சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Wednesday, November 13, 2013

100 கோடியை நெருங்கும் ஆரம்பம் வசூல் : முழுமையான அலசல்

அஜித் நடித்துள்ள ஆரம்பம் திரைப்படம் 100 கோடி இந்திய ரூபா வசூலினை நெருங்கியுள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஸ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்பஸி உள்ளிட்டோர் நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் கடந்த 31ஆம் திகதி உலகம் முழுவதும் 22 நாடுகளில் வெளியானது. இதன் மூலம் தமிழ்படமொன்று அதிகூடிய நாடுகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஆரம்பம் பெற்றது.



விளம்பரங்களில் அஜித் பங்குகொள்ளாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அப்படத்தினை பெரியளவில் விளம்பரப்படுத்தி அஜித்தின் பெரிய ஓப்பனிங்கை மிகப்பெரிதாக்கினர். இதனால் முதல் வாரத்தில் 50 கோடியினை வசூலித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் அனைத்து இடங்களிலும் எந்திரன், விஸ்வரூபம் படங்களுக்கு அடுத்த படியாக வசூலை வாரிக்குவித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியான ஏராளமான திரையரங்குகளில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறியது. இதனையடுத்து ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டிய நாடு படங்களுக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.

இதேவேளை தமிழ்நாட்டில் பெருவாரிய திரையரங்குகளை இவை கைப்பற்ற புதிய படங்களும் திரையிடப்படவில்லை. இதனால் 3ஆவது வாரமாகவும் ஆரம்பம் வசூல் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 91.63 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி ரூபா வசூலினை ஆரம்பம் படம் பெற்றுவிடும்.

தமிழ்சினிமாவில் எந்திரன் மற்றும் சிவாஜி (உரிமைகளையும் சேர்த்து) படங்களே இதுவரையில் 100 கோடி ரூபா வசூலினைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில் அஜித்தின் ஆரம்பமும் விரைவில் இணைந்துவிடும் என்பதை சினிமா ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

குறிப்பு : பகுதிவாரியான வசூல் நிலைமைகள் சற்றே வித்தியாசப்பட்டு காணப்படுதால் மொத்தமான தொகை மட்டும் குறிப்பிடப்பட்டள்ளது. அத்துடன் வசூல் தொகை அனைத்தும் இந்திய மதிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


-ஏ.எம் .http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2958



Sunday, September 29, 2013

ராஜா ராணி - விமர்சனம்

கதை, திரைக்கதை, இயக்கம் - அட்லி
நட்சத்திரங்கள் - ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்தியராஜ், சத்யன்
இசை - ஜீவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு - ஜோர்ஜ். சீ. வில்லியம்ஸ்
எடிட்டிங் - அன்டனி எல். ரூபன்
தயாரிப்பு - பொக்ஸ் ஸ்ரூடியோ

ஆர்யா - நயன்தாரா திருமண அழைப்பிதழிலிருந்து விளம்பரமும் கூடவே எதிர்பார்ப்பையும் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸையும் சுமந்து வந்திருக்கும் திரைப்படம் ராஜா ராணி.



ட்ரெய்லர் மற்றும் விளம்பரங்களில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா? இல்லையா? என்றால் நிச்சயமாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Made for each other என்று யாரும் பிறக்கிறதில்லை. அது வாழ்ந்து காட்டுறதுலதான இருக்கிறது என்பதுதான் ராஜா ராணி படத்தின் கதை.

ஆர்யா - நயன்தாரா திருமணத்தில் படம் ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலிருந்தே ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் ஒத்துப்போகவில்லை. அது ஏன்? எதுக்காக என்கிற விடயத்தை திரைக்கதையில் சிறப்பாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.

ஆர்யா - நயன் இருவரும் திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்கிறார்கள். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஆர்யாவும் சோகமாகவே இருக்கும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.



தங்களது குடும்பத்திற்காக திருமணம் செய்தவர்கள் அதுவரையில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிராகவும் இருந்த இருவருது காதலும் பிளாஷ்பெக்கில் தெரியவருகிறது.

இதில் சந்தோஷமான நயன் - ஜெய் காதலில் ஜெய் இறக்கிறார். நயன் சோகத்தில் ஆழ்கிறார். கலகலப்பான ஆர்யா - நஸ்ரியா காதலில் நஸ்ரியாவை கண் முன் பறிகொடுத்து தவிக்கிறார் ஆர்யா.

இருந்தாலும் கண்களை கசக்கிக்கொண்டே இல்லாமல் ஆர்யா, நயன், சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்யன் என அனைவரும் கலகப்பூட்டுகிறார்கள்.

ஆர்யா - நயன்தாரா காதல், ஆர்யா - நஸ்ரியா காதல், நயன்தாரா - ஜெய் காதல் இம்மூன்று காதலையும் அலுப்பில்லாமல் அசரடிக்க வைக்கிறது படம். மூன்று காதல் என்றாலும் உலகத் தரம் என்ற பெயரில் திரைக்கதையில் மண்டையை காயவிடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



கொமடியை எதிர்பார்த்துப்போன படத்தில் எதிர்பாராமல் நல்ல கதையையும் அதில் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ரசிகர்களை ஆட்சி செய்கிறார்கள் ராஜா ராணி குழுவினர்.

அறிமுக இயக்குநர் அட்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநர் என்பதை காட்டவோ என்னவோ அடிக்கடி சிவாஜி படத்தினை ஞாபகப்படுத்திறார். ஷங்கரைப்போலவே பாடல் காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். திரைக்கதையும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

வலுக்கட்டாயமான சண்டைகள் இன்றி வலுவான திரைக்கதையில் அசத்துகிறார் அடலி. வெல்கம் டூ கொலிவூட்.



வசனங்களும் பல இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக ஒரு பொண்ணு அழுதா ஏமாத்தப்போறான்னு அர்த்தம். அதுவே ஒரு பையன் அழுததான்னா ஏமாந்துட்டான்னு அர்த்தம், யார் அழுதா கண்ணு வேர்க்குது,  நண்பன்ல ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்டாலே நல்லவன்தான் போன்ற வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

நாயகன் ஆர்யா கல்யாணத்துக்கு முன் பின் இரண்டிலும் உடல் மொழி வேறுபாட்டில் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் அழவும் வைக்கிறார்.

நயன்தாரா நீண்ட இடைவெளியின் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அசரடிக்கிறார். வந்து போகும் நாயகியாக இல்லாமல் ரெஜினாவாக பிரதிபலிக்கிறார்கள். சிரிப்பிலும் அழுகையிலும் அழகிலும் கொள்ளைகொள்கிறார்.



ஜெய் - நயன் ஜோடி பெரியளவில் பொருந்தவில்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது. ஜெய் சிரிக்க வைத்துச் செல்கிறார். ஆனால் கதையில் எதிர்பார்த்த முடிவாக இவரது பாத்திரம் அமைந்துள்ளது.

பல இடங்களில் இன்னுமொரு நயன்தாராவாகத் தெரிகிறார் நஸ்ரியா. நன்றாக நடிக்க வாய்ப்பு. சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பிரதர் பிரதர் என ஆர்யாவையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கிறார். இனி பெண்கள் பிரதர் என அழைத்தால் பசங்க சந்தோஷப்படுவார்கள்.

சந்தானம் வழக்கம் போல பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்கள். குணச்சித்திர கதாபாத்திரம் போல பின்னப்பட்டள்ளது. இவரது வசனங்கள் பலவற்றுக்கு அரங்கில் நல்ல வரவேற்பு.

சத்தியராஜ் தனது கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார். அளவாகவே வந்து போகிறார். சத்தியனும் அதுபோலவே.

ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் அசத்தல் ரகம். தேவையான இடங்களிலமைந்த பாடல்களால் யாரும் வெளியேறவில்லை. ஜோர்ஜின் ஒளிப்பதிவு படத்தினை மெருகூட்டுகிறது. ரூபனின் எடிட்டிங்கும் நச்சென்று இருக்கிறது. காட்சிகள் தொய்வாகத் தெரியவில்லை.

ஆர்யாவும் நயனும் ஏன் முதல் நாளிலிருந்தே முறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற ஓரு சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகமாக உண்டு.

மொத்தத்தில் எதிர்பார்த்த கொமடியில் எதிர்பாராத திரைக்கதை மற்றும் கதையால் திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவரையும் குடும்ப ஆட்சி செய்கின்றது இந்த ராஜா ராணி.

-அமானுல்லா எம். றிஷாத்

இந்த விமர்சனம் மெட்ரோ நியூஸ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2326

Friday, September 20, 2013

உடலைவிட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் எப்போது உடலைச் சேரும்?

போன உயிர் மீண்டும் வருவ­தில்லை என்­பதே மனி­தர்­க­ளி­டையே பர­வ­லாக காணப்­படும் நம்­பிக்கை. எனவே நாமும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­கவே இருக்­கிறோம். இறப்­புக்கு பின்­ன­ரான வாழ்க்கை என்­பது நம்­பிக்கை சார்ந்த விட­ய­மா­கவே உள்­ளது.



அது­போ­லவே மரித்த பின்­னரும் உயிர்­பெற வைக்கும் தொழில்­நுட்பம் விரைவில் கண்­டு­பி­டிக்­கப்­படும் என்­பதும் சில­ர­து ­நம்­பிக்­கை­யா­க­வுள்­ளது. அந்த நம்­பிக்­கையில் இறந்த பின்னர் தங்­க­ளது உடலை பாது­காப்­ப­தற்கு பலரும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இவ்­வாறு இறந்த உடல்­களை பாது­காக்க நிறு­வ­னங்­களும் உண்டு. அங்கு இறந்த உடல்­களை பழு­த­டை­யாது பாது­காத்து வைக்­கப்­படும்.

