூறாக்காமல் 563,000,000 கீ.மீ தூரம் பாதுகாப்பாக பயணித்து செவ்வாயில் இவ்வாண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி தரையிறங்கி ஆய்வாளர்களுக்கான ஆராய்ச்சிக் கதவை திறந்து விட்டது.

செவ்வாயில் மனிதன் வாழ ஏதுவான காரணிகளை கண்டுபிடிப்பதனை பிரதான நோக்காகக் கொண்டே இந்த கியூரியோசிட்டி செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் செற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஏற்கனவே செவ்வாயில் நீர் இருந்துள்ளதாக நம்பப்பட்ட போதிலும் இதுவரையில் அதனை உறுதிப்படுத்தும் அளவிற்கு திருப்திகரமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நீர் இருப்பதனை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலமைந்த படங்களை நாசாவிற்குச் சொந்தமான கியூரியோசிட்டி விண்கலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

இதில் உருளையான கூழாங்கற்கள் நிறைந்த நிலப்ப பரப்புக்கள் பல மிகத் தெளிவாக காணப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர் பெரும் மகிழ்சியில் உள்ளதுடன் இதனை செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாகவும் கருதுகின்றனர்.

இது தொடர்பில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி ஜோன் கிரொட்சின்கர் கருத்து வெளியிடுகையில், உண்மையில் கியூரியோசிட்டி மூலமான ஆராய்ச்சிகள் மகிழ்சியைத் தருகின்றது.

எனினும் கியூரியோசிட்டியினை செவ்வாய் கிரகத்தின் மத்தில் தரையிறக்க எண்ணியிருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.

ஆனால் செவ்வாய் கிரகத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் சாதாரணமாக -70 பாகை வரையில் வெப்பநிலை குறைவடையும். இதனால் உறைந்த பாலை நிலமாக காணப்படும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆராய்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.

தற்போது செவ்வாயின் வெப்பநிலை 0 பாகையிலிருந்து 20 பாகை வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றமையால் நீர் இருப்பின் அதனை கண்டுபிடிப்பது சற்று இலகுவாக அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செவ்வாய் கிரகத்திலுள்ள கல், மண், தட்பவெப்ப நிலைகள் போன்றவற்றின் மேலதிக தகவல்களை துல்லியமாக படங்களாகவும் கியூரியோசிற்றி தற்போது வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கியூரியோசிட்டியில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள கெமரா மற்றும் ரொபட்டிக் அமைப்புக்கள் சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


விரைவில் செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா...

ஆரம்பத்தில் நிலவுக்கு குறியேற அறிவியல் உலகில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது கைகூடவில்லை. ஆனால் அண்மையில் நாசாவின் முன்னாள் விஞ்ஞானிகள் சிலர் இணைந்து 'கோல்டன் ஸ்பைக்' எனும் நிறுவனத்தின் மூலம் நிலவிற்கு தேசத்தின் பெருமைக்காக அல்லது ஆராய்ச்சிகளுக்காக ஆட்களை அழைத்துச் செல்ல முடிவுசெய்துள்ளனர்.

இதற்கான கட்டணம் வாயைப் பிளக்க வைக்கிறது. அதாவது அமெரிக்க டொலரில் 1.5 பில்லியன்களாகும். இது இருவருக்கான கட்டணம் மட்டுமே. இவ்வாறான அதிக செலவுகள் காரணமாக நாசாவே நிலவிற்கு மனிதனை அனுப்புவதனை கடந்த 40 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் அமைப்பாளரான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி அதில் சுமார் 80ஆயிரம் பேரை குடியமர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

முதற்கட்டமாக முன்னேறிய நாடுகளிலுள்ள தேகாரோக்கியமுடைய நடுத்தர வயதினரை தலா ஒருவருக்கு 5 கோடி செலவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சேகரிக்கக் கூடிய குறைந்தளவிலான தொகையாகவே இதனை நிர்ணயித்துள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் அங்கே எதிர்காலத்தில் வரவுள்ளவர்களில் நலனுக்காக பணியாற்றி விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. மேலும், வீடுகள் கட்டுவதற்கான உபகரணங்களையும் கொண்டுசெல்ல தயார் செய்யப்படுகிறது.

முதலில் பயணம் செய்யவுள்ளவர்கள் தங்கவென காபனீரோட்சைட் நிரப்பட்ட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளது. அதன் மேல் சூரியனின் வெப்பத்தைத் தாங்க நீர் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் சுதந்திரமாக செவ்வாய் கிரகத்தில் விவசாயத்தினை மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே முதற் பயணத்தின் போதே விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், மீத்தேன், ஆக்ஸிஜன் வாயுக்கள் போன்றவை எடுத்துச்செல்லப்படவுள்ளது. தூர நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சவால்மிக்க திட்டத்தில் பங்குகொள்ள தற்போது, உலகிலுள்ள ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டம் வெற்றி பெறுமானால், பூமியிலுள்ள 7 பில்லியன் மக்களும் ஆசைப்படுவார்கள்.

அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் இத்திட்டம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இப்போதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இதற்கென செங்குத்தாக மேலெழும்பவும் தரையிறங்கவும் கூடிய விசேடமான ரொக்கட் ஒன்று பரிசோதனைக்குட்படுத்தப்படுகிறது.

இந்த ரொக்கட்டுக்கு 'பல்கொன் 9' என பெயரிடப்பட்டுள்ளது இவ்வாறு லண்டனில் உள்ள ராயல் வான்வழி சமூகத்தில் வைத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் அமைப்பாளரும், முதன்மை செயல் அலுவலருமான எலன் மஸ்க் தெரிவித்தார்.

எனவே விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டமானது 'செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க' என அழைக்கபோவதை உறுதியாக நம்புகிறது அறிவியல் உலகம். அந்த நம்பிக்கை நிஜமாகும் போது அந்த சவால்மிக்க பயணத்திற்கு நாமும் தயாராவோம்!

