சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, November 14, 2012

துப்பாக்கியும் விஜய் ரசிகர்களின் அலம்பலும்


இந்தப்பதிவில் பேச்சு வழக்கு கொஞ்சம் தூக்கலா இருக்கும்.
நடுநிலையான துப்பாக்கி விமர்சனத்திற்கு, துப்பாக்கி - விமர்சனம் 
எனக்கொரு சந்தேகம் அது பதிவின் முடிவில் பார்க்க

ஆமாங்க விஜயின் துப்பாக்கி படம் பார்க்க கூடியமாதிரிதான் இருக்கு அதுக்காக தமிழ்சினிமாவை புரட்டிப்போடுற படம், வசூலில் ரஜினி மற்றும் அஜித் ஓப்பனிங்க தூக்கி சாப்பிடுற படம், ஸ்டைல் என்டா என்னவென்று கிளாஸ் எடுக்கிற படம் அது இதுன்னு இந்த ஆணி புடுங்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் அலம்பல் பேச்சு தாங்க முடியலடா சாமி.

இத்தனைக்கும் படத்தின் கதை இதற்கு முதல் 1000 தடவை அடிச்சுப் புழிஞ்சி துவைச்சிப்போட்ட கதைதான். என்ன விஜயகாந்த்தும் அர்ஜுனும் செங்சிக்கிட்டு இருந்த வேலையை சில வருடங்களாக செய்ய ஆளில்லை என்ற குறையை தீர்த்திருக்கிறார் விஜய் அவ்வளவுதான்.

கண்டிப்பா திரைக்கதை மட்டுமே படத்திற்கு வலுச்சேர்க்கிறது. மற்றபடி படத்தில் விஜய் மாஸ், பிச்சி ஒதறிட்டார் என்றோ சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. ஆனாலும் படம் ஓவரோலா நல்லா இருக்கு இதனாலேயே விஜய கலாய்க்க வேண்டாமென இம்முறை எல்லோரும் கொஞ்சம் மாரியாதை குடுத்தா வாங்கிட்டு போகாம வடிவேலு பாணியிலே நாங்க போவம் இல்ல இங்கேயே மல்லா...க்க படுப்போம் மற்றது நின்னு அடி வாங்குறவந்தாண்டா உண்மையான ரவுடி என அடம்பிடிச்சதாலதான் இந்தப் பதிவு அவசியமா போச்சு. உண்மையான விஜய் ரசிகர்கள் மன்னிச்சு...

இத்தனைக்கும் விஜயின் ஆதி தொடக்கம் நண்பன் வரையிலான ஏராளமான படங்கள் திரையரங்குகளுக்கு பதில் போஸ்டரிலியே 100, 200 நாட்கள் ஓட்டப்பட்டது. இது உலகத்துக்கே தெரியும். அதெல்லாம் பரவாயில்லை இப்போ இந்த துப்பாக்கி படத்திற்கு தியேட்டரில் கூச்சல் போட எஸ்.ஏ.சி 30 லட்சம் செலவு பண்ணி கூட்டம் சேர்த்திருக்கிறாராம். எல்லா அப்பனுங்களுக்கும் மகன் எம்.ஜி.ஆர் ஆகணும் என்ட ஆசை இருக்கும் ஆனா உங்க ஆசை ரொம்ப ஓவராத் தெரியல.

சரி இதெல்லாம் நமக்கெதுக்கு படத்திற்கு வருவோம். படத்தின் திரைக்கதையால் படத்திலுள்ள ஓட்டைகளை மறந்து மன்னித்து படம் நல்லா இருக்கு என்று பெருவாரியான கருத்துக்கள் வெளியானதும் வழக்கமான அலம்பல்களை ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். ரஜினின்னா தூசு அஜித்ன்னா பீசு சூர்யான்னா கேசு விஜய்ன்னாதான் மாசுன்னு ஏன் மத்தவங்களை கொலைவெறியாக்குறயள்?

