சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Sunday, September 30, 2012

அசத்தல் படைப்பு : பழசுதான் ஆனா புதுசு


பண்டைய கால தலைசிறந்த படைப்புக்களாக கருதப்படும் சிலைகள் சிலவற்றை தற்காலத்திற்கு ஏற்றவாறு கூளிங் கிளாஸ், டெனிம் காற்சாட்டை மற்றும் மேற்சட்டை அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் கைலார்ட் என்ற புகைப்படக் கலைஞர்.

முதலில் சிலைகளை படம் பிடித்துவிட்டு அதே கோணத்தில் நண்பர்களை உடை உடுத்தி படம்பிடித்து அவை இரண்டையும் அலெக்ஸிஸ் பெர்ஸானி என்ற கலை இயக்குனரின் உதவியுடன் பண்டைய நாகரீக சிலைகளை நவநாகரீக மனிதர்களாக டிஜிட்டல் வடிவில் சித்தரித்துள்ளார் கைலார்ட்.

இந்த படைப்பின் நோக்கம் குறித்து கைலார்ட் கூறுகையில், பார்வையாளர்களுக்கு பண்டைய காலத்திற்கும் நவ நாகரீக காலத்திற்குமான இடைவெளியை காண்பிப்பதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.

உண்மையில் இரண்டு உலகத்திற்குமான இடைவெளியை சிறப்பாகவே காண்பிக்கிறது கைலார்ட்டின் கைவண்ணம்.







செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்தது கியூரியோ சிட்டி!


பூமியை தவிர்த்து மனிதன் வாழ ஏதுவான கிரகங்கள் உள்ளனவா என பல வருடங்களாக ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தின் மீது எப்போது ஆராய்ச்சியாளர்களுக்கு தனி ஈடுபாடு உண்டு காரணம் பல வருடங்களுக்கு முன்பு செவ்வாயில் நீர் இருந்ததாக நம்பப்படுவதே.

இருப்பினும் இதுவரையில் அங்கு நீர் இருப்பதனை உறுப்படுத்தும் அளவிற்கு திருப்திகரமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நீர் இருப்பதனை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலமைந்த படங்களை நாசாவிற்குச் சொந்தமான கியூரியோசிட்டி என்ற விண்கலம் மூலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

இதில் உருளையான கூழாங்கற்கள் நிறைந்த நிலப்ப பரப்புக்கள் பல மிகத் தெளிவாக காணப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர் பெரும் மகிழ்சியில் உள்ளதுடன் இதனை செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாகவும் கருதுகின்றனர்.

இது தொடர்பில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி ஜோன் கிரொட்சின்கர் கருத்து வெளியிடுகையில், உண்மையில் கியூரியோசிட்டி மூலமான ஆராய்ச்சிகள் மகிழ்சியைத் தருகின்றது.

Spot the difference: The Martian landscape, left, is similar to bedrock formations on Earth, right
இது முழு அளவிலான திருப்தியினை ஏற்படுத்தவில்லை ஏனெனில் கியூரியோசிட்டியினை செவ்வாய் கிரகத்தின் மத்தில் தரையிறக்க எண்ணியிருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.

ஆனால் செவ்வாய் கிரகத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் சாதாரணமாக -70 பாகை வரையில் வெப்பநிலை குறைவடையும்.
இதனால் உறைந்த பாலை நிலமாக காணப்படும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆராய்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.

தற்போது செவ்வாயின் வெப்பநிலை 0 பாகையிலிருந்து 20 பாகை வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றமையால் நீர் இருப்பின் அதனை கண்டுபிடிப்பது சற்று இலகுவாக அமையும் என்பதே தற்போதையே எதிபார்ப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Carved out: These rounded rocks on Mars were probably caused by running water, according to scientists

Saturday, September 29, 2012

அஜித்தின் 52வது படத்தின் பெயர் 'கர்வம்'!


பில்லா 2 படததிற்கு பின்னர் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயர் கர்வம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பில்லா வெற்றிக்கு பிறகு அஜித் தனது 52வது படத்தில் மீண்டும் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது அப்போது மேலும் எதிர்பார்ப்பினை தூண்டும் வகையில் கட்டுடலுடன் அஜித் மிரட்டும் சில புகைப்படங்களை விஷ்னுவர்த்தன் வெளியிட்டார்.

