சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, January 9, 2013

டீ.ரீ.எச்.இல் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி, நாளை இதுவே பொதுவழியாகும் : கமல்ஹாசன்


டீ.ரீ.எச.இல் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி, நாளை இதுவே பொதுவழியாகும் எனவே 'விஸ்வரூபம்' திரைப்படம் நிச்சயம் டீ.ரீ.எச்.இல் வெளியிடப்படும் என உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாவே விஸ்வரூபம் படத்தின் டீ.ரீ.எச் வெளியீடு தொடர்பிலான பிரச்சினை இந்திய சினிமாக உலகில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

குறித்த திட்டத்தினை ஆரம்பித்த உலக நாயகனுக்கு ஆரம்பம் முதலே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து நெருக்கடி வந்துகொண்டே இருக்கிறது. அத்துடன் இவர்களிடையேயான பேச்சுவார்த்தைகளும் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இப்பிரச்சினையால் கமல் ஹாசனினால் திட்டமிட்டபடி செயற்பட முடியாமல் 'விஸ்வரூபம்' படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போகிறது. இந்த பொங்கலுக்கு வெளியாகவிருந்த விஸ்வரூபம் படத்திற்கு திரையரங்க உரிமையாளர்களின் ஆதரவின்மையால் திரையரங்குகள் பற்றாக்குறை ஏற்பட மீண்டும் காலவரையின்றி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த உலக நாயகன், டீ.ரீ.எச்சில் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி, நாளை இதுவே பொதுவழியாகும். 'விஸ்வரூபம்' என் பொருள்.. என் அங்காடி.. இதை எப்படி விற்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

விஸ்வரூபம் திரையிடப்படும் திகதியை யார் யாரோ அறிவிக்கிறார்கள், நான் தான் திகதியை அறிவிப்பேன். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. விஸ்வரூபம் வெளியாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் இப்படம் நிச்சயம் டீ.ரீஎச்சில் வெளியிடப்படும் இதற்கு அரசும் உத்தரவளிக்கும் என நம்புகிறேன். இது மட்டுமின்றி நாளை மக்கள் தங்களது கையடக்கத்தொலைபேசியில் படத்தை பார்க்க விரும்பினால் அதிலும் வெளியிடுவேன்.

நியாயமான முறையில் விஸ்வரூபம் படத்தினை வியாபாரம் செய்துள்ளேன். இதனால் திரையரங்குகளுக்கு எதுவித பாதிப்புமில்லை என்பதுடன் நே‌ர்மையான தொ‌ழி‌ல் நட‌த்து‌ம் தம‌க்கு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌க்க‌க் கூடாது எ‌ன்று‌ம் கம‌ல்ஹாச‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

செப்பா இப்பவே கண்ணக்கட்டுதே....

நன்றி - AM. Rizath/வீரகேசரி

கமல் ஒரு பக்கம் போக... பிரச்சினை ஒரு பக்கம் போகிறது

Thursday, December 6, 2012

கமல் ஒரு பக்கம் போக... பிரச்சினை ஒரு பக்கம் போகிறது


இந்திய சினிமாவில் புதிய யுக்தியை அறிமுகம் செய்ய முயற்சிக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் சர்ச்சை நாயகனாகிவிடுவார் போல தெரிகிறது தற்போதைய நிலைமைகள்.

தமிழ் சினிமாவில் புதுமைகளை புகுத்தும் உலக நாயகன், இம்முறை தான் தயாரித்து இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தினை திரையரங்குகளில் வெளியிட 8 மணித்தியாலங்களுக்கு முன்பதாகவே டீ.ரீ.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

இதற்காக விஸ்வரூபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையை முக்கியமான டீ.ரி.எச் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்நிறுவனம் ஏனைய டீ.ரீ.எச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விற்பனை செய்யவுள்ளது. இதில் கிடைக்கும் இலாபத்தை கமலும் டீ.ரீ.எச் நிறுவனமும் பகிர்ந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாம்.