வழக்கமாக நான் அடிச்சா நீ பீசுடா என்டு சொடக்கு போட்டு பேசுவார் விஜய் அப்போ படம் பார்க்க வந்த எங்களுக்கு என்ன தோணும்னா 'நீ நடிக்கிறத பார்க்க வந்த நாங்கெல்லாம் லூசுடா' என அது மட்டும் இந்தப் படத்துல இல்லை. அடுத்தது கொஞ்சூன்னு சைட்ல முடி வெட்டிட்டுட்டு கூளிங் கிளாஸ் போட்டிருக்கார் அது கூட எப்படி இருகுன்னா 'க்ர்ர்ர்.. முதல்ல அந்த கண்ணாடிய களட்டுடா' என்று சொல்லத் தோணுது.

விஜய பொறுத்தளவில் வித்தியாசமா நடிச்சிருக்கிறாராமா. இதுக்கு காரணம் உண்மையான விமர்சனங்களை நக்கலா வெளியிட்ட ஏனைய நடிகர்களின் ரசிகர்களின் வெற்றியே. இதனாலதான் கொஞ்சம் வித்தியாசமான விஜயை இந்த படத்தில பார்க்க முடிஞ்சது இது தெரியாம ஏன் விஜய் ரசிகர்கள், விஜய் மாதிரியே சொடக்கெல்லாம் போடுறாங்க.

இத்தனைக்கும் படத்தின் கதை சாதாக் கதை அதாங்க விஜய்காந்த் காஷ்மீரிலிருந்த கன்னியாக்குமரி வரைக்கும் விரட்டிப்புடிச்ச தீவிரவாதிய மும்பையில மட்டும் புடிச்சிருக்கார் விஜய். அதே முஸ்லிம் தீவிரவாதி, அதுக்குதவுற பாதுகாப்பு துணை துணை துணை செயலாளர் அப்பதானே அவர் புரமோசனுக்காக தீவிரவாதிக்கிட்ட போட்டுக்குடுக்கிற வேலையைச் செய்யலாம். எத்தனை படத்துல பார்த்திருப்போம். சீ.எம். ஆக மந்திரியாக தீவீவீரவாதிகளுக்கு உதவுறத.

இப்பவரைக்கும் ஹீரோயினோட நெருக்கமான சீன விடமாட்டேங்கிறாரே 
இந்த கதைக்கு விஜயை கொஞ்சம் பொருந்தச் செய்து திரைக்கதையில் சிறப்பாக நகர்த்தி வெற்றி பெற்றிருப்பது இயக்குனர் முருகதாஸ் மட்டுமே. நடிக்க வேண்டிய காட்சியொன்றில் (போத்தல கீழ் வழியா அனுப்பி ராணுவ வீரன கொலை செய்யுறதா சொல்லுற காட்சி) விஜய் நல்லாவே சொதப்புறார். சுட்டுப்போட்டாலும் டாக்டருக்கு நடிப்பு மட்டும் வராது. அதை முருகதாஸ் உணர்ந்து கொண்டு அந்த கட்டத்தை நல்ல சுருக்கமா முடிச்சி நம்மள காப்பாத்திட்டார்.

அப்ப விஜய் இதுல என்னதான் செய்யுறார் என்டா முருகதாஸ் சொன்னதுல பாதிய செஞ்சி படத்தை கேவலமாக்க பாத்திருக்கார். எப்பிடியென்டா நீங்க ஆணியே புடுங்க வேணா... எல்லாத்தையும் நான் பார்க்கிறன் சார் என்டு முருகதாஸ் சொன்னத வெச்சிட்டு பாதி ஆணி புடுங்கியிருக்கார் நம்ம டாக்டர். அவர்தான் ஆப்பரேசன் கிங் ஆச்சே!

ஒப்பனிங் சீன்ல ஒரு ஆளை தோக்கடிச்சிட்டு அவரை விஜயின் நண்பனா காட்டுற அலுப்படிக்கும் சீன் இன்னும் எத்தனை படத்துல வந்து தொலைய இருக்கோ. இயக்குனர்கள்தான் காப்பத்தணும். திருமலையில மோட்டர் பைக் ரேஸ்ல ஜெயிச்சிட்டு குத்தொன்னு போடுவாங்களே அதே மாதிரிதாங்க... எப்பா கேக்கும் போதே கண்ண கட்டுதானே!!!