தற்போது படத்தின் படப்பிடிப்புக்களில் மும்முரமாக இருக்கும் படக்குழுவினர் இதுவரையில் படத்தின் பெயரை வெளியிடவில்லை காரணம் படத்தினை வெளியிடும் தருவாயில் தலைப்பு மீது வழக்கு தொடருவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என விஷ்னுவர்த்தன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தற்போது உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் சில படத்தின் பெயர் கர்வம் என கசியவிட்டிருக்கிறார். ஆனால் இதுதொடர்பில் படக்குழுவினர் எவரும் வாய் திறக்கவில்லை. எனவே உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் ரசிகர்கள் காத்திருப்பதைத் இப்போதைக்கு வழியேதுமில்லை.

Friday, September 28, 2012

சுமாத்ரா தீவு பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞை

சுமாத்ரா கடற்கரைக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய தொடர் பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளமைக்கான சமிக்ஞை களாக உள்ளதாக ஆய்வாளர்கள் ௭ச்சரித்துள் ளனர்.

மேற்படி பூமியதிர்ச்சிகளின் போதான அதிர் வுகளை பகுப்பாய்வு செய்த ஆய்வாளர்கள் 8.7 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சிகளின் போது சமுத்திர அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.

இது இந்து சமுத்திர மற்றும் அவுஸ்திரேலிய கடல் அடித்தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞையாகவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ௭னினும் மேற்படி சமுத்திர அடித்தட்டு பிளவடைவது உடனடியாக இடம்பெறாது ௭னவும் அது இடம்பெற மில்லியன் கணக்கான வருடங்கள் செல்லலாம் ௭னவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்து சமுத்திர அடித்தட்டுகளிலான மாற்றம் சுமார் 8 இலிருந்து 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர ம்பமானதாக மேற்படி ஆய்வில் பங்கேற்ற பாரிஸ் நகரின் ஈகோலி நொர்மலி சுப்பீரியரரைச் சேர்ந்த கலாநிதி மட்த்லஸ் டெலெஸ் குளுஸ் தெரிவித்தார்.

மேற்படி ஆய்வின் முடிவுகள் நேச்சர் விஞ்ஞான ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள் ளன. இந்தோனேசிய சுமாத்ரா தீவானது இந்தோ– அவுஸ்திரேலியா நிலக்கீழ் தட்டுக்கும் சுமாத்ரா நிலக்கீழ் தட்டுக்கும் இடையில் அமை ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 27, 2012

2013 புவியை அண்மிக்கும் கொமட் : நிலவினை விட 15 மடங்கு வெளிச்சம்


நிலவின் ஒளியைப் போல் 15 மடங்கு அதிக ஒளியை தெறிப்படையச் செய்யக்கூடிய கொமட் எனும் வால் வெள்ளி அதாவது சிறுகோளை ஒத்த அளவுள்ள விண்பொருளானது புவியின் மேலாக செல்லும் அந்த பிரமிக்க காட்சியினை 2013 ஆண்டில் காணலாம் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

இந்த அரிய காட்சியினை 2013ஆம் ஆண்டில் வடக்கு ஹெம்ஸ்ஸபெயரில் நவம்பர் மற்றும் டிசம்பர் காலப்பகுதியில் காணக்கூடியவாறு 2 மில்லியன் மைல் தொலை தூரத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொமட் ஆனது கடந்த நூற்றாணடிலேயே வந்த வால்வெள்ளிகளில் அதி வெளிச்சமானதொன்றாக அமையும். தற்போது வியாழன் கிரகத்தினூடாக பயணிக்கும் கொமட்டானது சூரிய குடும்பத்தை ஒரு தடவையே சுற்றிவரும். புவியில் அவதானிக்கும் போது இதன் வெளிச்சம் தெளிவான பகல் வேளையிலும் அவதானிக்கும் வகையில் இருப்பதுடன் நிலவின் வெளிச்சத்தையும் மிஞ்சும் என்று தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொமட் வால்வெள்ளியானது  International Scientific Optical Network telescope இனூடாக ரஷ்ய வானியலாளர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்று பூமியை வலம் வந்திருக்கக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் மில்லியன் ஆண்டுகளின் பின்னர் பூமியை வந்தடைகிறதாம்.

அம்மாடியோவ் அவ்வளவா ஆகுது!

Solar System
How Hale-Bopp looked above Alaska: Next year's comet is predicted to be even more spectacular, and remain in the skies for weeks
Look to the skies next year: Comet ISON could produce a spectacular show when it flies by next year - similar to the 1997 appearance of Hale-Bopp (pictured)

கொமட் (Comet) என்பது ஒருவகை வால்வெள்ளியாகும்.  "Dirty Snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு (CO2)மெத்தேன் (CH4) மற்றும் நீர் (H2O) என்பவற்றுடன் தூசி,கனிம aggregates என்பனவும் கலந்து உருவானவை.

