சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Friday, November 30, 2012

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வெற்றிக்கிக்கும் உந்துசக்தியாகின்றது. அவ்வகையில் ஒவ்வொரு தேவைக்குமான மாற்றீட்டினை கண்டுபிடித்து வரும் அறிவியல் உலகத்தில் பூமிக்குரிய மாற்றீடு என்ன? என்ற தேடலும் முக்கியமான ஒன்று.

பல வருடங்களாகவே நடைபெறும் இந்த தேடலின் மற்றுமொரு வளர்ச்சியே கெப்ளர் விண்கலம். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பூமியை போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய கிரகத்தினைத் தேடி கெப்ளர் எனும் விண்கலத்தினை அண்டவெளியில் தீவிரமாக அலையவிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அண்டவெளியை கெப்ளர் போட்டுத் தேடிப்பார்த்தும் புவியை ஒத்த எந்த கிரகமும் இதுவரையில் சிக்கவில்லை. ஆனாலும் கிடைக்கிறது - என்றைக்குமே கிடைக்காமல் இருக்காது என்ற நம்பிக்கையில் தொடர்கிறது ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகள்.

ஏன் குறிப்பாக பூமி மாதிரியான ஒரு கிரகத்தினை ஆய்வாளர்கள் தேடியலைகிறார்கள்? மனித சனத்தொகை வளர்ச்சியானது 1950ஆம் ஆண்டுகளில் பின்னர் படுவேகமாக ஜே வடிவில் வளர்ந்து இன்று சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி அண்ணளவாக 7.1 பில்லின்கள் ஆகும். இதுவே 2025ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் 8 பில்லினுக்கும் (8,000,000,000) அதிகமாகிவிடும் என்கிறது ஆய்வுகள்.

இதனால் காலப்போக்கில் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவுசெய்வதே சாதனைக்குரியனவாய் மாறிவிடும். நீர், நிலம் மற்றும் வாயு போன்றவற்றுக்கே தட்டுப்பாடு நிலவலாம். ஏனெனில் அதிகரித்துவரும் சனத்தொகையினால் இவைகள் வெகுவிரைவாகவே மாசடைந்து விடும்.

எனவே மனித குலத்தினை காப்பாற்றுவதனை நோக்காக கொண்டே வேற்றுக்கிரக வாசிகள் மற்றும் பூமியை ஒத்த கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களின் மாதிரியிலமைந்த வேற்றுக்கிரகவாசிகள் புவியை ஒத்த கிரகத்திலேயே இருப்பார்கள் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கையிலமைந்த எதிர்பார்ப்பே.

சூரிய மண்டலத்திலிருக்கும் ஒன்பது கிரகங்களில் எதிலும் உயிரினங்கள் வாழத் தேவையான கூறுகள் எதுவும் இல்லை. இதனாலேயே அண்டவெளியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்களில் பூமி மாதிரியான கிரகங்கள் இருக்கின்றனவா? என்று அறிய கெப்ளர் விண்கலத்தினை அண்டவெளியில் உலவவிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் புவியை ஒத்த கிரகம் என்பது அளவில் ஒத்திருப்பதோ சூரினைச் சுற்றி வரவேண்டும் என்பதோ இல்லை. தட்ப வெப்ப நிலைகள், காற்று மண்டலம், காற்றழுத்தம், நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்குமிடையிலான தூரம் மற்றும் இன்ன பிற காரணிகள் போன்றன புவியை ஒத்திருக்க வேண்டும். அதாவது மனிதன் வாழ ஏதுவான காரணிகள் காணப்படவேண்டும்.

சாதாரணமாக எடுத்துக்கொண்டால் புவியிலுள்ள அந்தாட்டிக்கா பிரதேசத்திலேயே எம்மால் வாழ முடியாது காரணம் அங்கு நிலவும் குளிரான சூழல். இசைவாக்கமடைந்தால் முடியுமே என நாம் எண்ணக்கூடும். அவ்வாறில்லை மீனுக்கு நீச்சல் கற்றுத்தரத் தேவையில்லைதான் ஆனால் அது தண்ணீரில் மட்டுமே சாத்தியம்!

சரி, ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களின் நிலைமைகள் என்னவென்று பார்ப்போமானால் வெள்ளிக் கிரகமானது புவியின் அளவை ஒத்தது என்றாலும் தீம்பிளம்பு போல சூடாக உள்ளதுடன் கூடிய காற்றழுத்தம் காரணமாக இங்கு செல்லும் விண்கலங்களே சுக்குனூறாக வெடித்துச்சிதறும். புதன் கிரகத்திலோ வெப்பமும் குளிரும் அசாதாரணமாக மாறி மாறி வருகின்றது.

இதேவேளை புவிக்கு அடுத்து வரும் செவ்வாய் கிரகமே தற்போது அதிக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட காணப்பட்டுள்ளதாக அண்மையில் கியூரியோசிட்டி விண்கலம் மூலம் கண்டுபிடிக்கபட்டது. ஆனாலும் அங்கு காணப்படும் குளிர் விபரீதமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

செவ்வாய்க் கிரகத்திலேயே குளிர் வாட்டுகிறது என்றால் சூரியனிலிருந்து தூரம் அதிகரித்துச்செல்லும் வழியிலுள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளுட்டோ போன்ற கிரகங்களின் நிலைமைகளை சிந்திப்பார்க்கவே முடியாதுள்ளது. மிகக் குறைந்த காற்றழுத்தம் காரணமாக அவையெல்லாம் ஐஸாக உறைந்து காணப்படுகிறது.

