Total Pageviews

Thursday, April 4, 2013

உலக சனத்தொகையை விஞ்சும் செல்லிடத் தொலைபேசிகளின் தொகை


'தூற்­றுவார் தூற்­றட்டும் போற்­றுவார் போற்­றட்டும்' என விமர்­ச­னங்­களைக் கடந்து மானிட வர்க்கம் மட்­டுமே வெற்றி பெற­வேண்­டி­ய­தில்லை என்ற உண்­மையை மானி­டர்­களின் கைக்­கு­ழந்­தை­களாய் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் தவழும் கைப்­பே­சிகள் இன்று உணர்த்­தி­யுள்­ளன. இதில் தொழில்­நுட்ப பிரி­யர்­க­ளுக்கும் மகிழ்ச்­சிதான்.

உலகில் வெற்­றி­பெறும் ஒவ்­வொரு புதிய விட­யமும் பழை­ய­னவாய் மாறியே முழு­மை­யான அங்­கீ­கா­ரத்­தினைப் பெற்­றுக்­கொள்­கின்­றது. அந்த வரி­சையில் செல்­லிடத் தொலை­பே­சி­களுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் செல்­லிடத் தொலை­பே­சி­களின் வர­விற்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து இன்று வரையில் பர­வ­லான எதிர்ப்­புகள் இருந்­து­கொண்­டேதான்  இருக்­கின்­றன. இருப்­பினும் அதன் தேவையை  கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் திண்­டா­டு­கி­றார்கள்.

ஆனாலும், செல்­லிடத் தொலை­பே­சி­களின் வளர்ச்சி என்­பது சனத்­தொகை வளர்ச்­சியைப் போலவே உள்­ளது. அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல்லின் கண்­டு­பி­டிப்­பான தொலை­பே­சியின் பின்னர் 1906ஆம் ஆண்டில் சார்ல்ஸ் ஈ.அல்டன் என்­பவர் முதன் முத லில் வெஸ்ட் பொக்கெட் எனும்  செல்­லிடத் தொலை­பேசி என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்தார்.
  
இதுவே தற்­போ­தைய செல்­லிடத் தொலை­பே­சியின் வளர்ச்­சியின் ஆரம்­பமாய் அமைந்­தது. இருப்­பினும் சார்ல்ஸ் ஈ. அல்­ட­னினால் பெரி­ய­ளவில் அவ­ரு­டைய கண்­டு­பி­டிப்பை வளர்ச்சி பெறச் செய்­யவோ அல்­லது அதிக எண்­ணிக்­கை­யிலோ பெருக்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை.

இதன் பின்னர் 1946ஆம் ஆண்­ட­ளவில் சிக்கா­கோ­வி­லி­ருந்த பெல் சிஸ்டம் தொலை­பேசி ஊடாக நட­மாடும் ஒரு தொலை­பே­சியில் இருந்து முத­லா­வது அழைப்பு அதுவும் காரி­ லி­ருந்து ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  இதன்­போது பயன்­பட்ட  செல்­லிடத் தொலை­பே­சியின் நிறை 36 கி.கி ஆகும். கண­னிகள் போலவே தொலை­பே­சியும் பெரி­ய­ன­வாக இருந்தே சிறி­ய­ன­வா­கின.

பின்னர் இதன் மீதான ஈர்ப்பு மிக மெது­வாக அதி­க­ரித்து இன்று வலு­வாக மக்­க­ளி­டையே இணைந்து அனை­வ­ரையும் தனி­மையில் கூட்­டாக பேச­வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. 1973ஆம் ஆண்டில் ஜோன் எப். மிட்சல் என்­ப­வ­ரினால் கைக்­க­டக்­க­மான முத­லா­வது செல்­லிடத் தொலை­பேசி தயா­ரிக்­கப்­பட்­டது. இதன ்­போதே கைப்­பே­சி­களின் பரி­ணாம வளர்ச்சி ஆரம்­ப­மா­னது.