எவ்­வாறு பாது­காக்­கப்ப­டு­கின்­றது?
ஒருவர் இறந்­து­விட்டார் என்­பதை சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர் குறித்த நிறு­வனம் உட­லி­லுள்ள இரத்தத்­தினை 'பம்' செய்­வ­தற்கு முயற்­சிப்பர். உடலில் பல்­வேறு இர­சா­யன பதார்த்­தங்­களை செலுத்தி மூளை பழு­த­டை­வ­தையும் இரத்தம் உறை­யா­மலும் பாது­காக்­கப்­படும்.

பின்னர் உடலானது நீர் குளி ர­டையும்  வெப்பநிலையை அடைந்­ததும் குளிரில் உடல் பாது­காப்­ப­தற்­கு­ரிய நிலையை அடைந்­து­விடும். இதன்­போது உட­லி­லுள்ள இரத்தம் நீக்­கப்­படும். பின்னர் -130 செல்­ஸி­யஸில் குளி­ராக்­கப்­பட்டு கொள்­க­லனின் உடல் வைக்­கப்­பட்டு –196 செல்­ஸியல் குளிர் நிலை­யி­லுள்ள நைத­ரசன் தாங்­கியில் பேணப்­படும்.



தற்­போது அமெ­ரிக்­காவில் இப்­படி சுமார் 150 உடல்கள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளதாக கூறப்படுகின்றது. இதில் 80 உடல்­களின் தலை அல்­லது மூளை மட்­டுமே பாது­காக்­கப்­பட்­டள்­ளது. எவ்­வா­றெ­னினும் தற்­போது உயி­ருடன் உள்­ள­வர்­களில் 1000ற்கும் அதி­க­மானோர் தங்­க­ளது உடலை பாது­காக்க குறித்து நிறு­வ­னங்­களை பணித்­துள்­ளனர்.


இத்­திட்டம் வெற்­றி­பெ­றலாம் என ஏன் நம்­பு­கின்­றனர்?
இத்­திட்­டத்தில் ஆர்­வ­மிக்­க­வர்கள் இது தொடர்பில் கூறு­கையில், இத்­திட்டம் வெற்­றி­ய­ளிக்க வாய்ப்­புள்­ள­மைக்கு 3 கார­ணங்கள் கூறு­கின்­றனர். முத­லா­வது உடல் பாது­காக்­கப்­படும் போது ஒட்­சி­சனின் மட்­டத்­தினை பேணி மூளை சிதை­வ­டை­வது குறைக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக தேவை­யான அளவில் குறைந்த வெப்­ப­நி­லையில் (குளிரில்) உடல் பேணப்­ப­டு­வதால் கலங்கள் மற்றும் இழை­யங்கள் தர­மி­ழக்­காமல் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.



மூன்­றா­வ­தாக குளி­ராக்கல் முறை­யி­லி­ருந்து முற்­றாக உடலை பாது­காக்­க­மு­டி­யா­விட்­டாலும் விரைவில் நனோ தொழில்­நுட்­பத்தின் மூலம் இதற்கும் தீர்வு கிடைக்குமென நம்புகின்றனர்.



விஞ்­ஞா­னிகள் இனங்கண்­டுள்ள பிரச்­சினைகள்
–5 செல்­ஸியஸ் வெப்­ப­நிலையில்  நீரில் உடல் பாது­காக்­கப்­படும் போது கலங்கள் குளிரில் உறைந்து ஐஸ் கட்­டி­க­ளாக மாறி­விடும். இவை நீரின் அடர்த்­தியை விடக் குறைந்­தது. இதனால் அதி­க­ளவில் பிரி­கை­ய­டைந்து கல மென்­சவ்­வுகள் கடு­மை­யாக பாதிப்­ப­டையும்.

ஆனால், குளி­ராக்கல் முறையில் அவ்­வா­றில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­போ­திலும் அவற்­றிற்­கான ஆதாரம் எது­வு­மில்லை என வொஷிங்டன் பல்­க­லைக்கழக குளிரில் கலம் மற்றும் இழையங்­களை பாது­காக்கும் தொழில்­நுட்ப நிபுணர் கலா­நிதி டயங்கோ கஓ தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், குளி­ராக்கு­தலில் சிறிய பூச்­சிகள் மற்றும் இல­கு­வான இழை­யங்­களை பாது­காக்­கலாம். ஏனெனில் அவை அளவில் சிறி­யவை என்­பதால் கையாள்­வது இல­கு­வா­னது. ஆனால் எவ்­வாறு உடல்­களை பாது­காப்­பது எனத் தெரி­ய­வில்லை என்றார்.

உட­லி­லுள்ள பாகங்­களை பாது­காக்க முடியும். ஆனால் அவற்­றினை மொத்த உட­லாக பாது­காப்­பது கடினம். ஏனெனில் ஒவ்­வொரு உறுப்பும் ஒவ்­வொரு வெப்­ப­நி­லையில் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

சாதா­ர­ண­மாக மூளையை பாது­காக்க வேண்­டு­மென்றால் அதி­லுள்ள 12 பிரி­வு­க­ளையும் வெவ்வேறு நிலை­களில் பாது­காக்க வேண்­டிய தேவை உள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.



உயிர் திரும்பக் கிடைக்­குமா?
வளரும் தொழில்­நுட்­பத்­தினால் எதிர்­கா­லத்தில் உடல்­களை சிறப்­பாக பாது­காக்க முடிந்­தாலும் வய­தாதல் மற்றும் நோய்­க­ளினால் கலங்கள் பாதிப்­புக்­குள்­ளாகும். நரம்­புகள் தொடர்­பான சிக்­கல்கள், கலங்­க­ளி­லுள்ள புரத இழப்பு என இன்னும் ஏரா­ள­மான சவால்கள் உண்டு. அவற்­றுக்­கான தீர்வு கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

எனவே குளி­ராக்­கல் முறையை மேம்­ப­டுத்தி உடலை பதப்­ப­டுத்­தி­னாலும் தற்­போ­தைக்கு இறந்த உட­லுக்கு உயிரை வழங்­கு­வ­தற்­கான எந்­த­வொரு சாத்­தி­யக்­கூ­று­களும் விஞ்­ஞா­னி­க­ளிடம் இது­வ­ரையில் இல்லை என்றே சொல்­லலாம்.

இதேவேளை எதிர்காலத்தில் அவை நடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உடலை பாதுகாக்க தயாராகிவிட்டாலும் எந்தவொரு விஞ்ஞானிகள் அமைப்பும் குளிராக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என கலாநிதி கஓ தெரிவித்துள்ளார்.

அதேபோல குளிராக்கல் பதப்படுத்தல் முறையினை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இந்த உடல்களுக்கு எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எப்போதும் வளாந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது.

–அமானுல்லா எம்.றிஷாத்


இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, September 8, 2013

எரிகல் பொழிவு ஆபத்தானவையா? ; இலங்கையில் ஏற்பட்ட எரிகல் பொழிவினை நீங்களும் இரசித்தீர்களா?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது.

 சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.



அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.



இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.

ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.



நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது. சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.

அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.

இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.



இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.



ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.

நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

 –அமா­னுல்லா எம்.றி­ஷாத்

இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 24, 2013

யுத்தகளம், அணுசக்தி பேரழிவுகளை எதிர்கொள்ளும் அதிநவீன ரோபோ

அறி­வியல் வளர்ச்­சியில் இயற்­கையின் மாற்­றங்­க­ளையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முயற்­சிக்கும் மனி­தனை அறி­வியல் கட்­டுப்­ப­டுத்தும் நாள் நெருங்­கிக்­கொண்­டி­ருப்­பது போன்ற சிந்­த­னை­களை அவ்­வப்­போது கதை­க­ளா­கவும் திரைப்­ப­டங்­க­ளா­கவும் பலரும் சித­ற­விட்­டுக்­கொண்­டுதான் இருக்­கி­றார்கள்.


அவை சில சந்­தர்ப்­பங்­களில் நிஜ­மா­கலாம். பல கற்­ப­னை­க­ளாக மட்­டுமே அமைந்­து­விடு;ம்.
கற்­ப­னை­களை நிஜ­மாக்கிப் பார்க்கும் வல்­ல­மை­கொண்ட அறி­வி­ய­லா­ளர்கள் அண்­மையில் ஹொலிவூட் திரைப்­ப­டங்­களை நிஜ­மாக்­கு­வது போன்­ற­தொரு கண்­டு­பி­டிப்­பினை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

அதா­வது திரையில் கண்டு மகிழ்ந்த அழி­வி­லி­ருந்து மனித குலத்­தினைக் காக்கும் நாய­க­னாக சித்­த­ரிக்­கப்­படும் அதி திறமை வாய்ந்த ரோபோக்­களை ஒத்த ரோபோ ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அறி­வியல் வளர்ச்­சியில் ஆராய்ச்­சி­யா­ளர்­கள ; “ரோபோட்டிக்” தொழில்­நுட்­பத்தில் நினைத்­துப்­பார்க்க முடி­யாத எல்­லை­யினை தொட்டு நிற்­கி­றார்கள். ஏற்­கெ­னவே மனித குலத்­திற்கு உதவும் வகை­யி­லான பல்­வேறு துறை­களில் மாறு­பட்ட திற­மை­க­ளைக்­கொண்ட ரொபோக்­க­ளையும் விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அழி­வுக்­கு­மாக வித்­திட்ட அறி­வி­யலின் கண்­டு­பி­டிப்­புக்­க­ளான அணு உற்­பத்தி, துப்­பாகி, பீரங்­கி­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டக்­கூ­டிய அதி நவீன ரொபோ ஒன்­றினை பொஸ்டன் டைனமிக் எனும் நிறு­வனம் வடி­வ­மைத்­துள்­ளது.

