சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Tuesday, April 30, 2013

செவ்வாய் கிரகத்தில் இலவசமாக குடியேற 20 ஆயிரம் விண்ணப்பங்கள்


இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு நிரந்தரமாக குடியேற்றும்  திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாட்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது.

'Mars One' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டதிற்கு உலகம் முழுவதிலிருந்து இதுவரையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் அதிகளில் சீனாவிலிருந்தே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 18 - 30 வயதிற்கிடைப்பட்டவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இலவசமாக ஒரு வழி டிக்கெட்டினை செவ்வாய் கிரகத்திற்கு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மட்டும் கட்டணம் அறவிடப்படுகின்றது. விண்ணப்பிக்கும் நாட்டினைப் பொறுத்து விண்ணப்ப கட்டணம் 7-25 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக தவல்களை http://applicants.mars-one.com/ என்ற இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் இதுவரையில் இலங்கையிலிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 29, 2013

அதிக அழகானவராக இருப்பதால் நாடு கடத்தப்பட் டுபாய் இளைஞர்


அதிக அழகான ஆண்களாக இருப்பதால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சவூதி அரேபியாவிலிருந்து 3 ஆண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டமை பலரும் அறிந்ததே.

கடந்த 14 திகதி சவூதி அரேபியாவின் றியாத் நகரில் நடைபெற்ற பாரம்பரிய மற்றும் கலாசார விழாவொன்றில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றினர். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டினரின் கூடாரப் பகுதியில் நின்றுகொண்டிருந்த மூவரே சவூதி மதவிவகார பொலிஸாரினால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.

இவர்கள் மிக அதிக அழகானவர்களாக இருப்பதால் விழாவுக்கு வரும் பெண்கள் இவர்களின் அழகில் மயங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் சவூதி மத விவகார பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அரேபிய மொழி பத்திரிகையான “இலாப்” செய்தி வெளியிட்டது.

அப்படி நாடுகடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல மொடல்களில் ஒருவர் இவாரன அல் காலா, நடிகர், பாடகர், புகைப்படக்கலைஞர் என பன்முகங்களைக் கொண்டவர்.

1987 செப்டெம்பர் 23 ஆம் திகதி தான் பிறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 25 வயதான அல் காலா உண்மையிலேயே மிக வசீகரமான முகத்தோற்றம் கொண்டவர். இதுதான் சவூதி மத சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாருக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டதுபோலும்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் ஒமர் பொர்கான் அல் காலா உலகெங்கும் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயை தளமாகக்கொண்ட ஒமர் பொர்கான் அல் காலா, இச்செய்தியை உறுதிப்படுத்தவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

ஆனால், மேற்படி நாடுகடத்தல் தொடர்பாக தனது புகைப்படத்துடன் கூடிய இணைய செய்திக்கான இணைப்பொன்றை தனது பேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டார்.

அந்த செய்தி இணைப்பும் அவரின் அழகிய தோற்றம் கொண்ட புகைப்படங்களும் மேற்படி செய்திக்குரியவர்களில் ஒருவர்தான் அல் காலாதான் என்ற கருத்தை வலுபடுத்துவதாக அமைந்தன.

அதன்பின் ஒமர் பொர்கான் அல் காலாவின் பேஸ் புக் பக்கத்தை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவிட்டது. இப்போது 3 இலட்சத்து 85 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் அப்பக்கத்தை லைக் செய்துள்ளனர்.

ஆனால் “அழகு என்பது உள்ளே (மனதில்) நீங்கள் உணர்வது. அது உங்கள் கண்களில் பிரதிபலிக்கிறது. அது உடல் சார்ந்தது அல்ல” என்கிறார் இந்த அல் காலா.

பெண்கள் பற்றி அல் அவர் என்ன கூறுகிறார்? “ஒரு பெண்ணின் அழகு அவள் கண்களிலிருந்து பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அதுதான் காதல் குடிகொண்டிருக்கும் இதயத்துக்கான வாசல்”  - இது பேஸ்புக்கில் அல் காலா தரவேற்றியுள்ள ஒரு போஸ்ட்.

ஆனால், இவர் தனது புகைப்படங்களில் கண்ணுக்கு மை (சுருமா) பூசியிருப்பது பலரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது. அல் காலா திருமணமானவரா என்பது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.

ஒமர் பொர்கா அல் காலா புகைப்படங்களையும் அழகாக இருப்பதால் அவர் நாடு கடத்தப்பட்ட செய்திகளையும் அறிந்த பலர் அழகாக பிறந்தமை சட்டவிரோதமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆனால் யுவதிகள் பலர் “அல் காலாவை நாடு கடத்துவதென்றால் எங்கள் நாட்டுக்கு நாடு கடத்தக்கூடாதா?” என்ற ரீதியில், கொமண்ட் அடித்திருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் மதச்சட்டங்களை அமுல்படுத்தும் பொலிஸாரின் அச்சம் சரியானதுதானோ?