இவை தவிர பூமியில் காணப்படும் காற்றுமண்டலமானது ஆபத்தான புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது. மேலும் சூரியனிலிருந்து, தகுந்த தட்ப வெப்ப நிலைகள் கிடைக்கும் தூரத்தில் உள்ளதுடன் பூமி தகுந்த வேகத்தில் சுழல்வதனால் இரவும் பகலும் தேவையான அளவில் கிடைக்கிறது. இல்லையேல் எமக்கும் ஒரு பக்கத்தில் வாட்டப்படும் உணவு வகைகளின் நிலைமைதான்.

சந்திரன் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் காணப்படுகின்ற போதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காப்பு சந்திரனில் இல்லை. அத்துடன் தொடர்ந்து 14 நாள் வெயில் பின்னர் 14 நாள் குளிர் என இருப்பதனால் மனிதன் வாழ சந்திரனும் உகந்தாக இல்லை.

இவ்வாறு உயிரினங்கள் வாழ ஏதுவாக புவி திடமாக உள்ளது போல் ஞாயிற்றுத் தொகுதியில் வேறு கிரகங்கள் இல்லை என்பதே தற்போது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கெப்ளர் விண்கலம் இதுவரையில் சுமார் நூற்று ஐம்பது ஆயிரம் கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் சில கிரகங்கள் - அது சுற்றும் சூரியன் போன்ற நட்சத்திரத்திலிருந்து புவி அமைந்துள்ள தூரத்தை ஒத்த தூரத்தில் காணப்படுகிறது. அவையே தற்போதைய ஆராய்ச்சியாளர்களின் துருப்புச் சீட்டாகவும் இருக்கிறது. அவை தொடர்பில் மேலும் பகுத்தாராயப்பட்டு வருகிறது எனவே சிலவேளை அவற்றில் புவியை ஒத்த கிரகம்(கள்) இருக்கலாம் என்பது ஆராய்வாளர்களின் நம்பிக்கை.

கிரகங்களை இந்த கெப்ளர் விண்கலம் எப்படி கண்டுபிடிக்கிறது தெரியுமா? இரவு வானில் தெளிவாக தெரியும் நட்சத்திம் திடீரென மறையும்போது வானில் மிக உயரத்தில் பறக்கும் விமானத்தின் ஓசைகள் எதுவுமின்றி அங்கே விமானம் செல்லுகிறது என்று நாம் சாதரணமாக எதிர்வுகூறுவது போலவே வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது கெப்ளர்.

கெப்ளர் அனுப்புகின்ற அவ்வாறான படங்கள், தகவல்கள்களைக் கொண்டு நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து குறித்த நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.

தற்போது கெப்ளர் விண்கலத்தின் பிரதான பணிகள் முடிவடைந்த போதிலும் மேலும் நான்கு ஆண்டுகள் அண்டவெளியில் தனது ஆராய்ச்சியைத் தொடரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகளை தேடி சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லுகிறது வொயஜர் - 1 

இதேவேளை 1977ஆம் ஆண்டு நாசாவினால் விண்ணுக்கு அனுப்பபட்ட வொயஜர்-1 என்ற ஆளில்லா விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்று சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (CD) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் படங்கள், 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (Batteries) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆகவே அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் எங்கோ ஒரு கிரகத்தில் எம்மை விட அறிவில் மிஞ்சிய அல்லது குறைந்த வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என நம்பிக்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தின் மூலம் புவியையும் மனிதர்களையும் அவர்கள் அடையாளம் காண வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எங்கோ ஒரு கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியின் குரல் கேட்கிறது. அதை நோக்கிய வொயஜரின் பயணமும் தொடர்கிறது. எம்மைத் தொடர்புகொள்ள அவர்களும் முயற்சிக்கிறார்கள் விரைவில் நல்ல செய்தி வந்து சேரும் என்ற விஞ்ஞானிகளின் நம்பிக்கை - வெற்றிபெறும் தேடலின் பயணமாக தொடர்கிறது.

- அமானுல்லா எம். றிஷாத்




Wednesday, November 28, 2012

உலக super star இன் இறுதி அதிரடி திரைப்படம் : CZ 12 --Trailer மற்றும் கதைச் சுருக்கம்--

Marital arts அதாவது தற்காப்புக் கலையினை உலகெங்கும் எடுத்துக் காட்டிய Bruce Lee இன் இடத்தைப் பிடிப்பார் என நினைத்தால் அதற்கும் மேலாக ஒரு இடத்தைப் பிடித்தவர் Jacki Chan.