படத்துல எக்கச்சக்க ட்விஸ்ட்டாம். அப்படி ஒரு மண்ணும் கெடயாது ஈசியா அடுத்த சீன கண்டுபிடிக்கலாம். ஒரு சீன் தவிர தங்கச்சிய கடத்திட்டு போனதும் (இது சத்தியமாக ஆரம்பத்துலய கணிச்சுடலாம்) நாய விட்டு கண்டுபிடிக்கிறது எதிர்பார்க்கல்ல. ஆனாலும் அதுவும் மும்பையிலுருந்து மூணாறு வரைக்கும் போய் கண்டுபிடிக்கிற அளவுக்கு நாய்க்கு முடியுமான்னு என்னை கேட்காதிங்க! அவ்வளவு தூரம் போகுதுங்க அந்த நாயி (சத்தியமா நாயத்தான் சொன்னன்)

இது தவிர படத்துல ட்விஸ்ட் என்று சொல்லுறவங்க கண்டிப்பா விஜய் பேனாத்தான் இருக்கும் ஏன்னா விஜய் பேனாகுறதுக்கு முதல் தகுதியே மூளை கொஞ்சம் மந்தமா இருக்க வேண்டியதுதானே.

கத்திக்குத்து, போத்தல் சண்டைக் காட்சி கருமம் நல்லாவே இல்லை ஏன்னா இதவிட பல மடங்கு ஸ்டைலிஸ்ஸா இந்த சீன பில்லா 2வில் அஜித் செஞ்சிட்டார்.

மிஷன் இம்போசிஸிம்பிள் வர்ர அந்த சிப் மேட்டர், வில்லனை வீட்டுக்குள்ள வெச்சி காரியம் பண்ற மேட்டர் (இது ஏற்கனவே பார்த்த டெக்னிக் எளவு என்ன படம் என்டு ஞாபகம் வந்துதொலையுதில்லை),  கில்லி மாதிரி க்ளைமேக்ஸ்ல வில்லன மாங்க மடையனாக்குற மொக்கை வேலை (இந்த சீன் வெள்ளைப் படத்துல கூட இருக்கு) இதெல்லாம் பரவாயில்லை.

ஏன்னா... பஸ்ஸில பிக்பொக்ட் அடிச்சனவே கண்டுபிடிக்க விஜய் முயற்சிக்கும் போது குண்டு கொண்டுவந்தவன் பஸ்ஸிலிருந்து ஏன் சம்மந்தமே இல்லாமல் ஓடனும்? அப்படி மட்டும் செய்யாம இருந்திருந்தால் குண்டும் ஒழுங்கா வெடிச்சிருக்கும் அப்போ பஸ்ஸோட சேர்ந்த விஜயும் செத்திருப்பார் நாமளும் தப்பி இருப்போம்.

அப்புறமென்ன படத்திற்கு கதை இல்லையென்டு படத்தை முடிச்சிருப்பாங்க. இந்த கொசுத் தொல்லைகளிடமிருந்த பேச்சும் வந்திருக்காது. இந்த இடத்திலதாங்க விஜய அறிவாளியாக்கப் போய் முருகதாஸ் முட்டாள் ஆகிடுறார். அதே இடத்திலதான் எனக்கும் சந்தேகம் வருது

என்ன எளவுக்குடா அவன் ஓடினான்?
ஓடி கொஞ்ச நேரத்துல குண்டு வெடிக்கும் என்டு தெரிஞ்சா ஏன் அவ்வளவு நேரமா பஸ்ஸிலேயே இருந்தார்ர்ர்ர்?
சரி... பிக்பொக்கட்தான் அடிக்கல்ல குண்டையும் பஸ்ஸில வெச்சிட்டார் அப்புறமும் எதுக்கு ஓடினார்ர்ர்?
சரி... தற்கொலைக் குண்டுதாரின்னா என்ன எளவுக்கு ஓடினார்ர்ர்ர்?
(ர்ர்ர்ர்ரு ரொம்ப டர்ர்ர் இருக்கோ?)

So படத்திற்கு ஆரம்பமே இல்லை பின்ன எதுக்கு முடிவு வரை பேசுவான். அதவிட்டுட்டு 15 நாள் பட்டினி இருந்த பிச்சக்காரனுக்கு சட்னியில்லா இட்லி கிடைச்மாதிரி 2004க்கு பிறகு விஜய் பேன்ஸுக்கு இந்தப்படம் கெடச்சிருக்கு விடுவனா மாமன். சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுறவங்களாச்சே....