மூளை மட்­டுமே இல்­லாத இந்த அதி­ந­வீன ரொபோ­வுக்கு அட்லஸ் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இதனை அண்­மையில் DARPA எனப்­படும் அமெ­ரிக்­காவின் பாது­காப்பு மேம்­பட்ட ஆராய்ச்சி நிறு­வனம் அறி­முகம் செய்து வைத்­தது.

இந்த ரோபோவின் விசேட அம்சம் என்­ன­வெனில் ஜப்­பானில் 2011ஆம் ஆண்டு ஏற்­பட்ட அணு உலை வெடிப்­பினைப் போன்ற அனர்த்­தங்கள் மற்றும் யுத்த களத்­திலும் மனி­தர்­க­ளுக்கு உதவும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மை­யாகும்.

6 அடி 2 அங்­குல  உய­ரத்தில் 150 கிலோ கிராம் நிறை­யு­டைய இந்த ரோபோ அதிக வெப்­பத்­திலும் அதே­வேளை நீரிலும் தொழிற்­படும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் நீரியல் தொழில்­நுட்­பத்தில் 28 மூட்­டுக்­க­ளுடன் உரு­வாக்­கப்­பட்ட இந்த அட்­ல­ஸினால் மனி­தனின் அசை­வு­களை அப்­ப­டியே பிர­தி­ப­லிக்க முடியும். இவ்­வகை ஆற்­றலை ஐரொபோட் மற்றும் சன்­டிலா தேசிய ஆய்­வகம் உரு­வாக்­கி­யுள்­ளது.

இது­மட்­டு­மன்றி தானாக ஓடிச் செல்­லக்­கூ­டிய கூகுள் காரி­லுள்­ளது போன்ற ரேடார் ஸ்டீரியோ கெம­ராவும் பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­தனை வச­திகள் கொண்ட இந்த ரொபோ இயங்­கு­வ­தற்­கான சக்தி வெளி­யி­லி­ருந்த வழங்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் தானாக சக்­தியை உரு­வாக்­கிக்­கொள்ளும் ஆற்­றலை வழங்க இதனை உரு­வாக்­கிய நிறு­வனம் எதிர்­பார்த்­துள்­ளது.

ஏனெனில் யுத்த களம், அணு சக்தி பேர­ழி­வு­களில் மனிதன் செல்ல முடி­யாத இடங்­க­ளுக்கு அனுப்பி மீட்புப் பணி­களை மேற்­கொள்­ள­வதை பிர­தான நோக்­காகக் கொண்டே இந்த அட்லஸ் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அட்லஸ் தானே தனக்கு தேவை­யான சக்தி மூலத்தை உரு­வாக்­கினால் அது சிறப்­பாக அமை­யுமாம்.

எது எவ்­வா­றா­யினும் இந்த அட்­ல­ஸுக்­குள்ள திற­மையால் இல­கு­வாக யுத்த களத்­திலும் அணு சக்தி பேர­ழி­வு­க­ளிலும் படை வீரர்­களை விட திட­மா­கவும் மிக துல்­லி­ய­மா­கவும் செயற்­படும்.

இத்­தனை திற­மை­களைக் கொண்­டுள்ள இந்த அதி நவீன ரோபோ­வுக்கு மூளை மட்­டுமே இல்­லையாம். ஆனால் அத­னையும் விரைவில் பொருத்­தி­விட ஆராய்ச்­சி­யா­ளர்கள் தயா­ரா­கி­விட்­டனர்.

இதற்­காக DARPA நிறு­வனம் ஒரு சோடிக்கும் அதி­க­மான ரோபோ பொறி­யி­ய­லா­ளர்கள் குழுவினைக் கொண்டு முயற்­சித்து வரு­கின்­றது. இதில் ஒவ்­வொரு குழுவும் வித­வி­த­மான மென்­பொ­ருட்­களை தயா­ரித்து தொடர்ச்­சி­யான ஆராய்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

DARPA நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்ற 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வைத்து இவ்­வ­ருட இறுதிக்குள் மென்பொருட்களை மேம்படுத்த பொறியியலாளர்கள் தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனவே அறிவியலால் ஏற்பட்ட குறைக்கு அறிவியலே தீர்வாக விரைவில் அமையப்போகிறது. என்றாலும் அதுவும் மனித குலத்திற்கு திரும்பவிடுமோ என்ற அச்சமும் இருக்கத் தான் செய்கிறது.

இருப்பினும் இவ்வருடத்திற்குள்ளேயே அதிசயிக்கும் எந்திரனின் உதவிகளை ஆபத்துக்களில் அனுபவித்தாலும் ஆச்சரிப்படத் தேவையில்லை.

–அமானுல்லா எம்.றிஷாத்

Friday, July 12, 2013

வாங்க சூரியனைப் பார்த்துவிட்டு வரலாம்... விண்வெளி சுற்றுலாவவுக்கு அழைக்கும் நிறுவனங்கள்

கன­வுகள் மட்டும் ஆகா­யத்தை தாண்டி சிற­க­டித்­து­கொண்­டி­ருக்க என்­றைக்­கா­வது அண்­டத்தை தாண்டிச் செல்லும் எண்­ணங்­களை நிஜ­மாக்­கிட எமது சிந்தை மயங்­கு­வது சாதா­ர­ண­மா­ன­துதான். இருப்­பினும் அந்தக் கன­வினை நிஜ­மாக்­கு­வது ஒன்றும் சாதா­ர­ண­மானதல்ல  என்­ப­துதான் நிஜம்.

ஆனால் அண்­மைக்­கா­ல­மா­கவே டீ குடிக்­கலாம் வாங்க... என்­ற­வாறு சில நிறு­வ­னங்­களும் விண்­வெ­ளிக்குப் போகலாம் வாங்க... என மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்­பித்­து எமது எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கின்றன.

ஏற்கெ­னவே மார்ஸ் வன் எனும் இலாப நோக்­கற்ற டச்சு நிறு­வனம் ஒன்று உல­க­ளவில் செவ்­வாயில் குடி­யேற ஆட்­களை இணைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அதே­போல அமெ­ரிக்க தனியார் நிறு­வ­ன­மொன்றும் நில­வுக்கு சுற்­றுலா செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றது.

இதே­போல மேலும் சில நிறு­வ­னங்­களும் 2020ஆம் ஆண்­டினைக் குறி­வைத்து செவ்வாய், நிலா என விண்­வெ­ளி சுற்­று­லா­வுக்கு தயா­ரா­கி­வ­ரு­கி­றது.

ஷீரோ 2 இன்­பி­னிட்டி
இந்­நி­லையில் ஷீரோ 2 இன்­பி­னிட்டி எனும் ஸ்பெய்னைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மொன்று சாமா­னி­யர்­க­ளையும் குறைந்த விலையில் விண்­வெ­ளிக்கு அழைத்­துச்­செல்ல தயா­ரா­கி­யுள்­ளது.

ஏற்கெ­னவே ஆபத்­துக்­களை எதிர்­கொள்ள துணிந்த ரஷ்­யாவின் அர்­டமி லெபடெவ் உள்­ளிட்ட மேலும் சிலர் விரைவில் இந்நிறுவனத்தின் ஊடாக விண்­வெ­ளிக்கு அண்­மையில் செல்ல தயா­ரா­கி­விட்­டனர்.

இதே­­வேளை மேற்­படி நிறு­வனம் 2015ஆம் ஆண்டு முதல் வணிக ரீதி­யி­லான பய­ணத்தின் மூலம் சுற்­றுலாப் பய­ணி­களை விண்­வெ­ளிக்கு அழைத்துச் செல்ல திட்­ட­மிட்­டுள்­ளது. இப் பய­ணத்தின் போது பிர­யா­ணிகள் எந்­த­வொரு கிர­கத்­திற்கும் அழைத்துச் செல்­லப்­ப­ட­மாட்­டார்கள். மாறாக விண்­வெ­ளிக்கு அண்­மையில் அழைத்­துச்­செல்­லப்­ப­ட­வி­ருக்­கி­றார்கள்.

இவை­யெல்லாம் அனு­ப­விக்­கலாம்
விண்­வெளி வீரர்­களால் பாது­காப்­பாக அழைத்­துச்­செல்­லப்­பட்­ட­வுள்ள இப்­ப­ண­யத்தின் போது பய­ணி­களால் எழுந்து நிற்க முடியும் அத்­துடன் புவி­யினை பனோ­ரமிக் வீவ் மூலம் கண்டு மகி­ழலாம்.

இது மட்­டு­மன்றி நிறை­யற்ற பூச்­சி­ய­நி­லையை உணரும் வாய்ப்பும் கிடைக்கும் மேலும் பய­ணிகள் தமக்கு விரும்­பிய உண­வையும் பெற முடியும் என ஷீரோ 2 இன்­பி­னிட்டி தெரி­வித்­துள்­ளது.

இப்­ப­யணம் குறித்து ஷீரோ 2 இன்­பி­னிட்டி மேலும் குறிப்­பி­டு­கையில், சுற்­றுலாப் பிர­யா­ணிகள் செல்­ல­வுள்ள கெப்சூல் எனும் அமைப்பை பாரிய பலூனில் இணைத்து விண்­ணுக்கு செலுத்­தப்­படும். இந்த கெப்­சூலில் ஒரே நேரத்தில் 4 பய­ணிகள் மற்றும் 2 விமா­னி­களும் செல்லக் கூடி­ய­வாறு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ­னத்தைச் சேர்ந்த அன்­னலி சோன்­மேக்கர் கூறு­கையில், இந்த பயண­மா­னது உண்­மையில் சுற்­றுலாப் பய­ணி­களும் மிகவும் அமை­தி­யா­ன­தா­கவும் அதே­வேளை ஏது­வான சுற்றாடலிலும் அமையும் சூழ்­நி­லையும் நிலவும்.

