சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Sunday, September 8, 2013

எரிகல் பொழிவு ஆபத்தானவையா? ; இலங்கையில் ஏற்பட்ட எரிகல் பொழிவினை நீங்களும் இரசித்தீர்களா?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது.

 சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.



அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.



இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.

ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.



நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது. சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.

அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.

இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.



இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.



ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.

நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

 –அமா­னுல்லா எம்.றி­ஷாத்

இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 22, 2013

வழமைக்கு மாறான 'நித்திய சுடர்' (அணையாத தீ) : நியூயோர்க் நீர்வீழச்சியில் அதிசயம்


மனி­தர்­களின் ஆசையைப் போலவே அறி­வியல் உலகின் தேட­லுக்கும் ஓர் எல்லை இல்லை. ஆனால் அதுவே அறி­வி­யலின் எல்லை கடந்த வெற்­றி­க­ளுக்கும் மேலும் கடக்­க­வி­ருக்கும் எல்­லை­க­ளுக்கும் கார­ணமாய் அமைந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

அவ்­வா­றான ஒரு தேடலில் தெரி­ய­வந்த உண்மை ஒன்று ஆராய்ச்­சி­யா­ளர்­களை திண­றச்­செய்­துள்­ளது என்றே சொல்ல வேண்டும்.

அதா­வது "நித்­திய சுடர்" என்­பது இயற்­கை­யாக அணை­யாமல் ஓரி­டத்தில் தொடர்ச்­சி­யாக எரிந்­து­கொண்­டி­ருக்கும் நெருப்பே ஆகும். அது எவ்­வாறு தொடர்ச்­சி­யாக எரிந்­து­கொண்­டி­ருக்­கின்­றது என்றால், சூடான பாறை­களின் கீழி­ருந்து இயற்­கை­யாக வெளி­யேறும் ஒரு வகை வாயு­வினால் என அறி­வியல் விளக்கம் கூறு­கி­றது.

இவ்­வா­றான பாறைகள் உலகின் பல இடங்­க­ளிலும் ஆயி­ரக்­க­ணக்கில் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பி­லெல்லாம் மறை­வான சக்­திகள் என்று மக்­களை பீதிக்­குள்­ளாக்கும் புரியாப் புதி­ரா­கவோ வேறு வகை­யான தடு­மாற்­றங்­களோ ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளிடம் இம்­மி­ய­ளவும் இல்லை. இதில் அறி­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எந்த குழப்­பமும் இல்லை.

சில உண்­மைகள் கற்­ப­னை­களைத் தாண்டி நிற்கும். அது­போ­லவே இந்த நித்­திய சுடர் என்ற அம்­சமும். நெருப்­பில்­லாமல் புகை­யாது என்­பார்கள். உண்­மைதான் நித்­திய சுடர் என்­ப­தற்கு பின்­னாலும் நெருப்பாய் சில கார­ணங்கள் இருக்­கத்தான் செய்­கி­றது. ஆனால் அவை அமா­னுஷ்ய சக்தி அல்ல என்­ப­தை தெளி­வாகக் கூறு­கின்­றனர் விஞ்­ஞா­னிகள்.

அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க்­கி­லுள்ள எழில் கொஞ்சும் செஸ்ட்நட் றிட்ஜ் பூங்­கா­வி­லுள்ள நீர்­வீழ்ச்­சியின் அடியில் "நித்­திய சுடர்" ஒன்று காணப்­ப­டு­கின்­றது. இது உல­கி­லுள்ள வசீ­க­ர­மான நித்­திய சுடர்­களில் ஒன்று.

இந்த நித்­திய சுடரும் வழ­மை­யா­னது போன்றே என ஆராய்ச்­சி­யா­ளர்கள் நம்­பிக்­கொண்­டி­ருந்த நிலையில் அண்­மையில் இதன் மீதான இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­களின் ஆராய்ச்­சியில் தெரி­ய­வந்­துள்ள உண்மை அறி­வி­ய­லா­ளர்­களின் அறிவை சோதிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

ஏனெனில் குறித்த நித்­திய சுடர் வழ­மைக்கு மாறான முறையில் எரிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். அது எப்­படி சாத்­தி­யப்­ப­டு­கின்­றது என தற்­போது அறி­ய­மு­டி­ய­வில்லை எனவும் குறித்த ஆராய்ச்­சி­குழு தெரி­வித்­துள்­ளது.

அதா­வது,  ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்னர் உரு­வா­ன­தாக நம்­பப்­படும் இந்த நித்­திய சுட­ரா­னது நீர்­வீழ்ச்­சியின் அடிப்­ப­கு­தியில் பாறைக்குள் இருக்­கி­றது. இதில் எரிந்­து­கொண்­டி­ருக்கும் நெருப்­பா­னது பழை­மை­யா­னதும் மிக அதிக வெப்­ப­மான பாறையின் அடி­யி­லி­ருந்து எரிவை ஏற்­ப­டுத்தும் "சேல்" எனப்­படும் ஒரு வகை கல­வை­யி­லி­ருந்து வெளி­யாகும் இயற்கை வாயுவின் மூலம் எரி­வ­தாக நம்­பப்­பட்­டது.

சேல் என்ற அமைப்பு களி போன்று அமைந்­தி­ருக்கும். இதில் சுண்­ணாம்­புக்கல் மற்றும் குவார்ட்ஸ் உள்­ளிட்ட மேலும் பல கனி­மங்கள் படை­யாக இணைந்­தி­ருக்கும் இது ஒரு வகை இயற்கை வாயுவை வெளி­யி­ட­வல்­லது. அவ்­வாயு எரி­வதை ஊக்­கு­விக்கும் சக்­தி­யாக இருக்கும்.

