சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, November 14, 2012

துப்பாக்கியும் விஜய் ரசிகர்களின் அலம்பலும்


இந்தப்பதிவில் பேச்சு வழக்கு கொஞ்சம் தூக்கலா இருக்கும்.
நடுநிலையான துப்பாக்கி விமர்சனத்திற்கு, துப்பாக்கி - விமர்சனம் 
எனக்கொரு சந்தேகம் அது பதிவின் முடிவில் பார்க்க

ஆமாங்க விஜயின் துப்பாக்கி படம் பார்க்க கூடியமாதிரிதான் இருக்கு அதுக்காக தமிழ்சினிமாவை புரட்டிப்போடுற படம், வசூலில் ரஜினி மற்றும் அஜித் ஓப்பனிங்க தூக்கி சாப்பிடுற படம், ஸ்டைல் என்டா என்னவென்று கிளாஸ் எடுக்கிற படம் அது இதுன்னு இந்த ஆணி புடுங்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் அலம்பல் பேச்சு தாங்க முடியலடா சாமி.

இத்தனைக்கும் படத்தின் கதை இதற்கு முதல் 1000 தடவை அடிச்சுப் புழிஞ்சி துவைச்சிப்போட்ட கதைதான். என்ன விஜயகாந்த்தும் அர்ஜுனும் செங்சிக்கிட்டு இருந்த வேலையை சில வருடங்களாக செய்ய ஆளில்லை என்ற குறையை தீர்த்திருக்கிறார் விஜய் அவ்வளவுதான்.

கண்டிப்பா திரைக்கதை மட்டுமே படத்திற்கு வலுச்சேர்க்கிறது. மற்றபடி படத்தில் விஜய் மாஸ், பிச்சி ஒதறிட்டார் என்றோ சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. ஆனாலும் படம் ஓவரோலா நல்லா இருக்கு இதனாலேயே விஜய கலாய்க்க வேண்டாமென இம்முறை எல்லோரும் கொஞ்சம் மாரியாதை குடுத்தா வாங்கிட்டு போகாம வடிவேலு பாணியிலே நாங்க போவம் இல்ல இங்கேயே மல்லா...க்க படுப்போம் மற்றது நின்னு அடி வாங்குறவந்தாண்டா உண்மையான ரவுடி என அடம்பிடிச்சதாலதான் இந்தப் பதிவு அவசியமா போச்சு. உண்மையான விஜய் ரசிகர்கள் மன்னிச்சு...

இத்தனைக்கும் விஜயின் ஆதி தொடக்கம் நண்பன் வரையிலான ஏராளமான படங்கள் திரையரங்குகளுக்கு பதில் போஸ்டரிலியே 100, 200 நாட்கள் ஓட்டப்பட்டது. இது உலகத்துக்கே தெரியும். அதெல்லாம் பரவாயில்லை இப்போ இந்த துப்பாக்கி படத்திற்கு தியேட்டரில் கூச்சல் போட எஸ்.ஏ.சி 30 லட்சம் செலவு பண்ணி கூட்டம் சேர்த்திருக்கிறாராம். எல்லா அப்பனுங்களுக்கும் மகன் எம்.ஜி.ஆர் ஆகணும் என்ட ஆசை இருக்கும் ஆனா உங்க ஆசை ரொம்ப ஓவராத் தெரியல.

சரி இதெல்லாம் நமக்கெதுக்கு படத்திற்கு வருவோம். படத்தின் திரைக்கதையால் படத்திலுள்ள ஓட்டைகளை மறந்து மன்னித்து படம் நல்லா இருக்கு என்று பெருவாரியான கருத்துக்கள் வெளியானதும் வழக்கமான அலம்பல்களை ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். ரஜினின்னா தூசு அஜித்ன்னா பீசு சூர்யான்னா கேசு விஜய்ன்னாதான் மாசுன்னு ஏன் மத்தவங்களை கொலைவெறியாக்குறயள்?

