Total Pageviews

Thursday, January 16, 2014

என்னை விரும்பாதவர்களையும் நான் விரும்புகிறேன் : டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜய்


நடிகர் விஜய் டுவிட்டவரில் ரசிகர்களுடன் இன்று சமூகவலைத்தளமான டுவிட்டரில் உரையாடியாடினார். டுவிட்டரில் அவரது உத்தியோகபூர்வ ரசிகர் பக்கத்தினூடாகவே அவர்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.



ஜில்லா வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனது கருத்துகளையும் ரசிகர்களின் இதன்போது மக்களுடன் பகிர்ந்துகொண்டார். விஜயின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.



இதன்போது ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதில் விஜயை வெறுப்பவர்களைப் பற்றியும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்இ அஜித் - விஜய் சண்டை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.



ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்இ 'அஜித் - விஜய் சண்டைகளை கைவிடப்பட வேண்டும் அவை ஆரோக்கிமானதல்ல. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என்னை விரும்பாதவர்களையும் தான் விரும்புகிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி' என விஜய் கூறியிருந்தார்.



இவரது கருத்துகளுக்கு டுவிட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தன. ரசிகர்கள் பலரும் பாராட்டியதோடு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இதேவேளை சிலர் அநாகரிமான முறையில் விஜயை தகாத வார்த்தைகளிலும் திட்டினர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாடு விஜய் நாகரீமாக நடந்துகொண்டு சரியான முறையில் கையாண்டிருந்தார்.



இக்கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பிரபல்யப்படுத்தியதுடன் தங்களது மகிழ்ச்சியையும் வெளியிட்டிருந்தனர்.

-ஏ.எம்