எத்தனை ஆயிரம் பேர் எதிரிகளாய் வந்தாலும் அவர்களைப் பந்தாடும் அசகாய சூரராக மிகைப்படுத்தப்பட்ட பாத்திரங்களில் நடித்த Bruce Lee இன் பாணியிலிருந்து விலகி தனக்கென ஒரு பாதையை Comedy, சிறந்த நடிப்பாற்றலுடன் உருவாக்கி அதிலே நடந்து வெற்றி பெற்றவர் இவர்.
தன் முதல் படத்திலிருந்து இன்று வரை தன் சண்டைக்காட்சிகளை தானே அமைத்துக்கொள்கிறார்.
உலகெங்கும் ரசிகர் பட்டாளம் உள்ள Jacki Chan இனை சென்னை தமிழ் பேச வைத்து இலங்கை மற்றும் இந்திய விலும் பிரபலப் படுத்தியுள்ளனர்.

Animation உச்சக் கட்டத்தில் இருக்கும் இன்றைய கால கட்டத்தில் கூட Real Action இனை மட்டுமே கடைப்பிடித்து animation இனை விட சிறந்த தரத்தில் சண்டைக்காட்சிகளை தருவதால் அதிக ஆபத்துக்களை சந்திக்கும் Jackie Chan "நான் இன்னும் இள வயதில் இல்லை. எதற்க்காக இந்த மாதிரியான விடயங்களுக்காக என் சொந்த உயிரை இனியும் நான் பணயம் வைக்க வேண்டும்? என்னால் இயன்றதை நான் இனியும் செய்வேன். ஆனாலும் நான் எனது வாழ்கையை ஆபத்துக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் உடகார்வதை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். எனவே, தானே தயாரித்து, இயக்கி நடிக்கும் தனது அடுத்த படமாகிய CZ 12 (Chinese Zodiac 2012) இனை தனது இறுதி Action திரைப்படமாக அறிவித்துள்ளார்.

எனினும் சண்டயினைப் பிரதானப்  படுத்தாத படங்களில் நடிப்பார் என்பது ஓரளவு அவரது ரசிகர்களுக்கு ஆறுதலே. ஏற்கனவே பல படங்களில் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை Jacki நிருபித்துள்ளதால் சண்டைக்காட்சிகள் இல்லாமலும் அவரது படங்களைப் பார்க்க முடியும் என்பது தெளிவு.

சரி இனி CZ 12 இற்கு வருவோம்.

CZ 12 விடுமுறைக்கு விருந்தாக அளிக்கப்படுகிறது. 12.12.12 இல் வெளியிடப்பட இருக்கிறது. 5  கண்டங்களையும் உள்ளடக்கி உலகின் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கதை ஆசியக் கழுகு எனப்படும் Chan ஐச் சுற்றி நடக்கிறது.
புதையல் வேட்டைக்காரர் ஒருவர் Jackie இனை பிரான்ஸ் இன் மாளிகை ஒன்றில் 1980 களில் வைக்கப்பட்டு  காணாமல் போன நான்கு வெண்கல சிலை தலைகளை கண்டு பிடிக்க வாடகைக்கு அமர்த்துகிறார்.
சீன இராசி சக்கரத்தில் இருக்கும் 12 விலங்குளின் 4 தலைகள் காணாமல் போகின்றன. அந்த இராசி சக்கரம்  சீனாவின் தேசிய சின்னமாகவும் புதயலாகவும் இருக்கிறது. அவற்றை Jackie தேடிக் கண்டு பிடிப்பதே கதை.

பிரதான நடிக நடிகையர்கள்  
Yao Xingtong, Hallyu star மற்றும்  Kwon Sang-woo.

பல மில்லியன் செலவில் எடுக்கப்படும் இவ்வாறன திரைப்படங்களே கதையை  சொல்லிய பின்பே வெளியிடப்படுகிறது. ஆனால் தமிழ் படங்கள்?? ஏன்?

இறுதி Action படம் என்பதால் முன்னைய படங்களை விட Jackie இதில் மிகக் கவனம் செலுத்தி இருப்பார்.

இன்னும் 2 வாரங்களே.... பொறுத்திருந்து பார்ப்போம்....!!!

அதுவரையில் இதோ trailer உங்களுக்காக......


Tuesday, November 27, 2012

ஜோதி கிருஷ்ணாவின் திருமண வைபவத்தில் கலந்துகொண்ட அஜித் (Photos without watermark)

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்தின் மகன் இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் திருமண வைபத்தில் கலந்துகொண்ட 'தல' அஜித்தின் watermark அற்ற புகைப்படங்கள்.

இவ்வைபவத்தில் அஜித், ஷாலினி, சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் விஷ்னுவர்த்தன், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் இங்கே தல ரசிகர்களுக்காக...











Sunday, November 25, 2012

பாலாவின் பரதேசி ட்ரெய்லர் : மற்றுமொரு அழுக்காச்சி காவியம்


அவன் இவன் படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ''பரதேசி'' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாலா முதன் முறையாக இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இசையை தவிர்த்திருக்கிறார். பரதேசிக்காக ஜீ.வீ. பிரகாஷ் வழங்கியுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை தற்போது கொலிவூட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்ற வண்ணமுள்ளதை சமூகவலைத்தளங்கள் காண்பிக்கிறது.

வெளியாகியுள்ள ட்ரெய்லர் இது முழுக்க முழுக்க பாலாவின் திரைப்படம் என்பதை காட்சிக்கு காட்சி பிரதிபலிப்பதுடன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

ஆனால் வழக்கம் போல அனைவரையும் அழுக்காக்கி அழகுபார்த்திருக்கிறார் பாலா. வேதிகா உடையை கழுவாமலே படம் முடியும் வரையில் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.

