சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Wednesday, May 11, 2016

அப்போது விக்கிலீக்ஸ், இப்போது பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ்

உலகயே அதிர்ச்சிக்குள்ளாக்கி தற்போது பேசு பொருளாக மாறியுள்ள பனாமா பேப்பர்ஸ் எனும் பணப்பதுக்கலுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்கள் ஓப்சோர்லீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய அதே அளவிலானதொரு அதிர்ச்சியையே இந்த பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியுள்ளது.




முழுமையான தகவலுக்கு தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியைப் பார்க்கவும்.














Wiki leaks then, The Panama Papers now

The Panama papers create shocking waves all over the word as revealed the names that connect with the most controversial panama papers by The international consortium of investigation journalism via offshore website, last night.


for more information watch this video.

Tuesday, May 10, 2016

Worst Horror Movies of 2016

-AM. RIFFAZ

Horror movies have existed for more than a century. Hollywood has produced many horror movies in the past that have really terrified us.
Movies like Nightmare on Elm Street, The Babadook, The Ring, Omen and many other films that have really makes the hair on the back of your neck stand up!

As a horror movie fan I am so disappointed about what Hollywood has produced in the last few years.
The number of horror movies is increasing year by year but most of these films fail to induce the audience's primal fears.

Worst Horror Movies I Watched

Let's forget the past. I never miss a horror movie. From the beginning of 2016 until this date I did not miss a movie which was released under the horror genre.

After watching these movies, I now want to help you save some time and money by listing the three worst horror movies I’ve watched from the beginning of this year – January 01, 2016 – until now - April 26, 2016.

So you can stay away from these worst horror movies and enjoy your time watching or doing something else.

01. Little Dead Rotting Hood

Produced by: David Michael Latt, David Rimawi, Paul Bales
Directed by: Jared Cohn
Starring: Eric Balfour, Bianca Santos, Heather Tom, Romeo Miller
Release Date: 5 January 2016 (USA)

This was surely my bad luck. My 2016 horror movies’ journey started with this low budget silly movie. Little Dead Rotting Hood was released in the first week of January 2016. Actually, it was the movie title that made me want to watch this ‘garbage’.

Right after the movie’s opening scene I felt this was going to be nothing but a waste of time. And, it was!
The movie was like a short home movie clip made by some kids. Actually, nowadays kids make some good short movies that are much better than this Little Dead Rotting Hood.

What makes this movie one of the worst? Everything except the story. I kind of like the story.
Everyone knows the classic story of Little Red Riding Hood. They changed the story and took only just a single slight line from the story we knew.

This list includes the worst horror movies I watched in January and February 2016


Thursday, May 5, 2016

பேர்கர் சாப்பிடுவது எப்படி? ‪அதுக்கு ஒரு ‪#‎பொறியியலாளர்‬ வேண்டும்

இந்த செய்தியை மட்டும் பார்த்துவிட்டு தூங்கலாம் என ஆரம்பமாகின்ற எனது இரவு நேர இன்டர்நெட் பயன்பாடு எப்போதுமே அதிகாலையில் சம்பந்தமே இல்லாமல் எவ்வாறு அணுகுண்டு தயாரிப்பது? என்பது போன்ற தேடல்களுடனே முடிவது வழக்கம். அப்படித்தான் நேற்றும்.
பேர்கர் எப்படி சாப்பிடுவது? இதற்கென்று ஏதாவது முறைகள்
இருக்குமா? என நானும் எனது பத்திரிகை ஆசிரியரும் எப்போதோ பேசிக்கொண்டது திடீரென ஞாபகத்துக்கு வந்தது. பிறகு என்ன? கூகுளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என நினைத்து கேட்டுப் பார்த்தேன். how to eat burger? பேர்கர் சாப்பிடுவதில் விஞ்ஞானமும் இருக்கிறது என்கிறார் கூகுள் நண்பன்.

இப்படித்தான் பேர்கர் சாப்பிட வேண்டும் என்ற எந்த நியமமான முறையும் இல்லை. கையினால் சாப்பிடுவது அறிவார்ந்தது. ஆனால் பேர்கரின் சோர்ஸ் மற்றும் டொப்பிங் போன்றவை கையில் வடிய சாப்பிடுவது பேர்கர் உண்ணுவதில் ஒரு பகுதியல்லவாம்.

பெரிய பேர்கர்ளைக் கூட சிந்தாமல் சாப்பிடுவது எப்படி? என திரவ இயக்கவியல், பொறியியல் மற்றும் பல் மருத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்ற 3 வல்லுநர்கள் 4 மாதங்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். தமது ஆய்வு குறித்து ஹொன்மா டிக்கா எனும் ஜப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முப்பரிமாண படங்களுடன் விளக்கமளித்துள்ளனர்.
பெரும்பாலானவர்கள் பெரு விரல்களினால் பேர்கரின் கீழ்பகுதியையும் ஏனைய 8 விரல்களால் மேல் பகுதியையும் பிடித்து கிடையாக வைத்தே சாப்பிடுகின்றனர். இதனால் அதிகளவிலான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு சிந்துகின்றது.


பெருவிரல்கள் மற்றும் சிறுவிரல்களால் பேர்கரின் கீழ் பகுதியையும் ஏனைய விரல்களால் மேல் பகுதியையும் பிடித்து நிலைக்குத்தாக சாப்பிட வேண்டும். அத்துடன் சாப்பிடத் தொடங்கு முன்னர் வாயை அகலத் திறந்து வோர்ம் அப் செய்து கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு பேர்கர் சாப்பிட அடர்த்தி, திணிவு, அமுக்கம். விசை எவ்வளவு விஞ்ஞானம். இனி பேர்கர் சாப்பிடப் போறப்போ திரவ பொறியிலாளரை கையோட கூட்டிக்கிட்டு போங்க.