ஆனாலும் வாயால கார் ஓட்டுறது, ஊர் விட்டு அடுத்த ஊர் ட்ரெய்னுக்கு பறக்கிறது, புள்ளட்ஸ விட வேகமாக இயங்குறது என இதுல எதுவும் இல்லாதது கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.


Friday, November 9, 2012

துப்பாக்கி எதிர் போடா போடி... கள்ளத்துப்பாக்கி அவுட் : தீபாவளி படங்கள் ஒரு பார்வை


சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளியே தமிழ் சினிமாவின் வசந்த காலம் என்னுமளவிற்கு ஏராளமான படங்கள் வெளிவந்து சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமாடச் செய்துவிடும்.

பெரிய நடிகர்களின் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள், அறிமுக நடிகர்களின் படங்கள் என ஏராளமான படங்கள் வெளியாகி தீபாவளி பட்டாசாக வெடிக்கும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள், அதிகளவான திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளுவதனால் 3 தொடக்கம் 5 படங்களே வெளியானது. பின்னர் அதுவும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2 அல்லது 3 படங்களாகவும் குறைந்தது. இதனால் தீபாவளியும் படங்களின்றி களை இழந்தது.

இந்நிலையில் இம்முறை தீபாவளிக்கு பெரிய, சிறிய பட்ஜெட் படங்கள் என 10 படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை 4 மட்டுமே தீபாவளி பந்தயத்தில் களமிறங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிவந்தே தீருவேன் என்றிருந்த கள்ளத்துப்பாக்கிக்கு தீபாவளியானது அனுமதிப்பத்திரம் கொடுக்க மறுத்துவிட்டது.

விஜயின் துப்பாக்கி, சிம்புவின் போடா போடி, தங்கர் பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி மற்றும் காசிக்குப்பம் ஆகிய படங்களே தீபாவளி ரேஸில் ஓட தயாராகியுள்ள படங்கள். இதில் விஜய் மற்றும் சிம்புவின் படங்களிடையே ஒரு போட்டி காணப்படும். மற்றைய இரண்டு படங்களும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் போட்டியை ஏற்படுத்தலாம்.

ஏனெனில் நட்சத்திர அந்தஸ்த்தினை விட படத்தின் கதை, திரைக்கதையே படங்களின் வெற்றியை தீர்மானிப்பதாக அமைகின்றது. இதனை இவ்வாண்டில் இதுவரையில் வெளியான நட்சத்திர அந்தஸ்த்து நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்கள் எதிர்மறை விமர்சனங்களால் பொக்ஸ் ஒபிஸில் குப்புற விழுந்து நிரூபித்துள்ளது.

மேலும் பெரிய நடிகர்களின் படங்களை இந்தியாவிற்கு வெளியில் வி.ஐ.பி ஷோ என்ற பெயரில் சில நாடுகளில் ஒரு நாள் முன்னரே படத்தை வெளியிடுவதனால் அங்கிருந்து வெளியாகும் விமர்சனங்களும் படத்தின் வெற்றியில் தாக்கம் செலுத்துவதாய் அமைந்தது.

இம்முறை இவற்றையெல்லாம் மீறி துப்பாக்கி மற்றும் போடா போடி திரைப்படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே தமிழ் திரையுலகினரதும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களாக உள்ளதை சமூக வலைத்தளங்களினூடாக அறிய முடிகின்றது.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் படங்கள் மோதிக்கொள்வதற்கு பதில் இம்முறை விஜயும் சிம்புவும் மோதிக்கொள்ளப்போகிறார்கள்.

இனி தீபாவளிக்கு  வெளிவரவுள்ள படங்களை பார்க்கையில்,

துப்பாக்கி 
இந்த தீபாவளிக்கு சரவெடியாய் அமையுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் இதுவே. விஜய், விஜயின் சின்ன மணிரத்தினம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தேசிய விருது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தேசிய விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ் என நம்பிக்கையளிக்கும் கூட்டணி.