உடையை துவைச்சிங்க மவனே நான் உங்களை தொவச்செடுப்பன் என்ற பாலாவின் கட்டளை வேதிக்காவுக்கு மட்டுமல்ல என்பது ட்ரெய்லர் பார்க்கும் போது புரிகிறது.

பஞ்சம் பொளைக்க ஒரு பயணம் என்பதை எழுத்தில் காட்டினாலும் ஒளிப்பதிவோ நிறத்தில் பஞ்சத்தை மிக அருமையாக காட்டுகிறது. பிச்சைக்காரனாக இருந்தாலும் சரி பரதேசியாக இருந்தாலும் சரி பாலாவின் படத்தில் நடிச்சே ஆகணும் என்பது விதி.

அதர்வாவின் நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. முரளி உயிரோடு இருந்தால் பெருமைகொள்ளும் தருணம் இதுவே.

வழமை போல ஆனால் புதியோர் களத்தில் மற்றுமொரு அழுக்காச்சி காவியம்  படைத்திருக்கிறார் பாலா. ஆனாலும் படம் ரசிகர்களை கவரும் என நம்பிக்கை தருகிறது ட்ரெய்லர். ஏனெனில் ட்ரெய்லருக்கு அத்தனை சிறப்பான வரவேற்பினை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

'எனக்கு போர்த்துற சால்வைய குளிர்ல நடுங்குற பிச்சக்காரனுக்கு போத்தலாம், அவனுக்கு பிரயோஜனமா இருக்கும்' என பாடல்கள் வெளியீட்டின் போது கூறியிருக்கிறார் பாலா. இதுவே அவரது படங்களில் பிம்பங்களாக வெளிப்படும் அதில் ஒன்றே இந்த பரதேசி என்பதை உணர்த்தும் அந்த ட்ரெய்லர் இதோ...


Friday, November 23, 2012

சோதனைக் களத்தில் சாதனை படைக்கும் Facebook


தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவுசெய்து வெற்றி காண்பது ஒரு ரகம் என்றால் புதிதாக ஒரு தேவையை உருவாக்கி அதனை நிறைவேற்றி வெற்றிகொள்வது இன்னொரு ரகம். இதில் இரண்டாவது ரகமே இப்போது உலகையே தன் சுவற்றில் எழுத வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும் வெற்றி நாயகன் Facebook.

இன்றைய நாட்களில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியில் ஆள் பாதி என்றால் மீதி ஆடையல்ல பேஸ்புக் என்பது போல் தன்னை மாற்றிகொண்டுள்ளது. ஏனெனில் இன்று பலரது தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது இந்த Facebook. இதற்கு நாளாந்தம் சமூக வலைத்தளங்களினை நாடி வரும் புதியவர்களின் வருகையே சாட்சியாகின்றது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் பயனர்களின் எண்ணிகை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதமளவில் 800 மில்லியன் பயனர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் உலகிலுள்ள 7 பில்லியன் மக்களில் 1 பில்லியனை தன் பயனர்களாக மாற்றியுள்ளது என்றால் இதன் வளர்ச்சி எத்தகையது என உணரமுடிகின்றதல்லவா?.

இத்தனைக்கும் பேஸ்புக்குக்கு போட்டியெனக் கருதும் Twitter மற்றும் Google Plus ஆகியவற்றில் முறையே 100, 130 மில்லியன் பயனாளர்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு பாரிய சாதனைமிகு இலக்கினை அடைந்திருப்பதற்கு காரணம் சமூக இணையத்தளங்களில் எதனை மக்கள் விரும்பி எதிர்பார்க்கின்றனர் என தெரிந்து அதற்கேற்ற வகையில் செயற்படுவதுடன் சமூக வலைத்தளங்களின் தேவைகளை மக்களிடையேயும் அதேவேளை வர்த்தகத்தில் சமூகவலைத்தளங்களின் பங்கு என்னவென்பததை வியாபர ரீதியாக விளிப்புணர்வை ஏற்படுத்தியதுமே எனலாம்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்த பலரும் இப்பொழுது தங்களது ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பேஸ்புக் ஒவ்வொருவரிடத்தில் தன்னை நியாயப்படுத்திக் கொண்டுள்ளது. அது வாணிபமாக இருந்தாலும் சரி என்பதை இன்று ஒவ்வொரு விளம்பரங்களிலுமுள்ள பேஸ்புக்கின் லோகோ தெரியப்படுத்துகிறது.

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் எமக்கு இருக்கும் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் பேஸ்புக் போன்ற ஒரு நல்ல நண்பன் இப்போதைக்கு அவசியம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளை அனைவரிடமும் கூறி மகிழவோ ஆறுதலடையவோ முக்கிய விடயங்களை நாட்குறிப்புப் புத்தகத்தில் (னுயைசல) எழுதவோ பரபரப்பான எமது வாழ்க்கையில் அவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதென்பது அரிதாகவே உள்ளது.

இதற்காகவே 'டைம் லைன்' எனும் புதிய முறையினை கடந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தியது பேஸ்புக். இதில் ஆண்டு வாரியாக பயனாளர்களின் செயற்பாடுகள் பதிவாகும். இதனால் பயனாளி தன்னுடைய நினைவுகளை இலகுவில் மீட்டுப்பார்க்கக்கூடியதாக உள்ளது.