_________________________________________________________________________________

How to eat Burger? : you will need engineer for it!

It is going to be a last news for this night. that's how my night time internet surfing starts everyday. but it ends always with strange matters like how to make nuclear?, in the early morning. same thing happened last night as well.
My editor (News paper) and me discussed one day that  How to eat burger? is there any standard way to eat burger?. suddenly I got remember that. then what??? I felt that Google knows everything, lets me ask him.
There is no standard method to eat burger but there is science. Eating burger with hand makes sense.
Japanese television show Honma Dekka!? had three researchers, experts in fluid mechanics, engineering, and dentistry try to figure out the best way to hold and eat a large hamburger. Apparently, they spent four months researching this. For science.
The researchers did a 3D scan of a hamburger, trying to figure out how the particles interacted while holding a large hamburger. Using the data, they showed that the typical way to hold a burger, thumbs on the bottom and fingers on top results in pushing the contents of the burger out of the buns.


The thumbs and the pinkies are on the bottom. The middle three fingers on each hand are on the top. As you can see the burger is divided visually into equal parts. If the burger is held uniformly, then its contents shouldn't spill out of the burger's backside.


Note that it's important not to hold the burger too tight. Doing so could cause the buns to be crushed, and the contents to spill out. Also, the dental expert recommended warming up the muscles in your mouth before eating a big hamburger by opening and closing it a few times.


So, Hereafter when you go to eat burger, please try to hire a engineer to avoid spills & enjoy your burger.


Thursday, January 16, 2014

என்னை விரும்பாதவர்களையும் நான் விரும்புகிறேன் : டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜய்


நடிகர் விஜய் டுவிட்டவரில் ரசிகர்களுடன் இன்று சமூகவலைத்தளமான டுவிட்டரில் உரையாடியாடினார். டுவிட்டரில் அவரது உத்தியோகபூர்வ ரசிகர் பக்கத்தினூடாகவே அவர்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.



ஜில்லா வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனது கருத்துகளையும் ரசிகர்களின் இதன்போது மக்களுடன் பகிர்ந்துகொண்டார். விஜயின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.



இதன்போது ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதில் விஜயை வெறுப்பவர்களைப் பற்றியும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்இ அஜித் - விஜய் சண்டை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.



ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்இ 'அஜித் - விஜய் சண்டைகளை கைவிடப்பட வேண்டும் அவை ஆரோக்கிமானதல்ல. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என்னை விரும்பாதவர்களையும் தான் விரும்புகிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி' என விஜய் கூறியிருந்தார்.



இவரது கருத்துகளுக்கு டுவிட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தன. ரசிகர்கள் பலரும் பாராட்டியதோடு கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இதேவேளை சிலர் அநாகரிமான முறையில் விஜயை தகாத வார்த்தைகளிலும் திட்டினர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாடு விஜய் நாகரீமாக நடந்துகொண்டு சரியான முறையில் கையாண்டிருந்தார்.



இக்கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு முன்னர் இது குறித்து டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பிரபல்யப்படுத்தியதுடன் தங்களது மகிழ்ச்சியையும் வெளியிட்டிருந்தனர்.

-ஏ.எம்

Sunday, January 12, 2014

வீரம் - விமர்சனம்

கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார்.


தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்). அண்ணனுக்கு வாழ்க்கை ஏற்படத்தத் துடிக்கும் 4 தம்பிகள். இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் எதிரிகளுக்கு சாப்பாடு போட்டு காயம் ஏற்படுத்தி வாழ்கிறார்கள். 

இந்த பாசமான குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுவிடும் என்பதால் திருமணம் செய்யாமலேயே தானும் தம்பிகளுமாக இருக்கும் விநாயகத்தின் வாழ்க்கையில் கோப்பெரும் தேவியை (தமன்னா) இணைக்க தம்பிகளும் இவர்கள் கூடவே இருக்கும் சட்டத்தரணியாக வரும் சந்தானமும் முயற்சிக்கிறார்கள்.

தமன்னா - அஜித் ஒருவருக்கு ஒருவர் காதல் கொள்கிறார்கள். முன் ஜாமின் எடுத்து தப்பு செய்யும் அஜித் குடும்பமும் அமைதிக்காகவே வாழும் தமன்னாவின் குடும்பமும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான பதைபதைப்பும் பாசமும் என கலந்து விருந்து படைக்கிறது மீதிக் கதை.



90களில் வந்த கதையாகவும் ஹரியின் சாயலாகவும் இருந்தாலும் ரசிக்கும் படி படமாக்கி ரசிகர்களிடம் ஷபாஸ் பெறுகிறார் இயக்குநர் சிவா.
முதல் பாதி முழுவதும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார் சந்தானம். விரசம் இல்லாத வசனங்கள் திருப்தி. அலுப்பில்லாமல் நகர்கிறது. இடைவேளையில் பரபரக்கும் சண்டைக் காட்சியுடன் எதிர்பார்ப்பும் எகிறுகிறது.

பிற் பாதியில் சண்டை, குடும்பப் பாசம், நகைச்சுவை என அதிரடியாக படம் வேகமெடுக்கிறது. முற்பதியிலிருந்த வேகம் சற்றே குறைந்தது போல் ஓர் உணர்வு. நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீ சென்டர் மற்றும் குடும்பங்களை கவர்கிறதொரு அஜித் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவா. 