படத்தின் பாடல்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் படத்தின் ட்ரெய்லர் விஜய் ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலமைந்துள்ளது. இதனால் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு மற்றும் தீபாவளி விடுமுறை என்பவற்றால் படத்தின் ஆரம்பம் அமர்களமாய் இருக்கும்.

ஆரம்பத்தில் வெளியாகும் விமர்சனங்கள் ஆறுதலளித்தால் விஜய்க்கு மற்றுமொரு வெற்றிப்பட வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக விஜயின் ரசிகர்கள் பட்டாளமும் படத்திற்கு கைகொடுக்கும்.

இருப்பினும் படம் சற்று சொதப்பலாக அமைந்தால், படத்தினை கவிழ்க்க சமூகவலைத்தளத்திலுள்ள விஜய் ஹேட்டர்ஸ் தயாராகிவிடுவார்கள். கள்ளத்துப்பாக்கியிடம் தப்பித்தாலும் இவர்களிடம் தப்பிப்பது சாதாரணமான விடயமல்ல. தணிக்கை குழுவின் சான்றிதழை வைத்துக்கொண்டே வழக்கமான தங்கச்சி மரணம், படம் சற்று நீளம் (2மணி 50நிமி) அது இதுவென்று இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.

போடா போடி 
கடந்த 4 வருடங்களாக கிடப்பிலிருந்த படம் திடீரென தீபாவளி பந்தயத்தில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது. சிம்புவுடன் அறிமுக நாயகியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி இணைந்து நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பொறுப்பேற்க தமன் இசை வழங்கியுள்ளார்.

ஆரம்பத்திலிந்தே இப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்புக்கள் இருந்தது. ஆனாலும் படம் வரூம் ஆனா வராது பாணியில் இழுத்தடிக்கப்பட்டு வந்தமையினால் ரசிகர்கள் படத்தினை சில காலம் மறந்தே விட்டார்கள். இருப்பினும் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டுக்குப் பின்னர் மீண்டும் எதிர்பார்ப்பினை தூண்டிவிட்டது.

மேலும் இந்த தீபாவளிக்கு துப்பாக்கி போட்டியை ஏற்படுத்தக்கூடிய படம் இதுவே. எனவே துப்பாக்கியை விட சற்றே சிறப்பாக இருந்தால் சிம்புவுக்கு ஒஸ்தியாக இருக்கும். இல்லையேல் ஒஸ்தி பட வரிசையில் இணைந்துகொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

அம்மாவின் கைப் பேசி
தங்கர் பச்சானி இயக்கத்தில் சாந்தனு, இனியா மற்றும் தங்கர் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள படம். தீபாவளிக்கு முதலில் தயாரான திரைப்படம்.

தங்கர்பச்சானின் வழக்கமான படம் என ட்ரெய்லர் காட்டிவிட்டது. இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் கதை என நிறைய பொறுப்புக்களை தங்கர் பச்சான் சுமக்க ரோஹித் குல்கர்னி இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சாந்தனுவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டிய படமாக இருக்கிறது.

காசிக்குப்பம் 
துப்பாக்கி மற்றும் போடா போடி விடுவகின்ற ஓரிரு திரையரங்குளில் வெளியாகவுள்ள படம். நரேன் மற்றும் லிவிங்ஸ்டன் தவிர எனையவர்கள் புதுமுகங்கள். அருண் படத்தினை இயக்கியுள்ளார். கிளுகிளுப்பான போஸ்டர்கள் மட்டுமே படத்தினை இதுவரை கவனிக்கவைத்துள்ளது.

இந்த 4 படங்கள் தவிர தீபாவளி ரேஸிலிருந்து ஒதுங்கிக்கொண்ட சில படங்கள் தீபாவளியின் பின்னர் ஒரு வாரம் கழித்து பந்தயத்தில் இணைந்துகொள்ளவுள்ளது.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை முன்கூட்டியே வொண்டர்ஸ் தெரிவித்துக்கொள்கின்றது.

- AM. Rizath

Wednesday, October 31, 2012

பாட்ஷா வெற்றியும் துப்பாக்கி தோல்வியும்


ரஜினியின் பாட்ஷா படம் மெகா ஹிட்டானதற்கும் அண்மையில் சில படங்கள் (ஓரளவு நல்லா இருந்தும்) தோல்வியானதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது இணையம் என்பதனை ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்றாலும் தகும்.