இருப்பினும் இம்முறையில் தற்போது மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் எதிர்மறை விமர்சனங்கள் அத்தனையையும் மீறி தற்போது பலரும் டைம் லைன் பக்கம் படையெடுப்பதை தடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. மாற்றம் ஒன்றுதானே மாற்றமில்லாது அந்த வகையில் டைம் லைனைத் தொடர்ந்து விரைவில் புதியதொரு செயற்பாட்டையும் அறிமுகம் செய்யவுள்ளது பேஸ்புக்.

பேஸ்புக்கில் நீண்ட கால குறைபாடாக பலரும் அலுத்துக்கொள்ளும் விடயங்களில் பிரதானமாவொன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான தெரிவு பட்டன் இல்லாமையே.
இதற்கு தீர்வாக பேஸ்புக்கில் விருப்பமான தகவல்கள் அல்லது புகைப்படங்களை 'லைக்' என்ற வாசகத்தை தேர்வு செய்து, விருப்பத்தை தெரிவிப்பது போல வோவ், லவ், பூம் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கான தெரிவு பட்டனையும் விரைவில் அறிமுகம் செய்யப்போகிறது.

மேலும் கணனிகளில் வைரஸ் பரவுவது போல பேஸ்புக்கிலும் பல்வேறு வகையான வைரஸ்கள் உலா வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக தாக்கும் பேஸ்புக் வோர்ம் எனப்படும் வைரஸ் தாக்கம்.

இது பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. காரணம் இவ்வைரஸ் பயனாளர்களின் கடவுச்சொல்லை மாற்றியமைத்துவிடுகிறது. குறித்த இந்த வைரஸினால் இதுவரையில் 100 ஆயிரம் பயனாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் ஒவ்வொருவரையும் உளவு பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து மக்களிடையே காணப்படுகின்றது.  ரகசியங்கள் எதனையும் பாதுகாக்க முடியவில்லை எனவும் எரிச்சலடைகின்றனர். ஒரு முறை பேஸ்புக் ஸ்தாபகர் ஷக்கர்பேர்க்கின் தனிப்பட்ட படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வாறானதொரு வைரஸ் பிரச்சினை நிச்சயமாக பேஸ்புக்கிற்கு பெரியதொரு தலைவலியாயாகவே இருக்கும்.

இதுபோதாதென்று பேஸ்புக்கிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சில ஆய்வுகள் கருத்து வெளியிட்டு வருகின்றது.

எங்கேயும் எப்போதும் சதா பேஸ்புக் என்று இருப்பவர்கள் மன ரீதியான பல எதிர்மறை மாற்றங்களை சந்திப்பதாகவும் இதில் பெரியவர்களை விட சிறியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கபட்டுள்ளது. மேலும், பேஸ்புக் எல்லோரையும் பேஸ்புக் அடிமையாகவே மாற்றுகிறது எனறும் தெரிவிக்கப்படுகிறது.

மனநல நிபுணர்கள் கூறுவதை பார்த்தால் நாமக்கு தெரிந்த பேஸ்(முகம்)புக்கிற்கு இன்னொரு முகம் இருப்பது போல தெரிகிறதே.

சாதரணமாக மாணவ, மாணவிகள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இதனை பேஸ்புக் மேனியா என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல பேஸ்புக்கும் நஞ்சுதான் என்பதனையே இந்த ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றது. எனவே தகவல் பரிமாற்றத்திற்காக உருவான பேஸ்புக்கினை தேவைக்கேற்ப பயன்படுத்துவதே நல்லது.

என்னதான் பேஸ்புக் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அதன் வளர்ச்சியானது தற்போது ஜே (J)வடிவிலேயே உள்ளது. இதேவேளை பேஸ்புக் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவுக் கொடி பிடிக்கவும் பெரும் கூட்டமே இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறனவர்களின் கருத்துக்களும் மறுப்பதற்கில்லை என்றே தோன்றுகின்றது. குறிப்பாக ஏராளமான மனிதர்களின் மனங்களில் ஒரு நல்ல விடயத்தை விதைத்திருப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தக் கடினமான விடயங்களில் ஒன்று 'அடுத்தவரை பாராட்டி அங்கீகரிப்பது'. இதனை எந்தவொரு முன்னோடியினாலும் மனித மனங்களில் புகுத்த முடிவதில்லை.
ஆனால் பேஸ்புக்கோ சாத்தியமற்ற அந்த மனமாற்றத்தினை எம்மிடையே சாதாரணமாக ஏற்படுத்திருப்பதினை ஒவ்வொருவரினதும் பேஸ்புக் சுவரிலுள்ள Status, Photos மற்றும் இதர விடயங்களில் விழுந்துள்ள 'Likes' உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதுமட்டுமன்றி சில ஆய்வுகளும் பேஸ்புக்கின் பக்கமாக உள்ளது. எங்ரி பேட் மற்றும் சமூகவலைத்தளங்கள் என்பன தொடர்ச்சியாக அலுவலகங்களில் வேலைசெய்பவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் அவை மூளையை சுறுப்பாக்கச் செய்வதுடன் வேலைசெய்வோரை உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகவும் அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது. எனவே பேஸ்புக்கில் எங்கரி பேட் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