Courtesy : Metro News

Monday, April 22, 2013

Bad News : Google Play Storeயை தாக்கிய புதிய மல்வெயா


Google Play Storeஇலுள்ள 32 எப்ஸ்களை Bad News எனும் புதிய மல்வெயா ஒன்று தாக்கியுள்ளதாக இணைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மல்வெயா தாக்கத்திற்குள்ளான 32 எப்ஸ்களை இதுவரையில் 2 மில்லியன் முதல் 9 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மல்வெயா தாக்கத்திற்குள்ளானதாக இனங்காணப்பட்ட 32 எப்ஸ்களை ரஷ்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான உக்ரைன், பெலரூஸ், ஆர்மேனியா மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தே 50 வீதத்திற்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தற்போது மல்வெயா தாக்கத்திற்குள்ளான 32 எப்ஸ்களும் Google Play Store இலிருந்து நீக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்வாறு Google Play Store, மல்வெயா பாதிப்புக்குள்ளாவது இது முதல் தடவையல்ல. இதற்கு முதல் 2012ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டது.  இது தொடர்பிலான தகவல்களை மெக்கபெ நிறுவனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


AM.Rizath/Metronews

Tuesday, April 9, 2013

வீடற்றவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசு : தொடர்ந்தும் கூடாரத்திலேயே வசிக்க முடிவு

அமெரிக்காவில் சேர்ந்த வீடற்ற நபரொருவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசினை வெற்றிபெற்றுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்காவின் இந்தியான மாநிலத்தில் இல்லினோய்ஸ் எனுமிடத்தில் 1978ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் டென்னிஸ் மகுரும் என்பவரே குறித்த பரிசுத் தொiகையை லொத்தரில் வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு சொந்த வீடு கூட இல்லை. மரத்தினாலான சிறிய கூடாரத்தில் வசிக்கின்றார். தற்போது 58 வயதாகும் டென்னிஸுக்கு கூடாரத்திலிருந்து வெளியேறும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு இவ்வளவு பெரிய பணத்தொகை விழும் அதிர்ஷ்டம் இருக்கும் என நான் நம்பவில்லை. இந்த டிக்கெட்டினை கடந்த வாரம் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் வாங்கினேன்.

பின்னர் தான் வசிக்கும் கூடாரத்தில் இருந்து சுரண்டினேன். சுரண்டும் போது எனக்கு பரிசு கிடைத்திருப்பதை உணர்ந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் பணம் கிடைத்து விட்டதால் எனது கூடாரத்திலிருந்து வெளியேறும் எண்ணமில்லை. சில வசதிகளை எனது கூடாரத்தில் ஏற்படுத்தவுள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

AM.Rizath/Metronews

Monday, April 8, 2013

சுறாக்கள் நிறைந்த ஆபத்தான கடலை ஹீலியம் பலூனில் கடந்த நபர் : மண்டேலா சிறுவர் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் திட்டம்


தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் நெல்சன் மண்டேலா 18 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த தீவிலுள்ள சுறா நிறைந்த கடலின் சுமார் 4 மைல் தூரத்தினை ஹீலியம் பலூலின் பறந்து சாதனை படைத்துள்ளார்.


மெட் சில்வர் வல்லன்ஸ் என்ற 37 வயதான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நபரொருவரே ஆபத்து நிறைந்த இப்பயணத்தை மேற்கொண்டு சாதித்துள்ளார். இச்சாதனைப் பயணத்தின் மூலம் கிடைக்கும் பணத்தினை நெல்சன் மண்டேலா சிறுவர் வைத்தியசாலை வளர்ச்சிக்கு வழங்குதனை நோக்கமாகக் கொண்டே வல்லன்ஸ் செயற்பட்டுள்ளார்.


இந்தச் சாதனை மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியும் என வல்லன்ஸ் எதிர்பார்த்துள்ளார்.


ஹீலியம் நிரப்பட்ட 160 பலூன்களை மட்டுமே பயன்படுத்தி 3.7 மைல் தூரத்தினை ஒரு மணி நேரத்தில் கடந்துள்ளார் வல்லன்ஸ்.


வல்லன்ஸ் கடந்த கடற் பகுதியான ரொப்பன் தீவிலேயே முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 18 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். மண்டேலா மொத்தமாக 27 வருடங்களை சிறையிலேயே கழித்தார்.