ஏனெனில் இணையப் பாவனை என்பது அந்தளவிற்கு எம்மிடையே பரந்துகிடக்கின்றது (என்ன பண்ண பேஸ்புக்கும் கூகுளும்தான் இணையம் என்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது). இதனால் ஏராளமான நன்மைகளும் கூடவே சில தீமைகளும் வளர்ந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும்; முடிந்தவரை நன்மைகளைப் பெற நாம் முயற்சிப்போம்.

வளர்ந்து நிற்கும் இணையத்தினால் இன்று தமிழ் இணையத்தளங்கள் மற்றும் ப்ளொக்கர்கள் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கவைதான். ஆனால் இந்த வளர்ச்சியானது தேவையான விடயங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தினால் பரவாயில்லை அதற்குப் பதில் சில பல விடயங்களின் வீழ்ச்சிக்கு காரணமாவதே வருத்தம்.

குறிப்பாக, மாட்டித்தவிக்கும் பிரதான அம்சங்களில் ஒன்றுதான் தமிழ்சினிமா. இணையத்தின் வளர்ச்சியால் பல தேவையான விடயங்களை அறிந்துகொள்ள ஒரு நடுநிலையாளனாய் இருந்து வந்த ப்ளொக்கர்ஸ் மத்தியில் இன்று பல்லாயிரக்கணக்கான ஈயடிச்சான் ப்ளொக்கர்ஸ் ஊடுருவியதில் பல படங்களுடன் சேர்த்து பல தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஈயடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் சொந்தச் சரக்கை எழுதும் ஒவ்வொரு ப்ளொக்கர்ஸுக்கும் வருத்தமே.

அந்த வகையில் இந்த வருடமும் கடந்த வருடமும் அதிகளவிலான தமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய இணையத்துடன் சேர்ந்து ஈயடிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்ததும் ஒரு காரணம். (தமிழ் பட நாயகர்கள் மற்றும் இயக்குனர்களிடையேயும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே அதிகம்தான்)

உண்மையில் ஓரளவு நல்ல படங்களையும் சிறந்த மொக்கை படங்களாக்கிய பெருமை பரந்தளவில் வெளியாகும் ஈயடிக்கும் விமர்சனங்களுடன குறித்த நடிகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுமே.


அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுக்கு எதிராகவும் அவர்களின் படங்களுக்கு எதிராகவும் குறி வைத்து பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்படுகின்ற குரூப்கள் அனைத்தும் ஒரு படத்தினை சாதாரணமாக திரையரங்கு களிலிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கு காரணமாகின்றது.

அண்மையில் இவ்வாறு வெளியான மயக்கம் என்ன, 3, சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என இந்த வரிசை மிக நீளமானது. இந்த படங்கள் எதுவும் படு மொக்கை திரைப்படங்கள் இல்லையென்றாலும் இணையத்தளங்களில் வெளியான மோசமான விமர்சனங்களே இப்படங்களை தோல்வியாக்கியது. (ஆனாலும் இந்த வரிசையில் இல்லாத சில படங்கள் ஓடவில்லை என்றாலும் போஸ்டரில் 100 நாட்கள் ஓடிவிட்டது... அது வேறு கதை)

உண்மையில் பாட்ஷா படமும் தோல்வியை சந்தித்திருக்கும், அப்போது இணையம் இருந்திருந்தால் ஏனெனில் பாட்ஷா படத்திற்கு ஏராளமான பத்திரிகைகள் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசியது பலருக்கும் நினைவிருக்கும் (தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சிக்கங்க). ஆனாலும் பாட்ஷா மெகா ஹிட்.

ஆனால் அன்று இணையம் வளர்ந்திருந்தால் ஈயடிக்கும் வல்லமை படைத்தவர்களும் ரஜினி ஹேட்டர்ஸ்ஸும் இணைந்து படத்தை துவம்சம் செய்திருக்கலாம் (பாபாவுக்கு நடந்த மாதிரி... ஆமா... பாபா நல்ல படமா? கெட்ட படமா?). ஏனெனில் நடிகர்களின் ஹேட்டர்ஸ் மற்றும் ஈயடிப்பவர்களை தாண்டி மக்களை திரையரங்குக்கு வரவழைப்பது அத்தனை கடினமான காரியம்.