1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி மோட்­ட­ரொலா நிறு­வ­னத்தின் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்த ஜோய­லுக்கு கூப்பர் என்பர் முத­லா­வது அழைப்­பினை ஏற்­ப­டுத்­தினார். அதுவே ஏனை­யோரும் தொலை­பே­சியின் அழைப்­புக்கு செவி­ம­டுக்க வைக்க போடப்­பட்ட அடித்­தளம். இந்த செல்­லிடத் தொலை­பேசி அன்று 3995 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.

ஆனால் முதன்­மு­றை­யாக வணிக ரீதி­யி­லான கைப்­பே­சிகள் என்.ரீ.ரீ எனும் ஜப்பான் நிறு­வ­னத்­தினால் 1979ஆம் ஆண்­ட­ள­வி­லேயே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தொடர்ந்து பல நிறு­வ­னங்கள் கைப்­பே­சி­களை அறி­முகம் செய்ய ஆரம்­பித்­தன.

அவ்­வாறு அன்று அறி­மு­க­மான கைப்­பேசி இவ்­வ­ருட இறு­தியில் எண்­ணிக்­கையில் உலக சனத்­தொ­கை­யினை தாண்டிச் செல்லும் வாய்ப்­புகள் மிக அதி­க­மாக இருப்­ப­தாக ஆய்­வு­களின் முடி­வி­லி­ருந்து ஐக்­கிய நாடுகள் தொடர்­பா­டல்கள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை தற்­போது 600 கோடி பேர் கைப்­பே­சிகளை வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும் 450 கோடி பேர் மாத்­தி­ரமே மல­சல கூடத்தை வைத்­தி­ருப்­ப­தாக ஐ.நா.வின் மற்­று­மொரு அறிக்கை தெரி­விக்­கின்­றது.


செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் எண்­ணிக்கை எந்­த­ள­விற்கு அதி­க­ரிக்­கி­றதோ அதே அள­விற்கு அதன் மீதான குற்­றங்­களும் குறை­களும் அதி­க­ரிக்­கத்தான் செய்­கின்­றன. ஆனால் அதுவே ஒரு சாரா­ருக்கு நிறை­க­ளையும் தேவை­க­ளை­யுமே அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கி­றது. மேலும் செல்­லிடத் தொலை­பேசி அவர்­க­ளுக்கு இன்­றி­ய­மை­ய­ாததாக ஒரு சாத­ன­மா­கவே மாறி­விட்­டது. அதா­வது கவ­னிக்க வேண்­டிய முதல் குழந்­தையாய் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது என்றே சொல்ல வேண் டும்.

செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் பாவ­னையால் உல­க­ள வில் பல்­வேறு பிரச்­ச­ினைகள் ஏற்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக இளம் சந்­த­தி­யி­னரின் தகுந்த நண்­ப­ னாக மாறி­யி­ருக்கும் செல்­லிடத் தொலை­பேசி பல வழி­களில் அவர்­களை சீர்­கேட்­டிற்கு இட்டுச் செல்லும் தகாத நண்­ப­னா­கவே இருக்­கி­றது என்­பது பெற்­றோர்­களின் வாதமாய் அமை­கின்­றது. அதுவும் ஒரு வகையில் உண்­மையே என்­பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது.

இருப்­பினும் கால­வோட்­டத் தில் ஒவ்­வொரு காலப்­ப­கு­தி­யிலும் ஏதா­வ­தொரு சாதனம் மனித சமூ­கத்தில் பழிச்­சொல்­லுக்கு ஆளா­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. தொலைக்­காட்சி, கணனி வரி­சையில் இப்­போது  சிக்­கி­யி­ருப்­பது இந்த கைப்­பே­சி­களே. இதுவே இன்னும் சில ஆண்­டு­களின் பின்னர் கைப்­பே­சி­க­ளிற்கு பதில் வேறொரு சாத­னத்தின் நன்­மை­களை விட தீமைகள் பற்றி அதிகம் விவா­திக்­கப்­படும் என்­பது நிச்­சயம்.