தற்போது 94 வயதாகும் மண்டேலா கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையிருந்து வீடு திரும்பினார். அன்றைய தினமே இம்முயற்சியை மேற்கொண்டார் வல்லன்ஸ்.


இது குறித்து வல்லன்ஸ் கூறுகையில், நெல்சன் மண்டேலா எதிர்கொண்ட ஆபத்துடன் நான் செய்தது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் இன்னுமொரு நிச்சயமாக இப்பயணத்தை மேற்கொள்ள மாட்டேன். கடல் மட்டத்திலிருந்து 1000 அடிகள் உயரம் வரை பறந்தேன். இதுவொரு ஆபத்துமிக்க பயணம் எனத் தெரிவித்துள்ளார்.


AM.Rizath/Metronews

Thursday, April 4, 2013

உலக சனத்தொகையை விஞ்சும் செல்லிடத் தொலைபேசிகளின் தொகை


'தூற்­றுவார் தூற்­றட்டும் போற்­றுவார் போற்­றட்டும்' என விமர்­ச­னங்­களைக் கடந்து மானிட வர்க்கம் மட்­டுமே வெற்றி பெற­வேண்­டி­ய­தில்லை என்ற உண்­மையை மானி­டர்­களின் கைக்­கு­ழந்­தை­களாய் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் தவழும் கைப்­பே­சிகள் இன்று உணர்த்­தி­யுள்­ளன. இதில் தொழில்­நுட்ப பிரி­யர்­க­ளுக்கும் மகிழ்ச்­சிதான்.

உலகில் வெற்­றி­பெறும் ஒவ்­வொரு புதிய விட­யமும் பழை­ய­னவாய் மாறியே முழு­மை­யான அங்­கீ­கா­ரத்­தினைப் பெற்­றுக்­கொள்­கின்­றது. அந்த வரி­சையில் செல்­லிடத் தொலை­பே­சி­களுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் செல்­லிடத் தொலை­பே­சி­களின் வர­விற்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து இன்று வரையில் பர­வ­லான எதிர்ப்­புகள் இருந்­து­கொண்­டேதான்  இருக்­கின்­றன. இருப்­பினும் அதன் தேவையை  கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் திண்­டா­டு­கி­றார்கள்.

ஆனாலும், செல்­லிடத் தொலை­பே­சி­களின் வளர்ச்சி என்­பது சனத்­தொகை வளர்ச்­சியைப் போலவே உள்­ளது. அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல்லின் கண்­டு­பி­டிப்­பான தொலை­பே­சியின் பின்னர் 1906ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ஈ.அல்டன் என்­பவர் முதன் முத லில் வெஸ்ட் பொக்கெட் எனும்  செல்­லிடத் தொலை­பேசி என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்தார்.
  
இதுவே தற்­போ­தைய செல்­லிடத் தொலை­பே­சியின் வளர்ச்­சியின் ஆரம்­பமாய் அமைந்­தது. இருப்­பினும் சார்ல்ஸ் ஈ. அல்­ட­னினால் பெரி­ய­ளவில் அவ­ரு­டைய கண்­டு­பி­டிப்பை வளர்ச்சி பெறச் செய்­யவோ அல்­லது அதிக எண்­ணிக்­கை­யிலோ பெருக்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை.

இதன் பின்னர் 1946ஆம் ஆண்­ட­ளவில் சிக்கா­கோ­வி­லி­ருந்த பெல் சிஸ்டம் தொலை­பேசி ஊடாக நட­மாடும் ஒரு தொலை­பே­சியில் இருந்து முத­லா­வது அழைப்பு அதுவும் காரி­ லி­ருந்து ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  இதன்­போது பயன்­பட்ட  செல்­லிடத் தொலை­பே­சியின் நிறை 36 கி.கி ஆகும். கண­னிகள் போலவே தொலை­பே­சியும் பெரி­ய­ன­வாக இருந்தே சிறி­ய­ன­வா­கின.

பின்னர் இதன் மீதான ஈர்ப்பு மிக மெது­வாக அதி­க­ரித்து இன்று வலு­வாக மக்­க­ளி­டையே இணைந்து அனை­வ­ரையும் தனி­மையில் கூட்­டாக பேச­வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. 1973ஆம் ஆண்டில் ஜோன் எப். மிட்சல் என்­ப­வ­ரினால் கைக்­க­டக்­க­மான முத­லா­வது செல்­லிடத் தொலை­பேசி தயா­ரிக்­கப்­பட்­டது. இதன ்­போதே கைப்­பே­சி­களின் பரி­ணாம வளர்ச்சி ஆரம்­ப­மா­னது.


