சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Friday, March 29, 2013

போதைப் பொருள் முகவருக்கு 5 ஆயிரம் சொற்களுக்கு கட்டுரை எழுதுமாறு தண்டனை : இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு


இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது 5 ஆயிரம் சொற்களில் கட்டுரை எழுதுமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்ரி பென்னட் (32 வயது) என்பவருக்கே இவ்வாறானதொரு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2 பவுண்டு போதைப் பொருள்களை விநியோகிக்கும் நோக்கில் வைத்திருக்கும்போதே பென்னட் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இவரை நீதிமன்றில் ஆஜர் செய்த போது நீதிபதி, போதைப் பொருளின் ஆபத்துக்கள் குறித்து 5 ஆயிரம் சொற்களுக்கு கட்டுரை எழுதவும். வழங்கப்பட்ட கால எல்லைக்குள் இதனை நிறைவேற்றாதவிடத்து 12 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.


இது குறித்து பென்னட் கூறுகையில், இந்தத் தீhப்பு எனக்கு அதிர்ச்சியளித்தது. ஆனாலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள காலத்திற்குள் இக்கட்டுரையை பூர்த்தி செய்ய முடியும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

AM. Rizath / Metro News

Thursday, March 21, 2013

சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லுகிறது வொயஜர் - 1?



வொயஜர் 1 என்ற ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கழித்து சூரியத் தொகுதியை விட்டு வெளியேறியுள்ளதா? இல்லையா? விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1977ஆம் ஆண்டு நாசாவினால் விண்ணுக்கு அனுப்பபட்ட வொயஜர்-1 என்ற ஆளில்லா விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை நன்கு ஆராய்ந்து அரிய பல படங்களையும் அனுப்பி தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலதிக வேலையாக வேற்றுக்கிரகவாசிகளை தேடி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் (இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு) வரை சென்று சூரியத்தொகுதிக்கு 'குட் பை' சொல்லியுள்ளதாக எட்வட் ஸ்டோன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது  மீண்டும் இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வொயஜர் 1 விண்கலத்தின் நாசா ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கையில், வொயஜர் சூரியத் தொகுதியை விட்டு வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

வொயஜர்-1 விண்கலத்தில் ஒரு இறுவட்டு (CD) உள்ளது. இதில் ஞாயிற்றுத் தொகுதி குறித்த விடயங்களும் ஆண், பெண் உருவம், பூச்சிகள் விலங்குகளின் படங்கள், 35 மொழிகளிலான வாழ்த்துச் செய்தி மற்றும் பூமியிலுள்ள பல்வேறு வகையான இசை வடிவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வொயேஜரில் மூன்று அணுசக்தி மினகலங்கள் (Batteries) உள்ளதாகவும் இவை 2025ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆகவே அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான கிரகங்களில் எங்கோ ஒரு கிரகத்தில் எம்மை விட அறிவில் மிஞ்சிய அல்லது குறைந்த வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கிறார்கள் என நம்பிக்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தின் மூலம் புவியையும் மனிதர்களையும் அவர்கள் அடையாளம் காண வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


BY: AM. Rizath / Metronews

விண்ணைத் தாண்டி சாதிக்கும் பெண்கள்


முன்­னொரு காலத்தில் கண­வ­னுடன் உடன் கட்டை ஏறிக்­கொண்­டி­ருந்த பெண்கள், விஞ்­ஞா­னத்தின் கனவு உல­கங்­க­ளுக்கு விண்­க­லங்­க­ளுடன் விண்­ணிற்கு ஏற ஆரம்­பித்து முன்­னு­தா­ர­ணமாய் இம்­மண்ணில் பெண்­களின் கண்­களை விண்ணை நோக்கி பார்க்க வைத்த பெருமை ரஷ்­யா­வுக்கே உண்டு.

1963 ஜுலை 16ஆம் திகதி வொஸ்டக் 6   என்ற மனித விண்­க­லத்தில் வலென்டினா டெரஸ்­கொவா என்ற பெண்­ணையும் ரஷ்யா விண்­ணிற்கு ஏவி­யது. அதுவே முதன் முறை­யாக பெண்­மணி ஒருவர் விண்­க­லத்தில் விண்­வெ­ளிக்கு பய­ண­மான முதல் சந்­தர்ப்­ப­மாகும். அன்று பெண்­க­ளுக்­கான சுதந்­தி­ரத்தின் எல்­லைக்­கான கதவு தகர்க்­கப்­பட்டு விண்­ணிற்கு பறந்­தது டெரஸ்­கொவா என்ற பெண் மட்­டு­மல்ல பெண்­க­ளுக்­கான பல தடை­க­ளுமே.

