சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Sunday, November 18, 2012

ஏன் ஐன்ஸ்டைனின் மூளைக்கு அபார திறமை? : மூளையைக் குடையும் தற்கால விஞ்ஞானிகள்


20ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உலகில் தோன்றிய மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். (நாங்கெல்லாம் அறிவாளிகளாக இனங்காணப்படல்லை என்று சிலர் இன்று வரையில் சந்தர்பங்களை உருவாக்க முயற்சித்திக்கொண்டிருக்கிறார்கள்)

ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையிலும் இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் என்னவென அவரது மூளையை வைத்து இப்போதைய விஞ்ஞானிகள் தங்களது மூளையை கசக்கிப் பிளிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இன்றுவரையில் ஐன்ஸ்டைனின் அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

ஐன்ஸ்டைனின் மரணத்திற்கு பின்னர் அவரது மூளை தோம்ஸ் ஹார்வே எனும் மருத்துவரினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என ஏற்கனவே பல சர்ச்சைகளைத் தோற்றுவித்தது ஐன்ஸ்டைனின் மூளை.

இந்நிலையில் தற்போது ப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான டீன் பாக் தலைமையிலான குழுவினர் தங்களது மூளைகளைக் குடைந்து ஐன்ஸ்டைனின் அறிவுக் கூர்மைக்கு அவரது மூளையின் சில உட் பகுதிகளே காரணமென தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற ஐன்ஸ்டைனுடைய மூளையின் 14 அரிய புகைப்படங்களைக் கொண்டு சுமார் 85 சாதாரண மனிதர்களுடைய மூளையுடன் ஒப்பிட்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

ஐன்ஸ்டைனின் மூளையின் மொத்த அளவு, நிறை மற்றும் வடிவம் சாதாரண மனித மூளையைப் போன்றதே எனினும் மூளையின் உட்பிரிவுகளான prefrontal, somatosensory, primary motor, parietal , temporal and occipital cortices ஆகியன அசாதாரணமாக உள்ளதாகவும் இதுவே அவரது அபார அறிவுத்திறனுக்கான காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐன்ஸ்டைனின் மூளை தொடர்பாக டீன் பாக் குழுவினரின் ஆராய்சியான The cerebral cortex of Albert Einstein: a descriptioன் and preliminary analysis of unpublished photographs  தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய மூளை குடையப்போய் நம்ம மூளை குழம்பாமல் இருந்தால் சரி!



Why Albert Einstein's brain is best?  


Albert Einstein, The great scientist of 20th centaury is the most intellectual human ever in the world, studies believe so far. Why Einstein's brain different than others? experts have still been trying to find the answer since his death with no proper answer.

Einstein brain had been stolen by Dr. Thomes harway and used for research without official permission. It became big issue and criticized by many in that days.

Meanwhile ,


Tuesday, October 16, 2012

குட்டிக்கதை அதுவும் ஐன்ஸ்டீன் பற்றி... அவருக்கேவா இப்படி நடந்தது?

இதற்கு முதலும் ஏராளமான குட்டிக்கதை கேட்டிருப்பீங்க ஐன்ஸ்டீனைப் பற்றிய கதைகளும் கேட்டிருப்பீங்க எனவே இந்த கதை உங்களுக்கு தெரிந்திருந்தால் இந்தப் பாவியை மன்னியுங்கள்.

ரஜினி சொன்னா மட்டும் கேட்கிறீங்க (அது ரஜினி இப்படியெல்லாம் மைண்ட் வொய்ஸ் வரப்படாது) அப்படியே நான் எழுதுவதையும் கொஞ்சம் வாசிச்சிக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக கருதப்படுபவர் அல்பேட் ஐன்ஸ்டீன். சார்புக்கொள்கை விளக்கும் E=mc2 என்ற சமன்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே தன்பக்கம் ஈர்த்தவர். (இந்த ஒன்னுதான் உருப்படியாக அறிவியலில் பழம் திண்டு கொட்டை போட்வர்களுக்கும் விளங்கியது ஏனையவை இன்னும் ச்சீசீ... அந்தப் பழக்கம் புளிக்கும் என்றே இருக்கிறது)

இதற்காக நோபல் பரிசை வாங்கி அந்த விருதுக்கு பெருமை சேர்த்தார். ஆனாலும் இவரின் அரிய கண்டுபிடிப்பு அணு குண்டையும் பல உயிர்களையும் காவுகொள்ள காரணமானது அவருக்கும் வருத்தமே. மனித குலத்திற்கு நன்மை பயக்க வேண்டிய அவரது கண்டுபிடிப்பு அழிவுக்கு இட்டுச்செல்ல எவ்வகையிலும் ஐன்ஸ்டீன் காரணமில்லை என்பது மட்டும் உறுதி.

