Total Pageviews

Friday, March 29, 2013

போதைப் பொருள் முகவருக்கு 5 ஆயிரம் சொற்களுக்கு கட்டுரை எழுதுமாறு தண்டனை : இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு


இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது 5 ஆயிரம் சொற்களில் கட்டுரை எழுதுமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தைச் சேர்ந்த டெர்ரி பென்னட் (32 வயது) என்பவருக்கே இவ்வாறானதொரு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2 பவுண்டு போதைப் பொருள்களை விநியோகிக்கும் நோக்கில் வைத்திருக்கும்போதே பென்னட் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இவரை நீதிமன்றில் ஆஜர் செய்த போது நீதிபதி, போதைப் பொருளின் ஆபத்துக்கள் குறித்து 5 ஆயிரம் சொற்களுக்கு கட்டுரை எழுதவும். வழங்கப்பட்ட கால எல்லைக்குள் இதனை நிறைவேற்றாதவிடத்து 12 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.


இது குறித்து பென்னட் கூறுகையில், இந்தத் தீhப்பு எனக்கு அதிர்ச்சியளித்தது. ஆனாலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள காலத்திற்குள் இக்கட்டுரையை பூர்த்தி செய்ய முடியும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

AM. Rizath / Metro News