பய­ணி­களால் சூரி­ய­னையும் மேலும் பல நட்­சத்­தி­ரங்­க­ளையும் அண்­மையில் பார்க்­க­கூடி­ய­தாக அமையும். அத்­துடன் பூமியின் அழ­கையும் மேலி­ருந்து அவ­தா­னிக்­கலாம்.

வாழ்நாள் சிறப்­பு­மிக்க இப்­ப­ய­ணத்­தினை பய­ணிகள் நிச்­ச­ய­மாக விரும்­பு­வார்கள். இந்த கெப்­சூலில் செய்யும் பிர­யாணம், விமா­னத்தில் பய­ணிப்­பது போல் இருக்கும். இருப்­பினும் பயணம் செய்யும் கெப்­சூ­லினுள் சுற்­றுலாப் பய­ணிகள் 30 செக்கன் வரை நிறையை இழந்து பூச்­சிய நிலையை அடைந்து மிதக்கும் அனு­ப­வத்தை பெறலாம்.

பயணம் முழு­வதும் பய­ணிகள் விருப்­பப்­படியே அமைக்­கப்­படும். அவர்­களின் சுதந்­திரம் முழு­மை­யாக பேணப்­படும். அவர்கள் விரும்பும் உணவு மேலும் கெப்­சூலில் மறைக்­கப்­பட்ட தனி­யான அறை­களும் வழங்­க­வுள்ளோம் எனத் தெரி­வித்­துள்ளார்.

யார் பய­ணிக்­கலாம்? குறைந்த கட்­டணம்
இது இவ்­வா­றி­ருக்க தொழில்­நுட்­பத்­தினை அதி­க­ரிக் கச் செய்து குறைந்த செலவில் விண்­வெ­ளிக்கு அழைத்­துச்­செல்­லவும் எதிர்­பார்த்­துள்­ளது ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ னம்.

தற்­போது விஞ்­ஞான ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு மட்டுமென மட்­டுப்­ப­டுத்­தி­யுள்ள இப்­ப­ய­ணத்­தினை சாமா­னிய மக்­க­ ளுக்­கு­மாக மாற்­றி­ய­மைக்கும் முயற்­சி­களை இந் நிறு­வனம் முன்னெடுத்துள்ளது.

தற்­போது இப்­ப­ய­ணத்தில் இணைந்­து­கொள்ள ஒரு­வ­ருக்கு மிகக் குறைந்த கட்­ட­ண­மாக இலங்கை மதிப்பில் 50 இலட்­சங்கள் மாத்­தி­ரமே அற­வி­டப்­படும் என குறித்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. ஒப்­பீட்டு ரீதியில் விண்­வெ­ளிக்கு செல்­லு­வ­தற்­கான மிகக் குறைந்த கட்­ட­ண­மா­கவே இது உள்­ளது.

காரணம் இந்­நி­று­வனம் புவி யின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து விமா­னங்கள் செல்லும் தூரத்தைப் போன்று இரு­ம­டங்கு அதா­வது சுமார் 24 கி.மீ உய­ரத்­திற்கு செல்­ல­வுள்­ளார்கள். ஆனால் ஏற்­கெ­னவே இவ்­வகை சுற்­று­லாவை ஏற்­பாடு செய்த நிறு­வ­னங்கள் வேற்றுக் கிர­கங்­க­ளுக்கே செல்­லு­வ­தற்கு திட்­ட­மிட்­டனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­ப­ய­ணத்­தினை ஸ்பெ யினின் கொர்­டுபா எனு­மி­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தாத நிலையில் கூறப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு 2015ஆம் ஆண்டு விண்ெவளி செல்­ல­வுள்ள பய­ணத்தில் ஷீரோ 2 இன்­பி­னிட்டி நிறு­வ­னத்­துடன் அண்­மையில் இணைந்­து­கொண்ட ஸ்பானிஷ் பல்­க­லைக்­க­ழ­கத் தின் நஒ (NAO) எனும் மனித ரொபோக்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன் மூலம் ரொபோ தொடர்­பி­லான ஆராய்ச்­சி­களை மேம்­ப­டுத்த பல்­க­லைக்­க­ழகம் எதிர்­பார்த்­துள்­ளது.

எம்­ம­வர்­க­ளுக்கு இவ்­வா­றான ஆபத்­தான பய­ணங்­களில் பெரி­ய­ளவில் ஆர்வம் இல்லை என்று சொல்லாம். என்­றாலும் மேற்­கத்­தி­யர்­க­ளுக்கு இவ்­வா­றான விட­யங்­களில் அலா­திப்­பி­ரி­ய­முண்டு என்­பதால் விரைவில் இத்­திட்­டத்­திற்கு பாரிய வர­வேற்பு கிடைக்­கப்­போ­வது திண்ணம்.

இனி என்ன நீங்களும் அந்த 50 இலட்சத்தை மட்டும் செலுத்தி பயணத்திற்கு தயாராக வேண்டியதுதான்.

முன்னரெல்லாம் சுற்றுலா என்றதும் அதிகபட்சமாக வெளி நாடொன்றிலுள்ள இடமொன் றைக் குறிப்பிடுவோம். ஆனால் வரும் நாட்களில் பால்வெளியிலுள்ள கிரக மொன்றை கூறினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை!

– அமானுல்லா எம். றிஷாத்





Thursday, July 11, 2013

சிங்கம் 2 - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - ஹரி
நட்சத்திரங்கள் - சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம்
இசை - தேவி ஸ்ரீ ப்ரசாத்
ஒளிப்பதிவு - பிரியன்
எடிட்டிங் - வி.டி.

சிங்கம் படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணியில் பலத்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் தனியாக திரையரங்குகளை வேட்டையாட வந்திருக்கிறது இந்த சிங்கம் 2.

தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்தி ஹெரோயின் கடத்துகின்ற ஒரு கும்பலை துரைசிங்கம் என்ற பொலிஸினால் தடுத்து நிறுத்தப்படுவதே படத்தின் கதை.

இதற்காக தென்னாபிரிக்கா வில்லன், ஹன்சிகாவின் பாடசாலைக் காதல், துரைசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, விவேக், சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை என்பவற்றையும் சரியான கலவையில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் ஹரி.

மிகச் சிறிய கதைக்கு மிகப்பெரிய பலமான திரைக்கதையில் வழக்கம் போலவே இயக்குனர் ஹரி அசத்தியிருக்கிறார். சிங்கம் 1 இனை எழுத்தோட்டமாக காண்பித்துவிட்டு அதன் முடிவிலிருந்து சிங்கம் 2 படம் ஆரம்பமாகிறது. என்னவொன்று பாகம் ஒன்றில் ஒன்றரை டொன்னில் ஓங்கி அடித்த சூர்யா இதில் 10 டொன்னில் பாய்ந்தடிக்கிறார்.

அஞ்சலியின் குத்தாட்டத்துடன் ஆரம்பமாகும் போது அலுப்படையச் செய்யும் வழக்கமாக மசாலா திரைப்படம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது படம். ஆனால் இதனையடுத்து இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்கு பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது.

சிங்கம் 1இல் மக்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்யும் துரைசிங்கம், மறைமுகமாக தனது டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சம்பளமின்றிய பொலிஸ் வேலையை என்.சி ஆசிரியராக தூத்துக்குடியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து தொடர்கிறார்.

இங்கிருந்து கடத்தல் காரர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கிறார் துரைசிங்கம். கடத்தல்காரர்களின் அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டு டி.எஸ்.பியாக பதவியேற்க நினைக்கும் துரைசிங்கம் எதிர்பாராதவிதமாக திடீரென பதவியேற்க வேண்டி ஏற்படுகிறது.

இதன் பின்னர் எவ்வாறு எதிரிகளை எதிர்கொண்டு அடித்துநொறுக்குகிறார். ஹன்சிகாவின் காதலுக்கு என்னவாகின்றது? அப்பாவின் சம்மதத்துடன் எவ்வாறு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் என்பதை படு வேகமான பரபரப்பான திரைக்கதையில் துப்பாக்கி, அருவாள் என சத்தமிட்டுக்கொண்டே சூர்யாவை வைத்து கர்ஜிக்கிறார் இயக்குனர் ஹரி.

படம் முழுவதும் மிடுக்கான பொலிஸாகவே வாழ்ந்து மொத்தப்படத்தையும் ஆக்கிரமிக்கிறார்  சூர்யா. காதல், பாசம், அதிரடி சண்டை, நடனம் என அனைத்து இடங்களில் ரசிகர்களைக்கொள்ளை கொள்கிறார். வழக்கம் போல குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் விதமாகவே கர்ஜிக்கிறார்.

அடிக்கடி மூக்கு வீங்க, கழுத்து நரம்பு புடைக்க கத்துமிடங்களுக்கு ஆங்காங்கே கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு முழுமையாக வணிக ரீதியான படத்தை எவ்வாறு கையாள்வது என்ற யுக்தியை ஹரியிடமிருந்து பல இயக்குனர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதன் முறையாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கும் ஹரி தயாரிப்பாளருக்கு மொட்டை போடாமல், தேவையானதை செய்துகாட்டியிருக்கிறார். படத்திலுள்ள ஓட்டைகளை அவதானிப்பதற்கு கூட இடமளிக்காமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பதே ஹரியின் வெற்றி. மேலும் இயல்பான வசனங்களாலும் ரசிக்க வைக்கிறார்.