ஆனால்  இந்த நித்­திய சுடர் சேல் மூலம் வாயுவைப் பெற்று எரி­ய­வில்லை என்­பது தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. இது குறித்து இந்­தி­யானா பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கையில், நீர்­வீழ்ச்­சி­யி­லுள்ள பாறை தொடர்ச்­சி­யாக எரி­வ­தற்­கு­ரிய வெப்­பத்தை வளங்­கு­ம­ள­விற்கு சக்தி படைத்­தி­ருப்­ப­தற்கு சாத்­தி­ய­மில்லை.

ஏனெனில் அப்­பா­றையின் வெப்­ப­நிலை தேனீர் கோப்பை அள­விற்கே சூடா­க­வுள்­ளது. மேலும் அதி­­லுள்ள "சேல்" என்ற அமைப்பும் முதலில் எதிர்­பார்த்­தது போன்று பழை­ய­ன­வாக இல்லை. எனவே இவ்­வி­ரண்டு கார­ணி­க­ளா­லி­ருந்தும் குறித்த நித்திய சுடர் எரி­ய­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது என ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கின்­றனர்.

எனவே வேறு ஒரு எரி மூலத்தின் சக்­தி­யி­னா­லேயே எரிய வேண்டும் ஆனால் அது என்ன? அதனை குறித்த நீர்­வீழ்ச்­சி­யி­லுள்ள பாறை எவ்­வாறு உரு­வாக்­கு­கின்­றது என்­பது தொடர்பில் தற்­போது ஆராய்ச்­சி­யா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­க­மு­டி­ய­வில்லை.

இயற்­கை­யுடன் சம்­மந்­தப்­பட்ட சில விட­யங்­க­ளுக்கு இயற்­கையே தீர்­வாக பல சமை­யங்­களில் அமைந்­து­விடும். அந்த வகையில் இந்த நித்­திய சுடரும் அமைந்­தி­ருக்­கக்­கூடும். ஆனால் அது என்ன என்­பது குறித்து அறி­வியல் உலகம் அறிய முற்­ப­டு­வது வழ­மையே. இதனால் ஆராய்ச்­சி­யா­ளர்கள் இந்த அணையா நெருப்பின் மீதான ஆராய்ச்­சி­க­ளையும் அணைப்­ப­தா­க இல்லை.

சேல் போன்ற மேலும் பல மூலங்கள் காணப்­பட வாய்ப்­பி­ருக்­கி­றது. ஆகவே இவ்­வ­கை­யான மூலங்­களை நீரி­லி­ருந்து அல்­லது பாறை­க­ளி­லி­ருந்து வெளி­யேறும் குறித்­த­ள­வி­லான வெப்பம் காபன் பிரிப்பு செய்­வ­தனால் அணையா நெருப்பு நியூ­யோர்க் நீர்­வீழ்ச்­சி­யில் உரு­வா­கி­யி­ருக்­கலாம்.

அல்­லது அமெ­ரிக்­காவின் கிழக்கு கடற்­க­ரையின் பூமியின் கீழ் மெதேன் வாயு உரு­வாகும். இதனை ஒத்த ஒரு வழி­யில் உரு­வாகும் வாயு மூலம் இங்­குள்ள அணையா சுடர் எரிந்­து­கொண்­டி­ருக்­கலாம் என்­பது ஆராய்ச்­சி­யா­ளர்களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இதே­வேளை பென்­சில்­வே­னி­யாவின் வட­மேற்கு காட்டுப் பகு­தியில் உள்ள ஒரு குழியில் அணை­யாமல் நெருப்பு இருந்­து­கொண்டே இருக்­கி­றது. இதற்கு காரணம் பழை­மை­யான இயற்கை எரி­பொருள் வாயு அங்கு கசி­வ­துதான் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது அங்க ஏற்­பட்­டுள்­ள ஒழுக்கின் மூலம் எதேன் மற்றும் புரபேன் போன்ற வாயுக்கள் வெளி­யா­கின்­றது. அதுவே தொடர்ச்சியான எரிவுக்கு காரணமாகின்றது.

இதேபோல ஒரு அடர்த்தியான வாயுக் கசிவு இங்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். அது என்ன என்பதை அறியவே தற்போது ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
விரைவில் அது என்னவென்பது தெரிய வரும் என ஆராய்ச்­சி­யா­ளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் மர்மத்திற்கான விடை காண் பதற்காக ஆராய்ச்சியாளர்கள் தமது முயற் சிகளை ஆராய்ச்சிகளாய் தொடர்ச்சியாக எரிய விட்டுக்கொண்டிருக்கிறார்கள் கூடவே செஸ்ட்நட் றிட்ஜ் பூங்காவிலுள்ள நித்திய சுடரும் மர்மாய் எரிந்துகொண்டே இருக்கிறது.

-அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 17.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Monday, May 20, 2013

புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் 'QE2'

'QE2' எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல்லானது கேம்பிரிட்ஜிலுள்ள மைனர் கோள் நிலையத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.7 மைல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31ஆம் திகதி இரவு 959 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியை இவ்விண்கல் கடந்து செல்லவுள்ளது. மேலும் இவ்விண்கல்லினால் புவிக்கு ஆபத்துகளும் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விண்கல் தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் பிரதம ஆராய்ச்சியாளர் கலாநிதி லேன்ஸ் பென்னர் கூறியுள்ளார்.

இவ்விண்கல் முதன் முதலில் 1998ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By AM.Rizath/Metronews