சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Sunday, March 3, 2013

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்


காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதை அண்மைய திருட்டுகள் பல நிரூபிக்கின்றன.

அடுத்தவர் உடைமையை அனுமதியின்றி கையகப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் திருட்டாகவே அமைகிறது. இதில் பொருள் மட்டுமே என்றல்ல. பிறர் வார்த்தைகள் கூட சில நேரங்களில் திருட்டாக அமைந்துவிடலாம். அண்மைக் காலமாக பொருள்சாரா திருட்டுகள் குறிப்பாக இணையத்தில் மிக அதிகமாகவே அதிகரித்துவிட்டது.

இணையவாசிகள் அத்தனை பேரும் தற்போது அதிகம் அதிகமாய் உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒன்றாய் மாறியுள்ளது 'ஹெக்' என்ற சொல். இணைப் பாவனையாளர்கள் பலருக்கும் இது சாதரண சொல்லாக இருந்தாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய 'ஷெல்'லாகவே மாறிவிட்டது.

காரணம் இணையத்தின் ராஜா, மந்திரியாக கூகுள், பேஸ்புக்குடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஈரான், போட்டியாக பல விடயங்களில் களமிறங்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்களை குறி வைத்து நடக்கும் 'சைபர் க்ரைம்' தாக்குதல்கள் அளவுக்கதிகமாகவே தற்போது நடைபெற்ற வண்ணமுள்ளது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 'ஹெக்' செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

ஹெக் என்பது உரிமையாளர் அனுமதியின்றி அவருடைய செயற்பாடுளில் இயங்குதளம் மற்றும் வலையமைப்பின் குறைபாடுகளைப் பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும். அவை தேவைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்து பல்வேறு வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றில் குறிப்பாக வைட் ஹெட் மற்றும் பிளக் ஹெட் என்ற பிரிவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதில் வைட் ஹெட் என்பது கணனிகளையும் தரவுகளையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுபவை இதன் மூலம் எவ்வாறு ஹெக் செய்யாமல் தடுப்பது என்பது குறித்து ஆராயப்படுவதன் ஹெக்கர்ஸிடமிருந்து தப்பிக்க பிரத்தியேமான மென் பொருட்கள் உருவாக்கப்படும்.

ஆனால் பிளக் ஹெட் என்பது வைட் ஹெட்டுக்கு எதிரானது. தனி நபரோ குழுவோ இணைந்து சுய இலாபத்திற்காக கணனி இயங்குதளம் மற்றும் இணைய வலையமைப்பிலுள்ள ஓட்டைகளில் புகுந்து தங்களுக்கு தேவையான தகவல்களை களவாடுவதை குறிப்பதே பிளக் ஹெட். இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. ஹெக்கிங் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஹெக்கர்ஸ் என அழைக்கப்படும்.

இன்றைய நாட்களில் இணையம் நுழையாத துறையே இல்லை எனலாம். இதனால் ஒவ்வொரு துறையினரது தகவல்களையும் இணையத்தில் களவாட அவற்றின் எதிரிகள் புறப்பட ஆரம்பித்தனர். அது தற்போது ஒரு உயர் எல்லையினைத் தொட்டு சைபர் க்ரைமாக மாறி நாடுகளிடையேயான மோதல்கள் வரை சென்றுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டினதும் அரசியல், பாதுகாப்பு என அனைத்து மட்ட விடயங்களும் இணைத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் அவற்றினை களவாடவென பலர் முயற்சிக்கும் போது அவை நாடுகளுக்கிடையில் சர்ச்சைகளை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.

இதில் ஒரு அங்கமே ஜுலியன் அசேன்ஜ். இவர் உலகின் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் முக்கிய விடயங்களை ஹெக் செய்து வெளியிட்டார். ஆனால் இவர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை எனத் தெரிவித்தார். ஆனால் இடைத்தரகர்களாக செயற்பட்டு நாடுகளின் முக்கிய தகவல்களை ஹெக் செய்து அவற்றை விற்பனை செய்யும் ஹெக்கர்ஸும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க அமெரிக்க நிறுவனங்கள் மக்களின் தகவல்களை திருடவும் மேலும் அவர்களை உளவும் பார்க்கவுமே கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற மேலும் பல இணையத்தளங்கள் செயற்படுவதாக பரவலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காவே ஈரான் தனக்கென பிரத்தியேகமான உள்வலையமைப்புகளை (iவெசயநெவ) உருவாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனனில் ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் அடிக்கடி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியது. இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன.

குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின. இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்தது.