ஆனால் 3ஆம் பாகத்தினை மனதில் வைத்து படத்தினை நகர்த்தியிருப்பதால் இறுதிக் காட்சி, படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் வழக்கமாக வில்லன்களுக்கு முடிவு கட்டும் ஹரி இப்படத்தில் வில்லன்களுக்கு என்னவாகின்றது என பாகம் 3இல் பாருங்கள் என்றவாறு அமைத்துள்ளார்.

அதிரடிக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவ்வப்போது விவேக்கும் சந்தானமும் திரையரங்கை சிரிப்பலைகளால் அதிரச் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தவாறு நகைச்சுவை காட்சிகள் இல்லை.

குறிப்பாக பாடசாலை ஆசியர்களை கேலி செய்து விட்டு பிதாவின் பெயரால் மன்னிப்புக் கேட்பது, விஸ்வரூபம் சண்டையை ஞாபமூட்டும் நகைச்சுவைக் காட்சிகள் போன்றன அட்டகாசமாய் அமைந்திருக்கிறது.

நாயகி அனுஷ்கா சில காட்சிகளுக்கு வந்து போவதுடன் கவர்ச்சியாக பாடல்களுக்கு நடனமும் ஆடுவதோடு அவரது பங்கு முடிந்தது. பாடசாலை மாணவியாக வரும் ஹன்சிகாவுக்கு ரசிகர்களின் மனதை நெருடும் வகையிலான ஓரளவு முக்கியத்துமிக்க காட்சிகள் உண்டு.

வில்லன்களாக வரும் டேனி, ரஹ்மான், முகேஷ் ரிஷி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மிரட்டும் பாணியில் அறிமுகமாகி சாதாரணமாக அடங்கிப் போகிறது இவர்களது சத்தம்.

இவர்கள் தவிர நாசர், ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி போன்றோரும் வந்து போகிறார்கள்.

ஹரியின் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியன். தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் பின்னணி இசையில் படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.


நீண்ட படத்தின் வேகத்திற்கு திரைக்கதைக்கு அடுத்தபடியாக வீ.டி. விஜயனின் எடிட்டிங்  காரணம் என்றால் தகும். தேவையான இடங்களில் கத்தரி போட்டு குறைகளை மறைக்க வழி செய்திருக்கிறார்.

சாதாரண மாசாலா திரைப்படத்தை படு விறுவிறுப்பாக கூறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுக்கொள்ளும் இந்த சிங்கம், பரபரப்பை மிஞ்சும்!

அமானுல்லா எம். றிஷாத் / Metronews.lk


Friday, June 21, 2013

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்? : நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.


சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதி;த்ததன் பின்னர் அது உண்­மையா? பொய்யா? என்ற பட்­டி­மன்றம் நடத்­தாத குறை­யாக பல விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.


இக்­குற்­றச்­சாட்டு இன்­றில்லை பல கால­மா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் முற்­றுப்­புள்ளி இல்­லாமல் நீண்டு செல்லும் இந்த விட­யத்தில் அண்­மையில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வித­மாக தக­வ­லொன்று வெளி­யா­கி­யுள்­ளது.


நீல் ஆம்ஸ்ட்ரோங் உண்­மையில்  சந்­தி­ர­னுக்கு செல்­ல­வில்லை எனவும் அது என் கண­வ­ரினால் பட­மாக்­கப்­பட்ட திரைப்­ப­டமே என முறைந்த முன்னாள் ஹொலிவூட் இயக்­கு­ன­ரான ஸ்டேன்லி கியூப்­ரிக்கின் மனைவி தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் கூறப்­ப­டு­கி­றது.


அதா­வது முதன் முத­லாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் போது நேரடி ஒளி­ப­ரப்பு என அமெ­ரிக்கா காண்­பித்த வீடி­யோ­வா­னது ஏற்­க­னவே படப்­பி­டிப்பு தள­மொன்று அமைத்து பட­மாக்­கப்­பட்ட காட்சி எனவும் அதில் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.


விஞ்­ஞானப் புனை­க­தை­களில் அதிக ஆர்வம் கொண்ட ஹொலிவூட் திரைப்­ப­டத்­துறை கலை­ஞர்கள் குறித்த படப்­பி­டிப்பை அமெ­ரிக்க படைகள் மட்டும் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சில நாட்­க­ளாக செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட செட் ஒன்றில் வைத்து பட­மாக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.


அமெ­ரிக்­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் ஏமாற்­றிய அந்த நிலவில் பதிக்கும் காட்­சியில் உண்மைத் தன்மை இல்லை என ஏற்­க­னவே அமெ­ரிக்க விஞ்­ஞானி ரால்ப் ரெனி, விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர் பில் கேசிங் உள்­ளிட்ட உலகின் பல அறி­வி­ய­லா­ளர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.


இந்­நி­லையில் கியூப்­ரிக்கின் மனை­வியின் தகவல் மேலும் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.


உல­கி­லேயே விண்­வெளி ஆராய்ச்­சி­க­ளுக்கு வித்­திட்டு முன்­னோ­க­ளாக திகழ்ந்­ததும் நில­வினைப் பற்­றிய ஆராய்ச்­சி­களை முதன் முதலில் ஆரம்­பித்­ததும் சோவியத் யூனி­யன்தான். அவர்கள் 1930ஆம் அண்­டி­லேயே நிலவின் மீதான ஆரா­ய்ச்­சி­களை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும்  நில­விற்கு விண்­க­லத்­தினை முதன் முதலில் ஆளில்லா  விண்­க­லத்­தினை அனுப்­பி­ய­துடன் இரு­ப­துக்கும் மேற்­பட்ட ஆளில்லா விண்­க­லங்­களை சந்­தி­ர­னுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.


இதன் உச்­சக்­கட்­ட­மாக 1957ஆம் ஆண்டு "லைகா" எனும் நாயை வைத்து சந்­தி­ர­னுக்கு  விண்­க­ல­மொன்­றினை அனுப்­பினர். இதுவே உயி­ரி­ன­மொன்று சந்­தி­ர­னுக்கு சென்ற முதல் சந்­தர்ப்­ப­மாகும். இவர்கள் அனுப்­பிய "லைகா" நாயா­னது எது­வித ஆபத்­து­மின்றி புவிக்கு திரும்­பி­ய­த­னை­ய­டுத்து உல­கமே சோவியத் யூனியன் பக்கம் தலை நிமிர்ந்து பார்த்­தது. இந்த வெற்­றி­களைத் தொடர்ந்து மனி­த­னையும் சந்­தி­ர­னுக்கு அனுப்ப முடிவு செய்­தது.


இதற்­காக சோவியத் யூனி­யனைச் சேர்ந்த மூன்று பேரை சோதனை முயற்­சி­யாக நில­விற்கு அனுப்பும் முயற்­சியின் போது அவர்­களை ஏற்­றிச்­சென்ற ரொக்கெட் புறப்­பட்ட சில மணி நேரத்­தி­லேயே வெடித்துச் சித­றி­யது. அதில் பய­ணித்த மூவரும் உயி­ரி­ழந்­தனர். இதனால் மூன்று உயிர்­களை காவு­கொண்ட வருத்­தத்தில் சோவியத் யூனியன் மனித உரி­மைக்கு எதி­ராக செயற்­பட்­ட­தாக கூறி நில­விற்கு மனி­தர்­களை அனுப்பும் சோதனை முயற்­சி­யி­லி­ருந்து பின் வாங்­கி­யது.


இந்­நி­லையில் சோவியத் யூனி­ய­னுடன் பனிப் போரி­லி­ருந்த அமெ­ரிக்கா சந்­திரன் தொடர்­பான ஆராய்ச்­சியில் முன்­னிலை பெற முடிவு செய்து நில­வுக்கு மனி­தர்­களை அனுப்பும் திட்­டத்­தினை துரிப்­ப­டுத்­தி­யது.  பின்னர் நீல் ஆம்ஸ்ட்­ரோங்கை விண்ணில் நிலவை நோக்கி அனுப்பி மண்ணில் மைந்­த­னாக பெய­ரெ­டுத்­தது அமெ­ரிக்கா.


ஆனால் அந்த பெய­ருக்கு தகுதி உடை­ய­து­தானா அமெ­ரிக்கா என கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது நீல் ஆம்ஸ்ட்­ரோங்கின் நிலவை நோக்­கிய அமெ­ரிக்­காவின் பயணம். அந்த பய­ணத்தை அன்று 1969 ஜுலை 16ஆம் திகதி நேர­டி­யாக சந்­தி­ரனில்  கால்­ப­திக்கும் காட்­சியை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா. ஆனால் அந்த காட்சி ஒரு திரைப்­ப­ட­மாக்க உரு­வாக்­கிய விஞ்­ஞானப் புனைக்­கதை போன்­றது என பலரும் கூறு­கி­றார்கள்.


ஏன் அமெ­ரிக்­காவின் வீடியோ பதிவு உண்மை இல்லை என்ற பல­மான கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. வடி­வே­லுவின் பாணியில் பேய் இருக்கா? இல்­லையா? பார்த்­தி­ருங்­காய்ங்­களா? பார்க்­கல்­லையா? என்­ற­வா­றானா கேள்­விகள், நீல் ஆம்ஸ்ட்ரோங் விட­யத்­திலும் ஏற்­படக் காரணம் என்ன? அப்­படி என்ன விட­யங்கள் தவ­றான விதத்தில், அந்த நிலவில் கால் பதித்த வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளது எனக் அறி­வி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றார்கள் என பார்ப்போம்.