வழக்கம்போல இதற்கும் சில எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவோர் இல்லாமலில்லை. சமூகவலைத்தளங்களின் பயன்கள் தெரியாமலும் புரியாமலும் பேஸ்புக் பயன்படுத்துதையே குற்றம் என்கிற அலுவலங்கள் இன்றும் இருக்கிறது இவர்களுக்கு இது தெரியுமா இல்லை புரியுமா?
இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக, பேஸ்புக்கிலுள்ள 'LIKE' இனை உணர்ச்சிகரமானதாக மாற்றும் பொருட்டு ஜெக்கட் ஒன்றினை அமெரிக்காவின் மெசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன் செயற்பாடுகள் என்னவெனில், பேஸ்புக்கில் நமது நண்பர்களில் ஒருவர் நாம் பகிரும் எதாவது ஒரு விடயத்தினை 'லைக்' செய்யும் போது நாம் அணிந்திருக்கும் 'ஜெக்கட்' காற்றினால் நிரப்பப்பட்டு எம்மை அந்நண்பர் அணைப்பது போன்றதொரு உணர்வைத் தரும்.

தொடர்ந்து நாம் அந்த ஜெக்கட்டினை மீண்டும் அணைக்கும் போது அந்நபர் அந்த ஜெக்கட்டினை அணிந்திருந்தால் அவருக்கும் அத்தகைய உணர்வை இந்த ஜெக்கட் வழங்குமென இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் 'லைக்' இனை சாதாரணமானதொரு விடயமாகப் பார்க்காமல் அதனை உணர்ச்சிபூர்வமான நம்மை ஊக்குவிக்கும், அன்பை வெளிப்படுத்தும் ஒரு விடயமாக மாற்றுவதற்காகவே இந்த ஜெக்கட்டினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலவகையில் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுடன் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது பேஸ்புக். அதாவது கடந்த மே மாதம் அமெரிக்கப்பங்குச் சந்தையிலும் கால்பதித்தது. வெற்றி முகத்திலுள்ள பேஸ்புக்கிற்கு இதுவும் வெற்றியளிக்கும் என்றே பல பங்குச் சந்தை வல்லுனர்கள் அப்போது கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் இன்றுவரையில் அவ்வப்போது இதற்கு வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் வரவு குறித்து அதன் உரிமையாளர் மார்க் ஷக்கர்பேர்க் கூறுகையில், நாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக சேவைகளை விரிவுபடுத்தவில்லை சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவே பணம் சம்பாதிக்கிறோம் என்றார் இதிலிருந்தே நாம் பேஸ்புக்கின் வளர்ச்சியையும் பல திட்டங்கள் அதன் கைவசம் உள்ளதனையும் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும், தற்போது இணையம் பயன்படுத்தும் அனைவரையும் பேஸ்புக்கில் இணைப்பதனை பிரதானமான இலக்காகக் கொண்டே தனது எட்டாவது பிறந்த நாளிலிருந்து பேஸ்புக் செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் சோதனைகள் பல கடந்து சாதனைகளையும் இமாலாய இலக்குகளையும் நோக்கி பயணிக்க காரணம் தற்போதைய தலைமுறையானது தொழில்நுட்பத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளமையே.

எனவே இந்த பேஸ்புக்கின் மூலம் சிறப்பான தகவல் பரிமாற்றங்கள் நடந்தால் அவை வரவேற்புக்குரியவையே! ஏனெனில் இந்த தகவல் பாரிமாற்ற வழக்கமே பேஸ்புக்கினை உருவாக்கி உலகிலேயே கவனித்தக்க மனிதர்களில் ஒருவராக 28 வயதேயான மார்க் ஷக்கர்பேர்க்கை மாற்றியுள்ளது.

-அமானுல்லா எம். றிஷாத்


போடா போடி பிந்திய விமர்சனம்


பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு தீடிரென தீபாவளிக்கு வெளியானது. துப்பாக்கி வெடித்த சத்தத்தில் போடா போடி என்ற கூச்சல் குறைவாக மக்களின் காதுகளுக்கு கேட்பது உண்மை. என்றாலும் ஒஸ்தி கொடுத்த விளம்பரத்தில் பாதியை இதற்கு கொடுத்திருந்தால் படம் அடுத்த விண்ணைத் தாண்டி வருவாயா என்று சொல்லாவிட்டாலும் ஒஸ்தியை மிஞ்சியிருக்கும்.

கல்யாணத்திற்கு பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்பும் தமிழ் கலாச்சார பையனுக்கும் தான் விரும்பிய மாதிரித்தான் இருப்பேன் என்கிற மேலயத்தேய பொண்ணுக்குமிடையிலா வாழ்க்கையில் மோதலால் போடா போடி என்று கூறிக்கொண்டு பிரிந்தவர்கள் வாடா வாடி என்று எவ்வாறு இணைகிறார் என்பதே படத்தின் கதை.

இவர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் 4 காலங்களை ஆரம்பத்திலிருந்து இறுவரையிலும் சலிப்பை ஏற்படுத்தாமல் திரைக்கதை நகரச்செய்து வெற்றி பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் விக்னேஷ். வரவேற்கத்தக்க புதுவரவு.