-அமானுல்லா எம். றிஷாத்



Monday, December 17, 2012

உலக அழிவு தொடர்பில் அச்சத்தில் அனைவருமிருக்க, சாதாரணமாகப் பொழுதைக் கழிக்கும் மாயா இனத்தவர்கள்!

வீரகேசரி இணையத்தளத்திலிருந்து சண்முகராஜா கவிந்தனிடமிருந்து பெறப்பட்ட செய்தி இது

எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியுமா? அழியாதா? என்ற விடயம் இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஏன் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனை நினைத்துப் பலர் அச்சம்கொண்டுள்ளதுடன், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் அழியும் என்பதற்குப் பல விசித்திரமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றனஇ வரலாற்றுக் குறிப்புகள் அலசி ஆராயப்படுகின்றனஇ நாம் முன்னர் அறிந்திராத பல கதைகள் சொல்லப்படுகின்றன.

இவற்றில் முக்கியமானதொன்று மாயன் நாட்காட்டி பற்றியதாகும். அதாவது 'மாயா' நாகரீகத்தின் வழித் தோன்றிய மாயன் நாகரீகத்தைச் சேர்ந்த மக்களின் நாட்குறிப்பானது நாம் பாவிக்கும் நாட்காட்டியின் 2012-12-21 திகதியுடன் முடிவுக்கு வருகிறது என்பதாகும்.

இதன் முடிவின் பின் மாயன்களின் படைப்புக்கும் யுத்தத்துக்கும் (God of war and creation) பொறுப்பான கடவுளான போலோன் யோக்தே (BOLON YOKTH) இன் வருகை இடம்பெறும் என மாயன்கள் கணித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதிலும் சில வரலாற்று சான்றுகள்  பூதாகரமாக்கப்பட்டதால் உலகம் அழியப்போகின்றது என்ற எண்ணமானது பலரின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது.

சாதாரண விதையாக இருந்த பய உணர்வானது தற்போது வேரூன்றி விருட்சமாக மாறியுள்ளது. 

பலர் இன்று இவ்விடயத்தினை எண்ணி அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் மெக்ஸிக்கோவில் வசித்து வரும் சுமார் 800இ000 மாயா  இனத்தைச் சேர்ந்தவர்கள் தமது பொழுதினை எவ்வித பதற்றமும் இன்றிக் கழித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பப்பகுதியில் வாழும் மக்களும் தமது அன்றாடக் கடமைகளை எவ்வித பதற்றமும் இன்றி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21.12.2012 இ அதாவது நீண்ட மாயன் நாட்காட்டியின் 5இ125 ஆவது ஆண்டு சுழற்சி ஏற்படும் தினம் தொடர்பில்  மாயா இனத்தவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அவர்கள் இது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம்.

உலகம் அழியப்போவது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதெனவும்இ கடந்த 2006 ஆம் ஆண்டும் '6-6-6' (June 6. 2006) இன் போதும் பலர் இதனையே தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Friday, December 14, 2012

நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!


உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும்.

21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விடயமா? என்று எதிர்க் கேள்வி எழுப்பிகிறார்கள் ஆய்வாளர்கள்.

சரி அவ்வாறெனில் டிசம்பரில் ஏதாவது அசம்பாவிதங்கள் பூமியில் இடம்பெறுமா என்றால் நிச்சயமாக இல்லை என அடித்துக் கூறுகிறது நாசா. நிபிறு பிரளயம் மூலம் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆசாமிகள் பரப்பாத உண்மையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. 

அதாவது பிறக்கவிருக்கும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி பூமியை தொடாத குறையாக அஸ்டரொய்ட் ஒன்று மிக நெருக்கமாக புவியை கடந்து செல்லவிருக்கிறது. ஆனால் இந்த அஸ்டரொய்ட் புவியுடன் நிச்சயமாக மோதாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் புவியைக் கடந்து செல்வது சாதாரண விடயம்தான் என்றாலும் கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டரொய்ட்டும் இப்போது வரவுள்ள அஸ்ட்ரொய்டினை போன்று மிக நெருக்கமாக கடந்து சென்றதில்லை என்பதுவே அசாதாரணம். 

ஒவ்வொரு மாதமும் பல அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. நடப்பு மாதத்தில் கூட 3 அஸ்டரொய்ட் புவியை கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உண்மையில் அஸ்டரொய்ட்டுக்கள் என்பது கோள்களிலிருந்து பல்வேறு காரணங்களால் பிளவடைந்து அண்டவெளியில் சுற்றித் திரிகின்ற கற்கள் போன்றவொரு அமைப்பே. சில வேளைகளில் புவியின் ஈர்ப்புசக்தியினால் புவியை நோக்கி வரவும் பிளவடைவதற்கும் சாத்தியமுண்டு. 

இவ்வாறு உடைபடும் கோள்கள் ஒரு சுற்று பாதையில் சுற்றி வரும் அப்போது புவிக்கு அண்மையாகவோ தூரமாகவோ அமையும், சில வேளைகளில் பூமியில் வந்து விழும். இவை பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. 

வரும் பெப்ரவரி 15ஆம் திகதி 2 அஸ்டரொய்ட்டுக்கள் புவியை கடந்து செல்லவுள்ளது. இதில் 1999 YK 15 எனப்பெயரிடப்பட்ட ஒன்று புவியிலிருந்து 2 கோடி கிலோ மீற்றர் தொலைவில் செல்லும் அதேவேளை, 2012 DA 14 என பெயரிடப்பட்டுள்ள 48 மீற்றர் நீளமான மற்றய அஸ்டரொய்ட் ஒரு கட்டத்தில் புவிக்கு அண்மையில் அதாவது 24 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் பயணிக்கவுள்ளது. இதுவே சற்று பீதியை கிளப்புகிறது.