#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?

#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?

#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?

#அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?

#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல்  ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?

#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான தர்க்க ரீதி­யான வாதங்­களும் அறி­வியல் ரீதி­யான வாதங்­களும் அறி­வி­ய­லா­ளர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த நிகழ்வு நடை­பெற்று சுமார் 44 ஆண்டுகள் நிறைவு பெறும் தறுவாயிலும் அதன் உண்மைத் தன்மை குறித்த சர்ச்சை கள் நிலவுவது துரதிர்ஷ்டமே.

ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவின் கால் பதித்த நிகழ்வு தொடர்பில் நாசாவிற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நாசா தவிர்த்து வந்ததாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உண்டு.

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்புகின்ற இவ்விடயத்திற்கு உண்மையில் யார் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்தார் என்ற விடையுடன் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதுவரை சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பதுதான் பதில்.

-அமானுல்லா எம். றிஷாத்


தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுந்தர் சி.
நட்சத்திரங்கள் - சித்தார்த், ஹன்சிகா, சந்தானம்
ஒளிப்பதிவு - கோபி
எடிட்டிங் - பிரவீன் - ஸ்ரீகாந்த்

காதலில் சொதப்புவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுவதற்கு பதில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் காதலில் வெற்றிபெற எப்படி தீயா வேலைசெய்யணும் என்பதை சித்தார்த்துடன் இணைந்துந்து சந்தானம் கலகலப்பூட்டுவதே 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் கதை.

பரம்பரை பரையா காதல் திருமணம் செய்த குடும்பத்தில் பிறந்த குமார், சிறு வயதிலிருந்தே பெண்களென்றெலாலே நாமக்கு சரிப்பட்டு வராது என ஒதுங்கியிருக்கிறார். இவர் எப்படி காதலில் தீயா வேலை செய்து காதலியை கரம் பிடிக்கிறார் என்பதை அரங்கமே சிரிக்கும் திரைக்கதையில் சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

கலகலப்பு படத்தின் அதேபாணியில் இவருதாங்க இவரு என்ற அறிமுகத்தோடு படம் ஆரம்பாவது முதல் சிரிப்பலையும் ஆரம்பமாகிறது. ஐ.டி நிறுவனமொன்றில் அப்பாவியாக நாயகன் குமாரு வேலைபார்க்கிறார். அவரை அடப்பாவியாக மாற்ற சஞ்சனாவாக வேலைக்கு புதிதாக இணைகிறார் ஹன்சிகா.

அதுவரையில் ஐ.டி நிறுவனத்தை சுற்றி வந்த கதை சஞ்சனாவையும் குமாரையும் கூடவே சந்தானத்தையும் சுற்றத் தொடங்குகிறது. வழக்கம்போல பார்த்த நொடியிலேயே பாடல் ஒன்றையில் கனவில் பாடி காதலில் விழுகிறார் நாயகன்.

பின்னர் எப்படி சஞ்சனாவை காதலிக்க வைப்பது என்ற ஒரே சிந்தனையில் சுற்றுகிறார். இதற்காக காதலில் சேர்க்கிறது பிரிக்கிறது என சல்மான்கானுக்கே திட்டம் கொடுப்பதையே தொழிலாக செய்யும் சந்தானத்திடம் செல்கிறார் குமார்.

இந்த இடத்தில் மோக்கியா என்ற பாத்திரத்தில் அறிமுகமாகும் சந்தானத்திற்கு திரையரங்கில் கிடைக்கும் கைதட்டல் வரவேற்பு அடங்க சில நிமிடங்களாகின்றது. ஆனால் நாயகன் சித்தார்த் அறிமுகமகும் காட்சி குண்டூசி விழுந்தா கேட்கிற அளவுக்குக்குதான் இருந்தது. அதற்கேற்ப சந்தானத்தின் அறிமுகமும் அதற்கேற்றாற் போல நாயகன் ரேஞ்சுக்கே உள்ளது.

இனி என்ன சந்தானத்தின் கல கல சிரிப்புடன் குமாரு காலில் வெற்றியடைகிறார். அப்போது பெரிய திருப்பமாக தனது திட்டத்தில் குமாரு காதல் வலையில் விழுந்த சஞ்சனா தனது தங்கை என்பது தெரியவருகிறது. பின்னர் இவர்களது காதலை எப்படியாவது பிரிக்கணும் என தீயா வேலை செய்கிறார் சந்தானம்.

இவற்றையெல்லாம் தாண்டி குமார் எப்படி காதலியை கரம்பிடித்து சுபம் போடுகிறார்கள் என்பதே மீதிக்கதை. கதை என்பதை விட திரைக்கதையே இங்கு படத்தினை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. படத்தில் குறைகளும் உண்டு ஆனால் அவையும் ரசிகர்களின் சிரிப்பில் மறைந்தே விடுகிறது. அதுவே இயக்குனர் சுந்தர் சி.யின் வெற்றியும் கூட.

படத்தின் நாயகன் சித்தார்த் தேவையான அளவுக்கு நடித்து ரசிகர்களை தன்பங்கிற்கு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அதேபோல நாயகி கவர்ச்சி உத்தரவாதமாக இளைஞர்களை கிறங்கடிப்பதோடு பாத்திரத்திற்கு பொருந்திப்போகிறார். கணேஷ் வெங்கட் ராமன், தேவதர்ஷினி, பாஸ்கி, சித்ரா லக்ஷமன் என ஏனைய பாத்திரங்களும் அளவாக நடித்து அளவுக்கதிமாக சிரிப்பை ஏற்படுத்த உதவுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி நிற்கிறார் சந்தானம். நீண்ட நாட்களின் பின்னர் இரட்டை அர்த்த வசனங்களை மிக மிக குறைத்துப் பேசி முகஞ்சுழிக்க வைக்காமல் சிரிக்க வைக்கிறார்.

பாடத்திற்கு தேவையான பின்னணி இசை. படத்துடன் இணைந்து பாடல்கள் என்றாலும் பெரிதாக மனதில் நிற்கும்படி இல்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நன்று. அதேபோல பிரவீன் - ஸ்ரீகாந்த் எடிட்டிங்கும் படத்தினை சிரிப்பூட்டுவதாக சிறப்பாக உள்ளது.
ஆர்ப்பாட்டமாக வந்து அடங்கிப்போகிற படங்களுக்கு மத்தியில் அமைதியாக வந்து அசத்தியிருக்கிறது இந்த தீயா வேலை செய்யணும் குமாரு.

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அக்மார்க் சுந்தர் சி. படமாக உருவாக்க தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர் சி.

மொத்தத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு... வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற குமாரு.

-அமானுல்லா எம். றிஷாத்

Tuesday, June 11, 2013

அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் பாவாடை அணிந்து பணிபுரியும் புகையிரத வண்டிச் சாரதிகள்

கோடை காலத்தில் அரைக் காற்சட்டை அணியத் தடை விதித்ததால் சுவீடன் நாட்டின் ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள புகையிரத நிலையத்தில் பணிபுரியும் புகையிர வண்டிச் சாரதிகள் பாவாடையுடன் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

சுவீடன் நாட்டின் தலைநகரிலுள்ள ரொஸ்லகஸ்பனன் புகையிரத சேவையில் பணியுரியும் 11 பேர் கொண்ட சாரதிக் குழுவொன்றே இவ்வாறு வேலைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

தற்போது சுவீடனில் கோடை காலம் என்பதால் அதிக வெப்பம் காரணமாக காற்சட்டை அணிந்து பணிபுரிவது எரிச்சலூட்டுகிறதாம். ஆனாலும் அரைக் காற்சட்டை அணிந்து பணிக்கு வருவதை புகையிரத நிறுவனம் தடை செய்துள்ளது. இதனை எதிர்க்கும் முகமாவே குறித்த சாரதிக் குழு பாவாடையுடன் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் குறித்த சாரதிகள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் கோடை காலம் நெருங்கும் போதும் நாங்கள் பாவாடை அணிவதாக கூறுவோம். ஏனெனில் கோடை காலத்தில் நிலவும் கடும் வெப்பநிலையில் அரைக்காற்சட்டை அணியவே விரும்புவோம். ஆனால் அது முடியாது. எனவே பாவாடை அணிந்துள்ளோம். இது மிகவும் வசதியாக உள்ளது.

நாங்கள் இவ்வாறு பணிக்கு வருகின்றபோது பயணிகள் எங்களை உற்றுப் பார்க்கிறார்கள் இருப்பினும் எவரும் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாவாடையுடன் பணி புரியும் சாரதிகள் அவர்கள் பாவாடையுடன் பணிபுரிவதை புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.


By AM.Rizath | Metronews.lk

பாடசாலைக்கு சென்று படித்து வரும் ரோபோ

அமெ­ரிக்­காவில் இரு­தய கோளாறினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மாண­விக்குப் பதி­லாக ரோபோ ஒன்று பாட­சா­லைக்கு சென்று படித்து  வரு­கின்­றது.

அமெ­ரிக்­காவில் சவூத் கரோ­லினா அரு­கே­யுள்ள சுமேடர் நகரைச் சேர்ந்­தவள் லெஸி (9). இவள் அங்­குள்ள ஒரு தனியார் பாட­சா­லையில் படித்து வரு­கிறாள். பிற­வி­யி­லேயே இரு­தய கோளா­றினால் பாதிக்­கப்­பட்ட இவளால் சரி­வர பாட­சா­லைக்கு செல்ல முடி­ய­வில்லை.