இருப்பினும் சில மொக்கை படங்கள் விமர்சனங்களால் ஓரளவு தப்பித்தும் இருக்கிறது (இதுக்கு உதாரணம் வேணாமே... சிலர் மனம் வருத்தப்படும்).

அதேவேளை சில சமயங்களில் இத்தனை தடைகளையும் தாண்டி சில படங்கள் வெற்றிபெற்றுள்ளது. உதாரணமாக எதிர்மறையான பல விமர்சனங்களை கடந்து பில்லா ஒன்று, எஸ்.எம்.எஸ் போல வெகு சில படங்களே வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசை தொடர வேண்டும் அவை நல்ல படங்களாக இருந்தால்.

அந்த வகையில்  விரைவில் வெளியாவுள்ள துப்பாக்கி படத்திற்கும் விஜய்க்கும் எதிராக இன்று பேஸ்புக்கில் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது (இதெல்லாம் விஜய்க்கு புதுசா... ஏன்னா பேஸ்புக்கில் அதிகமா கலாய்க்கப்படுற நடிகர் இவர்தான் இத நான் சொல்லல்ல போய் பாருங்க). எனவே துப்பாக்கி ஒரு நல்ல படமாக இருந்தால் அதற்கெதிரான வேலைகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே!. (விஜய்க்கிட்ட இருந்து நல்ல படமா? நடக்காதே... இப்படியெல்லாம் சொல்லப்படாது)


ஏற்கனவே பாடல்கள், போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை தாரளமாக கிண்டல் செய்து எதிர்மறை எண்ணத்தையும் தோற்றுவித்துவிட்டனர். மேலும் படம் வெளியானதும் முதலாவது விமர்சனத்தை ஈயடிக்கவும் இணையத்தளங்கள் தயார். அந்த விமர்சனம் எதிர்மறை எனில் செத்தாண்டா சேகர் நிலைமைதான் துப்பாக்கி படத்திற்கும்.

எனவே ஈயடிக்கும் இணையத்தளங்கள் இனிமேலாவது வருகின்ற படங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி மேலும் ஈயடிக்கும் தொழில்நுட்பத்தை குறைக்க முயற்சி எடுங்க.

இப்போ தெரியுதா துப்பாக்கி எப்படி தோல்வியடைப்போகுதுன்னு... அப்ப பார்த்து சூதானமா நடந்துக்குறீங்களாண்ணா... கொஞ்சோண்ணு ஸ்லிப்பாச்சு சாங்குதாண்டியோவ்!!!

Wednesday, October 10, 2012

மோதிக்கொள்ளும் துப்பாக்கி மற்றும் போடா போடி ட்ரெய்லர் : இன்றைய சூடான வாதம்



ஏகப்பட்ட பிரச்சினை மற்றும் பில்ட் அப்புக்களை தாண்டி முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

முதலில் ஹரீஸ் ஜெயராஜின் பில்டப் வார்த்தைகளை தவிடுபொடியாக்கியது துப்பாக்கி பாடல்கள். கூகுள் கூகுள் பாடல் மட்டுமே ரசிகர்களை இப்போதைக்கு கூகுளில் தேடச்செய்துள்ளது. ஏனையவை துப்பாக்கியிலிருந்து வெளியான வெடிக்காத தோட்டாக்களாவே தெரிகிறது.

வழக்கமாக சுட்டாச்சும் நல்லவே பாட்டுப் போட்டுக்கொண்டிருந்த ஹரீஸ் ஜெயராஜுக்கு அண்மைக்காலமாக சரியாவே சுடத்தெரியாம போனது அனைவருக்கும் வேதனைதான் அதிலும் துப்பாக்கி படத்துக்காச்சும் கொஞ்சம் சத்தமா சுட்டிருக்கலாம் என்பது விஜய் ரசிகர்களின் உளக் குமுறல்.

