Total Pageviews

Sunday, September 8, 2013

எரிகல் பொழிவு ஆபத்தானவையா? ; இலங்கையில் ஏற்பட்ட எரிகல் பொழிவினை நீங்களும் இரசித்தீர்களா?

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது.

 சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.



அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.



இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.

ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.



நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கி றது. சில காலங்­க­ளுக்கு முன்னர் இரவு நேரங்­களில் தெளி­வான வான் பரப்­பி­லி­ருந்து தீடி­ரென ஒளிக்கீற்­றொன்று செல்­வதை அவ­தா­னித்தால் போதும் தள்­ளா டும் வய­தா­னர்கள் பலரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பல கதை கள் சொல்­வார்கள்.

அவற்றுள் பலவும் நீண்ட கால நம்­பிக்­கை­க­ளா­கவே இருக்கும். அவை மதம் சார்ந்தும் இருக்­க லாம். சில சம­யங்­களில் நட்­சத்­திரம் பூமியில் இறங்­கு­வ­தா­க வும் அவிழ்த்­து­வி­டு­வார்கள். அவற்றை மறுத்துப் பேசவும் வழி­யில்லை.

அவ்­வா­றான நிகழ்­வொன்றை ஏற்­ப­டுத்தும் எரிகல் பொழி­வு­வொன்று அண்­மையில் நம்­நாட்­டிலும் ஏற்­பட்­டது.

ஆனால் அவை நட்­சத்­திரம் அல்ல என்­பது நிச்­சயம். ஏனெ னில் நட்­சத்­திரம் ஒன்று பூமியை போன்று பல்­லா­யிரம் மடங்கு பெரி­யவை. அவை பூமி­யி­லி­ருந்து கோடிக்­க­ணக்­கான கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்­ளவை. அது­மட்­டு­மன்றி நட்­சத்­தி­ரங்கள் பூமி­யி­லி­ருந்து பல நூறு கோடி கிலோ மீற்­ற­ருக்­கு அப்பால் உள்­ளவை. அத்­துடன் அவை பூமி­யி­லி­ருந்து மிக வேக­மாக தூர­மாகச் செல்­கின்­றது.

அப்­ப­டி­யெனில் உண்­மையில் வான் பரப்பில் காண்­களை ஈர்த்­துக்­கொண்டு பாயும் அந்த ஒளிக்­கீற்­று­கள்தான் என்ன? என்று விஞ்­ஞானம் கூறு­கி­றது எனக் கேட்கத் தோன்­று­கி­ற­தல்­லவா!

பறக்கும் கற்கள் என அழைக்­கப்­படும் விண்­கற்­களின் (அஸ்­டி­ரொய்­டுகள்) பாகங்­களே அவை. இந்த விண்­கற்கள் தூசு முதல் மிகப் பெரிய மலை அளவு வரையில் வித்­தி­யா­ச­மான அள­வு­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உள்­ளன.

இவை சூரி­யனைச் சுற்றி வரு­கையில் ஒன்­றொன்று மோது­வ­தனால் வெடித்துச் சித­று­கின்­றன. இதன்­போது வெளி­யாகும் தூசு துணிக்­கைகள் மற்றும் வால் நட்­சத்­தி­ரங்­க­ளி­லி­ருந்து வெளி­யா கும் துணிக்­கைகள் புவியின் காற்று மண்­ட­லத்­துக்குள் நுழை யும் போது தீப்­பற்றி எரிந்து சாம்­ப­லா­கின்­றன.

இவையே எமது கண்­ணுக்கு காற்றைக் கிழித்­துச்­செல்லும் ஒளிக்­கீற்­றாகத் தெரி­கின்­றது. இத­னையே எரிகல் பொழிவு என  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஏற்­படும் எரிகல் பொழி­வினால் வரு­டத்­திற்கு சுமார் 10 ஆயிரம் டொன் அண்­ட­வெ­ளித்­தூ­சுகள் புவியை வந்­த­டை­வ­தா கக் கூறப்­ப­டு­கின்­றது.