செல்­லிடத் தொலை­பே­சி­க ளின் வரு­கை­களின் பின்னர் எழுத்து மற்றும் வாசிப்பு போன்ற பல தேவை­யான விட யங்கள் குறைந்­து­விட்­ட­தாக ஆய்­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றது. அதே­வேளை செல்­லிடத் தொலை­பே­சி­க­ளி­னூ­டாக வெளி­யேறும் கதிர்கள் மற்றும் நுண்­ண­லைகள் மூலம் கண்ணுக் தெரி­யாத மற்றும் சிறிய உயி­ரி­னங்கள் பலவும் உயி­ரி­ழப்­ப­தா­கவும் ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.  இது போன்ற கார­ணிகள் அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தவே செய்யும்.

பயிர் வள­ர­வென பயன்­ப­டுத்தும் அசே­தனப் பொருட்­க­ளினால் நிலத்­திற்கு தீங்கு ஏற் ­ப­டு­வது போலவே மக்­களின் தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள உரு­வான கைப்­பே­சி­ க­ளினால் ஏற்­படும் பாதிப்­புக்­களும்.

ஆனால் தொல்­லைகள் என்று கூறு­ப­வர்­க­ளி­டமும் கைய­டக் கத் தொலை­பே­சிகள் உண்­டென்­பதே அதன் வெற்­றியும் தேவை­யு­மாகும். இந்த வெற்­றியின் உச்­சமே வெகு­வி­ரைவில் கைப்­பே­சிகள் அடை­ய­வுள்ள தொகை. அதா­வது உல­கி­லுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் ஒரு கைப்­பேசி என்ற ரீதியில் உல­க­ளவில் 2014ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் அல்­லது இவ்­வ­ருட முடிவில் கைப்­பே­சி­களின் எண்­ணிக்கை அமைந்­து­விடும் என என எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது 7 பில்­லி­யன்­களை மிக வேக­மாக நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது உலக சனத்­தொகை. ஆனால் செல்­லிடத் தொலை­பே­சி­களின் தொகை உலக சனத்­தொ­கை­யினை விட வேக­மாக 7 பில்­லி­யன்­களை நெருங்­கி­விடும் என ஐக்­கிய நாடுகள் தொடர்­பா­டல்கள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.


இதில் விஷேடம் என்­ன­வெனில் உல­க­ளவில் பயன்­ப­டுத்­தப்­படும் கைப்­பே­சி­களில் அரை­வா­சிக்கும் அதி­க­மாக ஆசிய நாடு­க­ளி­லேயே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உல­களில் செல்­லிடத் தொலை­பே­சிகள் பயன்­ப­டுத்தும் நாடு­களில் சீனா முதலிடத்திலும் அடுத்த இரு இடங்களில் முறையே இந்தியா மற்றும் அமெரிக்காவும் உள்ளன.

மேலும் இவ்வருட இறுதி யில் சுமார் 2.7 பில்லியன் மக்கள் அதாவது உலக சனத் தொகை யில் 39 சதவீதமான மக்கள் செல்லிடத் தொலைபேசிகளில்  இணைய சேவையைப் பயன் படுத்துவார்கள். இணைமின்றி உலகம் ஸ்தம்பிக்கக் கூடிய நிலையில் இணையத்தை இலகுவாக வழங்கும் கைப் பேசிகள் இன்றேலும் உலகம் ஸ்தம்பிக்கும் நிலையே தற் போது காணப்படுகிறது.

எனவே இன்று சீனாவில் குடிசைக் கைத்தொழிலாக மாறியிருக்கும் செல்லிடத் தொலைபேசிகள்  நாளை அனை த்து குடிசைகளையும் சேர்த்தே ஆளும் என்பதை சொல்லாமல் சொல்லும் கைப்பேசிகளின் தொகை, சனத்தொகையை விஞ் சும் வேளையில் அதன் உச்சப் பயன்களை அடைய நாமும் தயாராவோம்.

-அமானுல்லா எம்.றிஷாத்