வழக்கமாக நான் அடிச்சா நீ பீசுடா என்டு சொடக்கு போட்டு பேசுவார் விஜய் அப்போ படம் பார்க்க வந்த எங்களுக்கு என்ன தோணும்னா 'நீ நடிக்கிறத பார்க்க வந்த நாங்கெல்லாம் லூசுடா' என அது மட்டும் இந்தப் படத்துல இல்லை. அடுத்தது கொஞ்சூன்னு சைட்ல முடி வெட்டிட்டுட்டு கூளிங் கிளாஸ் போட்டிருக்கார் அது கூட எப்படி இருகுன்னா 'க்ர்ர்ர்.. முதல்ல அந்த கண்ணாடிய களட்டுடா' என்று சொல்லத் தோணுது.

விஜய பொறுத்தளவில் வித்தியாசமா நடிச்சிருக்கிறாராமா. இதுக்கு காரணம் உண்மையான விமர்சனங்களை நக்கலா வெளியிட்ட ஏனைய நடிகர்களின் ரசிகர்களின் வெற்றியே. இதனாலதான் கொஞ்சம் வித்தியாசமான விஜயை இந்த படத்தில பார்க்க முடிஞ்சது இது தெரியாம ஏன் விஜய் ரசிகர்கள், விஜய் மாதிரியே சொடக்கெல்லாம் போடுறாங்க.

இத்தனைக்கும் படத்தின் கதை சாதாக் கதை அதாங்க விஜய்காந்த் காஷ்மீரிலிருந்த கன்னியாக்குமரி வரைக்கும் விரட்டிப்புடிச்ச தீவிரவாதிய மும்பையில மட்டும் புடிச்சிருக்கார் விஜய். அதே முஸ்லிம் தீவிரவாதி, அதுக்குதவுற பாதுகாப்பு துணை துணை துணை செயலாளர் அப்பதானே அவர் புரமோசனுக்காக தீவிரவாதிக்கிட்ட போட்டுக்குடுக்கிற வேலையைச் செய்யலாம். எத்தனை படத்துல பார்த்திருப்போம். சீ.எம். ஆக மந்திரியாக தீவீவீரவாதிகளுக்கு உதவுறத.

இப்பவரைக்கும் ஹீரோயினோட நெருக்கமான சீன விடமாட்டேங்கிறாரே 
இந்த கதைக்கு விஜயை கொஞ்சம் பொருந்தச் செய்து திரைக்கதையில் சிறப்பாக நகர்த்தி வெற்றி பெற்றிருப்பது இயக்குனர் முருகதாஸ் மட்டுமே. நடிக்க வேண்டிய காட்சியொன்றில் (போத்தல கீழ் வழியா அனுப்பி ராணுவ வீரன கொலை செய்யுறதா சொல்லுற காட்சி) விஜய் நல்லாவே சொதப்புறார். சுட்டுப்போட்டாலும் டாக்டருக்கு நடிப்பு மட்டும் வராது. அதை முருகதாஸ் உணர்ந்து கொண்டு அந்த கட்டத்தை நல்ல சுருக்கமா முடிச்சி நம்மள காப்பாத்திட்டார்.

அப்ப விஜய் இதுல என்னதான் செய்யுறார் என்டா முருகதாஸ் சொன்னதுல பாதிய செஞ்சி படத்தை கேவலமாக்க பாத்திருக்கார். எப்பிடியென்டா நீங்க ஆணியே புடுங்க வேணா... எல்லாத்தையும் நான் பார்க்கிறன் சார் என்டு முருகதாஸ் சொன்னத வெச்சிட்டு பாதி ஆணி புடுங்கியிருக்கார் நம்ம டாக்டர். அவர்தான் ஆப்பரேசன் கிங் ஆச்சே!

ஒப்பனிங் சீன்ல ஒரு ஆளை தோக்கடிச்சிட்டு அவரை விஜயின் நண்பனா காட்டுற அலுப்படிக்கும் சீன் இன்னும் எத்தனை படத்துல வந்து தொலைய இருக்கோ. இயக்குனர்கள்தான் காப்பத்தணும். திருமலையில மோட்டர் பைக் ரேஸ்ல ஜெயிச்சிட்டு குத்தொன்னு போடுவாங்களே அதே மாதிரிதாங்க... எப்பா கேக்கும் போதே கண்ண கட்டுதானே!!!