இதனால் பாடங்கள் பாதிக்­காமல் இருக்க அவ­ரது பெற்றோர் அவ­ளுக்கு புது­வி­த­மான ரோபோ  ஒன்றை வாங்கி கொடுத்­துள்­ளனர். தற்­போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதி­லாக பாட­சா­லைக்கு சென்று பாடங்­களை படித்து வரு­கி­றது. 'வி.ஜி.ஓ.' என அழைக்­கப்­படும் இந்த ரோபோ 4 அடி உய­ரமும், 18 இறாத்தல் எடையும் கொண்­டது.

இதன் முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ரோபோவில் கெமரா மற்றும் இணைய வச­தியும் உள்­ளது. பாட­சா­லைக்கு செல்­லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்­த­ப­டியே கம்ப்­யூட்­டரில் மவுஸ் மூலம் இயக்­கு­கிறாள்.

வகுப்­ப­றைக்கு செல்லும் ரோபோ வின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்­யூட்­டரில் தெரி­கி­றது. அதே வேளை, வகுப்­ப­றையில் ஆசி­ரி­யர்கள் நடத்தும் பாடங்­களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடி­யோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்­யூட்­டரில் ஒளி­ப­ரப்பும். அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசி­ரி­யர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாண­வர்­க­ளையும் பார்த்து தெரிந்து கொள்­கிறாள்.

இதை வைத்து வீட்டில் இருந்­த­ப­டியே பாடம் படித்து பரீட்சை எழுதி வரு­கிறாள். இந்த ரோபோ­வுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்­கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு 'இளவரசி வி.ஜி.ஓ.' என அன்புடன் பெயரிட்டு இருக்கிறாள்.

By: Metronews.lk

Sunday, June 9, 2013

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பு

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பினை  வொண்டர்ஸினூடாக கண்டு மகிழுங்கள்...


Saturday, June 8, 2013

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு.


ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம்.


யோ மிங்  (Yao Ming) எனும் இவ்­வீரர் சீனாவைச் சேர்ந்­தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவ­ருக்கு 32 வயது. இதற்­கி­டையில் பெரும் பணமும் புகழும் சம்­பா­திதது விட்டு உபா­தைகள் கார­ண­மாக போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்­று­விட்டார்.


பொது­வாக சீனர்கள் குள்­ள­மா­ன­வர்கள் என்ற அபிப்­பி­ராயம் உள்­ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்­குலம் (2.29 மீற்றர்).


யோமிங்கின் தாய் தந்தை இரு­வரும் தொழிற்சார் கூடைப்­பந்­தாட்ட போட்­டி­யா­ளர்கள். தந்தை யோ ஸியு­வானின் உயரம் 6  அடி 7 அங்­குலம். தூய் பெங் பெங்­டியின் உயரம் 6 அடி 3 அங்­குலம். இத்­தம்­ப­தியின் ஒரே பிள்­ளை­யான யோ மிங் 9 வயதில் கூடைப்­பந்­தாட்டம் விளை­யாட ஆரம்­பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்­கு­ல­மாக இருந்­தது. அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவர் 7  அடி 3 அங்­குலம் வரை வளர்வார் என எதிர்­வு­கூ­றினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்­து­கொண்­டி­ருந்தார் யோ மிங்.


அவரின் உய­ரம்­போ­லவே அவரின் கூடைப்­பந்­தாட்ட ஆற்­றலும் உயர்ந்­தது. சீனாவின் சார்பில் சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்றி பல பதக்­கங்­களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெ­ரிக்க தேசிய கூடைப்­பந்­தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்­டி­களில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்­கு­பற்­றினார்.


காலில் ஏற்­பட்ட உபா­தைகள் கார­ண­மாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அவர் அறி­வித்தார். அவர் ஓய்வு பெறும்­போது என்.பி.ஏ. போட்­டி­களில் விளை­யாடும் வீரர்­களில் மிக உய­ர­மா­ன­வ­ராக யோ மிங் விளங்­கினார்.


சீனாவின் மிகப் பிர­ப­ல­மான விளை­யாட்டு நட்­சத்­தி­ரங்­களில் ஒரு­வ­ரான யோ மிங் 2009 வரை­யான 6 வரு­ட­கா­லத்தில் 5 கோடி அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான வரு­மா­னத்தை பெற்­றவர். பல்­வேறு சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணையை அவர் கொண்­டி­ருக்­கிறார்.


இதெல்லாம் இருக்­கட்டும் யோ மிங் எவ்­வாறு மேற்­படி சிரிப்பு மனி­த­ராக சமூக வலைத்­த­ளங்­களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழு­கி­றதா?


2009 ஆம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்­கு­பற்­றினார். அப்­போது ரொன் அட்டெஸ்ட் பேசி­யதை கேட்டு, அடக்க முடி­யாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யா­னது.


2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்­த­ளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்­வேறு வேடிக்கை ஓவி­யங்­களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவி­யமும் ஒன்­றாகும். மேற்­படி செய்­தி­யாளர் மாநாட்டு வீடி­யோவில் யோ மிங் சிரித்த காட்­சி­யொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்­ப­டை­யாக வைத்தே அந்த ஓவி­யத்தை வரைந்­த­தாக டவு­டன்லோ ஒப்புக்கொண்டார்.


அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும். அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



By: Metronews

3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்படும் கார் இன்னும் இரு வருடங்களில் வீதியில் ஓடும்

தொலை­தூ­ரத்தில் உள்­ள­வர்­க­ளுடன் தொலை­பேசி மூலம் பேசு­வ­தற்கு கற்றுக் கொண்ட மனிதன் பின்னர் காகித ஆவ­ணங்­களை பெக்ஸ் மூலம் அனுப்பத் தொடங்­கினான்.

அதன்பின் இணையம் ஊடாக புகைப்­ப­டங்கள், வீடியோ மற்றும் பல்­வேறு மென்­பொ­ருட்­களை அதன் தரம் மாறாமால் அனுப்பும் தொழில்­நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இப்­போது இவற்­றை­யெல்லாம் பின்­தள்ளும் விதத்தில் 3டி பிரிண்டிங் எனும் முப்­ப­ரி­மாண அச்­சிடல் இயந்­தி­ரங்கள் மூலம் முப்­ப­ரி­மாண பொருட்­க­ளையும் அனுப்பும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

அமெ­ரிக்­காவில் அண்­மையில் துப்­பாக்­கி­யொன்று 3டி பிரிண்டிங் மூலம் அனுப்­பப்­பட்­டது. இந்­த­வ­ரி­சையில் 3டி பிரிண்டிங் மூலம் உரு­ வாக்­கப்­பட்ட கார் இன்னும் இரு வரு­டங்­க­ளுக்குள் வீதியில் ஓடும் என்­கி­றது ஸ்ட்ராடேஸிஸ் எனும் இஸ்­ரே­லிய நிறு­வனம்.

கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் எனும் நிறு­வ­னத்­துடன் இணைந்து இக்­காரை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையில் மேற்­படி நிறு­வனம் ஈடு­பட்­டுள்­ளது.

இந்த காருக்கு என URBEE 2 பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. “ 3டி பிரிண்டிங் மூலம் உரு­வாக்­கப்­பட்ட கார் வீதிக்கு வரும்நாள் வெகு தொலைவில் இல்லை. எரி­பொருள் சிக்­கனத் தன்­மை­யு­டை­ய­தாக இந்த காரை நாம் தயா­ரிக்­கிறோம்” என கே.ஓ.ஆர். எக்­கோ­லொஜிக் நிறு­வ­னத்தை சேர்ந்த ஜிம் கோர் தெரி­வித்­துள்ளார்.

வழக்­க­மான கார்கள் நூற்­றுக்­க­ணக்­கான அல்­லது ஆயி­ரக்­க­ணக்­கான சிறிய பாகங்­களைக் கொண்­டுள்ள போதிலும் URBEE 2 காரா­னது 40 பாகங்களையே கொண்டிருக்கும்.

இதனால் இக்காரை 3 பிரிண் டிங் மூலம் உருவாக்குவது சாத் தியமானதாகும்” என அவர் கூறி யுள்ளார்.



Friday, June 7, 2013

பாயும் நதிகள் மீது தொடரும் சர்ச்சைகள்

ஒவ்­வொரு உயிரும் உலகில் உயி­ருடன் வாழ ஒட்­சிசன் என்ற வாயுவை நம்­பி­யி­ருக்க வேண்டி இருக்­கின்­றது. ஆனாலும் சுவா­சித்து உயிர் வாழ வழி­செய்யும் அந்த மூச்சுக் காற்று உண்­மையில் யாருக்கு சொந்தம்? அது போலவே நீரூம் அமைந்­தி­ருந்தால் என்ன என எண்ணத் தோன்­று­கின்­றது.


ஏனெனில் நிலங்­களைத் துண்­டா­டிய மனி­தர்­களால் நதி­க­ளையும் அதில் பாயும் நீரையும் பிரிக்க முடி­யாமல் அவற்றின் மீதான சர்ச்­சை­க­ளினால் பல்­வேறு நாடு கள் பிரிந்து சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வதே மேற்­படி எண்ணம் உதிக்க கார­மா­கின்­றது.


பூமி­யில் குறித்த சில காலப்­ப­கு­தி­களில் கண்­டங்கள், நாடுகள் என மனி­தர் ­களின் அர­சியல் ஆசைகள், நிலத்தின் மீதான மோகம் மற்றும் வேறு பல தேவை­க­ளாலும் புவி­யி­ல­மைந்த நிலங்கள் துண்­டா­டப்­பட்­டன.