படத்தினை பிரேம் பை பிரேமாக அஜித்துக்காக உருவாக்கி இருந்தாலும் வீணாக அஜித் புகழ்பாடமல் பார்த்திருப்பது வரவேற்கத்தக்கது. முடிஞ்சா என்ன தாண்டி தொட்றா பார்க்கலாம் என சவால் விடும் காட்சி, தொழில் போட்டி எதிரியிடம் பேசும் இடம், வில்லன்கள் தம்பிகளை துரத்திவர ஆர்ப்பாட்டமில்லாமல் ஊஞ்சல் ஆடும் அஜித் என பல இடங்களில் அஜித்துக்கான மாஸ் காட்சிகளையும் படத்தின் லொஜிக் மீறல்களை மறைக்கும் விதமான வேகமான திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் வென்றிருக்கிறார்.



அஜித்தின் நரை முடிக்கும் ஒரு காரணத்தை வைத்து திருப்திப்படுத்துகிறார். அஜித் ரசிகனாகவே வீரம் படத்தை தான் எடுத்ததாக கூறிய சிறுத்தை சிவா இனி வீரம் சிவா என அழைக்கப்பட்டாலும் ஆச்சரிமில்லை.

படத்தில் ஒரு சில காட்சிகைத் தவிர அனைத்து காட்சிகளிலும் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அஜித் உச்சமாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் அதிரடியாக ஆர்ப்பாட்டம் செய்து பிற்பாதியில் அமைதியாக அதிரடி காட்டுகிறார். 

மதுரை மண் வாசனையை மறக்காமல் தமிழிலேயே படம் முழுவதும் பேசுகிறார். காதல், பாசம் என உருக்கம் காட்டுகிறார். மாட்டு வண்டி, வேஷ்டி சட்டையிலும் அஜித் கச்சிதமாப் பொருந்துகிறார். பல இடங்களில் பாசத்தாலும் வருடுகிறார். மொத்தத்தில் புது அவதாரத்தில் மிளிர்கிறார்.

தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிஸ், சந்தோக் என அனைவரும் படம் முழுவதும் வருகிறார்கள். விதார்த் மற்றும் பாலாவுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். இறுதிவரை அண்ணனை ஏமாற்றாமலும் இறக்காமல் இருப்பது மகிழச்சி.

என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து வீரத்திலும் மீண்டெழுந்துள்ளார். டைமிங்கில் டைவடிக்கிறார். தம்பி ராமையாவுடன் தன் பங்கிற்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

3 வருட இடைவெளிக்கு பிறகு நாயகி தமன்னா ரசிக்க வைக்கிறார். பாடலுக்கு மட்டுமன்றி நடிக்க அதிக வாய்ப்பு. காதல் காட்சிகளில் அஜித்துக்கு சேலையுடன் வரும் தமன்னாவை ரசிக்கலாம்.



பாடல்கள் காட்சிகளையும் கிராமத்தில் இயல்பாக காட்டியிருக்கலாம். வெளிநாட்டில் நடக்கும் பாடல் காட்களில் தமன்னா - அஜித் டூயட் குறைபாடுதான்.

நாசர் வழக்கம்போல பாத்திரத்தின் தேவையை உணர்த்துகிறார். வில்லன்களாக வரும் பிரதீப் ராவத் நல்ல தேர்வுதான். ஆனாலும் வழக்கம்போல விறைப்பாக வந்து சிரிப்பாகிப் போகிறார். ரசிக்கலாம். அத்துல் குல்கர்னி கொலை வெறியாக அலைகிறார். அவினாஸ் சிறுத்தையை தொடர்கிறார். 

இவர்கள் தவிர தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி அஜித்தின் கூடப்பிறக்காத தம்பியாக வந்து கண்கலங்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, இளவரசு, மயில்சாமி, தேவதர்ஷினி, அபினயா, மனோசித்ரா, வித்யூலேகா என பலர் பாத்திரத்தின் தெரிவுகளாக உள்ளனர். அஜிதுடன் நெருங்கிப் பழகும் அந்த குழந்தை திணிக்கப்படாத பாசம் நெகிழ்ச்சி.


படத்தில் பல லொஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் அஜித்தும் திரைக்கதை மூலம் சிவா மறைத்ததில் நிச்சயம் வெற்றி. 

பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை துள்ள வைக்கிறது. மாஸ் படத்துக்கு தேவையானது. முதல் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஏனையவை பெரிதாக ஈர்க்கவில்லை. பாஸ் மார்க் வாங்குகிறார் டி.எஸ்.பி.

பாடல் வரிகளில் விவேகா தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
கிராமத்தை ரம்மியமாகவும் அதிரடியாகவும் காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. காசி விஸ்வநாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தை அதிகரிப்பதில் பக்க பலமாகவுள்ளது. 

சண்டைக் காட்சிகளில் சில்வா பலரையும் பறக்கவிட்டுள்ளார். டூப் இல்லாத அஜித்தின் ரயில் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

பன்ச் வசனங்கள் இல்லை. ஆனால் வசனங்கள் பன்ச்சாகவுள்ளது. பரதனின் வரிகளுக்கு அஜித் சிறப்பாக உயிர்கொடுத்துள்ளார். குறிப்பாக உழைக்கிற ஜாதிடா..., சோறு போட்டா தாய் சொல்லிக்கொடுத்தா தகப்பன் போன்ற பல வசனங்கள் நச் நகரம்.