வெளிநாடுகளில் வாழும் எம்மவரினை நிறைய இடங்களில் பிரதிபலிக்கிறது படம். லண்டன்ல வாழ்ந்தாலும் நாம தமிழர்கள்கள் என்கிற இடம் அருமை. வசனங்கள் அத்தனையும் இயல்பாக இருக்கிறது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படமா இது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அவரது நடிப்பு, நடனம். முதல் படத்திலேயே குழந்தை குட்டி என்று காட்டினாலும் ஏமாற்றமில்லாத பாத்திரத் தேர்வு. போஸ்டர்களில் சிம்புவுக்கு இவர் ஜோடியா எனக் கேட்க வைத்தாலும் படம் முழுக்க இந்த ஜோடி சலிப்பை ஏற்படுத்தவில்லை. தமிழ்சினிமாவில் இவருக்கான இடம் நிச்சயம் உண்டு.

முதல் பாதி முழுக்க நகைச்சுவையாகச் பயணிக்கிறது படம் பிற்பாதியில் நகைச்சுவை, சென்டிமென்ட், காதல் என எல்லா உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது.

சிம்புவுக்கு பொருத்தமான கதையாகவே இருக்கிறது. எவ்வளவு எளிதாக சிரிக்வைக்கிறாரோ அதே அளவு எளிதாக சில இடங்களில் அழவைத்துவிடுகிறார். உள்ளுக்குள்ள பெரிய நடிகனேயே வைத்திருக்கிறார் சிம்பு. ஆனாலும் விரல் வித்தைகளில் காலந்தள்ளுவது ஏனோ?

எனக்கே விரலா என்று ஒரு இடத்தில் சிம்பு கேட்பார். அது சிம்பு விமர்சனங்களை கவனத்;திற்கொண்டு இலகுவாக செயற்படுத்துவதாக வெளிப்படுத்துவதாக அமைகிறது.

பின்னணி இசை மற்றும் பாடல்களில் சிறப்பாகவே செயற்பட்டிருக்கிறார் தமன். ஆனால் 2 பாடல்கள் இடம்பெற்ற இடம் கொஞ்சம் நெருடல். பாடலுடன் ஆரம்பித்து படம் பாடலுடன் முடிகிறது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் தமன்.

ஒளிப்பதிவு லண்டனை அழகாக சுற்றிக்காட்டுகிறது. இவர்களை தவிர்த்து வீடிவீ  கணேஷ் மட்டுமே சிறப்பாக செயற்பட்டிருக்கிறார். அவர் வரும் பெரும்பாலான இடங்கள் கலகலப்பூட்டுகிறது.

ஏனையர்களில் மோஜோ என்ற கதாபாத்திரமும் ஷோபனாவும் அடிக்கடி எரிச்சலூட்டுகிறார்கள். ஆனாலும் சிம்புவும் வரலட்சுமியும் மொத்தப்படத்தை சிறப்பாக இறுதிவரை தாங்கிச்சென்று வெற்றிபெறுகிறார்கள்.

போடா போடி திருமணமாகதவர்களை வாடா வாடி என்றணைக்கச்செய்கிறது.

ஏற்கனவே ஏராளமான விமர்சனங்கள் வெளியாகிவிட்டதனால் சற்று சுருக்கமாக அமைகிறது இந்த விமர்சனம்.

Wednesday, November 21, 2012

மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கிறது சம்சுங்

பாவனையாளர்களின் தேவைகள் கருதி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வெளிரும் ஸ்மார்ட்போன்களில் முதன் முறையாக மடிக்கக்கூடியதும் நெகிழக்கூடியதுமான ஸ்மார்ட் போன்களை (Flexible Smart Phones) அறிமுகப்படுத்தவுள்ளது Samsung நிறுவனம்.

அடுத்த வருடம் வெளிவரவுள்ள இத்தொழில்நுட்பமானது ஸ்மார்ட் போனின் மற்றுமொரு பரிமாணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளையும் தன்மையும், உடைபடக்கடினமான தன்மையுமுடையதாக வடிவமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் போன்களை எமது பணப்பையில் மடித்துவைத்துக்கொள்ளும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

organic light emitting diodes (OLEDs) பயன்படுத்தி தயாரிக்கப்படவுள்ள நெகிழ்தன்மையுள்ள ஸ்மார்ட் போன்கள் மெலிதாகவும் அதேவேளை பிளாஸ்டிக் அல்லது உலகத்தகடு போன்ற நெகிழ்தன்மையுள்ள பொருட்களால் ஆக்கப்படும்.

மேலும் அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள சம்சுங் எஸ் 4 ஆனது அனேகமாக நெகிழ்தன்மை கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனாக அமையலாம் என சம்சும் தெரிவித்துள்ளது.

இதேவேளை Samsung நிறுவனம் மட்டுமன்றி Sony மற்றும் LG நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை தாயாரிக்க முயற்சிகள் எடுத்துள்ளது.