இவ்வானதொரு நிலையில் தற்போது அமெரிக்கா மீதே சைபர் தாக்ககுதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பென்டகன் கணனிகளையும் ஹெக்கர்ஸ் பதம்பார்ந்தமை அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரமே அமெரிக்காவின் பிரபலமான நிறுவனங்களான நிவ்யோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்ட், அப்பிள், பேஸ் புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் ஹெக் செய்யப்பட்டமை அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, இங்குள்ள பிரதான நிறுவனங்களை குறி வைத்து ஹெக் செய்வது சீனா எனவும் இதற்காக அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பின்னணியில் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் பல ஹெக் செய்யப்பட்டது உண்மைதான் ஆனால் எதுவிதமான தகவல் திருட்டுகளும் இடம்பெறவில்லை என மாதம் கழிந்த நிலையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் தங்களது 250 ஆயிரம் பயனர்களின் முழுமையான தகவல்களும் களவாடப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தது.

திடீரென இவ்வாறு அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல் அதிகரித்தமையின் பின்னணி பற்றி எதனையும் எவரும் இதுவரையில் கூறவில்லை. மேலும் பாதிக்கப்படுகின்ற அமெரிக்காவும் மிகப்பெரிய அளவில் வெளியுலகிற்கு தெரியும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.

உண்மையில் ஈரான் குற்றம் சுமத்துவது போல தேள் கொட்டுப்பட்ட திருடனாய் அமெரிகக்கா விழி பிதிங்கி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமலில்லை.

-அமானுல்லா எம். றிஷாத்


Friday, November 23, 2012

சோதனைக் களத்தில் சாதனை படைக்கும் Facebook


தேவைகளை உணர்ந்து அவற்றினை நிறைவுசெய்து வெற்றி காண்பது ஒரு ரகம் என்றால் புதிதாக ஒரு தேவையை உருவாக்கி அதனை நிறைவேற்றி வெற்றிகொள்வது இன்னொரு ரகம். இதில் இரண்டாவது ரகமே இப்போது உலகையே தன் சுவற்றில் எழுத வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும் வெற்றி நாயகன் Facebook.

இன்றைய நாட்களில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியில் ஆள் பாதி என்றால் மீதி ஆடையல்ல பேஸ்புக் என்பது போல் தன்னை மாற்றிகொண்டுள்ளது. ஏனெனில் இன்று பலரது தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது இந்த Facebook. இதற்கு நாளாந்தம் சமூக வலைத்தளங்களினை நாடி வரும் புதியவர்களின் வருகையே சாட்சியாகின்றது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் பயனர்களின் எண்ணிகை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதமளவில் 800 மில்லியன் பயனர்களை கொண்டிருந்த பேஸ்புக்கானது இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் உலகிலுள்ள 7 பில்லியன் மக்களில் 1 பில்லியனை தன் பயனர்களாக மாற்றியுள்ளது என்றால் இதன் வளர்ச்சி எத்தகையது என உணரமுடிகின்றதல்லவா?.

இத்தனைக்கும் பேஸ்புக்குக்கு போட்டியெனக் கருதும் Twitter மற்றும் Google Plus ஆகியவற்றில் முறையே 100, 130 மில்லியன் பயனாளர்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு பாரிய சாதனைமிகு இலக்கினை அடைந்திருப்பதற்கு காரணம் சமூக இணையத்தளங்களில் எதனை மக்கள் விரும்பி எதிர்பார்க்கின்றனர் என தெரிந்து அதற்கேற்ற வகையில் செயற்படுவதுடன் சமூக வலைத்தளங்களின் தேவைகளை மக்களிடையேயும் அதேவேளை வர்த்தகத்தில் சமூகவலைத்தளங்களின் பங்கு என்னவென்பததை வியாபர ரீதியாக விளிப்புணர்வை ஏற்படுத்தியதுமே எனலாம்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்த பலரும் இப்பொழுது தங்களது ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பேஸ்புக் ஒவ்வொருவரிடத்தில் தன்னை நியாயப்படுத்திக் கொண்டுள்ளது. அது வாணிபமாக இருந்தாலும் சரி என்பதை இன்று ஒவ்வொரு விளம்பரங்களிலுமுள்ள பேஸ்புக்கின் லோகோ தெரியப்படுத்துகிறது.

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் எமக்கு இருக்கும் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் பேஸ்புக் போன்ற ஒரு நல்ல நண்பன் இப்போதைக்கு அவசியம் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளை அனைவரிடமும் கூறி மகிழவோ ஆறுதலடையவோ முக்கிய விடயங்களை நாட்குறிப்புப் புத்தகத்தில் (னுயைசல) எழுதவோ பரபரப்பான எமது வாழ்க்கையில் அவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதென்பது அரிதாகவே உள்ளது.