24 ஆயிரம் கிலோ மீற்றர் என்பது அதிக தூரமாச்சே! மேலும் இதன் அளவினை பூமியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதன் நீளம் வெறும் 48 மீற்றர்களே எனவே இதனால் என்ன பாத்திப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என எமக்கு தோன்றினாலும் விண்வெளி அலகினைப் பொறுத்தவரையில் இது மிக மிக குறைந்த தூரம். அத்துடன் புவியிலிருந்து அண்ணளவாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் ஏராளமான இணைச்சுற்று செயற்கைக் கோள்கள் (Geostationary satellites) வலம்வருகிறது. 

இவ்வாறு வலம் வரும் கோள்களுக்கும் புவிக்குமிடையில் குறித்த அஸ்டரொய்ட் பயணிக்கும் போது அதன் வேகம் மணிக்கு ஏறத்தாள 22 ஆயிரம் கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் இதன்போது மோதல்கள் இடம்பெற்றால் பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என அச்சப்படுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் ஒரு வேளை இந்த அஸ்டரொய்ட் பூமியுடன் மோதுண்டால்... உண்மையில் அது மோதலாக இருக்காது அதாவது ஒரு குட்டையில் கூழாங் கல்லொன்று விழுவதற்கு ஒரு மனிதன் குதிப்பதற்கு இடையிலான வித்தியாசத்தை போன்றதே அது. எனவே இந்த அஸ்டரொய்ட்டின் பருமனின் அடிப்படையில் நோக்கினால் பூமியில் விழுந்தால் என்னவாகும் என்பதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஆனாலும் இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட் பயணிக்கும் வேகம் பல்லாயிரக் கணக்காக மீட்டராக இருக்கும் மேலும் இதன் நிறை சுமார் 5 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் நிலப்பகுதியில் விழுந்தால் ஒரு கிராமம் அழியலாம் தவிர வேறு எந்த பாதிப்பும் வராது என எதிர்வுகூறப்படுகிறது.

இதுவரையில் 1353 அஸ்டரொய்ட்டுகளை பற்றிய முழுமையான தகவல்களை தன்வசம் வைத்துள்ளது நாசா. இருப்பினும் பெப்ரவரியில் வரவிருக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்கள் தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலுள்ள விண்வெளி ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமாக உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என சும்மாவா சொன்னார்கள் என்பது போல அமைந்திருக்கிறது இந்த சம்பவம்.

பூமியைப் போலவே, இந்த 2012 DA 14 அஸ்டரொய்ட்டும் சூரியனைச் சுற்றிவருகிறது. இதற்கு முறையே 365.24 நாட்களும் 365.24 நாட்களையும் எடுத்துக்கொள்கிறது. மேலும் இவற்றின் சுற்றுப்பாதைகளும் அருகருகே உள்ளது.

இதனால் ஆண்டுக்கு இருமுறை புவியை கடந்து செல்லுகின்றது. கடந்த முறை புவியை கடந்து செல்லும் போது பூமிக்கும் குறித்த அஸ்டரொய்ட்டுக்குமிடையிலான தூரம் சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் கிலோ மீட்டராக இருந்தது. 

இவ்வாறு பல்லாண்டு காலமாக புவியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டானது இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது. மேலும் இந்த அஸ்டரொய்ட்டினால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அடித்துக் கூறுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

2012 DA 144 அஸ்டரொய்ட்டு பூமியை கடந்து செல்லும் காட்சியைக் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் ஒன்றுகூடி காண்பத்றகு ஆயத்தமாகவுள்ளனர். இந்த அஸ்டரொய்ட்டினை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இதனால் சக்திமிக்க பைனகுலர்ஸ் மற்றும் டெலஸ்கோப்பினூடாகவே காண முடியும் எனக் கூறப்படுகிறது.

தொடரும் உலக அழிவு தொடர்பான பீதிகள்... 

முடியுமானால் பார்த்து ரசிக்க வேண்டிய இந்த அரிய காட்சியை உலக அழிவு என்ற வதந்தியுடன் சேர்த்து பீதியை கிளப்ப இப்போதே சிலர் ஆயத்தமாகிவிட்டார்கள். 

இவ்வாறனவர்களினால் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இன்னும் சில ஐரோப்பா நாடுகளிலும் மக்களிடையே வீணான அச்சத்தினால் சில மூடநம்பிக்கைககள் தளைத்தோங்க ஆரம்பித்துள்ளது. 

குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் தெற்கு பிரதேசத்தில் உள்ள பேர்காஜ் எனும் ஊரிலுள்ள மலை ஒன்றின் மேல் வேற்றுக் கிரகவாசிகளினால் ஒரு விண்கலம் அனுப்படும் அதில் இடம் கிடைக்கும் மனிதர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கிடக்கின்றது.

இதனால் அந்த ஊரிற்கு ஏராளமானவர்கள் கடந்த சில வாரங்களாக குடிபெயர ஆரம்பித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வூருக்குள் வெளியாட்களை அனுமதிப்பதனை தவிர்க்க பாதுகாப்புப் படையினரை குவித்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம். இதேபோல இங்கிலாந்திலும் ஒரு இடத்தில் மக்கள் கூடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் சில பாகங்களிலும் பறக்கும் கற்கள் 

வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் எம்மவர்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதனை தவிர்க்க முடியவில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கம்பஹா, அநுராதபுரம் மற்றும் சில பகுதிகளில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட் போன்ற வகையான கற்கள் வானத்தில் தென்பட்டு வருகின்றது.

ஆனாலும் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இது போதாதா? வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவலாய் சிக்கியுள்ளது இந்த பறக்கும் கற்கள். தற்போது இவர்கள் தங்களது விருப்பத்திற்கு புரளியை அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே அவ்வாறானவர்கள் போலி வார்த்தைகளை நம்பி அவற்றை ஏனையோரிடமும் பரவச்செய்து 22ஆம் திகதி விடியும் இனிய பொழுதில் வெட்கித்து நிற்பதை தவிர்க்க முயற்சிப்போம்!