Sunday, November 18, 2012

ஏன் ஐன்ஸ்டைனின் மூளைக்கு அபார திறமை? : மூளையைக் குடையும் தற்கால விஞ்ஞானிகள்


20ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உலகில் தோன்றிய மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். (நாங்கெல்லாம் அறிவாளிகளாக இனங்காணப்படல்லை என்று சிலர் இன்று வரையில் சந்தர்பங்களை உருவாக்க முயற்சித்திக்கொண்டிருக்கிறார்கள்)

ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையிலும் இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் என்னவென அவரது மூளையை வைத்து இப்போதைய விஞ்ஞானிகள் தங்களது மூளையை கசக்கிப் பிளிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இன்றுவரையில் ஐன்ஸ்டைனின் அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

ஐன்ஸ்டைனின் மரணத்திற்கு பின்னர் அவரது மூளை தோம்ஸ் ஹார்வே எனும் மருத்துவரினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என ஏற்கனவே பல சர்ச்சைகளைத் தோற்றுவித்தது ஐன்ஸ்டைனின் மூளை.

இந்நிலையில் தற்போது ப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான டீன் பாக் தலைமையிலான குழுவினர் தங்களது மூளைகளைக் குடைந்து ஐன்ஸ்டைனின் அறிவுக் கூர்மைக்கு அவரது மூளையின் சில உட் பகுதிகளே காரணமென தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற ஐன்ஸ்டைனுடைய மூளையின் 14 அரிய புகைப்படங்களைக் கொண்டு சுமார் 85 சாதாரண மனிதர்களுடைய மூளையுடன் ஒப்பிட்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

ஐன்ஸ்டைனின் மூளையின் மொத்த அளவு, நிறை மற்றும் வடிவம் சாதாரண மனித மூளையைப் போன்றதே எனினும் மூளையின் உட்பிரிவுகளான prefrontal, somatosensory, primary motor, parietal , temporal and occipital cortices ஆகியன அசாதாரணமாக உள்ளதாகவும் இதுவே அவரது அபார அறிவுத்திறனுக்கான காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐன்ஸ்டைனின் மூளை தொடர்பாக டீன் பாக் குழுவினரின் ஆராய்சியான The cerebral cortex of Albert Einstein: a descriptioன் and preliminary analysis of unpublished photographs  தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய மூளை குடையப்போய் நம்ம மூளை குழம்பாமல் இருந்தால் சரி!



Why Albert Einstein's brain is best?  


Albert Einstein, The great scientist of 20th centaury is the most intellectual human ever in the world, studies believe so far. Why Einstein's brain different than others? experts have still been trying to find the answer since his death with no proper answer.

Einstein brain had been stolen by Dr. Thomes harway and used for research without official permission. It became big issue and criticized by many in that days.

Meanwhile ,


Thursday, November 15, 2012

டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்... உலகம் அழியப்போகிறதா? (முழு விபரம்)


உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்;.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.

பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.

இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.

இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.

உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.

சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2ஃ3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே 'நிபிறு பிரளயம்' எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.

இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.

இதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.

மேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புதியதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே.

மேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.

இவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.

மேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.

குறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம்.

குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர்.

மேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு ஐசுயுளு (ஐகெசயசநன யளவசழழெஅiஉயட ளயவநடடவைந) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக  'Pடயநெவ ஓ ஃ(நிபிறு)' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாhட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.

2009ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று குறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா? என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.

வசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தினை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.

உண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது... எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.

இந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

ஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.

உண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்!

-அமானுல்லா எம். றிஷாத் https://www.facebook.com/rizathstar

இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை மற்றும் வீரகேசரி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள எனது மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையே இது  "டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்... உலகம் அழியப்போகிறதா?"

இந்த பதிவு இடம்பெற்றுள்ள வீரகேசரி இணையத்தள முகவரி
http://www.virakesari.lk/article/feature.php?vid=51




Wednesday, November 14, 2012

நேற்று ஆண்டின் இறுதி கிரகணம் : இனி 2015இல் தான் சூரிய கிரகணம்

நேற்று (14.11.2012) சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டிற்கு வந்தன. இதனால் ஏற்பட்ட சூரிய கிரகணம் அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாக காணக்கூடியதாக இருந்துள்ளது.

இது இவ்வாண்டி கடைசி சூரியக் கிரகணம் என்பதுடன் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னரே அடுத்த சூரியக் கிரகணம் தோன்றும்  என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஏற்பட்ட சூரிய கிரகணத்தை காண அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில்இ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள்இ சுற்றுலாவாசிகள் மற்றும் வானியல் நிபுணர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர்.

கிரகணம் ஆரம்பித்தவுடன் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து பார்வையாளர்களை சற்று நேரம் திகைக்க வைத்துள்ளது. பின்னர் கிரகணம் மறைந்த பின்னர் மேகங்கள் அப்பகுதியை சூழ்ந்து கொண்டமையினால் தொடர்ந்து இருள் நீடித்துள்ளது. இதனால் அவுஸ்திரேலியாவின்  வட பகுதியில் 150 கி.மீட்டர் வரை இருள் பரவிக்காணபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்இ கிழக்கு இந்தோனேஷியாஇ அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும்இ நியூசிலாந்துஇ பப்புவா நியூகினியா மற்றும் சிலிஇ அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும் தென்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 2 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.