படத்துல எக்கச்சக்க ட்விஸ்ட்டாம். அப்படி ஒரு மண்ணும் கெடயாது ஈசியா அடுத்த சீன கண்டுபிடிக்கலாம். ஒரு சீன் தவிர தங்கச்சிய கடத்திட்டு போனதும் (இது சத்தியமாக ஆரம்பத்துலய கணிச்சுடலாம்) நாய விட்டு கண்டுபிடிக்கிறது எதிர்பார்க்கல்ல. ஆனாலும் அதுவும் மும்பையிலுருந்து மூணாறு வரைக்கும் போய் கண்டுபிடிக்கிற அளவுக்கு நாய்க்கு முடியுமான்னு என்னை கேட்காதிங்க! அவ்வளவு தூரம் போகுதுங்க அந்த நாயி (சத்தியமா நாயத்தான் சொன்னன்)

இது தவிர படத்துல ட்விஸ்ட் என்று சொல்லுறவங்க கண்டிப்பா விஜய் பேனாத்தான் இருக்கும் ஏன்னா விஜய் பேனாகுறதுக்கு முதல் தகுதியே மூளை கொஞ்சம் மந்தமா இருக்க வேண்டியதுதானே.

கத்திக்குத்து, போத்தல் சண்டைக் காட்சி கருமம் நல்லாவே இல்லை ஏன்னா இதவிட பல மடங்கு ஸ்டைலிஸ்ஸா இந்த சீன பில்லா 2வில் அஜித் செஞ்சிட்டார்.

மிஷன் இம்போசிஸிம்பிள் வர்ர அந்த சிப் மேட்டர், வில்லனை வீட்டுக்குள்ள வெச்சி காரியம் பண்ற மேட்டர் (இது ஏற்கனவே பார்த்த டெக்னிக் எளவு என்ன படம் என்டு ஞாபகம் வந்துதொலையுதில்லை),  கில்லி மாதிரி க்ளைமேக்ஸ்ல வில்லன மாங்க மடையனாக்குற மொக்கை வேலை (இந்த சீன் வெள்ளைப் படத்துல கூட இருக்கு) இதெல்லாம் பரவாயில்லை.

ஏன்னா... பஸ்ஸில பிக்பொக்ட் அடிச்சனவே கண்டுபிடிக்க விஜய் முயற்சிக்கும் போது குண்டு கொண்டுவந்தவன் பஸ்ஸிலிருந்து ஏன் சம்மந்தமே இல்லாமல் ஓடனும்? அப்படி மட்டும் செய்யாம இருந்திருந்தால் குண்டும் ஒழுங்கா வெடிச்சிருக்கும் அப்போ பஸ்ஸோட சேர்ந்த விஜயும் செத்திருப்பார் நாமளும் தப்பி இருப்போம்.

அப்புறமென்ன படத்திற்கு கதை இல்லையென்டு படத்தை முடிச்சிருப்பாங்க. இந்த கொசுத் தொல்லைகளிடமிருந்த பேச்சும் வந்திருக்காது. இந்த இடத்திலதாங்க விஜய அறிவாளியாக்கப் போய் முருகதாஸ் முட்டாள் ஆகிடுறார். அதே இடத்திலதான் எனக்கும் சந்தேகம் வருது

என்ன எளவுக்குடா அவன் ஓடினான்?
ஓடி கொஞ்ச நேரத்துல குண்டு வெடிக்கும் என்டு தெரிஞ்சா ஏன் அவ்வளவு நேரமா பஸ்ஸிலேயே இருந்தார்ர்ர்ர்?
சரி... பிக்பொக்கட்தான் அடிக்கல்ல குண்டையும் பஸ்ஸில வெச்சிட்டார் அப்புறமும் எதுக்கு ஓடினார்ர்ர்?
சரி... தற்கொலைக் குண்டுதாரின்னா என்ன எளவுக்கு ஓடினார்ர்ர்ர்?
(ர்ர்ர்ர்ரு ரொம்ப டர்ர்ர் இருக்கோ?)

So படத்திற்கு ஆரம்பமே இல்லை பின்ன எதுக்கு முடிவு வரை பேசுவான். அதவிட்டுட்டு 15 நாள் பட்டினி இருந்த பிச்சக்காரனுக்கு சட்னியில்லா இட்லி கிடைச்மாதிரி 2004க்கு பிறகு விஜய் பேன்ஸுக்கு இந்தப்படம் கெடச்சிருக்கு விடுவனா மாமன். சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுறவங்களாச்சே....