இதற்கு முன்னும் ஹெலிஸ் என்றழைக்கப்படும் கொமட் 1910 புவியை அண்மித்துள்ளது ஆனாலும் அதனை தெளிவாக அவதானிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 25, 2012

ரெண்டாவது படம் : ட்ரெய்லர்


'தமிழ்ப்படம்' படத்தின் இயக்குனர் சீ.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ரெண்டாவது படம்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிவா நடிப்பில் அமுதனின் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்ட படம் தமிழ்ப்படம். இப்படத்தின் வெற்றியினால் அமுதனின் ரெண்டாவது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

விமல், அரவிந்த், ரிச்சர்ட் மற்றும் விஜயலட்சுமி  நடித்துள்ள இப்படத்தினையும்  தமிழ்ப்படத்தினை போல நகைச்சுவை படமாகவே உருவாக்கியுள்ளார் அமுதன். மேலும் இப்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் காட்சிகளைப் பார்க்கும்போது படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பலாம்.

வெளியான சில மணித்தியாலங்களிலேயே சமூகவலைத்தளங்களில் ரெண்டாவது படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அந்த ட்ரெய்லர் இதோ...

Rendavathu Padam - First Look Trailer HD

Innocence of Muslims படத்தின் எதிரொலி : ஒஸ்காரை புறக்கணிக்கிறது ஈரான்


இஸ்லாம் மார்க்கத்தினையும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இன்னசென்ஸ் ஒப் முஸ்லிம்ஸ் திரைப்படத்திற்கு தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் ஒஸ்கார் விருது விழாவினை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

உலகின் பல பாகங்களிலும் குறித்த அமெரிக்க திரைப்படத்திற்கு முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை பல்வேறு வழிகளில் வெளியிட்டு வரும் இந்நிலையில் ஈரானும் குறித்த திரைப்படத்திற்கு கண்டனத்தை வெளியிடும் வகையில் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஒஸ்கார் விருது விழாவிற்கு தங்கள் நாட்டிலிருந்து படங்களை அனுப்பப்போவதில்லை என அந்நாட்டு கலாச்சாரத் துறை அமைச்சர் முஹம்மது ஹொஸ்னி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை ஈரான் புறக்கணிக்கிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். இதே போன்று மற்ற முஸ்லிம் நாடுகளும் ஒஸ்கhர் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒஸ்காருக்கு அனுப்புவதாக இருந்த ஈரானிய படம் 'எ க்யூப் ஆப் ஷுகரை' நிறுத்தி வைப்பது என்று அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் இது குறித்து ஈரானிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை என்று ஒஸ்கர் விருது விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஒஸ்கார் விருதினை ஈரானிய படங்கள் பல தடவைகள் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, September 24, 2012

சுயசரிதை ௭ழுதுகிறார் யுவராஜ்!


இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தனது தந்தை மற்றும் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகம் ஒன்றை ௭ழுதுகிறார்.

இது குறித்து அவரது தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நடிகருமான யோகராஜ் சிங் கருத்து தெரிவிக்கையில், யுவராஜ் சிங் ௭ன்னைப் பற்றி புத்தகம் ௭ழுதுகிறார். அத ற் கு "அரோகன்ட் மாஸ்டர்" ௭ன்று பெயரிட்டுள்ளார்.

நாங் க ள் இருவரும் ஒன்றாக வசித்த காலத்தில் நடந்த சம் பவ ங்க ள் உள் ளிட்டவற்றைப் பற்றிய விடயங்கள் இதில் இட ம் பெ று கி ன் றன. இதேபோல் அவர் கிரிக்கெட் வீரர் ஆனது அத்துட ன் புற் றுநோயுடன் போராடியது பின் அதிலிருந்து மீண்டு வந் தது உள் ளிட்ட விடயங்க ளு ம் இந்த புத்தகத்தில் இடம்பெறும் ௭ன் றார்.


புத்தகத்திற்கு “அரோகன்ட் மாஸ்டர்" என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வியெழுப்பியபோது,

“யுவராஜ் சிறுவனாக இருந்தபோது ஸ்கேட்டிங் மீது ஆர்வமாக இருந்தார். டென்னிஸ் விளையாடவும் விரும்பினார். அவர், கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று நான் விரும்பினேன். கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டே அவரை கிரிக்கெட் விளையாட வைத்தேன். அதனாலேயே அவர் “அரோகன்ட் மாஸ்டர்’ என்று புத்தகத்துக்கு பெயரிட்டுள்ளார்.