1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி மோட்­ட­ரொலா நிறு­வ­னத்தின் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்த ஜோய­லுக்கு கூப்பர் என்பர் முத­லா­வது அழைப்­பினை ஏற்­ப­டுத்­தினார். அதுவே ஏனை­யோரும் தொலை­பே­சியின் அழைப்­புக்கு செவி­ம­டுக்க வைக்க போடப்­பட்ட அடித்­தளம். இந்த செல்­லிடத் தொலை­பேசி அன்று 3995 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.

ஆனால் முதன்­மு­றை­யாக வணிக ரீதி­யி­லான கைப்­பே­சிகள் என்.ரீ.ரீ எனும் ஜப்பான் நிறு­வ­னத்­தினால் 1979ஆம் ஆண்­ட­ள­வி­லேயே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தொடர்ந்து பல நிறு­வ­னங்கள் கைப்­பே­சி­களை அறி­முகம் செய்ய ஆரம்­பித்­தன.

அவ்­வாறு அன்று அறி­மு­க­மான கைப்­பேசி இவ்­வ­ருட இறு­தியில் எண்­ணிக்­கையில் உலக சனத்­தொ­கை­யினை தாண்டிச் செல்லும் வாய்ப்­புகள் மிக அதி­க­மாக இருப்­ப­தாக ஆய்­வு­களின் முடி­வி­லி­ருந்து ஐக்­கிய நாடுகள் தொடர்­பா­டல்கள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை தற்­போது 600 கோடி பேர் கைப்­பே­சிகளை வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும் 450 கோடி பேர் மாத்­தி­ரமே மல­சல கூடத்தை வைத்­தி­ருப்­ப­தாக ஐ.நா.வின் மற்­று­மொரு அறிக்கை தெரி­விக்­கின்­றது.


செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் எண்­ணிக்கை எந்­த­ள­விற்கு அதி­க­ரிக்­கி­றதோ அதே அள­விற்கு அதன் மீதான குற்­றங்­களும் குறை­களும் அதி­க­ரிக்­கத்தான் செய்­கின்­றன. ஆனால் அதுவே ஒரு சாரா­ருக்கு நிறை­க­ளையும் தேவை­க­ளை­யுமே அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கி­றது. மேலும் செல்­லிடத் தொலை­பேசி அவர்­க­ளுக்கு இன்­றி­ய­மை­ய­ாததாக ஒரு சாத­ன­மா­கவே மாறி­விட்­டது. அதா­வது கவ­னிக்க வேண்­டிய முதல் குழந்­தையாய் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது என்றே சொல்ல வேண் டும்.

செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் பாவ­னையால் உல­க­ள வில் பல்­வேறு பிரச்­ச­ினைகள் ஏற்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக இளம் சந்­த­தி­யி­னரின் தகுந்த நண்­ப­ னாக மாறி­யி­ருக்கும் செல்­லிடத் தொலை­பேசி பல வழி­களில் அவர்­களை சீர்­கேட்­டிற்கு இட்டுச் செல்லும் தகாத நண்­ப­னா­கவே இருக்­கி­றது என்­பது பெற்­றோர்­களின் வாதமாய் அமை­கின்­றது. அதுவும் ஒரு வகையில் உண்­மையே என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது.

இருப்­பினும் கால­வோட்­டத் தில் ஒவ்­வொரு காலப்­ப­கு­தி­யிலும் ஏதா­வ­தொரு சாதனம் மனித சமூ­கத்தில் பழிச்­சொல்­லுக்கு ஆளா­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. தொலைக்­காட்சி, கணனி வரி­சையில் இப்­போது  சிக்­கி­யி­ருப்­பது இந்த கைப்­பே­சி­களே. இதுவே இன்னும் சில ஆண்­டு­களின் பின்னர் கைப்­பே­சி­க­ளிற்கு பதில் வேறொரு சாத­னத்தின் நன்­மை­களை விட தீமைகள் பற்றி அதிகம் விவா­திக்­கப்­படும் என்­பது நிச்­சயம்.


செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் வரு­கை­களின் பின்னர் எழுத்து மற்றும் வாசிப்பு போன்ற பல தேவை­யான விட யங்கள் குறைந்­து­விட்­ட­தாக ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றது. அதே­வேளை செல்­லிடத் தொலை­பே­சி­க­ளி­னூ­டாக வெளி­யேறும் கதிர்கள் மற்றும் நுண்­ண­லைகள் மூலம் கண்ணுக் தெரி­யாத மற்றும் சிறிய உயி­ரி­னங்கள் பலவும் உயி­ரி­ழப்­ப­தா­கவும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.  இது போன்ற கார­ணிகள் அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தவே செய்யும்.