-அமானுல்லா எம். றிஷாத் https://www.facebook.com/rizathstar

இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள எனது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையே இது  "நிபிறு போனாலென்ன...? அஸ்டரொய்ட் வருதே!"


Sunday, December 9, 2012

உறுதியானது அஜித் - முருகதாஸ் கூட்டணி : 'தல'யைச் சுற்றும் இயக்குனர்கள்


அண்மைக்காலமாகவே அஜித்துடன் இணைந்து பணியாற்ற நான், நீ என பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அஜித் அறிமுகம் செய்து வைத்த முருகதாஸ் கொஞ்சம் அதிகமாவே முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தற்போதை முன்னணி இயக்குனர்களான அஜித்தினால் அறிமுகமாகாத ஷங்கர், பாலா, கௌதம் மேனன், ஹரி என பலரும் அஜித்தினை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தவர்களே ஆனாலும் ஒவ்வொன்றும் பல்வேறு காரணங்களால் நடக்காமலேயே போய்விட்டது.

இதற்கு முழுக் காரணமும் அஜித்தின் மோசமான செயல்களே என்பது போல சித்தரித்து அன்று ஏராளமான ஊடகங்கள் அண்ணன் நடிகரை உயர்த்தி அஜித்தின் மேல் சேறு பூசி வேடிக்கை பார்த்ததெல்லாம் இன்றும் தல ரசிகளுக்கு ஆறாத வடுவாய் இருக்கிறது. இருப்பினும் இன்று அதே ஊடகங்கள் 'தல' அசைந்தாலும் ஆடினாலும் செய்திகளாக்கிக்கொண்டிருப்பது வேறு கதை.

ஆனாலும் உண்மையான அஜித்தின் முகம் இன்று சினிமா உலகை தாண்டி தெரியவந்துவிட்டது என்பதே உண்மை. இதனாலேயே அண்மைக்காலமாக பல இயக்குனர்கள் அஜித்தை சுற்றி வருகிறார்கள்.

அஜித் இயக்குனர்களின் நடிகர் என்பதை அவர் பணியாற்றிய புதுமுக இயக்குனர்களின் எண்ணிகையே உணர்த்திவிடுகிறது. சரண், சரண், எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய், துரை, சரவண சுப்பையா, செல்லா, ரமேஸ் கண்ணா, சிங்கம் புலி, ராஜு சுந்தரம் என இன்னும் பலர் இந்த வரிசையில் உள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அஜித்துடன் பணியாற்றிய புது முக இயக்குனர்கள் அத்தனை பேரும் தலயுடன் நெருக்கமாகவே இருக்கிறார்கள்.

இவர்களில் தற்போது உச்சத்தில் இருக்கும் இயக்குனர் முருகதாஸ் அஜித்துக்காகவே கதை தயார் செய்து காத்துக்கொண்டிருக்கிறார். இவரின் காத்திருப்புக்கு  தற்போது தல விடைகொடுத்துள்ளாதாக கொலிவூட் வட்டாரம் உறுதிப்படுத்துகின்றது.

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றிபெற்று தல என்று தமிழ் சினிமாவில் கொண்டாட வைத்த தீனா படத்தி;ன் வெற்றிக்கு பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் முருகதாஸ், தீனா வெற்றிக் பின்னர் மிரட்டல் மற்றும் பெயரிடப்படாத படமொன்றில் தன்னை அறிமுகம் செய்த அஜித்துடன் மீண்டும் பணியாற்ற முயற்சித்த போதும் அது கைகூடாமலே போனது.

அஜித்திற்காக கதை தயாராக உள்ளது. அவர் அழைக்கும் பட்சத்தில் கையிலிருக்கும் படத்தை விட்டுவிட்டு அவருடன் பணியாற்றுவேன் என அண்மைக்கால பேட்டிகளில் அஜித்திற்கு தகவல்கள் அனுபியவாறே இருந்தார் முருகதாஸ் ஆனாலும் தல அவற்றைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் திடிரென இக்கதையில் திருப்பத்தை ஏற்படுவது போன்று ஐங்கரனின் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தினையடுத்து இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் 2013இல் அஜித் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றில் இணையவுள்ளமை தல ரசிகர்ளுக்கு நிச்சயம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது நிச்சயம்.

அஜித்தினால் அறிமுகமான என பல இயக்குனர்கள் இன்றும் அஜித்துடன் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என காத்திருக்க சற்றே முந்திக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இவர் தவிர இன்னும் சிலரும் அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்துவிட வேண்டும் என சில இயக்குனர்கள் கதையுடன் காத்திருக்கிறார்கள். இதில் கௌதம் மேனன், ஹரி போன்றவர்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கதைகள் எதுவும் சோதனை முயற்சியாக இல்லாவிட்டால் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

https://www.facebook.com/Wondersblog உடக்குடன் தகவல்களை அறிந்துகொள்ள எமது பேஸ் புக் பக்கதுடன் இணைந்திருங்கள்.

இந்த போஸ்டிலுள்ள செய்தியினை முந்திக்கொண்டு பலமணி நேரங்களுக்கு முன்னரே பேஸ்புக் பக்கத்தில் நாம் வெயிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, December 8, 2012

ஐ போனாக மாறப்போகும் ஐ (கண்) : புதியதோர் அறிவியல் கண்டுபிடிப்பு


கொலிவூட் படங்களிளில் வருவது போன்று text messageகளை வாசிக்கக்கூடிய புதிய வகை தொடுவில்லை (contact lens)  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 'விரைவான செய்திகள் ('instant messaging')' என்பதற்கு புதிய அர்த்தத்தினை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து electronic messagesகளை நேரடியாக குறித்த contact lensஇனை அணிந்திருப்பவருக்கு சென்றடையும் வகையிலான புதிதோர் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர்.