இனி அந்த ஐன்ஸ்டீன் குட்டிக்கதைக்கும் அது தருகின்ற பாடத்திற்கும் (எது பாடத்திற்கா?) போவோமா!

ஒரு ஊர்ல.... ஐய்யய்யோ வழக்கம்போல ஆரம்பிச்சிட்டன்!!! பரவாயில்லை.... அப்படித்தான் ஆரம்பிக்கணும். ஒரு நாள் ஐன்ஸ்டீன், தான் குடியிருந்த சாலை வழியாக சென்றிருக்கிறார்.

வழக்கமாக அவர் பயணிக்கும் பாதை என்றாலும் அவரது கவனம் ஒரு போதும் அதற்கு முதல் அந்த வீதியிலமைந்திருந்த அப்பிள் தோட்டத்தின் பக்கம் போயிருக்கவில்லை. ஆனால் ஒரு நாள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

இநிலையில் அந்த வழியாக வந்த சிறுவன் தன்னை அவதானிக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆழ்ந்த சிந்தனையிலிருந்து சற்று வெளியே வந்த ஐன்ஸ்டீன் சிறுவனைப் பார்த்து 'இந்த அப்பிள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களிலும் அப்பிள் காய்த்திருக்கிறது ஆனாலும் (மரத்தைக்காட்டியவாறே..) இந்த ஒரே ஒரு மரத்தில் மட்டும் ஒரு அப்பிள் கூட காய்க்கவில்லையே அது ஏனென சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்' என்றார். (ஏன் அந்த சிறுவனிடம் ஐன்ஸ்டீன் இதனை கூற வேண்டும் என எடக்குமொடக்கா சந்ததேகம் வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல (அதுசரி அதென்ன எ.மொ!!! எப்பூடி...))

இனி அங்கு சம்பாசனைகள் இவ்வாறு அமைந்துள்ளது,
சிறுவன் : அதற்கான காரணம் எனக்கு தெரியும்...
ஐன்ஸ்டீன் : அப்படியானால் காரணத்தை சொல் உனக்கு பணம் தருகிறேன்
சிறுவன் : பணத்தை கொடுத்தால் பதில் சொல்வேன்
என்று சொல்ல பணத்தை கொடுத்துவிட்டு மறுபடியும் ஐன்ஸ்டீன் காரணத்தை கேட்டுள்ளார்.

சிறுவனோ ஐன்ஸ்டீனை விட்டு சற்றே தூரம் சென்று 'அது அப்பிள் மரம் இல்லை ஓக்கிட் மரம்' என்று சொல்விட்டு சிரித்துக்கொண்டே சிட்டாய் பறந்திருக்கின்றான் சிறுவன். பிறகென்ன ஐன்ஸ்டீனோ வடை போச்சே பாணியில் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார். (இதிலிருந்து என்ன விளங்குது (அஆ...) எந்தவொரு விஷயத்தை ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லைன்னா இப்டித்தான் நடக்கும்)

உண்மையில் இந்தச் சம்பவம் நடந்ததா இல்லையா என்பது உறுதியாக தெரியாது. ஐன்ஸ்டீனைப் பற்றிய குட்டிக்கதைகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் இந்தக் கதையிலிருந்து படிப்பினைகளை மட்டும் எடுத்துகொள்ளலாம்.

ஐன்ஸ்டீனாக இருந்த போதும் சின்னவொரு விடயத்தை பெரிதாக எண்ண ஆரம்பித்தால் சிறியவர்கள் என்ன மூளை இல்லாதவனிடமும் தோற்றுப்போகலாம். எனவே எந்தவிடயமானாலும் ஆழமாக சிந்திப்பதை விடுத்து இலகுவாக சிந்திக்கும் போது விடைகளும் இலகுவாவே இருப்பது எமக்கும் புரியும்.

ஐன்ஸ்டீனுக்கேவா இது தெரியாமல் போச்சு! அதாங்க எல்லாம் தெரிஞ்ச ஆளே இல்லை ஆனால் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் என்று நினைக்கிற ஆளுங்க இருக்கிறார்கள்... அவர்கள் வரவேற்கப்படவேண்டியவர்களே!