குனிந்த தலை நிமி­ர­வி­டாமல் பெண்­களை நடக்­க­விட்டு வானை மறைத்த சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் வானையும் தாண்டிச் செல்ல ஒரு பெண்ணை அனு­ம­தித்த ரஷ்­யாவின் செயற்­பாட்­டுக்கு பின்னர் இன்­று­வரை விண்­வெ­ளிக்குச் பய­ணித்­துள்ள 525 பேரில் 56 பெண்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கண்­ணுக்குத் தெரியும் சக்­தி­களை விட காற்று மற்றும் உயிர் போன்ற உணரக் கூடி­ய­வற்­றுக்­கான சக்­திகள் என்­றுமே அதிகம் என்­பதை ஒரு வகையில் பெண்­களும் உணர்த்தி இருக்­கி­றார்கள் என்­றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வொஸ்டக் 6 விண்­க­லத்தின் பயணம் வரையில் விண்­வெளி தொடர்­பான ஆராய்ச்­சி­களில் பெண்­களின் திற­மை­களை யாரும் பெரி­ய­ளவில் அறிந்­தி­ருக்­க­வில்லை அல்­லது வெளிக்­கொ­ணர விரும்­ப­வில்லை என்­ப­து­வாகத் தான் இருக்க வேண்டும். காரணம் அன்று ஆண்­களின் சட்­டங்கள் பல பெண்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

ஆனால், தற்­போது நிலை­மைகள் அவ்­வா­றில்லை. உல­கி­லுள்ள அத்­தனை துறை­க­ளிலும் இன்று பெண்­க­ளுக்­கான உரிமை என்­பது நிச்­ச­யிக்­கப்­பட்­ட­தொன்­றா­கவே இருக்­கி­றது. பெண்­களும் அவற்­றிற்கு தகு­தி­யா­ன­வர்­க­ளா­கவே இருக்­கி­றார்கள். இருப்­பினும் இத­னையும் மீறி பெண்­ணியம் என்ற பெயரில் ஆண்­களை அடக்கி ஆள்­வ­தற்கு முயற்­சிக்கும் பெண்கள் கூட்­ட­மொன்றும் இருக்­கத்தான் செய்­கி­றது.

சரி இப்­போது விடயம் அது­வல்ல. விண்­வெ­ளிக்கு முதல் பெண்­ம­ணியை சோவியத் யூனி­ய­னாக இருக்கும் போது ரஷ்யா அனுப்பி வைத்து எதிர்­வரும் ஜுலை மாதம் 6ஆம் திக­தி­யுடன் 50 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றது. இதனை முன்­னிட்டு 50ஆவது ஆண்டைக் கொண்­டாடும் முக­மாக பெண்­ணொ­ரு­வரை மீண்டும் விண்­வெ­ளிக்கு அனுப்­பு­வ­தற்கு தயா­ரா­கி­யுள்­ளது.


கடந்த 1997ஆம் ஆண்­டுக்கு பின்னர் ரஷ்யா இது­வரை பெண்­களை விண்­வெ­ளிக்கு அனுப்-­ப­வில்லை. தற்­போது எதிர்­வரும் ஆண்டு எலினா செரோவா என்ற 36 வய­தான பெண்­ணொ­ரு­வரை விண்­வெ­ளிக்கு அனுப்பத் திட்­ட­மிட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு விண்ணில் பறக்க உள்ள எலினா செரோவா, சர்­வ­தேச விண்­வெளி ஆய்­வு­நி­லை­யத்தில் ஆறு மாதம் தங்க வைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மொத்­த­மாக 50 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­க­வுள்ள பெண்­களின் விண்­வெளி வாழ்க்­கையில் பல்­வேறு தரு­ணங்­களில் தங்­க­ளது நாடு­க­ளையும் பெண்­க­ளையும் பெரு­மைப்­ப­டுத்­திய பெண்கள் தொடர்பில் சற்­றேனும் அறிந்­தி­ருக்­கிறோம் எனும் பெரு­மை­யா­னது எம்மைச் சார்ந்­தி­ருப்­பது சிறப்­பாக இருக்கும்.