இதற்காக பயன்படுத்தப்படும் கோளவடிவ எல்.சீ.டி திரை, பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாராய்சியானது எம்மை தொடர்பாடல் ரீதியாக முற்றிலும் மாற்றியமைக்கும் அதாவது தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற துல்லியமான படங்களை பார்க்கக்கூடிய ஐ உருவாக்கும் திட்டத்தினை நோக்கிச் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இது தொடர்பில் பேராசிரியர் ஹேர்பேர்ட் டி ஸ்மெட் கருத்துத் தெரிவிக்கையில், இப்போது நாங்கள் அடிப்படை தொழில்நுட்பத்தினை நிறுவியுள்ளோம்.

இதன் உண்மையான பயன்பாடுகளினூடாக நாம் விரைவில் வேலைகள் செய்ய முடியும். இது அடுத்த ஒரு சில வருடங்களிலே இது சாத்தியமாகும்.

அதாவது துல்லியமான படங்கள் மற்றும் தகவல்களை பெற குறித்த contact lensஇனைப் பயன்படுத்த முடியும்.

மேலும் இவ்வகை இனை ஒத்த சன் கிளாஸ்களை கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தள்ளனர். ஆனால் இது ஒன்று அறிவியல் புனைக்கதைகள் அல்ல. எனவே இது படங்களை பார்க்கும் திரையரங்கை மாற்றீடாக அமையவே மாட்டாது.

இருப்பினும் பாதை வழிகள், ஸ்மார்ட் போன்களிலுள்ள மெசேஜ் போன்றவற்றை நேரடியாக கண்களிலேயே பார்க்ககூடியவாறு அமையும் என தெரிவித்துள்ளார்.






Friday, December 7, 2012

நிலவுக்கு நாமும் போகலாம் ஆனா 1.5 பில்லியன் டொலர் செலவாகுமாம்


நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லுவதற்காக நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் 'கோல்டன் ஸ்பைக்' எனும் நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் சாதாரணமாக எல்லோரும் பயணிக்க முடியாது காரணம் இந்த பயணத்திற்கான கட்டணத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும். இரண்டு பேருக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே அறவிடப்படும் என அறிவித்துள்ளது குறித்த நிறுவனம்.

ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காகவும் அங்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களை வேறு நிறுவனங்களிடம் தயாரிக்க ஒப்படைத்துள்ளதுடன் சிலவற்றை ஏற்கனவே இயங்கிவரும் விண்வெளி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்காக தற்போது உபயோகத்தில் உள்ள விண்வெளி ஓடங்கள் மற்றும் தொழிநுட்பங்களை 'கோல்டன் ஸ்பைக்' நிறுவனம் பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செலவினங்களை கருத்திற்கொண்டு நிலவிற்கு பயணிப்பபதை நிறுவைத்துள்ளது. நாசா இறுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவிற்கு பயணித்திருந்தது.




Thursday, December 6, 2012

SMS sevai aarampiththu 20 varudangal! : இதுவொரு புது அனுபவம்


'ennathan udambula koadik kanakka cellkal irunthalum onrila kooda sim card poda mudiyathey' இதை எங்கயோ கேட்டமாதிரி இருக்குமே? ஆமாங்க நீங்களோ இல்லை உங்க நண்பரோ இந்த மொக்கை தத்துவத்தை குறுந்தகவலில் (SMS) படித்ததாக கூறி எப்போதாவது ஒரு நாள் சிலாகித்திருப்பீர்கள்.

இவ்வாறு இப்போதைய இளைஞர்களையும் ஆர்வமிக்க பெரியோரையும் ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருக்கும் குறுந்தகவல் என்ற சமாச்சாரம் ஆரம்பமாகி 20 வருடங்களை கடந்த 3ஆம் திகதி எட்டியது.

நாட்கள் நடைபோடுகின்ற வேகத்தில் ஒரு நிமிடத்தினை விட்டாலும் அதனை துரத்திப்பிடிக்க ஆயிரம் நாட்கள் வேண்டும் என்றாகிவிட்ட நிலையில் வாழ்க்கையில் எவற்றையெல்லாமோ சுருக்கிக்கொண்டிருக்கும் எமக்கு எழுத்துருக்களை சுருக்க வழி வகுக்க காரணமானவற்றில் இந்த குறுந்தகவலும் ஒன்று.

எத்தனை பெரிய விடயமாக இருந்தாலும் 160 எழுத்துக்களுக்குள் அடக்கி ஆழும் திறமையைக் கொண்டுள்ள குறுந்தகவலின் வளர்ச்சி பற்றி கூற 160 குறுந்தகவல் கூட பேதாது என்பதை கையடக்கத் தொலைபேசியின் விசைப்பலகையுடன் பயணிக்கும் பலருக்கும் தெரியும்.

தமிங்கிலம் (Tamilai aangilaththil eluthuvathu) போல இன்னும் ஏராளமான மொழிகளுக்கு பொதுமொழியாக இருக்கும் குறுந்தகவலின் நெடும் பயணம் பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியலாளர் நீல் பப்வொர்த் தனது ஓபிடெல் 901 செல்போனில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலமாக ரிச்சர்ட் ஜர்விஸுக்கு அனுப்பிய "Merry Christmas" என்ற வாழ்த்துச் செய்தியுடன் ஆரம்பமான குறுந்தகவலுக்கு அப்போது ரிச்சர்டினால் பதிலளிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தின் போதே உலகில் முதன் முதலாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது. இவ்வாறே குறுந்தகவலாக்கும் வல்லமை கொண்ட நெடுந்தகவல் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனாலும் வியாபார ரீதியாக உலகையே சுருக்கும் குறுந்தகவல் சேவையானது 1993ஆம் ஆண்டு ஸ்வீடனில் முதன் முறையாக டெலியா என்ற நிறுவனத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் இச்சேவை ஆரம்பமானது.