இதற்காகவே 'டைம் லைன்' எனும் புதிய முறையினை கடந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தியது பேஸ்புக். இதில் ஆண்டு வாரியாக பயனாளர்களின் செயற்பாடுகள் பதிவாகும். இதனால் பயனாளி தன்னுடைய நினைவுகளை இலகுவில் மீட்டுப்பார்க்கக்கூடியதாக உள்ளது.

இருப்பினும் இம்முறையில் தற்போது மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் எதிர்மறை விமர்சனங்கள் அத்தனையையும் மீறி தற்போது பலரும் டைம் லைன் பக்கம் படையெடுப்பதை தடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. மாற்றம் ஒன்றுதானே மாற்றமில்லாது அந்த வகையில் டைம் லைனைத் தொடர்ந்து விரைவில் புதியதொரு செயற்பாட்டையும் அறிமுகம் செய்யவுள்ளது பேஸ்புக்.

பேஸ்புக்கில் நீண்ட கால குறைபாடாக பலரும் அலுத்துக்கொள்ளும் விடயங்களில் பிரதானமாவொன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான தெரிவு பட்டன் இல்லாமையே.
இதற்கு தீர்வாக பேஸ்புக்கில் விருப்பமான தகவல்கள் அல்லது புகைப்படங்களை 'லைக்' என்ற வாசகத்தை தேர்வு செய்து, விருப்பத்தை தெரிவிப்பது போல வோவ், லவ், பூம் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கான தெரிவு பட்டனையும் விரைவில் அறிமுகம் செய்யப்போகிறது.

மேலும் கணனிகளில் வைரஸ் பரவுவது போல பேஸ்புக்கிலும் பல்வேறு வகையான வைரஸ்கள் உலா வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக தாக்கும் பேஸ்புக் வோர்ம் எனப்படும் வைரஸ் தாக்கம்.

இது பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. காரணம் இவ்வைரஸ் பயனாளர்களின் கடவுச்சொல்லை மாற்றியமைத்துவிடுகிறது. குறித்த இந்த வைரஸினால் இதுவரையில் 100 ஆயிரம் பயனாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் ஒவ்வொருவரையும் உளவு பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து மக்களிடையே காணப்படுகின்றது.  ரகசியங்கள் எதனையும் பாதுகாக்க முடியவில்லை எனவும் எரிச்சலடைகின்றனர். ஒரு முறை பேஸ்புக் ஸ்தாபகர் ஷக்கர்பேர்க்கின் தனிப்பட்ட படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வாறானதொரு வைரஸ் பிரச்சினை நிச்சயமாக பேஸ்புக்கிற்கு பெரியதொரு தலைவலியாயாகவே இருக்கும்.

இதுபோதாதென்று பேஸ்புக்கிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சில ஆய்வுகள் கருத்து வெளியிட்டு வருகின்றது.

எங்கேயும் எப்போதும் சதா பேஸ்புக் என்று இருப்பவர்கள் மன ரீதியான பல எதிர்மறை மாற்றங்களை சந்திப்பதாகவும் இதில் பெரியவர்களை விட சிறியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கபட்டுள்ளது. மேலும், பேஸ்புக் எல்லோரையும் பேஸ்புக் அடிமையாகவே மாற்றுகிறது எனறும் தெரிவிக்கப்படுகிறது.

மனநல நிபுணர்கள் கூறுவதை பார்த்தால் நாமக்கு தெரிந்த பேஸ்(முகம்)புக்கிற்கு இன்னொரு முகம் இருப்பது போல தெரிகிறதே.

சாதரணமாக மாணவ, மாணவிகள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இதனை பேஸ்புக் மேனியா என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல பேஸ்புக்கும் நஞ்சுதான் என்பதனையே இந்த ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றது. எனவே தகவல் பரிமாற்றத்திற்காக உருவான பேஸ்புக்கினை தேவைக்கேற்ப பயன்படுத்துவதே நல்லது.

என்னதான் பேஸ்புக் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அதன் வளர்ச்சியானது தற்போது ஜே (J)வடிவிலேயே உள்ளது. இதேவேளை பேஸ்புக் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவுக் கொடி பிடிக்கவும் பெரும் கூட்டமே இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறனவர்களின் கருத்துக்களும் மறுப்பதற்கில்லை என்றே தோன்றுகின்றது. குறிப்பாக ஏராளமான மனிதர்களின் மனங்களில் ஒரு நல்ல விடயத்தை விதைத்திருப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தக் கடினமான விடயங்களில் ஒன்று 'அடுத்தவரை பாராட்டி அங்கீகரிப்பது'. இதனை எந்தவொரு முன்னோடியினாலும் மனித மனங்களில் புகுத்த முடிவதில்லை.
ஆனால் பேஸ்புக்கோ சாத்தியமற்ற அந்த மனமாற்றத்தினை எம்மிடையே சாதாரணமாக ஏற்படுத்திருப்பதினை ஒவ்வொருவரினதும் பேஸ்புக் சுவரிலுள்ள Status, Photos மற்றும் இதர விடயங்களில் விழுந்துள்ள 'Likes' உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதுமட்டுமன்றி சில ஆய்வுகளும் பேஸ்புக்கின் பக்கமாக உள்ளது. எங்ரி பேட் மற்றும் சமூகவலைத்தளங்கள் என்பன தொடர்ச்சியாக அலுவலகங்களில் வேலைசெய்பவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் அவை மூளையை சுறுப்பாக்கச் செய்வதுடன் வேலைசெய்வோரை உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகவும் அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது. எனவே பேஸ்புக்கில் எங்கரி பேட் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