முதன் முதலில் விண்­வெ­ளிக்கு பய­ணித்த பெண் என்ற பெருமை வலன்டைன் டெரஸ்­கொ­வா­வுக்கு இருப்­பது போல ரஷ்­யாவைச் சேர்ந்த ஸ்வெட்­லனா ஸவிட்ஸ்­கியா என்ற பெண்ணே முதன் முதலில் விண்­வெ­ளியின் தரை­யி­றங்கி நடந்­தவர் என்ற பெரு­மை­யுண்டு.

இதன் தொடர்ச்­சி­யாக ரஷ்­யாவின் விண்­வெளி ஆராய்ச்­சி­களில் போட்­டிக்கு நின்ற அமெ­ரிக்கா சல்லி ரைட் என்ற பெண்ணை அவ­ரது 32ஆவது வயதில் 1983ஆம் ஆண்டில் விண்­ணிற்கு அனுப்­பி­ய­போதும் 1984ஆம் ஆண்டில் கத்ரின் என்ற பெண்­ணையே முதன் முதலில் விண்­வெ­ளியில் தரை­யி­றங்கச் செய்­தது. சல்லி ரைட் கடந்த ஆண்டில் ஜுலை 23ஆம் திகதி தனது 61ஆவது வயதில் புற்­று­நோ­யினால் உயி­ரி­ழந்தார்.

இது­வ­ரையில் விண்­வெ­ளிக்கு பய­ணித்த 56 பெண்­களில் 45 பெண்­களை அமெ­ரிக்­காவே அனுப்பி வைத்­துள்­ளது. அதே­வேளை ரஷ்யா சோவியத் யூனி­ய­னாக இருக்கும் போது 2 பெண்­க­ளையும் சோவியத் யூனியன் பிரிந்­ததன் பின்னர் ஒரு­வரை மாத்­தி­ரமே அனுப்­பி­யுள்­ளது.

மேலும் சீனா, ஜப்பான், வட­கொ­ரியா, ஈரான் மற்றும் இந்­தியா உள்­ளிட்ட ஆசியா கண்­டத்தைச் சேர்ந்த 5 பெண்­களும் விண்­வெ­ளிக்கு சென்­றுள்­ளனர் என்­பதில் எமக்கும் பெரு­மைதான். ஆனால் இவற்றில் இந்­தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பெண்கள் அமெ­ரிக்கா சார்­பா­கவே சென்­றுள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தி­யாவைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சுனிதா வில்­லியம்ஸ் என்­பவரே அதி­க­ள­வான நாட் கள் (195 நாட்கள்) விண்­வெ­ளியில் இருந்த பெண்.

மிகச் சிறிய வயதில் பய­ணித்­தவர் என்ற பெருமை இங்­கி­லாந்­தினால் முதன் முதலில் அனுப்­பப்­பட்ட பெண் ஹெலன் ஷர்மன் என்­ப­வ­ரையே சாரும். இவர் தனது 29ஆவது வயதில் விண்­வெ­ளிக்கு பய­ண­மானார்.


இவை­த­விர விண்­வெளிப் பய­ணங்­களில் சாதனை நிலை­நாட்ட பரிந்­து­ரைக்­கப்­பட்டு இறு­தியில் வாய்ப்பை இழந்த பெண்கள் 15 பேர் உள்­ளனர்.

வாய்ப்புக் கிடைத்து விண்­வெ­ளிக்குச் சென்று உயி­ரி­ழந்­த­வர்­களும் மூவர் உள்­ளனர். இதில் எம்­ம­வர்­க­ளுக்கு அதிகம் பரீட்­ச­ய­மான கல்­பனா சாவ்­லாவும் அடங்­கு­கிறார். இவரே விண்­ணிற்கு சென்ற இந்­தியப் பெண்­மணி. இவ­ருக்கு முதல் சுனிதா வில்­லியம்ஸ் பய­ணித்­தி­ருந்த போதிலும் அவர் இந்தியாவில் பிறந்தவரல்ல.

2003ஆம் ஆண்டில் எஸ்.ரீ.எஸ்-107 விண்வெளி விபத் துக்குள்ளானதில் கல்பனாவும் அமெரிக்காவைச் சேர்ந்த லூறல் பீ. க்ளார்க் என்ற இன்னொரு பெண்மணியும் உயிரிழந்தார். இதேபோல 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜலென்ஜர் விபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரெஸ்னிக் என்ற பெண்ணும் உயிரிழந்தார்.