இக்காலப் பகுதியில் அதிகமான நிறுவனங்கள் பேஜர் தொடர்பானவற்று அதிகளவில முதலீடு செய்துகொண்டிருக்க நொக்கியா நிறுவனமோ குறுந்தகவல் சேவையுடன் கூடிய நொக்கியா-2110 என்ற மாதிரி போனை 1994ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்து வைத்து குறுந்தகவல் வளர்ச்சியை ஏற்படுத்த ஆரம்பித்தது.

மக்களும் எழுத்து மூலமாக தாமாகவே பேச பெரிதும் ஆசைப்பட்டதனால் பேஜருக்கு மூடு விழா வைக்கச் சொல்லியது போல் அமைந்தது குறுந்தகவலின் வருகை.

இந்நேரத்தில் வொடாபோன் நிறுவனம் இலவசமாக இந்த சேவை வழங்கி அசத்தியது. இது ஒரு வலையமைப்புக்குளே என்று குறுகலாக காணப்பட்டது. ஆனாலும் இச்சேவையானது அதிரடியாக லண்டன் மாணவர்களிடையே குறுகிய காலப்பகுதியிலேயே பிரபல்யமடையலாயிற்று.

மாணவர்கள் விரைவாகவும் அதேவேளை சுருக்கமாகுவும் வார்த்தை மூலம் பேசிகொள்வதை விருப்பத்துடன் பாஸ்ட் பூட்டினை போல தங்களுக்குள் பொருந்தச் செய்துகொண்டனர்.

இத்தனைக்கும் இன்றுபோலல்ல அன்று வெறும் 160 எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என மட்டுப்படுத்தி இது குறுந்தகவல் மாத்திரமே என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மேலும் அது வேகம் குறைந்ததாகவும் இப்போதுள்ள பல வசதிகள் இன்றியும் காணப்பட்டது.

இருப்பினும் குறுந்தகவலின் வரவேற்பினை மட்டுப்படுத்த முடியாமல் போவதினை உணர்ந்துகொண்ட நிறுவனங்கள் 1999ஆம் ஆண்டிலிருந்து பல வகையான வலையமைப்புக்களுக்கும் அனுப்பலாம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்து அதற்கு ஒரு கட்டணத்தையும் நிர்ணயித்தது.

இதனால் மேலும் வலுவடைந்த குறுந்தகவல் சேவை 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1 பில்லியன் குறுந்தகவல்கள் அனுப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது தொடர்பில் இங்கிலாந்தின் டெலிகிராப் குறிப்பிடுகையில், 'குறுந்தகவல் சேவையானது அவர்களுடைய மொழிகளை மட்டுப்படுத்த வித்திட்டுள்ளது, சைகைகளையும் குறிகளையும் வசனங்களை நசுக்குகின்றனர்' என சுட்டிக்காட்டியிருந்தது.

2001ஆம் ஆண்டிற்கு பின்னரான குறுந்தகவல் சேவையின் வளர்ச்சி அளப்பரியதாகிவிட்டது. ஆனால் டெலிகிராப் பத்திரிகையின் வார்த்தைகள் நிரூபணமாகியுள்ளதை உண்மையில் மறுக்க முடியவில்லை. மனிதனின் மனங்களைப் போல வார்த்தைகளும் குறுகலாவிட்டது. உதாரணமாக தமிழ்மொழி tamilmoliஆகிவிட்டது.

நலமா? என்ற சிறிய வார்த்தை கூட 5n? என்றாகிவிட்டது. இதேபோலtks, lyk, gud 9t என ஏராளமான வார்த்தைகளுண்டு  இவை குறுந்தகவல் விரும்பிகளுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவை எல்லாம் எமக்கு உணர்த்துவது தமிழ்மொழி மட்டுமல்ல ஏனைய மொழிகளும் இனி மெல்லச் சாகும் என்பதையே.

மேலும் கடிதங்களில் உறவு கொண்டாடிய பல சொந்தங்களை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டு அவற்றிலிருந்த பாசத்தையும் உடனடியான பாசமாய் சுருக்கி, மொழிககளின் இனிமையையும் கொன்று குவிக்கின்றது என்று மொழிகளை விரும்பும் பலரிடையே அளவுக்கதிகமான புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்த குறுந்தகவல் சேவை.

இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பிறகு குறுந்தகவல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் மக்களில் பலர் வசதிகள் அதிகமுள்ள ஸ்கைப், கூகுள் டோக், மெசஞ்சர், நிம்பஸ் போன்றவற்றையே அதிகம் விரும்புகின்றனர். என்ன வந்தாலும் போனாலும் குறுந்தகவலே சிறந்த வழி என்ற ஒரு இளைஞர் கூட்டம் இருக்கும் வரையில் குறுந்தகவல் சேவை குறையப்போவதில்லை என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.

உண்மையில் எது எவ்வாறு இருப்பினும் இந்த குறுந்தகவல் சேவையை புறந்தள்ளிவிட முடியாத நிலையிலேயே இப்போது நாம் அனைவரும் இருக்கிறோம். தற்போது ஒவ்வொரு செக்கனுக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வர்த்தம், ஊடகம், விளையாட்டு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மருத்துவம் என இன்னும் பலவகையான துறைகளிலும் எழுத்தூண்றி நிற்கிறது இந்த குறுந்தகவல் சேவை.

ஆகவே 20 ஆண்டுகளை வெற்றிகரமா பூர்த்தி செய்து 21ஆவது ஆண்டில் கால்பதிக்கும் குறுந்தகவல் சேவைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு எந்த சேவை இந்த குறுந்தகவல் சேவைக்கு முட்டுக்கட்டைபோடும் என்பதை யூகித்துக்கொண்டிருப்பதைத் தவிர வழியேதுமில்லை.