ஆனாலும் வாயால கார் ஓட்டுறது, ஊர் விட்டு அடுத்த ஊர் ட்ரெய்னுக்கு பறக்கிறது, புள்ளட்ஸ விட வேகமாக இயங்குறது என இதுல எதுவும் இல்லாதது கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.


Wednesday, October 31, 2012

பாட்ஷா வெற்றியும் துப்பாக்கி தோல்வியும்


ரஜினியின் பாட்ஷா படம் மெகா ஹிட்டானதற்கும் அண்மையில் சில படங்கள் (ஓரளவு நல்லா இருந்தும்) தோல்வியானதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது இணையம் என்பதனை ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்றாலும் தகும்.

ஏனெனில் இணையப் பாவனை என்பது அந்தளவிற்கு எம்மிடையே பரந்துகிடக்கின்றது (என்ன பண்ண பேஸ்புக்கும் கூகுளும்தான் இணையம் என்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது). இதனால் ஏராளமான நன்மைகளும் கூடவே சில தீமைகளும் வளர்ந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும்; முடிந்தவரை நன்மைகளைப் பெற நாம் முயற்சிப்போம்.

வளர்ந்து நிற்கும் இணையத்தினால் இன்று தமிழ் இணையத்தளங்கள் மற்றும் ப்ளொக்கர்கள் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கவைதான். ஆனால் இந்த வளர்ச்சியானது தேவையான விடயங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தினால் பரவாயில்லை அதற்குப் பதில் சில பல விடயங்களின் வீழ்ச்சிக்கு காரணமாவதே வருத்தம்.

குறிப்பாக, மாட்டித்தவிக்கும் பிரதான அம்சங்களில் ஒன்றுதான் தமிழ்சினிமா. இணையத்தின் வளர்ச்சியால் பல தேவையான விடயங்களை அறிந்துகொள்ள ஒரு நடுநிலையாளனாய் இருந்து வந்த ப்ளொக்கர்ஸ் மத்தியில் இன்று பல்லாயிரக்கணக்கான ஈயடிச்சான் ப்ளொக்கர்ஸ் ஊடுருவியதில் பல படங்களுடன் சேர்த்து பல தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஈயடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் சொந்தச் சரக்கை எழுதும் ஒவ்வொரு ப்ளொக்கர்ஸுக்கும் வருத்தமே.

அந்த வகையில் இந்த வருடமும் கடந்த வருடமும் அதிகளவிலான தமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய இணையத்துடன் சேர்ந்து ஈயடிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்ததும் ஒரு காரணம். (தமிழ் பட நாயகர்கள் மற்றும் இயக்குனர்களிடையேயும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே அதிகம்தான்)

உண்மையில் ஓரளவு நல்ல படங்களையும் சிறந்த மொக்கை படங்களாக்கிய பெருமை பரந்தளவில் வெளியாகும் ஈயடிக்கும் விமர்சனங்களுடன குறித்த நடிகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுமே.


அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுக்கு எதிராகவும் அவர்களின் படங்களுக்கு எதிராகவும் குறி வைத்து பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்படுகின்ற குரூப்கள் அனைத்தும் ஒரு படத்தினை சாதாரணமாக திரையரங்கு களிலிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கு காரணமாகின்றது.

அண்மையில் இவ்வாறு வெளியான மயக்கம் என்ன, 3, சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என இந்த வரிசை மிக நீளமானது. இந்த படங்கள் எதுவும் படு மொக்கை திரைப்படங்கள் இல்லையென்றாலும் இணையத்தளங்களில் வெளியான மோசமான விமர்சனங்களே இப்படங்களை தோல்வியாக்கியது. (ஆனாலும் இந்த வரிசையில் இல்லாத சில படங்கள் ஓடவில்லை என்றாலும் போஸ்டரில் 100 நாட்கள் ஓடிவிட்டது... அது வேறு கதை)

உண்மையில் பாட்ஷா படமும் தோல்வியை சந்தித்திருக்கும், அப்போது இணையம் இருந்திருந்தால் ஏனெனில் பாட்ஷா படத்திற்கு ஏராளமான பத்திரிகைகள் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசியது பலருக்கும் நினைவிருக்கும் (தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சிக்கங்க). ஆனாலும் பாட்ஷா மெகா ஹிட்.