பொங்கல் ஜல்லிக் கட்டில் காளையாக குதித்துள்ளது வீரம் படத்தில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினியை காட்டிவிட்டு அஜித்தின் 'வீரம்' படத்துக்கு வரும் நாகி ரெட்டியின் விஜய ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் ஏதோ சொல்லாமல் சொல்லிவிட்டது. 

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏ, பீ, சீ என அனைத்து சென்டர்களிலும் புதியதோர் அவதாரத்தில் அஜித்தை வீர நடை போடச் செய்துள்ள இந்த வீரம்.

-ஏ.எம்.ஆர்

ஜில்லா - விமர்ச்சனம்

விமர்சனங்களாலும் வணிக ரீதியாகவும் மட்டுமன்றி விஜயின் அரசியல் தலைவர் கனவுக்கும் தலைவலியாக அமைந்த தலைவா திரைப்படத்தினைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளிடையே இளைய தளபதி விஜய் மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ளது 'ஜில்லா'.


தலைவாவில் இழந்ததை ஜில்லாவில் நிலைநிறுத்த தீயா வேலை செய்யணும் என்பதை காட்டும் வகையில் இளைய தளபதியில் வரும் 'தி' இல் தீ எரிந்தவாறு படம் ஆரம்பமாகின்றது.

பின்னரே தெரிகிறது படம் பார்க்க வந்த எமது காசுக்கு வைத்த தீ அதுவென்பது. இன்னும் தடவைதான் ஏமாறப்போகின்றோமோ?

சிவனிடம் (மோகன்லால்) வேலை செய்யும் சக்தியின் (விஜய்) அப்பா பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட அந்த இடத்திலிருந்து காக்கியை வெறுக்கும் நாயகன், வளர்ப்புத் தந்தை சிவன், அவரது மனைவி, மகள், மகன் மீது பாசத்தை கொட்டி வளர்கிறார்.

தவறு எனத் தெரியாமலேயே தவறுக்கு துணை போகிறார் சக்தி. ஒரு கட்டத்தில் சிவன் தனது குற்றச் செயல்களை தடையின்றி மேற்கொள்ள காக்கி என்றாலே வெறுக்கும் சக்திக்கு பொலிஸ் வேலையை வாங்கிக் கொடுக்கிறார். பின்னர் அந்த பொலிஸ் வேலையே சிவனுக்கு எமனாகிறது.

குற்றங்கள் அதிகரிக்கிறது பலர் பலியாகக் காரணமாகின்றார் சிவன். தவறுக்கு துணை போவதை உணர்ந்து தந்தைiயும் திருத்தி எதிரிகளிடமிருந்து குடும்பத்தையும் நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஷ்யமில்லாத ஓட்டைத் திரைக்கதையில் பொறுமையை சோதிக்கிறார் இயக்குநர் நேசன்.


ஆரவாரமாக விஜய்யை வரவேற்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஆரம்பமே நம்ப மறுக்கும் காட்சியுடன் கல் வீசும் சிறு வயது விஜய்க்கு கைதட்டல் வரவேற்பு இல்லாதது ரசிகர்களின் ரசனை உயர்ந்திருப்பதை தெளிவுபடுத்துவதாய் அமைந்தது.

திரைக்கதையினால் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். மதுரையில் கதை நகர்ந்தாலும் மதுரை (மீனாட்சி கோவிலைத் தவிர) வாசனை எங்கும் தெரியவில்லை. பரப்பான காட்சிகள், திருப்பங்கள் என நினைக்கும் காட்சிகள் திரையில் வருவதற்கு முன்பே எளிதாக கண்டுபிடித்து கூச்சலிடுகின்றனர் ரசிகர்கள்.


முதல் பாதியில் நகைச்சுவையுடன் கரையேறி இடைவேளையில் சூடு பிடித்தது. 2 ஆம் பாதி ஆர்வமாக அமர்ந்தால் மீண்டும் முதலிருந்து ஆரம்பமாகி சண்டை... சண்டை... சண்டை... என தவள்கிறது. இடையில நடுவுல வழக்கமான மானே தானே போட்டுக்கங்க!

படம் முடிந்துவிட்டதாக நினைத்து ரசிகர்கள் எழுந்த பின்னர் சுமார் 5 நமிடங்களுக்கு மேல் படம் நீள்கிறது. (கண்ணக் கட்டுதே...!)

தீனாவையும் விஜயின் பழைய படங்கள் உடை, நடை போன்றவை ஞாபகத்துக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். ஓவர் நைட்டில் ஓபாவாகிறது போல ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள ரௌடிகளை ஜஸ்ட் லைக் தட் என அள்ளுகிறார். நாயகனின் செயல் ரசிகர்களை கொல்கிறது. படத்தில் இருக்கும் லொஜிக் ஓட்டைகளை சொல்லப்போன ஓட்டையில கொஞ்சமும் படத்தை காணோம் என்றுதான் வரும்.

கம்ப்ளீட் அக்டர் மோகன்லால் கம்பளீட்டாக வீணடிக்கப்பட்டுள்ளார். கேரளத்து தமிழில் சிவன்டா சிவன்டா என கத்துகிறார் அதுவே படத்துக்கு எமன்டா... என எதிரொலிக்கிறது. ஏராளமான காட்சிகளில் தோன்றினாலும் ஜில்லாவில் பெரிய சக்தியாக சிவன் இருப்பதாக சொல்லாவிட்டால் புரியாது. விஜய்க்கு சமமாக காட்சிகள் அமைப்பதில் ஏற்பட்ட தடுமாற்றமாற்றம் போல தெரிகிறது.