இந்த படம் என்னோட படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசமா இருக்கும் என்று விஜய் சொன்னார் ட்ரெய்லரில் அப்படியெதுவும் வித்தியாசமா தெரியல ஆனாலும் ட்ரெய்லர் ரசிக்கும் படி உள்ளது. சமூகவலைத்தளங்களிலும் தற்போதைய ஹொட் டோக் இதுதான். குறிப்பாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள I'm waiting வசனம் விஜய் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

ஆனாலும் வழக்கமான விஜய் தாவுறது, பறக்கிறது என ட்ரெய்லரில் வருவது சற்றே நெருடல். முருகதாஸ் சார் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஏனெனில் பாப்பா தள்ளிப்போய் விளையாடு என்ற பஞ்ச் வசனத்தை பஞ்சராக்குவது போல தெரியுது. ஆனாலும் விஜயின் Hair Style வித்தியாசமாக அதேசமயம் அழகாகவும் இருப்பது அறுதல்.

அடுத்தது சிம்புவின் போடா போடி : பாடல்கள் அனைத்தும் தமனின் இசையில் கேட்கும் படியாகவே உள்ளது. நடனம் சம்மந்தமான படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை பாடல்கள் தெளிவுபடுத்துகின்றது. ஆனாலும் முதலில் வெளியிடப்பட்ட லவ் பண்ணலாமா வேணாமா பாடலே இன்னும் முணுமுணுக்கச் செய்கிறது.

மேலும் இப்போதைக்கு ஐ எம் எ  குத்து டான்சர், அப்பன் மவனே வாடா பாடல் ரசிகர்களை சூடேற்ற ஆரம்பித்திருப்பது பேஸ்புக்கிலுள்ள சிம்பு பேன் பேஜ்கள் கொமன்டாக பதிவு செய்கின்றது.

போடா போடி ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் சிம்புவின் ரசிகர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு துப்பாக்கி ட்ரெய்லர் வெளியீடு அமைந்துவிட்டது இருந்தாலும் சிம்பு ரசிகர்கள் சளைக்காமல் ப்ரொமோட் செய்கின்றனர்.

போடா போடி ட்ரெய்லர் சற்றே வித்தியாசமாகவும் ஈர்க்கும் வகையிலமைந்துள்ள அதேவேளை சிம்புவையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது மகிழ்ச்சி.

இந்த இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடாக அமையும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதனால் ட்ரெய்லிருந்தே விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மோதலை ஆரம்பித்துவிட்டனர்.

எதுக்கு வம்பு யாரு விரலை உடைப்பார்? யாரு விரலை ஆட்டுவார்? என்று தீபாவளி ரேஸ் பதில் சொல்லும் வரை காத்திருப்போம்!

மோதலை தூண்டிவிட்ட அந்த ட்ரெய்லர்கள் இதோ உங்களுக்காக...



Friday, October 5, 2012

முடிவுக்கு வந்தது துப்பாக்கி வழக்கு


விஜயின் துப்பாக்கி தலைப்பு மீதான தடையை நீக்கியது நீதிமன்றம். துப்பாக்கி படத்தின் தலைப்பு மீது வழக்குத் தொடர்ந்த கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் இன்று அவ்வழக்கினை மீளப்பெற்றுள்ளமையே இவ்வழக்கு முடிவுக்கு வரக் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி படக்குழுவினருக்கு மிக நீண்ட நாட்களாக தலையிடி கொடுத்துவந்த இவ்வழக்கு முடிவுக்கு வந்தது விஜயின் ரசிகர்கள் மற்றும் துப்பாக்கி படக்குழுவினருக்கு பெரும் ஆறுதலளித்துள்ளதை சமூகவலைத்தளங்களினூடாக காணக்கூடியதாக உள்ளது.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டது போல் தீபாவளிக்கு துப்பாக்கியினை வெடிக்கவைக்க படக்குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒக்டோபர் 10ஆம் திகதி படத்தின் ட்ரெய்லர், பாடல் மற்றும் படம் வெளியீடு குறித்து தகவல்களை வெளியிட பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

இனி என்ன நீதிமன்றமே சொல்லிடிச்சே... கள்ளத்துப்பாக்கி இல்லை இது நல்ல துப்பாக்கிதான்னு... தீபாவளிக்கு சத்தமா வெடிச்சா சரிதான!