எனவே அதுவரை குறைகளையும் குற்றங்களையும் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு குறுந்தகவலில் வரும் பெருந்தகவல்களால் முன்னேறவும் முன்னேற்றவும் முயற்சிப்பதே சிறப்பு.

அமானுல்லா எம். றிஷாத்

Note : இது மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கமல் ஒரு பக்கம் போக... பிரச்சினை ஒரு பக்கம் போகிறது


இந்திய சினிமாவில் புதிய யுக்தியை அறிமுகம் செய்ய முயற்சிக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் சர்ச்சை நாயகனாகிவிடுவார் போல தெரிகிறது தற்போதைய நிலைமைகள்.

தமிழ் சினிமாவில் புதுமைகளை புகுத்தும் உலக நாயகன், இம்முறை தான் தயாரித்து இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தினை திரையரங்குகளில் வெளியிட 8 மணித்தியாலங்களுக்கு முன்பதாகவே டீ.ரீ.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

இதற்காக விஸ்வரூபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையை முக்கியமான டீ.ரி.எச் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்நிறுவனம் ஏனைய டீ.ரீ.எச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விற்பனை செய்யவுள்ளது. இதில் கிடைக்கும் இலாபத்தை கமலும் டீ.ரீ.எச் நிறுவனமும் பகிர்ந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.

தொடரும் எதிர்ப்புக்கள் 
இத்திட்டத்தின் மூலம் திருட்டு வீசீடி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பது கமலின் நம்பிக்கை. ஆனாலும் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம்கள் மத்தியில் விஸ்வரூபம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் வலுப்பெற்று வருகின்றது.

இசை வெளியீடு
ஆனாலும் கமல் இவற்றையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இசை வெளியீட்டில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றார். சென்னையில் வை.எம்.சீ.ஏ திறந்த வெளி அரங்கிலும் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையிலும் இசை வெளியீட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார் உலக நாயகன்.

விஸ்வரூபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கொள்வனது செய்துள்ள ஜெயா டீவியே இசை வெயியீட்டு ஒளிபரப்பு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.

கமல் விளக்கம்
இசை வெளியீடு ஒரு பக்கம் செல்ல பிரச்சினைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் இந்நிலையில், இன்று டீ.ரீ.எச் தொழில் நுட்பத்தில் வெளியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டினை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதையும் அது தயாரிப்பாளரின் உரிமை என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்திச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முதலும் ஏகப்பட்ட சமாச்சாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் கமல். அப்போது அவர் சந்தித்த பிரச்சினைகளை விட இது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதி. ஏன்னா அவர்தான் உலக நாயகனாச்சே

வீரகேசரியில் பகிரப்பட்டது - http://www.virakesari.lk/article/cinnews.php?vid=147


Wednesday, December 5, 2012

இனி அவன் - விமர்சனம்


கடந்த மாதம் 30ஆம் கொழும்பில் ஆரம்பமான யுரோப்பியன் பில்ம் பெஸ்டிவலில் காணக்கிடைத்த இனி அவன் திரைப்படத்தின் விமர்சனம் இங்கே. இவ்விமர்சனம் வீரகேசரி இணையத்தளத்திலும் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி அவன் - விமர்சனம்

இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்'  இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று.

அசோக ஹெந்தகமவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்து தனது ஊரிலேயே சாதாரணமான வாழ்க்கையை தொடரவிரும்பும் ஒரு இளைஞனின் கதை.

பஸ் ஒன்று மெதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைய ஆரம்பிப்பதுடன் படமும் மெதுவாக நகருகிறது. முன்னாள் போராளியான இளைஞனுக்கு (தர்ஷன் தர்மராஜ்) அவனது ஊரில் தாயை அவனது காதலியையும் தவிர ஏனையவர்கள் அவனது மனநிலையை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்.

ஆனால் எப்படியாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ போராடுகிறான். இந்நிலையில் நகைக்கடையொன்றில் இவனது வீரத்தின் பரிசாக வேலை ஒன்று கிடைக்கிறது. பின்னர் அக்கடை முதலாளியும் வெளிநாடுகளில் வாழும் இவனது பழைய நண்பர்களும் இணைந்து மீண்டும் ஆயதக்கலாச்சரத்திற்கு நாயகனை தள்ளிவிடுகிறார்கள்.

தொடர்ந்து நாயகன் அதிலிருந்து மீண்டானா? அல்லது துரோகிகளுடன் சேர்ந்து மாண்டானா? என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. இரவு நேர கடற்கரை காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள லைட்டிங் தவிர ஏனையவை சிறப்பு.

அத்துடன் முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்திய விதமும் அருமை. மீண்டும் தவறுதலாக ஆயுதக் கலாச்சாரத்திற்கு சென்றதை உணர்ந்துகொண்ட போது ஏற்படுகின்ற பரிதவிப்பையும் சிறப்பாக காட்டுகிறார்.

இவர்கள் தவிர ஏனைய கதாபாத்திரங்களும் தேவையானதை செய்து படத்தினை ரசிக்க உதவியிருக்கிறார்கள். குறிப்பாக சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா பாத்திரத்தினை உள்வாங்கிருக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில வசனங்களும் சில இடங்களில் படத்துடன் ஒன்றிப்போகவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட கோளாறு போலவும் தெரிந்தது. இருப்பினும் ஒன் லொக்கேசன் இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைகிறது.

வசனங்கள் குறைவு என்றாலும் யதார்த்தமாகவும் அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரபாகரனை கேள்வியா கேட்டிங்க?, பிரபாகரன் வென்றிருக்கலாம் என்ற இடங்கள் பன்ச் ரகமாய் அமைகிறது.

நிறைகள் அதிகமிருந்தபோதிலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனரின் திரைக்கதையிலிருக்கும் நேர்த்தி முதல் அரை மணி நேரத்திற்கு எடிட்டிங்கில் இல்லாமல் போனது திரைக்கதையை மிக மெதுவாக நகரச்செய்வது வருத்தம்.