படத்தினை தனது ரசிகர்களுக்காக மட்டுமே விஜய் தாங்கிப்பிடிக்கிறார். தாடியில் மாற்றம் செய்திருப்பது திருப்தி. ஒரு சில காட்சிகளில் முகபாவனையும் ரசிக்க முடிகிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோசம். முதல் பாதியில் வரும் பாடல் வசனங்களிலும் காட்சிகளிலும் பலரைச் சீண்டுகிறார்.

ஆனாலும் விஜயின் அத்தனை உடல் மொழிகளும் ஏற்கனவே பார்த்து பழகியவை சலிப்படிக்கிறது. துப்பாக்கி, தலைவாவை ஞாபகப்படுத்துகிறது. நகைச்சுவை காட்சிகளில் பொதுவான ரசிகர்ளை எரிச்சலூட்டுகிறார். மீண்டும் ஒரு சுறா தராமல் விடமாட்டார் போலிருக்கிறதே?

விஜய் பொலிஸாக வருவதே கெக்கப்புக்க கெக்கப்புக்க சிரிப்பு வர நாயகி காஜல் அகர்வால் பொலிஸாக (சிரிப்பு பொலிஸ்?) கிச்சுக்கி மூட்டுகிறார். 3 பாட்டுக்கும் 4 சீனுக்கு வந்துபோகிறார். சூரி படத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் பலவற்றுக்கு திரையரங்கில் சிரிப்பலை. இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். போதாக் குறையாக விஜயின் பின்புறத்தை காஜலும் காஜலின் பின்புறத்தை விஜயும் தடவுவது விரசம். ஜோக்காமா...

வில்லனும் விஜயும் துரத்தும் காட்சியில் ஒரு சில விநாடிகள் மட்டும் பதபதைக்க வைக்கும் ஒர காட்சி தவிர நடிக்க வாய்ப்பில்லை. பின்னால் நின்று செல்கிறார். வில்லனாக சம்பத் நல்ல தேர்வு. பொருத்தமாக இருக்கிறார். அத்துடன் பிரதீப் ராவத், பூர்ணிமா, நிவேதா, தம்பி ராமையா, ஆர்.கே என பலர் வந்து போகிறார்கள். இவர்கள் தவிர படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரியின் மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் பாடலொன்றுக்கு ஆடிச்செல்கிறார்கள்.

பாடல்கள் ஹிட்டடித்தாலும் திரையில் கண்டாக்கி மட்டுமே ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசை அசத்தல். வசனங்கள் பல இடங்களில் இயல்பாக உள்ளமை ஆறுதலளிக்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலமாகவுள்ளது. படம் முழுவதும் வண்ண மயமாக உள்ளது. எடிட்டிங் இன்னும் கவனித்து கத்தரித்திருக்கலாம்.

சில்வாவின் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகவுள்ளது. விஜய் அடித்து நொறுக்குகிறார். தலைவா பிரச்சினையில் கைகட்டி பேசியது போல நின்றுகொண்டு விஜய் போடும் சண்டை அரசியல் பன்ச். (அதான் நிஜத்தில பம்முறிங்களே அப்புறம் எதுக்கு வெட்டி சீன்)  ஒப்பனையில் விஜயின் முகத்தில் பொங்கலுக்கு வெள்ளையடித்தது அப்பட்டமாக தெரிகிறது. ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது.

யானை இரண்டை பூனை சுமந்தது போல் இரு மாநில சுப்பர் ஸ்டார்களை சுமந்து செல்லத் தடுமாறிய இயக்குநர் நேசன் படத்தின் நேர்த்தியை தவறவிட்டதில் தீவிர விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிறது இந்த ஜில்லா.

எனக்கு பயமில்லை என்ற சீன்களை கவனமாக மறக்காமல் வைத்து அடுத்தவனை சீண்டி நிஜத்தில் அடிவாங்குவதற்கு பதிலாக நல்ல கதைகள் தேர்ந்தெடுப்பதில் மறக்காமல் கவனம் செலுத்தலாங்கண்ண....

சுறாவுக்கு சில படி மேலேயும் தலைவாவுக்கு பல படி கீழேயுமுள்ள இந்த ஜில்லா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது நல்லா!


இந்த பதிவை ஈயடிச்சா தயதுசெய்து இந்த வலைத்தள முகவரியையும் கொடுங்க... http://aachariyam.blogspot.com/2014/01/blog-post.html

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்தான்...
விஜயும் நேசனும் சேர்ந்தா தமாஸுடா...
படம் பார்க்கிற நாங்க லூஸுடா...

-ஏ.எம்.ஆர்

Wednesday, November 13, 2013

100 கோடியை நெருங்கும் ஆரம்பம் வசூல் : முழுமையான அலசல்

அஜித் நடித்துள்ள ஆரம்பம் திரைப்படம் 100 கோடி இந்திய ரூபா வசூலினை நெருங்கியுள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஸ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்பஸி உள்ளிட்டோர் நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் கடந்த 31ஆம் திகதி உலகம் முழுவதும் 22 நாடுகளில் வெளியானது. இதன் மூலம் தமிழ்படமொன்று அதிகூடிய நாடுகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஆரம்பம் பெற்றது.