பயிர் வள­ர­வென பயன்­ப­டுத்தும் அசே­தனப் பொருட்­க­ளினால் நிலத்­திற்கு தீங்கு ஏற் ­ப­டு­வது போலவே மக்­களின் தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள உரு­வான கைப்­பே­சி­ க­ளினால் ஏற்­படும் பாதிப்­புக்­களும்.

ஆனால் தொல்­லைகள் என்று கூறு­ப­வர்­க­ளி­டமும் கைய­டக் கத் தொலை­பே­சிகள் உண்­டென்­பதே அதன் வெற்­றியும் தேவை­யு­மாகும். இந்த வெற்­றியின் உச்­சமே வெகு­வி­ரைவில் கைப்­பே­சிகள் அடை­ய­வுள்ள தொகை. அதா­வது உல­கி­லுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் ஒரு கைப்­பேசி என்ற ரீதியில் உல­க­ளவில் 2014ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் அல்­லது இவ்­வ­ருட முடிவில் கைப்­பே­சி­களின் எண்­ணிக்கை அமைந்­து­விடும் என என எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது 7 பில்­லி­யன்­களை மிக வேக­மாக நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது உலக சனத்­தொகை. ஆனால் செல்­லிடத் தொலை­பே­சி­களின் தொகை உலக சனத்­தொ­கை­யினை விட வேக­மாக 7 பில்­லி­யன்­களை நெருங்­கி­விடும் என ஐக்­கிய நாடுகள் தொடர்­பா­டல்கள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.


இதில் விஷேடம் என்­ன­வெனில் உல­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­படும் கைப்­பே­சி­களில் அரை­வா­சிக்கும் அதி­க­மாக ஆசிய நாடு­க­ளி­லேயே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உல­களில் செல்­லிடத் தொலை­பே­சிகள் பயன்­ப­டுத்தும் நாடு­களில் சீனா முதலிடத்திலும் அடுத்த இரு இடங்களில் முறையே இந்தியா மற்றும் அமெரிக்காவும் உள்ளன.

மேலும் இவ்வருட இறுதி யில் சுமார் 2.7 பில்லியன் மக்கள் அதாவது உலக சனத் தொகை யில் 39 சதவீதமான மக்கள் செல்லிடத் தொலைபேசிகளில்  இணைய சேவையைப் பயன் படுத்துவார்கள். இணைமின்றி உலகம் ஸ்தம்பிக்கக் கூடிய நிலையில் இணையத்தை இலகுவாக வழங்கும் கைப் பேசிகள் இன்றேலும் உலகம் ஸ்தம்பிக்கும் நிலையே தற் போது காணப்படுகிறது.

எனவே இன்று சீனாவில் குடிசைக் கைத்தொழிலாக மாறியிருக்கும் செல்லிடத் தொலைபேசிகள்  நாளை அனை த்து குடிசைகளையும் சேர்த்தே ஆளும் என்பதை சொல்லாமல் சொல்லும் கைப்பேசிகளின் தொகை, சனத்தொகையை விஞ் சும் வேளையில் அதன் உச்சப் பயன்களை அடைய நாமும் தயாராவோம்.

-அமானுல்லா எம்.றிஷாத்

Wednesday, April 3, 2013

செவ்வாய் கிரகம் செல்ல ஆட்கள் தேவை : பயணம் இலவசம்


செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு இலாப நோக்கற்ற டச்சு நிறுவனம் ஒன்று தயாரிகியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


முதன் முறையாக மனிதர்களை விண்ணிற்கு அனுப்புதற்கு குறித்த நிறுவனம் தயாரிகியுள்ளது. இத்திட்டதினை இலவசமாக முன்னெடுப்பதற்காக தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடிவுசெய்துள்ளது.


இதற்காக செவ்வாயில் சென்றன் பின்னர் அங்குள்ள நடிவடிக்கைகளை படம்பிடித்து வெளியிடும் தொலைக்காட்சி உரிமத்தை விற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனம் இப்பயணத்தினை 2023இல் முன்னெடுக்கவுள்ளது. இதற்காக செவ்வாயில் மனிதன் வாழக்கூடியளவிற்கு சிறிய குடியிருப்பையும் அமைக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெறுமதிவாய்ந்ததும் செலவு அதிகமானதுமான இப்பயணத்தில்,  பயணிப்பவர்களில் 4 பேர் அங்கேயே தங்க வேண்டும் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படவுள்ளனராம். ஆனால் அழைத்துச் செல்லவுள்ள நபர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கவுள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதனை உறுதிப்படும் விதமாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.