ஆனால் அன்று இணையம் வளர்ந்திருந்தால் ஈயடிக்கும் வல்லமை படைத்தவர்களும் ரஜினி ஹேட்டர்ஸ்ஸும் இணைந்து படத்தை துவம்சம் செய்திருக்கலாம் (பாபாவுக்கு நடந்த மாதிரி... ஆமா... பாபா நல்ல படமா? கெட்ட படமா?). ஏனெனில் நடிகர்களின் ஹேட்டர்ஸ் மற்றும் ஈயடிப்பவர்களை தாண்டி மக்களை திரையரங்குக்கு வரவழைப்பது அத்தனை கடினமான காரியம்.

இருப்பினும் சில மொக்கை படங்கள் விமர்சனங்களால் ஓரளவு தப்பித்தும் இருக்கிறது (இதுக்கு உதாரணம் வேணாமே... சிலர் மனம் வருத்தப்படும்).

அதேவேளை சில சமயங்களில் இத்தனை தடைகளையும் தாண்டி சில படங்கள் வெற்றிபெற்றுள்ளது. உதாரணமாக எதிர்மறையான பல விமர்சனங்களை கடந்து பில்லா ஒன்று, எஸ்.எம்.எஸ் போல வெகு சில படங்களே வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசை தொடர வேண்டும் அவை நல்ல படங்களாக இருந்தால்.

அந்த வகையில்  விரைவில் வெளியாவுள்ள துப்பாக்கி படத்திற்கும் விஜய்க்கும் எதிராக இன்று பேஸ்புக்கில் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது (இதெல்லாம் விஜய்க்கு புதுசா... ஏன்னா பேஸ்புக்கில் அதிகமா கலாய்க்கப்படுற நடிகர் இவர்தான் இத நான் சொல்லல்ல போய் பாருங்க). எனவே துப்பாக்கி ஒரு நல்ல படமாக இருந்தால் அதற்கெதிரான வேலைகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே!. (விஜய்க்கிட்ட இருந்து நல்ல படமா? நடக்காதே... இப்படியெல்லாம் சொல்லப்படாது)


ஏற்கனவே பாடல்கள், போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை தாரளமாக கிண்டல் செய்து எதிர்மறை எண்ணத்தையும் தோற்றுவித்துவிட்டனர். மேலும் படம் வெளியானதும் முதலாவது விமர்சனத்தை ஈயடிக்கவும் இணையத்தளங்கள் தயார். அந்த விமர்சனம் எதிர்மறை எனில் செத்தாண்டா சேகர் நிலைமைதான் துப்பாக்கி படத்திற்கும்.

எனவே ஈயடிக்கும் இணையத்தளங்கள் இனிமேலாவது வருகின்ற படங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி மேலும் ஈயடிக்கும் தொழில்நுட்பத்தை குறைக்க முயற்சி எடுங்க.

இப்போ தெரியுதா துப்பாக்கி எப்படி தோல்வியடைப்போகுதுன்னு... அப்ப பார்த்து சூதானமா நடந்துக்குறீங்களாண்ணா... கொஞ்சோண்ணு ஸ்லிப்பாச்சு சாங்குதாண்டியோவ்!!!

Wednesday, October 24, 2012

ரஜினியும் தமிழக அரசியலும்!


வண்டியோட சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
என்ற கண்ணதாசனின் கவி வரிகள் வாழ்க்கையில் எந்தளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு தமிழக அரசியலுக்கும் தமிழ் சினிமாவிற்குமான உறவில் உண்மை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.

அறிஞர் அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்திலிருந்து தமிழக அரசியலில் சினிமா துறையினரே ஆதிக்கம் செலுத்தி வருவதை யாரும் அறிந்திராமலில்லை. அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலிதா என வரிசையாக தமிழக முதலமைச்சர்களாக சினிமா துறையை சார்ந்தவர்களே ஆட்சியை கைப்பற்றி சாட்சியாகின்றனர்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கான பாதையில் எம்.ஜி.ஆர் வழி தனி வழியாகவே இருந்தது என்றால் ஆச்சரியம் ஏதுமில்லை. இவரின் ஆதிக்கம் இன்றளவிலும் தமிழக அரசியலில் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஜெயலலிதாவின் வெற்றியே பறை சாற்றி நிற்கின்றது.