விளம்பரங்களில் அஜித் பங்குகொள்ளாவிட்டாலும் அவரது ரசிகர்கள் அப்படத்தினை பெரியளவில் விளம்பரப்படுத்தி அஜித்தின் பெரிய ஓப்பனிங்கை மிகப்பெரிதாக்கினர். இதனால் முதல் வாரத்தில் 50 கோடியினை வசூலித்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் அனைத்து இடங்களிலும் எந்திரன், விஸ்வரூபம் படங்களுக்கு அடுத்த படியாக வசூலை வாரிக்குவித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியான ஏராளமான திரையரங்குகளில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தத் தவறியது. இதனையடுத்து ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டிய நாடு படங்களுக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.

இதேவேளை தமிழ்நாட்டில் பெருவாரிய திரையரங்குகளை இவை கைப்பற்ற புதிய படங்களும் திரையிடப்படவில்லை. இதனால் 3ஆவது வாரமாகவும் ஆரம்பம் வசூல் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 91.63 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி ரூபா வசூலினை ஆரம்பம் படம் பெற்றுவிடும்.

தமிழ்சினிமாவில் எந்திரன் மற்றும் சிவாஜி (உரிமைகளையும் சேர்த்து) படங்களே இதுவரையில் 100 கோடி ரூபா வசூலினைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில் அஜித்தின் ஆரம்பமும் விரைவில் இணைந்துவிடும் என்பதை சினிமா ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர்.

குறிப்பு : பகுதிவாரியான வசூல் நிலைமைகள் சற்றே வித்தியாசப்பட்டு காணப்படுதால் மொத்தமான தொகை மட்டும் குறிப்பிடப்பட்டள்ளது. அத்துடன் வசூல் தொகை அனைத்தும் இந்திய மதிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


-ஏ.எம் .http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2958



Sunday, September 29, 2013

ராஜா ராணி - விமர்சனம்

கதை, திரைக்கதை, இயக்கம் - அட்லி
நட்சத்திரங்கள் - ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்தியராஜ், சத்யன்
இசை - ஜீவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு - ஜோர்ஜ். சீ. வில்லியம்ஸ்
எடிட்டிங் - அன்டனி எல். ரூபன்
தயாரிப்பு - பொக்ஸ் ஸ்ரூடியோ

ஆர்யா - நயன்தாரா திருமண அழைப்பிதழிலிருந்து விளம்பரமும் கூடவே எதிர்பார்ப்பையும் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸையும் சுமந்து வந்திருக்கும் திரைப்படம் ராஜா ராணி.



ட்ரெய்லர் மற்றும் விளம்பரங்களில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா? இல்லையா? என்றால் நிச்சயமாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Made for each other என்று யாரும் பிறக்கிறதில்லை. அது வாழ்ந்து காட்டுறதுலதான இருக்கிறது என்பதுதான் ராஜா ராணி படத்தின் கதை.

ஆர்யா - நயன்தாரா திருமணத்தில் படம் ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலிருந்தே ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் ஒத்துப்போகவில்லை. அது ஏன்? எதுக்காக என்கிற விடயத்தை திரைக்கதையில் சிறப்பாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.

ஆர்யா - நயன் இருவரும் திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்கிறார்கள். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஆர்யாவும் சோகமாகவே இருக்கும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.



தங்களது குடும்பத்திற்காக திருமணம் செய்தவர்கள் அதுவரையில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிராகவும் இருந்த இருவருது காதலும் பிளாஷ்பெக்கில் தெரியவருகிறது.

இதில் சந்தோஷமான நயன் - ஜெய் காதலில் ஜெய் இறக்கிறார். நயன் சோகத்தில் ஆழ்கிறார். கலகலப்பான ஆர்யா - நஸ்ரியா காதலில் நஸ்ரியாவை கண் முன் பறிகொடுத்து தவிக்கிறார் ஆர்யா.

இருந்தாலும் கண்களை கசக்கிக்கொண்டே இல்லாமல் ஆர்யா, நயன், சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்யன் என அனைவரும் கலகப்பூட்டுகிறார்கள்.

ஆர்யா - நயன்தாரா காதல், ஆர்யா - நஸ்ரியா காதல், நயன்தாரா - ஜெய் காதல் இம்மூன்று காதலையும் அலுப்பில்லாமல் அசரடிக்க வைக்கிறது படம். மூன்று காதல் என்றாலும் உலகத் தரம் என்ற பெயரில் திரைக்கதையில் மண்டையை காயவிடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



கொமடியை எதிர்பார்த்துப்போன படத்தில் எதிர்பாராமல் நல்ல கதையையும் அதில் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ரசிகர்களை ஆட்சி செய்கிறார்கள் ராஜா ராணி குழுவினர்.

அறிமுக இயக்குநர் அட்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநர் என்பதை காட்டவோ என்னவோ அடிக்கடி சிவாஜி படத்தினை ஞாபகப்படுத்திறார். ஷங்கரைப்போலவே பாடல் காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். திரைக்கதையும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

வலுக்கட்டாயமான சண்டைகள் இன்றி வலுவான திரைக்கதையில் அசத்துகிறார் அடலி. வெல்கம் டூ கொலிவூட்.



வசனங்களும் பல இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக ஒரு பொண்ணு அழுதா ஏமாத்தப்போறான்னு அர்த்தம். அதுவே ஒரு பையன் அழுததான்னா ஏமாந்துட்டான்னு அர்த்தம், யார் அழுதா கண்ணு வேர்க்குது,  நண்பன்ல ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்டாலே நல்லவன்தான் போன்ற வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

நாயகன் ஆர்யா கல்யாணத்துக்கு முன் பின் இரண்டிலும் உடல் மொழி வேறுபாட்டில் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் அழவும் வைக்கிறார்.

