Total Pageviews

Monday, May 20, 2013

'ஜெகஜால புஜ பல தெனாலிராமன்' கௌம்பிட்டான்யா... கௌம்பிட்டான்யா... இன்று முதல் படப்பிடிப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் வடிவேலு


அரசியல் பிரச்சினைகளால் சிக்கித்தவித்துவந்த வைகைப்புயல் வடிவேலு இன்று படப்பிடிப்புக்களில் கலந்துகொண்டு ந(கை)டிக்கப்போகிறார்.

நகைச்சுவையால் கொலிவூட்டை ஆண்டுகொண்டிருந்த வைகைப்புயல் தமிழகத்தை ஆண்டு
கொண்டும் அதனை எதிர்த்துக்கொண்டும் இருக்கும் கட்சிகள் கடந்த 2 ஆண்டுகளில் பட வாய்ப்புகள் இன்றி தவித்துவந்தார்.

இதனால் இரட்டை அர்த்த வசனங்களொல்லாம் நகைச்சுவையாக புகழப்பட்ட வேண்டிய காலத்தின் கொமடித் தேவையாகிவிட்டது.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஸ், கல்பாத்தி சுரேஸ் ஆகியோர் தாயாரிப்பில் உருவாகவுள்ள 'ஜெகஜால புஜ பல தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் கொலிவூட்டில் நுழையவுள்ளார் வடிவேலு.

இப்படத்தில் வடிவேலு இரட்டை வேடமேற்று கொமடி இன்றி காய்ந்து போய் கிடக்கும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனையவிட இன்று  முதல் படப்பிடிப்புக்கு கௌம்பிட்டான்யா... கௌம்பிட்டான்யா...

By AM.Rizath/Metronews