யுவராஜ் சிங், விரைவில் தொலைக்காட்சியிலும் தோன்றுகிறார். அப்போது புற்றுநோயுடன் போராடிய தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்வார். புற்றுநோய் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் புனிதமான மனிதராக இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து கடவுளை பிரார்த்திக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். புற்றுநோய்க்குப் பிறகு முதிர்ச்சியடைந்த மனிதனாக மாறியுள்ளார். மிகவும் அமைதியாக இருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த குணமும் மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக இருந்த கடவுளுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என்றார்.

யுவராஜின் தந்தை யோகராஜும் “மை லாஸ்ட் டேய்ஸ்" என்ற பெயரில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். கடும் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இப்போது இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-நன்றி இணையம்

தாண்டவம் - புதிய ட்ரெய்லர்


வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ள தாண்டவம் திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் ஒன்றினை யுடீவி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் ஏற்கனவே வெளியானதை விட சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகிவருகிறது. மேலும் இந்த புதிய ட்ரெய்லரில் பல புதிய காட்சிளும் இணைக்கப்பட்டள்ளது.

அக்காட்சிகள் அடங்கிய புதிய ட்ரெய்லர் இங்கே...

THAANDAVAM Official Trailer 2

Sunday, September 23, 2012

தாடி, மீசை போட்டி : நாங்களும் செய்வமுல்ல... இதுவொரு புது அனுபவம்


கோடை கால விடுமுறையில் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் மற்றும் யுரோ கால்பந்தாட்டம் என மக்கள் தங்களது கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த தாடி, மீசை போட்டியிலா கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்த்து நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு 100 மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியை திருவிழாவாக மாற்றியுள்ளனர்.

குறித்த இந்த போட்டி கிழக்கு பிரான்ஸிலுள்ள விட்டர்ஸ் போர்ட் எனும் இடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதில் அசாதாரணமான மீசை, தாடியைக் கொண்ட சிலர் அசத்தலான உடையில் கலக்கியுள்ளனர்.


மேலும் ஒருவர் கப்போலோட்டி உடையிலும் பலர் இராணுவ உடையிலும் வந்து தேர்வாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளனர்.

இந்த முக முடி அழகர்கள் இதோ....

Top marks: A competitor is awarded a perfect '10' by a judge as he takes part in the unusual contest

Helping hand: Two men wearing impressive curled moustaches help each other prepare as they await their turn before the judges

  













Top of the chops! Bizarre beard and moustache contest draws scores of men eager to show off extraordinary facial hair.

# More than 100 take part in European Beard and Moustache Championships
# Event held in Wittersdorf, near Mulhouse, eastern France


And, on this evidence, the judges must have had a difficult job deciding whose facial hair was most impressive.
Some wore extraordinary costumes to match their extraordinary hair, with several candidates sporting hats to complete their unusual look.
At least one man came dressed as a sailor, and many others turned up in military uniform

.

Friday, September 21, 2012

Innocence of Muslims பட இயக்குனர் மற்றும் கூகுள் மீது நடிகை வழக்கு

இஸ்லாம் மார்க்கத்தையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இழிபடுத்தி எடுக்கப்பட்டுள்ள Innocence of Muslims படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்ததாக கூறி நடிகை சின்டி லீ கார்சியா அப்படத்தின் இயக்குனர் மற்றும் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நடிகை லீ கார்சியா தெரிவிக்கையில், இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது இது இஸ்லாத்தையும், முஹம்மது நபியையும் இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். 

பாலைவன போர் வீரன் என்ற தலைப்பிலேயே என்னிடம் திரைக்கதையைக் சொன்னார்கள். மேலும் இது எகித்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட கதை என்றும், மதத்திற்கும் இப்படத்திற்கு எதுவித சம்மந்தமும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது படத்தின் பெயரை Innocence of Muslims என மாற்றியது மட்டுமல்லாது படத்தில் முஹம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர். படத்தை எடுக்கையில் முஹம்மது என்ற பெயரே வரவில்லை இருப்பினும் இப்போது 'மாஸ்டர் ஜோர்ஜ்' எனற இடங்களிலெல்லாம் முஹம்மது என்று மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர் என்றார்.

கடந்த புதன் கிழமை வழக்கை விரசாரணை செய்த நீதிமன்றம் யூ டியூப்பில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குமாறு கூகுளுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, September 20, 2012

சூர்யாவின் சிங்கம் 2 படத்தின் பூஜை

கடந்த புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று சிங்கம் 2 படத்தின் பூஜை இடம்பெற்றது. இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சூர்யா, படத்தின் இய்குனர் ஹரி, சிவக்குமார், கார்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

SURIYA IN SINGAM 2 MOVIE LAUNCH