நயன்தாரா நீண்ட இடைவெளியின் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அசரடிக்கிறார். வந்து போகும் நாயகியாக இல்லாமல் ரெஜினாவாக பிரதிபலிக்கிறார்கள். சிரிப்பிலும் அழுகையிலும் அழகிலும் கொள்ளைகொள்கிறார்.



ஜெய் - நயன் ஜோடி பெரியளவில் பொருந்தவில்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது. ஜெய் சிரிக்க வைத்துச் செல்கிறார். ஆனால் கதையில் எதிர்பார்த்த முடிவாக இவரது பாத்திரம் அமைந்துள்ளது.

பல இடங்களில் இன்னுமொரு நயன்தாராவாகத் தெரிகிறார் நஸ்ரியா. நன்றாக நடிக்க வாய்ப்பு. சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பிரதர் பிரதர் என ஆர்யாவையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கிறார். இனி பெண்கள் பிரதர் என அழைத்தால் பசங்க சந்தோஷப்படுவார்கள்.

சந்தானம் வழக்கம் போல பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்கள். குணச்சித்திர கதாபாத்திரம் போல பின்னப்பட்டள்ளது. இவரது வசனங்கள் பலவற்றுக்கு அரங்கில் நல்ல வரவேற்பு.

சத்தியராஜ் தனது கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார். அளவாகவே வந்து போகிறார். சத்தியனும் அதுபோலவே.

ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் அசத்தல் ரகம். தேவையான இடங்களிலமைந்த பாடல்களால் யாரும் வெளியேறவில்லை. ஜோர்ஜின் ஒளிப்பதிவு படத்தினை மெருகூட்டுகிறது. ரூபனின் எடிட்டிங்கும் நச்சென்று இருக்கிறது. காட்சிகள் தொய்வாகத் தெரியவில்லை.

ஆர்யாவும் நயனும் ஏன் முதல் நாளிலிருந்தே முறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற ஓரு சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகமாக உண்டு.

மொத்தத்தில் எதிர்பார்த்த கொமடியில் எதிர்பாராத திரைக்கதை மற்றும் கதையால் திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவரையும் குடும்ப ஆட்சி செய்கின்றது இந்த ராஜா ராணி.

-அமானுல்லா எம். றிஷாத்

இந்த விமர்சனம் மெட்ரோ நியூஸ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2326

Friday, September 20, 2013

உடலைவிட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் எப்போது உடலைச் சேரும்?

போன உயிர் மீண்டும் வருவ­தில்லை என்­பதே மனி­தர்­க­ளி­டையே பர­வ­லாக காணப்­படும் நம்­பிக்கை. எனவே நாமும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­கவே இருக்­கிறோம். இறப்­புக்கு பின்­ன­ரான வாழ்க்கை என்­பது நம்­பிக்கை சார்ந்த விட­ய­மா­கவே உள்­ளது.



அது­போ­லவே மரித்த பின்­னரும் உயிர்­பெற வைக்கும் தொழில்­நுட்பம் விரைவில் கண்­டு­பி­டிக்­கப்­படும் என்­பதும் சில­ர­து ­நம்­பிக்­கை­யா­க­வுள்­ளது. அந்த நம்­பிக்­கையில் இறந்த பின்னர் தங்­க­ளது உடலை பாது­காப்­ப­தற்கு பலரும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

இவ்­வாறு இறந்த உடல்­களை பாது­காக்க நிறு­வ­னங்­களும் உண்டு. அங்கு இறந்த உடல்­களை பழு­த­டை­யாது பாது­காத்து வைக்­கப்­படும்.

எவ்­வாறு பாது­காக்­கப்ப­டு­கின்­றது?
ஒருவர் இறந்­து­விட்டார் என்­பதை சட்­ட­ரீ­தி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர் குறித்த நிறு­வனம் உட­லி­லுள்ள இரத்தத்­தினை 'பம்' செய்­வ­தற்கு முயற்­சிப்பர். உடலில் பல்­வேறு இர­சா­யன பதார்த்­தங்­களை செலுத்தி மூளை பழு­த­டை­வ­தையும் இரத்தம் உறை­யா­மலும் பாது­காக்­கப்­படும்.

பின்னர் உடலானது நீர் குளி ர­டையும்  வெப்பநிலையை அடைந்­ததும் குளிரில் உடல் பாது­காப்­ப­தற்­கு­ரிய நிலையை அடைந்­து­விடும். இதன்­போது உட­லி­லுள்ள இரத்தம் நீக்­கப்­படும். பின்னர் -130 செல்­ஸி­யஸில் குளி­ராக்­கப்­பட்டு கொள்­க­லனின் உடல் வைக்­கப்­பட்டு –196 செல்­ஸியல் குளிர் நிலை­யி­லுள்ள நைத­ரசன் தாங்­கியில் பேணப்­படும்.



தற்­போது அமெ­ரிக்­காவில் இப்­படி சுமார் 150 உடல்கள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளதாக கூறப்படுகின்றது. இதில் 80 உடல்­களின் தலை அல்­லது மூளை மட்­டுமே பாது­காக்­கப்­பட்­டள்­ளது. எவ்­வா­றெ­னினும் தற்­போது உயி­ருடன் உள்­ள­வர்­களில் 1000ற்கும் அதி­க­மானோர் தங்­க­ளது உடலை பாது­காக்க குறித்து நிறு­வ­னங்­களை பணித்­துள்­ளனர்.