இந்த நிகழ்வு வரு­டத்தின் ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்­களில் நடுப்­ப­கு­தியில் உலகின் பல பாகங்­க­ளிலும் நடை­பெறும். அண்­மையில் இலங்­கையின் சில பாகங்­களில் இவ்­வாறு எரி கல் பொழிவு ஏற்­பட்­ட­தனை நீங்­களும் அறிந்­தி­ருப்­பீர்கள். சிலவேளை கண்டு மகிழ்ந்தும் இருப்­பீர்கள். மேலைத்­தேய மக் கள் இந்­நி­கழ்­வினை இர­சிப்­ப­தற்­காக எரிகல் பொழிவு ஏற்­படும் காலங்­களில் தெளி­வான வான்­ப­ரப்பை குடும்­பத்­துடன் அவ­தா­னிப்பர். நம்­நாட்டில் குடும்­ப­மாக இல்லை என்­றாலும் தனி­ந­ப­ராகக் கூட வெகு­சி­லர் இக்­காட்­சியை இர­சிப்பர்.

ஆனால் இவை ஆபத்தை விளை­விக்கும் என நகர் மற்றும் கிராமம் என பாகு­பா­டின்றி அனைத்து இடங்­க­ளி­லு­முள்ள படித்­த­வர்கள் கூட கூறக்­கேட்­டி­ருக்­கலாம். ஆனால் அவற்றில் எந்­த­வி­த­மான உண்­மையும் இல்லை என விண்­வெளி ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அபூர்­வ­மாக பல வரு­டங்­க­ளுக்கு ஒரு முறையே எரி­கற்கள் புவியின் பரப்பில் வெடித்து ஆபத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதுவும் எரிகல் பொழிவு ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் அல்ல. எரிகல் பொழிவின் போது வெறு­மனே தூசுகள் மட்­டுமே புவியை வந்­த­டை­கின்­றன.



ஆனால் அபூர்­வ­மாக பூமியின் காற்று மண்­ட­லத்­திற்கு வரும் எரி­கல்­லினால் (இது எரிகல் பொழி­வல்ல) சில சந்­தர்ப்­பங்­களில் ஆபத்தும் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவில் வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த யுவதி மீது கல் வீழ்ந்து காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போல சில வீட்டின் கூரையில் வீழ்ந்த சந்­தர்ப்­பமும் உண்டு.

நமீ­பியா நாட்டில் 1920ஆம் ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட விண­கல்லே பூமியில் கண்­டெ­ டுக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய விண் கல் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இதன் நிறை சுமார் 145150 கிலோ கிராம். விழுந்த இடத்­தி­லேயே பாது­காக்­கப்­பட்­டுள்ள இந்த விண்கல் பல­ரையும் ஈர்த்­துள்­ளது. ரஷ்­யாவில் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் எரி­கல்­லொன்று வீழ்ந்து 1200 பேர் வரையில் காய­ம­டைந்­தனர். இதுவும் எரிகல் வீழ்ந்த ஒரு சந் ­தர்ப்­பமே. மேலும் 1908ஆம் ஆண்­டிலும் ரஷ்­யாவில் எரி­கல்­லொன்று வீழ்ந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால் இவ்­வாறு விழும் கற்­களால் பணம் சம்­பா­தித்­த­வர்­களும் உண்டு. எமக்கும் விண்கற்கள் கிடைக்கலாம். ஆனால் அதனை அடையாளம் காண்பதற்கு திறமை வேண்டும்.

இந்த எரிகல் பொழிவு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரம் எரிகல் பொழிவு ஏற்படுவதனால் தூக்கமும் பனி யுமே எமக்கு ஆபத்து என விளையாட்டாக கூறுகின்றனர்.

எனவே இனிவரும் காலங் களில் ஏற்படப்போகும் இயற்கை யின் அழகுக் காட்சியில் ஒன் றான எரிகல்பொழிவையும் இரசிப்போம். முடியுமானால் எரிகல்லினால் உழைப்போம்!

 –அமா­னுல்லா எம்.றி­ஷாத்

இந்த கட்டுரை மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.