தொடரும் எதிர்ப்புக்கள் 
இத்திட்டத்தின் மூலம் திருட்டு வீசீடி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பது கமலின் நம்பிக்கை. ஆனாலும் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம்கள் மத்தியில் விஸ்வரூபம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளும் வலுப்பெற்று வருகின்றது.

இசை வெளியீடு
ஆனாலும் கமல் இவற்றையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இசை வெளியீட்டில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றார். சென்னையில் வை.எம்.சீ.ஏ திறந்த வெளி அரங்கிலும் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையிலும் இசை வெளியீட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார் உலக நாயகன்.

விஸ்வரூபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கொள்வனது செய்துள்ள ஜெயா டீவியே இசை வெயியீட்டு ஒளிபரப்பு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.

கமல் விளக்கம்
இசை வெளியீடு ஒரு பக்கம் செல்ல பிரச்சினைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் இந்நிலையில், இன்று டீ.ரீ.எச் தொழில் நுட்பத்தில் வெளியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டினை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதையும் அது தயாரிப்பாளரின் உரிமை என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்திச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முதலும் ஏகப்பட்ட சமாச்சாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் கமல். அப்போது அவர் சந்தித்த பிரச்சினைகளை விட இது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதி. ஏன்னா அவர்தான் உலக நாயகனாச்சே

வீரகேசரியில் பகிரப்பட்டது - http://www.virakesari.lk/article/cinnews.php?vid=147


Monday, December 3, 2012

இறுவட்டையும் வெளியிடுகிறார் உலக நாயகன் : இதுவொரு விஸ்வரூப முயற்சி


தமிழ்சினிமாவில் அவ்வப்போது விஸ்வரூப மாற்றத்தை கொண்டுவருபவர் என்றால் அது உலக நாயகன் கமல் ஹாசன் மட்டுமே. அது நடிப்பாக இருந்தாலும் சரி தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி.

அந்த வகையில் கமல் ஹாசனே தயாரித்து இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தினை திரையரங்கில் வெளியிடும் அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் உரிமையை வழங்கி வெளியிட புதியதோர் முயற்சியை திட்டமிட்டுள்ளார் உலகநாயகன்.

மேலும் டிவீடி, இன்டர்நெட் உரிமைகளையும் மொத்தமாக விற்பனை செய்யவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் உரிய தொகை கிடைத்து விடும் அதேவேளை திருட்டு விசீடி, டீவீடீக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது உலகநாயகனின் யுக்தி.

ஆனால் திரையரங்கங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பும் இம்முயற்சிக்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. மேலும் வழக்கம் போல எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் தமிழ்சினிமாவிலுள்ள சிலர் இதை பற்றி அலட்டிக்கொண்டதாக இல்லை.

இருப்பினும் உலக நாயகனும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதுவே உண்மை. காரணம் இதற்கு முதலும் கமலின் புதுமையான கருத்துக்களுக்கும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்த பலர் அவற்றின் வெற்றிகளுக்கு பின்னர் ஆதரவாக பேசி கைதட்டல் வாங்கிய சம்பவங்கள் ஏராளம் உண்டு.

தொலைக்காட்சிகள் சனல்கள் ஆரம்பமானபோதும் கூட இது சினிமாவிற்கு ஆபத்து என்று சினிமாக்காரர்கள் அர்த்தமில்லாமல் பேச கமல் மட்டுமே ஆதரவாக பேசினார். தற்போது திரையரங்கில் ஈயடிக்கும் படங்களைக்கூட 100 கோடி 1000 கோடி வசூலை நோக்கி என்று கூவி கூவிக் ஓரளவு கூட்டம் சேர்ப்பது இந்த தொலைக்காட்சிகளினூடவே என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதே போலவே கமல் ஹாசன் தன் சொந்தப்படத்தில் எடுக்கும் குறித்த முயற்சி வெற்றிபெற்றால் அதனை ஈயடிக்கவும் பெரிய கூட்டமே வரிந்து கட்டி நிற்கும் என்பது மட்டும் இப்போதைக்கு திண்ணம்.

விடா முயற்சி விஸ்வரூவ வெற்றி எனவே தீயா வேலை செய்வார் மிஸ்டர் உலகநாயகன்!