இத்­திட்டம் வெற்­றி­பெ­றலாம் என ஏன் நம்­பு­கின்­றனர்?
இத்­திட்­டத்தில் ஆர்­வ­மிக்­க­வர்கள் இது தொடர்பில் கூறு­கையில், இத்­திட்டம் வெற்­றி­ய­ளிக்க வாய்ப்­புள்­ள­மைக்கு 3 கார­ணங்கள் கூறு­கின்­றனர். முத­லா­வது உடல் பாது­காக்­கப்­படும் போது ஒட்­சி­சனின் மட்­டத்­தினை பேணி மூளை சிதை­வ­டை­வது குறைக்­கப்­ப­டு­கின்­றது.

இரண்­டா­வ­தாக தேவை­யான அளவில் குறைந்த வெப்­ப­நி­லையில் (குளிரில்) உடல் பேணப்­ப­டு­வதால் கலங்கள் மற்றும் இழை­யங்கள் தர­மி­ழக்­காமல் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.



மூன்­றா­வ­தாக குளி­ராக்கல் முறை­யி­லி­ருந்து முற்­றாக உடலை பாது­காக்­க­மு­டி­யா­விட்­டாலும் விரைவில் நனோ தொழில்­நுட்­பத்தின் மூலம் இதற்கும் தீர்வு கிடைக்குமென நம்புகின்றனர்.



விஞ்­ஞா­னிகள் இனங்கண்­டுள்ள பிரச்­சினைகள்
–5 செல்­ஸியஸ் வெப்­ப­நிலையில்  நீரில் உடல் பாது­காக்­கப்­படும் போது கலங்கள் குளிரில் உறைந்து ஐஸ் கட்­டி­க­ளாக மாறி­விடும். இவை நீரின் அடர்த்­தியை விடக் குறைந்­தது. இதனால் அதி­க­ளவில் பிரி­கை­ய­டைந்து கல மென்­சவ்­வுகள் கடு­மை­யாக பாதிப்­ப­டையும்.

ஆனால், குளி­ராக்கல் முறையில் அவ்­வா­றில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­போ­திலும் அவற்­றிற்­கான ஆதாரம் எது­வு­மில்லை என வொஷிங்டன் பல்­க­லைக்கழக குளிரில் கலம் மற்றும் இழையங்­களை பாது­காக்கும் தொழில்­நுட்ப நிபுணர் கலா­நிதி டயங்கோ கஓ தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், குளி­ராக்கு­தலில் சிறிய பூச்­சிகள் மற்றும் இல­கு­வான இழை­யங்­களை பாது­காக்­கலாம். ஏனெனில் அவை அளவில் சிறி­யவை என்­பதால் கையாள்­வது இல­கு­வா­னது. ஆனால் எவ்­வாறு உடல்­களை பாது­காப்­பது எனத் தெரி­ய­வில்லை என்றார்.

உட­லி­லுள்ள பாகங்­களை பாது­காக்க முடியும். ஆனால் அவற்­றினை மொத்த உட­லாக பாது­காப்­பது கடினம். ஏனெனில் ஒவ்­வொரு உறுப்பும் ஒவ்­வொரு வெப்­ப­நி­லையில் பாது­காக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

சாதா­ர­ண­மாக மூளையை பாது­காக்க வேண்­டு­மென்றால் அதி­லுள்ள 12 பிரி­வு­க­ளையும் வெவ்வேறு நிலை­களில் பாது­காக்க வேண்­டிய தேவை உள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.



உயிர் திரும்பக் கிடைக்­குமா?
வளரும் தொழில்­நுட்­பத்­தினால் எதிர்­கா­லத்தில் உடல்­களை சிறப்­பாக பாது­காக்க முடிந்­தாலும் வய­தாதல் மற்றும் நோய்­க­ளினால் கலங்கள் பாதிப்­புக்­குள்­ளாகும். நரம்­புகள் தொடர்­பான சிக்­கல்கள், கலங்­க­ளி­லுள்ள புரத இழப்பு என இன்னும் ஏரா­ள­மான சவால்கள் உண்டு. அவற்­றுக்­கான தீர்வு கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

எனவே குளி­ராக்­கல் முறையை மேம்­ப­டுத்தி உடலை பதப்­ப­டுத்­தி­னாலும் தற்­போ­தைக்கு இறந்த உட­லுக்கு உயிரை வழங்­கு­வ­தற்­கான எந்­த­வொரு சாத்­தி­யக்­கூ­று­களும் விஞ்­ஞா­னி­க­ளிடம் இது­வ­ரையில் இல்லை என்றே சொல்­லலாம்.

இதேவேளை எதிர்காலத்தில் அவை நடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் உடலை பாதுகாக்க தயாராகிவிட்டாலும் எந்தவொரு விஞ்ஞானிகள் அமைப்பும் குளிராக்கல் திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என கலாநிதி கஓ தெரிவித்துள்ளார்.

அதேபோல குளிராக்கல் பதப்படுத்தல் முறையினை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இந்த உடல்களுக்கு எந்தவிதமாக உத்தரவாதமும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எப்போதும் வளாந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது.

–அமானுல்லா எம்.றிஷாத்


இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, September 8, 2013

எரிகல் பொழிவு ஆபத்தானவையா? ; இலங்கையில் ஏற்பட்ட எரிகல் பொழிவினை நீங்களும் இரசித்தீர்களா?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது.

 சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.



அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.



இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.

ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.



நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது. சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.

அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.

இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.



இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.



ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.

நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

 –அமா­னுல்லா எம்.றி­ஷாத்

இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.