இருப்­பினும், நிலத்தை சொந்­த­மாக்கி எல்­லைக்­கோ­டிட்டு பிரிக்க முடிந்­தாலும், எல்லைக் கோடு­களைத் தாண்டி பாயும் ஆறு­களை சாதா­ர­ண­மாக மனி­தனின் ஆசைக்கு சாத­க­மாக பிரித்­திட முடி­ய­வில்லை. இதனால் நாடுகள் பல ஒன்­றி ­ணைந்து காணப்­பட்­ட­போது எமது நாட்டின் நதி­யாக இருந்­தது. அதுவே நாடுகள் பிரிந்­ததும் எனது நாட்டு நதி­யென உரிமை கோர வேண்டி ஏற்­பட்­டது. இதுவே நதிகள் மீதான சர்ச்­சைக்கு வித்­திட்­டது.


தற்­போது உல­களில் முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக தோற்றம் பெற்­றுள்­ளது நீர். எனவே ஜீவ­ந­தி­களை யாரும் யாருக்கும் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ரில்லை. விளைவு நாடு­க­ளி­டையே சச்­ச­ர­வு­க­ளையும் சண்­டை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கி­றது.


இனி ஓர் உலகப் போர் ஏற்­ப­டு­மே­யானால் அது நீருக்­கான ஒரு போரா­கவே இருக்­குமே அன்றி வேறு எதற்­கா­கவும் அல்ல என கடந்த 20 ஆண்­டு­க­ளாக சுற்­றுச்­சூழல் அறி­வி­ய­லா­ளர்­களும் சமூக அறி­ஞர்­களும் கூறி­வ­ரு­கின்­றார்கள். உண்­மையில் இதற்­கான அறி­கு­றிகள் பெரிய அளவில் இன்று காணப்­ப­டு­கி­றது.


முன்­னொரு காலத்தில் கோடை காலங்­களில் வீட்­டு­க­ளுக்கு வெளியே குடங்­களில் நீர் நிரப்பி வைப்­பார்­களாம் தாகத்தில் வரும் வழிப்­போக்­கர்­க­ளுக்­காக. இன்றும் வீடு­க­ளுக்கு வெளியே குடங்கள் உள்­ளன. ஆனால் இவை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருப்­பது வழிப்­போக்­கர்­களை அல்ல நீரின் வரு­கையை.


இது வீடு­க­ளுக்கு மட்­டு­மல்ல நாடு­க­ளுக்கும் பொருத்­த­மாக இருக்கும். 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்­கையில் 'அனை­வ­ருக்கும் போது­மான நீர் உள்­ளது' எனத்­தெ­ரி­வித்­தி­ருந்­தது. ஆனாலும் தவ­றான நிர்­வாகம், அர­சியல் பின்­ன­ணியே தனி நப­ருக்­கான நீரின் அளவை மட்­டு­ப­டுத்­து­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இத­னா­லேயே பல்­வேறு நாடு­க­ளுக்கு குறுக்­காக பாயும் நதி­க­ளினால் உரு­வான சர்ச்­சைகள் பூதா­க­ர­மாக மாறி வரு­கின்­றது.


இந்­தியா என பெயர் வரக் கார­ண­மாக அமைந்த சிந்து நதியே இன்று பாகிஸ்­தானில் தானே பாய்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்ந நதி காஷ்மீர் ஊடா­கவும் செல்­கின்­றது. காஷ்­மீரில் ஓடும் முக்­கிய 6 நதி­களில் 3 நதிகள் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன.  மீதி 3 நதி­க­ளுக்­காக இரு நாடு­களும் முட்­டிக்­கொண்­டுதான் இருக்­கின்­றன.


மேலும் தைக்ரீஸ், யூப்­ரடீஸ் நதி­களால் துருக்­கிக்கும் சிரி­யா­வுக்­கு­மி­டையே என பல நாடு­க­ளி­டையே நதி­க­ளுக்­காக பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. இதில் பிர­தா­ன­மாக குறிப்­பி­டக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான நதி­யாக விளங்­கு­வது உலகின் அதி நீள­மான நைல் நதியும் ஒன்­றாகும்.


ஆபி­ரிக்­காவின் பல நாட்டு வயல்­க­ளுக்குச் செழிப்பும், மனி­த­ருக்கு உயிரும் ஊட்­டு­வ­துடன், எகிப்தின் நாக­ரிக வளர்ச்­சிக்குப் பல்­லா­யிரம் ஆண்­டுகள் உறு­து­ணையும் புரிந்த உலகின் அதி நீள­மான நைல் நதிக்­கா­கவும் குறித்த நாடு­க­ளி­டையே பல வரு­டங்­க­ளாக பிணக்­குகள் காணப்­பட்டு வரு­கின்­றது.


66670 கி.மீ நீள­மான இந்த ஜீவ­ந­தியில் 11 நாடுகள் தங்­கி­யுள்­ளன. ஆனாலும் சூடான், புருண்டி, ருவாண்டா, கொங்கோ, தன்­சா­னியா, கென்யா, உகண்டா, எத்­தி­யோப்­பியா, எகிப்து ஆகிய 9 நாடு­களே பெரு­ம­ளவில் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. இதில் குறிப்­பாக நைல் நதியின் பிர­தான நீர் மூலத்­தினை எகிப்து மற்றும் சூடான் ஆகிய இரு நாடுகள் பெறு­கின்­றன.


ஆனால் நதியின் இரு பிரி­வு­க­ளான வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகிய இரண்டு பகு­திகள் முறையே கிழக்கு ஆபி­ரிக்கா (றுவண்டா அல்­லது புருண்டி) மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய இடங்­களில் உற்­பத்­தி­யா­கின்­றது.


இதனால் மின்­சாரம், வயல் நிலங்­க­ளுக்­கான நீர் என முதன்­மை­யான நீர் தேவை­களை அதி­க­ளவில் எகிப்தும் சூடானும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.


இந்­நி­லையில் நீல நதியின் குறுக்­காக அணை ஒன்­றினை மின் உற்­பத்­திக்­காக அமைப்­ப­தற்கு எத்­தி­யோப்­பியா நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இதன் ஒரு அங்­க­மாக கடந்த வாரம் அணை கட்­டப்­ப­ட­வுள்ள குறி­த்த நதி ஓடும் திசையை மாற்றும் வேலை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


இத்­திட்­டத்­திற்கு இத்­தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவி செய்­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இதனால் உலக நாடு­களே இந்த அணையை கட்ட உத­வு­வ­தனால் இத்­திட்­டத்­திற்கு தனது எதிர்ப்­பினை தெரி­விக்கும் முக­மாக முக்­கிய கடல் மார்க்­க­மான பாதை­களில் ஒன்­றான சுயஸ் கால்­வாயை மூடி போக்­கு­வ­ரத்துத் தடையை ஏற்­ப­டுத்த எகிப்து தீர்மானித்துள்ளது.


இவ்வாறு சுயஸ் கால்வாயை மூடும் பட்சத்தில் கடல் மார்க்கமான போக்கு வரத்துகள் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நாடுகளிடையே பிணக் குகள் உருவாக வாய்ப்பாகலாம் என பர வலான கருத்துகள் வெளியாகின்றன. இது போலவே ஏனைய நதிகளுக்கான போராட்டங்களும் நாடுகளுக்கிடையில் பாரியளவில் வெடிக்கலாம்.


ஆனாலும் நதிகள் பாய்கின்ற அதே வேகத்தில் சர்ச்சைகளும் பாய்ந்து கொண் டேதான் இருக்கிறது.


- அமானுல்லா எம். றிஷாத்

Wednesday, June 5, 2013

உருண்டையான கார்

ஜேர்மனியின் வொக்ஸ்வொகன் கார் வடிவம் உலகப் பிரசித்திப் பெற்றது. ஆனால், அந்த காரையோ பாரிய உருண்டையாக மாற்றியுள்ளார் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர்.

இச்வான் நூர் எனும் இக்கலைஞர் 1953 ஆம் ஆண்டின் வொக்ஸ்வொகன் பீட்டில் காரொன்றை இவ்வாறு பாரிய உருண்டை வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அண்மையில் ஹொங்கொங்கில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இந்த கார் உருண்டையை இச்வான் நூர் காட்சிப்படுத்தினார்.

இது முன்னர் வீதியில் ஓடிய கார் என்று நம்புவதற்கு கடினமான வகையில் முழு உருண்டை வடிவில் இக்கார் உருமாற்றப்பட்டுள்ளது. இக்காரின் சமிக்ஞை விளக்குகள் போன்ற சிறிய பாகங்கள்கூட அகற்றப்படவோ நீக்கப்படவோ இல்லை. அனைத்து பாகங்களையும் உள்தள்ளி அல்லது சற்று வெளித்தள்ளி இந்த உருண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

50 வயதான இச்வான் நூர், ஏற்கெனவே மற்றொரு வொக்ஸ்வொகன் காரை செவ்வகமாக உருமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைக் கடத்திச் சென்ற பூனை கைது

ரஷ்யாவின் கொமி எனும் பிரதேசத்திலுள்ள சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி, பெட்டரி மற்றும் சார்ஜர்களைக் கடத்திச் சென்ற பூனை ஒன்று கைதுசெய்யப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறைச்சாலை நிவாகம் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் நுழைந்த பூனையின் அடிப்பகுதியில் வித்தியமான முறையில் இருப்பதனை சிறைச்சாலை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து பூனையை பிடித்த போது அதன் கீழ்ப்புறத்தில் 2 தொலைபேசிகள, பெட்டரிகள் மற்றும் சார்ஜர் போன்றவை இணைக்கப்படமை தெரியவந்தது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது எனக் குறிப்பிட்டுள்ளது.


இது தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.


ஏற்கனவே இதே போன்றதொரு சம்பவம் பிரேசில் நாட்டிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.