விண்வெளி ஆராய்ச்சிகளில் சாதிக்கத் துடித்து உயிரிழந்த இப்பெண்கள் விதைகளாகவே வீழ்ந்திருக்கிறார்கள். எனவே, நிச்சயமாக மரமாகவே எழு வார்கள் என்பதில் சந்தேக மில்லை.


 -அமானுல்லா எம்.றிஷாத்

இக்கட்டுரையானது 08.03.2013 திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Friday, March 15, 2013

உலகிலேயே மிகச்சிறியளவான புத்தகம் இதுவா? : தையல் ஊசியின் துளையை விடச் சிறியது


பூக்கள் நிறைந்த சிகினோ குஸபானா எனப் பெயரிடப்பட்டுள்ள புத்தகமொன்று ஜப்பானிலுள்ள டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகமே உலகின் மிகச் சிறிய புத்தகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


உலகிலேயே மிகச் சிறிய புத்தகமாகக் கருதப்படும் இப்புத்தகத்தினை டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகம் 29,400 ஜப்பான் யென்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. இப்புத்தகத்துடன் இலவச இணைப்பாக இதே புத்தகத்தின் பெரிய வடிவிலான பிரதியும் இப்புத்தகத்தின் உருக்களை பார்க்கக் கூடிய கண்ணாடியொன்றையும் வழங்கவுள்ளது குறித்த அருங்காட்சியகம்.

22 பக்கங்களைக் கொண்ட குறித்த புத்தகத்திலுள்ள எழுத்துக்களை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. 0.75 மி.மீ உயராமான இப்புத்தகத்திலுள்ள எழுத்துருக்களின் அகலம் 0.01 மி.மீ மட்டுமே ஆகும். மிகச் சிறியளவான இப்புத்தகம் தையல் ஊசியின் துளையை விடச் சிறியதாகும்.

பூக்கள் நிறைந்த இப்புத்தகத்தினை ஜப்பான் மொழியில் சிகினோ குஸபானா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதன் கருத்து பருவகால பூக்கள் என்பதாகும்.


இது தொடர்பில் டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகம் கருத்து வெளியிடுகையில், உலகின் மிகச் சிறிய புத்தமாக இப்புத்தகத்தினை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கச் செய்ய முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.


உலகின் மிகச் சிறிய புத்தகமாக 0.9மி.மீ அளவான 30 பக்கங்களைக் கொண்ட புத்தகமொன்றே 1996ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இப்புத்தகத்தினை அனடொலி கொனன்கோ என்ற சைபீரிய நாட்டைச் சேர்ந்த நபர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

By: AM. Rizath / Metro News

Wednesday, March 6, 2013

உலகிலேயே மிகச் சிறியளவான கைப்பேசியினை வெளியிட்டது ஜப்பான்


தொழில்நுட்பத்தில் என்றுமே ஏனைய நாடுகளை விட ஒரு படி முன்னோக்கி நிற்கும் ஜப்பான் உலகிலேயே மிகச் சிறியளவான கைப்பேசியினை வெளியிட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வில்கொம் என்ற நிறுவனமே தயாரித்துள்ளது. தற்போது குறித்த கையடக்கத்தொலைபேசி ஜப்பானில் மட்டுமே உண்டு. 

இதுவரையில் விலை தீர்மானிக்கப்படாத இக்கைபேசியை இவ்வாண்டு இறுதியில் டிசம்பர் மாதமளவில் விற்பனைக்கு கொண்டு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு விளையாட்டு சாதனம் போல் தோன்றும் இந்த போனின் அளவு வெறும் 32X70X10.7 மி.மீ மட்டுமே. மேலும் இதன் நிறை 32 கிராம் என்பதுடன் வழக்கமாக கைக்கடிகாரத்தில் காணப்படும் OLED திரை 1 இன்ச் அளவான காணப்படுகிறது. 


அத்துடன் இதில் மடிக்கக்கூடிய உணரி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. 3 நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கைபேசியில் இப்போது கெமரா போன்ற வதிகள் இல்லை என்றாலும் மெயில் வசதியினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு தடவை சார்ஜ் செய்து கொண்டால் 2 மணித்தியாலங்கள் பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கையடக்கத் தொலைபேசிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதில் மேலும் பல வசதிகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

BY : AM. Rizath / Metro News




Sunday, March 3, 2013

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்


காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதை அண்மைய திருட்டுகள் பல நிரூபிக்கின்றன.