இவரைப் பின்பற்றி அன்று முதல் இன்று வரை சினிமா நடிகர்கள் பலரும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் அந்தக்கனவு எந்த நடிகர்கருக்கும் நனவனாகமல் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தினை அடைந்தவுடன் கூடவே தமிழக முதல்வர் கனவும்நடிகர்களுக்கு ஆரம்பமாகிவிடுகிறது. காரணம் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளே. இதனாலேயே தமிழ் சினிமாவில் ஜெயித்த பலரும் தமிழக அரசியலிலும் களம் இறங்கி வந்தனர் இன்னும் வருகின்றனர்  மேலும் வரவுள்ளனர். இதில் முதல்வராக வெற்றி பெற்ற நடிகர்கள் எவருமே இல்லை.

எம்.ஜி.ஆர் சாதித்ததை ஒரு வெற்றிப்படத்தின் மூலம் சாதிக்க நினைப்பது எவ்வளவு நகைப்புக்குரிய விடயம் என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தான். இன்றைய தலைமுறை நடிகர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விடவா புகழ்பெற்ற நடிகர்களாக மாறிவிட்டனர்.

குறித்த காலப்பகுதியில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனாலும் சினிமாவில் கிடைத்த மக்கள் கூட்டத்தினால் அரசியலில் இவரால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டதே. இதுதான் எம்.ஜி.ஆருக்கும் ஏனனய நடிகர்களுக்குமான வித்தியாசம்.

சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிவாஜி முதல் ரித்திஸ் வரை எத்தனையோ நடிகர்கள், தங்களின் அரசியல் முகங்களைக் காட்டினர். இவர்களில் எத்தனை முகங்கள் வெற்றி பெற்றன என்றால் கேள்விக்குறிதான்!

இவ்வாறு நடிகர்கள் பலரும் தமிழக முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாலும் குறித்த சில நட்சத்திர அந்தஸ்து நடிகர்கள் அரசியலில் தங்களின் முகங்களைக் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழகத்தின் உச்ச நடிகர் அந்தஸ்து பெற்ற சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் குறிப்பிடத்தக்க நடிகர்.

தமிழக அரசியல் அலையில் ஒரு முறையல்ல ஒவ்வொரு முறையும் சிக்குபவர் என்றால் அது ரஜினி காந்த் தான். 1990ஆம் ஆண்டிற்கு பிறகு விரும்பியோ விரும்பாமலோ அரசியல் சாயம் ரஜினி மீது பூசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

'அம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்தக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது' என்று ரஜினி கூறியதன் பின்னர் அம்மா ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

சினிமாவில் வெற்றி பெற்ற அனைவரினாலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்த்திருக்கிறார் ரஜினி. ஏனெனில் இன்று வரை அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்ற கேள்விக்கு ரஜினியின் பதில் வருவேன் ஆனால் வரமாட்டேன் என்ற பாணியில் தான் அமைந்துள்ளது.

தமிழக மக்கள் இன்னுமொரு எம்.ஜி.ஆரைத்தான் எதிர்பார்க்கிறார்களே தவிர ரஜினியை அல்ல என அவருக்கு நன்கு தெரியும். இதனாலேயே என்னவோ 'கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது கஷ்டப்படாமல் கிடைக்கிறது என்றைக்குமே நிலைக்காது 'என்ற அவரது 'பன்ச்' வசனத்தினை படத்தில் மட்டுமல்ல அவரது அரசியல் வாழ்க்கையில் எடுத்தியம்புகிறார் போல தெரிகிறது.

ஆனாலும் ரஜினிக்கு அரசியலில் ஆசை இல்லை என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் 1990ஆம் ஆண்டிற்கு பின்னரான அவரது படங்களில் அதிகளவில் அரசியல் நெடி பறக்கும். பாடல்களிலும் தன் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருப்பினும் நேரடியாக இதுவரை அரசியல் பிரவேசம் குறித்து ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததே இல்லை.

இருப்பினும் ரஜினி பேசிய, சாமானிய மனிதனும் பேசக்கூடிய அரசியல் கருத்துக்களை பெரிது படுத்தியதில் தமிழக ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. 1996ஆம் ஆண்டில் ரஜினியின் வார்த்தையே ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்ற தொனியில் அன்று ஊடகங்கள் பலவும் ரஜினியின் அரசியல் வருகையின் எதிர்பார்ப்பை உணர்த்தின.

