Total Pageviews

Tuesday, May 21, 2013

சம்பளம் இல்லாமல் வாய்ப்புக்காக நடிக்கிறாரா விக்ரம்?

ஐ, மரியான், வல்லினம் என ஒரே நேரத்தில் 3 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இப்படங்களில் விரைவில் வெளியாகவுள்ள தனுஷின் மரியான் மற்றும் நகுலின் வல்லினம் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பில்லையாம். இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் புதிய யுக்தியை கையளாவுள்ளாராம்.

அதாவது இப்படங்களை வாங்கினால் அவர்களுக்கு விக்ரம் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ஐ படத்தினை தருவாக கூறி இப்படங்களை வியோகிக்க முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில் ஐ படத்தில் விக்ரமிற்கு இன்னும் சம்பளம் பேசவில்லையாம். மாறாக உங்கள் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளதால் இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள். படம் வெற்றியடைந்தால் உங்களுக்கு அதில் குறித்த ஒரு சதவீதமான இலாபத்தை சம்பளமாக தருகிறோம் என விக்ரமிடம் கூறப்பட்டுள்ளதாம்.

இதற்கு சம்மதித்தே விக்ரமும் நடித்து வருகிறாராம். இதேவேளை ஐ படத்தின் பட்ஜெட் 100 கோடி என தாயரிப்பு மற்றும் நடிகர் தரப்பில் கூறப்பட்டாலும் இயக்குனர் ஷங்கரோ 80 கோடிதானே என்று கூறுவதாக கொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடக்கடவுளே விருது நடிகருக்கு இப்படியொரு சோதனை!

By: Metronews