அடுத்தவர் உடைமையை அனுமதியின்றி கையகப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் திருட்டாகவே அமைகிறது. இதில் பொருள் மட்டுமே என்றல்ல. பிறர் வார்த்தைகள் கூட சில நேரங்களில் திருட்டாக அமைந்துவிடலாம். அண்மைக் காலமாக பொருள்சாரா திருட்டுகள் குறிப்பாக இணையத்தில் மிக அதிகமாகவே அதிகரித்துவிட்டது.

இணையவாசிகள் அத்தனை பேரும் தற்போது அதிகம் அதிகமாய் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்றாய் மாறியுள்ளது 'ஹெக்' என்ற சொல். இணைப் பாவனையாளர்கள் பலருக்கும் இது சாதரண சொல்லாக இருந்தாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய 'ஷெல்'லாகவே மாறிவிட்டது.

காரணம் இணையத்தின் ராஜா, மந்திரியாக கூகுள், பேஸ்புக்குடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஈரான், போட்டியாக பல விடயங்களில் களமிறங்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்களை குறி வைத்து நடக்கும் 'சைபர் க்ரைம்' தாக்குதல்கள் அளவுக்கதிகமாகவே தற்போது நடைபெற்ற வண்ணமுள்ளது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 'ஹெக்' செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஹெக் என்பது உரிமையாளர் அனுமதியின்றி அவருடைய செயற்பாடுளில் இயங்குதளம் மற்றும் வலையமைப்பின் குறைபாடுகளைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும். அவை தேவைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்து பல்வேறு வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றில் குறிப்பாக வைட் ஹெட் மற்றும் பிளக் ஹெட் என்ற பிரிவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதில் வைட் ஹெட் என்பது கணனிகளையும் தரவுகளையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுபவை இதன் மூலம் எவ்வாறு ஹெக் செய்யாமல் தடுப்பது என்பது குறித்து ஆராயப்படுவதன் ஹெக்கர்ஸிடமிருந்து தப்பிக்க பிரத்தியேமான மென் பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் பிளக் ஹெட் என்பது வைட் ஹெட்டுக்கு எதிரானது. தனி நபரோ குழுவோ இணைந்து சுய இலாபத்திற்காக கணனி இயங்குதளம் மற்றும் இணைய வலையமைப்பிலுள்ள ஓட்டைகளில் புகுந்து தங்களுக்கு தேவையான தகவல்களை களவாடுவதை குறிப்பதே பிளக் ஹெட். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. ஹெக்கிங் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஹெக்கர்ஸ் என அழைக்கப்படும்.

இன்றைய நாட்களில் இணையம் நுழையாத துறையே இல்லை எனலாம். இதனால் ஒவ்வொரு துறையினரது தகவல்களையும் இணையத்தில் களவாட அவற்றின் எதிரிகள் புறப்பட ஆரம்பித்தனர். அது தற்போது ஒரு உயர் எல்லையினைத் தொட்டு சைபர் க்ரைமாக மாறி நாடுகளிடையேயான மோதல்கள் வரை சென்றுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டினதும் அரசியல், பாதுகாப்பு என அனைத்து மட்ட விடயங்களும் இணைத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் அவற்றினை களவாடவென பலர் முயற்சிக்கும் போது அவை நாடுகளுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.

இதில் ஒரு அங்கமே ஜுலியன் அசேன்ஜ். இவர் உலகின் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் முக்கிய விடயங்களை ஹெக் செய்து வெளியிட்டார். ஆனால் இவர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் இடைத்தரகர்களாக செயற்பட்டு நாடுகளின் முக்கிய தகவல்களை ஹெக் செய்து அவற்றை விற்பனை செய்யும் ஹெக்கர்ஸும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க அமெரிக்க நிறுவனங்கள் மக்களின் தகவல்களை திருடவும் மேலும் அவர்களை உளவும் பார்க்கவுமே கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற மேலும் பல இணையத்தளங்கள் செயற்படுவதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காவே ஈரான் தனக்கென பிரத்தியேகமான உள்வலையமைப்புகளை (iவெசயநெவ) உருவாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனனில் ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியது. இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.

குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.

இவ்வானதொரு நிலையில் தற்போது அமெரிக்கா மீதே சைபர் தாக்ககுதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பென்டகன் கணனிகளையும் ஹெக்கர்ஸ் பதம்பார்ந்தமை அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரமே அமெரிக்காவின் பிரபலமான நிறுவனங்களான நிவ்யோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட், அப்பிள், பேஸ் புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் ஹெக் செய்யப்பட்டமை அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, இங்குள்ள பிரதான நிறுவனங்களை குறி வைத்து ஹெக் செய்வது சீனா எனவும் இதற்காக அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பின்னணியில் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் பல ஹெக் செய்யப்பட்டது உண்மைதான் ஆனால் எதுவிதமான தகவல் திருட்டுகளும் இடம்பெறவில்லை என மாதம் கழிந்த நிலையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் தங்களது 250 ஆயிரம் பயனர்களின் முழுமையான தகவல்களும் களவாடப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தது.

திடீரென இவ்வாறு அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல் அதிகரித்தமையின் பின்னணி பற்றி எதனையும் எவரும் இதுவரையில் கூறவில்லை. மேலும் பாதிக்கப்படுகின்ற அமெரிக்காவும் மிகப்பெரிய அளவில் வெளியுலகிற்கு தெரியும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.

உண்மையில் ஈரான் குற்றம் சுமத்துவது போல தேள் கொட்டுப்பட்ட திருடனாய் அமெரிகக்கா விழி பிதிங்கி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமலில்லை.

-அமானுல்லா எம். றிஷாத்


Friday, March 1, 2013

5 அடி உயரமான பெண்ணுக்கு 6.7 அடி நீளமான தலைமுடி : வருமானமும் உண்டு


சீனாவைச் குயிகன்ங் எனுமிடத்தில் வசிக்கும சென் இங்கியுஆன் என்ற 5 அடி உயரமான பெண் 11 வருடங்களாக முயற்சித்து 6.7 அடி நீளத்திற்கு அவரது தலைமுடியை வளர்த்துள்ளார்.

கடைசியாக சென் அவரது தலைமுடியை 11 வருடங்களுக்கு முன்னர் வெட்டியுள்ளார். 44 வயதான சென் 2005ஆம் ஆண்டிலிருந்து தனது தலைமுடியை வளர்க்க ஆரம்பித்துள்ளார். தற்போது அதன் நீளம் 6.7 அடியாக வளர்ந்துள்ளது. ஆனால் குறித்த பெண் 5 அடி என்பதனால் அவர் நடந்து செல்கையில் அவரது தரையை துடைத்த வண்ணம் இருக்கிறது.

இம்முடியை பராமரிப்பதற்கு நாளொன்று ஒரு மணி நேரம் செலவிடுகிறாராம். சாதாரணமாக குளிக்கும் போது அவரது முடியை கழுவது சாத்தியமற்றது. இதனால் 4 நாட்களுக்கு ஒரு முறை தலைமுடியை மாத்திரம் கழுவிச் சுத்தம் செய்துகொள்கிறார். மேலும் முடியை பளபளப்பாக வைப்பதற்காக முடிக்கு பியர் சேர்த்து பராமரிக்கிறார்.

இது தொடர்பில் சென் கூறுகையில், எனது தலைமுடியை கடந்த 11 வருடங்களா பாதுகாத்துள்ளேன். தற்போது முடியின் மீது அடிமையாகிவிட்டேன்.

மேலும் எனது முடியின் மூலம் வருமானமும் வருகிறது. தலைமுடியை சீவும் போது விழும் முடிகளை சேகரித்து வருடத்திற்கு சுமார் 50 கிராம் முடியை 20ஆயிரம் யுவானுக் விற்பனை செய்கிறேன்.

தற்போது எனது முடி முற்றாக கருமை நிறத்திலுள்ளது. இது க்ரேய் நிறத்திற்கு மாற ஆரம்பித்தால் வெள்ளை நிற டை அடித்து வித்தியாசமாக எனது முடியை மாற்றும் எண்ணம் உள்ளது என்றார்.

இருப்பினும் முடியை கழுவ ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை உலர வைக்க சுமார் அரை நாட்கள் வரை தேவைப்படுவதே சிரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By: AM. Rizath/Metronews