இதன் பின்னர் தமிழகத்தில் இடம்பெற்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளின் போதும் ரஜினின் பெயர் பெரியளவில் பேசப்பட்டது. காவேரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஓகேனல் குடி நீர்த்திட்டம் என வரிசையாக தமிழகத்தில் இடம்பெற்ற அனைத்து பிரச்சினைகளின் போதும் ரஜினியை அரசியலுக்குள் கொண்டு சென்றது.

மேற்படி குறித்த சில சமூக பிரச்சினைகளின் போது ரஜினி வெளியிட்ட கருத்துக்கள் சிலவற்றுக்கு தமிழக மக்கள், கேரள மக்கள் மற்றும் கன்னட மக்கள் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ரஜினி மன்னிப்புக் கோரி தனது பெருந்தன்மையினை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் தேர்தல்களின் போது ரஜினி யாருக்கு வாக்களித்தார் என்பது முதல் கொண்டு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் வெளிப்படையாகவே 1996ஆம் ஆண்டில் ரஜினி தனது ஆதரவினை தி.மு.க விற்கு வழங்கியதால் ஏற்றபட்ட குழப்பம் காரணமாக தேர்தல்களின் போது அவரது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதை சில காலம் தவிர்த்து வந்தார்.

பின்னர் 2004ஆம் ஆண்டில் தான் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க விற்கு வாக்களித்ததாக தெரிவித்து அரசியல் அலையை மீண்டும் ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் காலங்களின் போது சற்று அவதானமாகவே இருந்து வந்தார் ரஜினி.

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்சியில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில் 'சமூக பிரச்சினை சார்ந்த விடயங்களுக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைக்கிறார்கள்' என அஜித்தின் வெளிப்படையான பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டி ஆதரித்தார் ரஜினி. இதனால் மறுபடியும் அரசியல் சர்ச்சைகளில் மாட்டிகொண்டார். இருப்பினும் இதனை அரசியலாக்க முயன்ற பலரின் முயற்சிகளுக்கு கலைஞர் கருணாநிதியுடனான நட்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.

இவ்வலை ஓய்வதற்குள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ரஜனி வாக்களித்ததைப் படம் பிடித்து வெளியிட்டதனால் பெரும் பரபரப்பில் சிக்கித் தவித்தார். இவ்வாறு தமிழக அரசியலில் இவரது செயற்பாடுகள் தொடர் கதையானது.

இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ரஜினி எந்திரன் படத்திற்கு பின்னர் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசுவேன் எனக் கூறியிருந்தார். ஆனால் வழக்கம் போல எந்திரன் வெளியாகி ஓராண்டு கடந்தும் மௌனம் காத்தே வந்தார். இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிகிச்சைகளுக்கு பின்னர் பூரண குணமடைந்த நிலையில் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளும் ஆரம்பமாகின.
அதேவேளை சென்னையில் இடம்பெற்ற அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு ராகவேந்திரா மண்டபத்தை வழங்கியதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரபான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தது.

ஏனெனில் பொதுவாக ராகவேந்திரா மண்டபத்தில் தான் சம்பந்தப்படாத எந்த நிகழ்வுகளிலும் ரஜினி கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு அவர்களது தேவைகளை அறிந்து செயற்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தார் ரஜினி.

இது போதாதென்று உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவும் தயாராக இருந்தாராம் ரஜினி. ஆனால் தேவையில்லாத பரபரப்பு உண்டாகும் என்ற காரணாத்தால் ரஜினி கலந்து கொள்ளாமல் தவிர்த்தகாகக் கூறப்படுகிறது. மேலும் இம்முறை எழும் அரசியல் அலை கண்டிப்பாக தலைவரை அரசியல் எனும் கடலுக்குள் இழுத்துவரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனபோதும் ரஜினி வழக்கமான தனது மௌனத்தையே  இதுவரையிலும் பதிலாக்கிக்கொண்டிருக்கிறார். ரஜினியின் அரசியலும் சினிமாவும், முள்ளில் சிக்கிய சேலை போல  இருப்பதனால் பக்குவமாக அதனை பிரித்தெடுக்கவே முயற்சிக்கிறார். ஆனால் ரஜினியின் ரசிகர்களின் ஆதங்கமோ, விஜயகாந்தினால் எதிர்க்கட்சித் தலைவராக வர முடியுமென்றால் ரஜினியால் முடியாதா? என்பதே.