இதுமட்டுமன்றி ஒப்பனை ஒரு சில இடங்களில் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நிரஞ்சனி சண்முகராஜாவின் மேல் பூசப்பட்டுள்ள கருப்பு சாயம் பட்டும் படாமல் இருக்கிறது. இயல்பான படமொன்றிக்கு ஒப்பனையில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே உழைத்திருக்கலாம்.

இயக்குனரின் தமிழர்களின் மீதான பார்வை பல இடங்களில் சிறப்பாக பளிச்சிடுகிறது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் நாயகனுக்கு உதவ ஒரு சிங்கள வாகன ஓட்டுனர் கேட்க பதிலேதும் இல்லாமல் திருத்த வேலையை தொடர மோட்டார் சைக்கிளின் கோளாறும் திருத்தப்பட்டுவிடும். பின்னர் அந்த சிங்கள நண்பருக்கு நன்றி சொல்லி வழியனுப்புகிறார்கள். இந்த இடத்தில் நாயகனுடன் சேர்த்து தமிழர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் ஒரு உணர்வை ஏற்படுத்தியிப்பது மகிழ்ச்சி.

அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.

ஆனாலும் தமிழர்கள் அழிவதற்கு அவர்களே காரணமாகின்றனர் என நாசுக்காக காட்டியிருக்கும் இயக்குனர் இறுதியில் மீண்டும் யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை கைவிட்டதாக காட்டாமல் போனது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் முடிவில் வரும் எழுத்தோட்டத்தில் இனியவன் என்று சிங்களத்தில் வருவதை கவனத்தில் எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் யுத்தத்தினை அனுபவித்தவர்கள் மீண்டுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை என்பதை உணர்த்தி நாயகன் ஒரு பக்கம் விரைந்து செல்ல கெமரா வானத்தை நோக்கி சென்று ஓங்கி வளர்ந்திருக்கும் பனமரங்களை காட்டியவாறு தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதை உணரவைத்து இனியவனாய் முடிகிறது இந்த 'இனி அவன்'.

அமானுல்லா எம். றிஷாத்



Monday, December 3, 2012

இறுவட்டையும் வெளியிடுகிறார் உலக நாயகன் : இதுவொரு விஸ்வரூப முயற்சி


தமிழ்சினிமாவில் அவ்வப்போது விஸ்வரூப மாற்றத்தை கொண்டுவருபவர் என்றால் அது உலக நாயகன் கமல் ஹாசன் மட்டுமே. அது நடிப்பாக இருந்தாலும் சரி தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி.

அந்த வகையில் கமல் ஹாசனே தயாரித்து இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தினை திரையரங்கில் வெளியிடும் அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் உரிமையை வழங்கி வெளியிட புதியதோர் முயற்சியை திட்டமிட்டுள்ளார் உலகநாயகன்.

மேலும் டிவீடி, இன்டர்நெட் உரிமைகளையும் மொத்தமாக விற்பனை செய்யவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் உரிய தொகை கிடைத்து விடும் அதேவேளை திருட்டு விசீடி, டீவீடீக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது உலகநாயகனின் யுக்தி.

ஆனால் திரையரங்கங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பும் இம்முயற்சிக்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. மேலும் வழக்கம் போல எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் தமிழ்சினிமாவிலுள்ள சிலர் இதை பற்றி அலட்டிக்கொண்டதாக இல்லை.

இருப்பினும் உலக நாயகனும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதுவே உண்மை. காரணம் இதற்கு முதலும் கமலின் புதுமையான கருத்துக்களுக்கும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்த பலர் அவற்றின் வெற்றிகளுக்கு பின்னர் ஆதரவாக பேசி கைதட்டல் வாங்கிய சம்பவங்கள் ஏராளம் உண்டு.

தொலைக்காட்சிகள் சனல்கள் ஆரம்பமானபோதும் கூட இது சினிமாவிற்கு ஆபத்து என்று சினிமாக்காரர்கள் அர்த்தமில்லாமல் பேச கமல் மட்டுமே ஆதரவாக பேசினார். தற்போது திரையரங்கில் ஈயடிக்கும் படங்களைக்கூட 100 கோடி 1000 கோடி வசூலை நோக்கி என்று கூவி கூவிக் ஓரளவு கூட்டம் சேர்ப்பது இந்த தொலைக்காட்சிகளினூடவே என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதே போலவே கமல் ஹாசன் தன் சொந்தப்படத்தில் எடுக்கும் குறித்த முயற்சி வெற்றிபெற்றால் அதனை ஈயடிக்கவும் பெரிய கூட்டமே வரிந்து கட்டி நிற்கும் என்பது மட்டும் இப்போதைக்கு திண்ணம்.

விடா முயற்சி விஸ்வரூவ வெற்றி எனவே தீயா வேலை செய்வார் மிஸ்டர் உலகநாயகன்!

Sunday, December 2, 2012

புதிய வகை மீன்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர்


முன்னரெல்லாம் புதிதாக ஏதாவது கண்டுபிடித்தால் வாய்க்கு நுழையாத பெயர்களை வைப்பதை வழக்கமாக வைத்திருந்த விஞ்ஞானிகள், அண்மையில் அமெரிக்காவில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீன் வகைகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயபெயரை சூட்டியுள்ளனர்.

அமெரிக்காவில், அலபாமா மற்றும் டென்னிசி மாகாணங்களில் உள்ள நதிகளில்இ செம்மஞசள், நீல நிற புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் 43 மி.மீ. நீளத்தில் 200 மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை ''டார்டர்'' என்ற வேகமாக நீந்தும் மீன் வகையை சேர்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்தும் ஒருவராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருப்பதனால் அவரின் பெயரையே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு விஞ்ஞானிகள் சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.