வழக்கம்போல இதற்கும் சில எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவோர் இல்லாமலில்லை. சமூகவலைத்தளங்களின் பயன்கள் தெரியாமலும் புரியாமலும் பேஸ்புக் பயன்படுத்துதையே குற்றம் என்கிற அலுவலங்கள் இன்றும் இருக்கிறது இவர்களுக்கு இது தெரியுமா இல்லை புரியுமா?
இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக, பேஸ்புக்கிலுள்ள 'LIKE' இனை உணர்ச்சிகரமானதாக மாற்றும் பொருட்டு ஜெக்கட் ஒன்றினை அமெரிக்காவின் மெசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன் செயற்பாடுகள் என்னவெனில், பேஸ்புக்கில் நமது நண்பர்களில் ஒருவர் நாம் பகிரும் எதாவது ஒரு விடயத்தினை 'லைக்' செய்யும் போது நாம் அணிந்திருக்கும் 'ஜெக்கட்' காற்றினால் நிரப்பப்பட்டு எம்மை அந்நண்பர் அணைப்பது போன்றதொரு உணர்வைத் தரும்.

தொடர்ந்து நாம் அந்த ஜெக்கட்டினை மீண்டும் அணைக்கும் போது அந்நபர் அந்த ஜெக்கட்டினை அணிந்திருந்தால் அவருக்கும் அத்தகைய உணர்வை இந்த ஜெக்கட் வழங்குமென இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் 'லைக்' இனை சாதாரணமானதொரு விடயமாகப் பார்க்காமல் அதனை உணர்ச்சிபூர்வமான நம்மை ஊக்குவிக்கும், அன்பை வெளிப்படுத்தும் ஒரு விடயமாக மாற்றுவதற்காகவே இந்த ஜெக்கட்டினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பலவகையில் நன்மைகளையும் தீமைகளையும் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுடன் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது பேஸ்புக். அதாவது கடந்த மே மாதம் அமெரிக்கப்பங்குச் சந்தையிலும் கால்பதித்தது. வெற்றி முகத்திலுள்ள பேஸ்புக்கிற்கு இதுவும் வெற்றியளிக்கும் என்றே பல பங்குச் சந்தை வல்லுனர்கள் அப்போது கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் இன்றுவரையில் அவ்வப்போது இதற்கு வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை.

பங்குச் சந்தையில் பேஸ்புக்கின் வரவு குறித்து அதன் உரிமையாளர் மார்க் ஷக்கர்பேர்க் கூறுகையில், நாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக சேவைகளை விரிவுபடுத்தவில்லை சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவே பணம் சம்பாதிக்கிறோம் என்றார் இதிலிருந்தே நாம் பேஸ்புக்கின் வளர்ச்சியையும் பல திட்டங்கள் அதன் கைவசம் உள்ளதனையும் புரிந்துகொள்ளமுடியும்.

மேலும், தற்போது இணையம் பயன்படுத்தும் அனைவரையும் பேஸ்புக்கில் இணைப்பதனை பிரதானமான இலக்காகக் கொண்டே தனது எட்டாவது பிறந்த நாளிலிருந்து பேஸ்புக் செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் சோதனைகள் பல கடந்து சாதனைகளையும் இமாலாய இலக்குகளையும் நோக்கி பயணிக்க காரணம் தற்போதைய தலைமுறையானது தொழில்நுட்பத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளமையே.

எனவே இந்த பேஸ்புக்கின் மூலம் சிறப்பான தகவல் பரிமாற்றங்கள் நடந்தால் அவை வரவேற்புக்குரியவையே! ஏனெனில் இந்த தகவல் பாரிமாற்ற வழக்கமே பேஸ்புக்கினை உருவாக்கி உலகிலேயே கவனித்தக்க மனிதர்களில் ஒருவராக 28 வயதேயான மார்க் ஷக்கர்பேர்க்கை மாற்றியுள்ளது.

-அமானுல்லா எம். றிஷாத்