மேலும் புதிய கட்சியின் சேவை தமிழகத்திற்கு தேவைதானா என ரஜினி சிந்திப்பதாக வைரமுத்து பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தற்போது கருணாநிதியின் வீழ்ச்சி ரஜினிக்கு எழுச்சியாகக் கூட அமையலாம் என்பதால் இனிவரும் தேர்தல்களில் ரஜினியின் முடிவு அரசியலுக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு என எதிர்பார்க்கலாம்

விரைவில் எம்.ஜி.ஆர் வழியில் அரசியலில் களம் புகுந்து தமிழக ஆட்சியை கைப்பற்ற முனைவாரா? இல்லை தன் பாணியில் விரலை மேலே உயர்த்திவிடுவாரா? காலத்தின் மாற்றத்தில் ரஜினிதான் பதில் கூறவேண்டும்.

-அமானுல்லா .எம்.றிஷாத் 




Monday, October 8, 2012

அதிகரித்த மாற்றானின் உத்தரவாதத்தொகை


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள மாற்றான் திரைப்படத்தின் அதிகுறைந்த உத்தரவாதத் தொகையாக 50 லட்சம் வரை கொடுக்க திரையரங்க உரிமையாளர் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கே.வி. ஆனந்த் - சூர்யா கூட்டணியின் உருவாகியுள்ள மாற்றான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதனால் திரையரங்க உரிமையாளர்கள் படத்திற்கான அதிகுறைந்த உத்தரவாதத் தொகையினை வழங்க சம்மதித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

அண்மையில் பல பெரிய பட்ஜெட் படங்களில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமையினால் இனி எந்த படத்திற்கு மினிமம் கெரண்டி எனப்படும் உதிகுறைந்த உத்தரவாதத்தொகை கொடுக்கமுடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த போதிலும் தற்போது மாற்றான் படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பினால் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் 50லட்சம் வரை வழங்க சம்மதித்துள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் 10லட்சம் வரை கொடுத்து படத்தினை வாங்க முன்வந்துள்ளனராம். இதற்கு முதல் இந்தளவு பெரிய தொகையில் உத்தரவாதப்பணம் கொடுத்து ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது தற்போது சூர்யாவின் படத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, October 4, 2012

அலெக்ஸ் பாண்டியன் ட்ரெய்லர் வெளியீடு : ரஜினியுடன் மோதப்போகும் கார்த்தி

படப்பிடிப்பில் இருக்கும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. படத்தின் டீசர் ட்ரெய்லர் அலெக்ஸ் பாண்டியன் திரைப்படம் பூரண மசாலா திரைப்படம் என்பதை நிச்சயப்படுத்துகின்றது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ள இப்படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு பேட் போய் எனப் பெயரிட்டுள்ளதோடு படத்தினை டிசம்பர் மாதம் 14ஆம் திகதி திரையிட படக்குழுவினர் திட்டமிட்டு மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.

ஆரம்பத்திலிருந்து தீபாவளி வெளியீடாக விஜயின் துப்பாக்கியுடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் தற்போது டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது. இதனால் கார்த்தி இம்முறை நேரடியாக ரஜியின் கோச்சடையானுடன் மோதுவதற்கு தயாராகிவிட்டார் காரணம் கோச்சடையான் ரஜினியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லுப்போன பிறகு பக்கோடா சாப்பிட முடியாது எதுக்கும் பார்த்துக்கங்க கார்த்தி!


Monday, September 3, 2012

Sivaji - Tamil Movie


Directed byS. Shankar
Produced byM. S. Guhan
M. Saravanan
Written byS. Shankar
Sujatha Rangarajan
StarringRajinikanth
Shriya Saran
Suman
Vivek
Manivannan
Solomon Pappayya
Music byA. R. Rahman
CinematographyK. V. Anand
Editing byAnthony Gonsalves
StudioAVM Studios
Distributed byAVM Productions
(India)
Pyramid Saimira
(Malaysia)
Ayngaran International
(Worldwide)
Release date(s)
  • June 14, 2007
(Worldwide)
  • June 15, 2007
(India)