சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, October 10, 2012

அப்பிளின் ஐபேட் மினி பற்றி படங்களுடன் தகவல்கள் கசிந்தது


அப்பிள் ஐபேட் மினி தொடர்பாக வலைத்தளங்களில் ஏற்கனவே நிறைய தகவல்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளிவந்துவிட்டது ஆனாலும் இம்முறை சற்றே அதிகமாக படங்களுடனேயே வெளிவந்திருப்பதே அதிர்ச்சி.

9வழ5அயஉ.உழஅ என்ற இணையத்தளத்தளமே குறித்த விடயங்கள் மற்றும் படங்களை கசியவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் அடிப்படையில் அப்பிளின் ஐபேட் மினி கொண்டுள்ள தொழில்நுட்ப வசதிகள் தொடர்பில் இவ்வாறு அமைந்துள்ளது.

7.85 இன்ச் தொடுதிரையினை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அப்பிள் இதுவரை வெளியிட்டுள்ள ஐபேட்களின் தொடுதிரையை விடச் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த ஐபேட் மினி 3ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்களுக்கு ஏதுவாக அமையாது மாறாக வைபை வசதியை மட்டுமே கொண்டிருக்குமாம். தற்போது வெளிவரும் அனேக டெப்லட்கள் 3ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்களுக்கு ஏதுவாக அமைந்துள்ள இந்நிலையில் இவ்வாறானதொரு வசதியினை ஏன் அப்பிள் கண்டுகொள்ளவில்லை என்பது அப்பிளிற்கு மட்டுமே வெளிச்சம்.

3ஜி மற்றும் 4ஜி வசதியை பெற முடியாது என்பது ஏமாற்றமாக இருப்பினும் இது அதிகார பூர்வமான அறிவிப்பும் இல்லை என்பதனால் பொறுத்திருந்தே இது தொடர்பில் அறியமுடியும்.


இது மட்டுமல்லாது அப்பிள் ஐ போன் 5இல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் ஏற்படுத்திய மாற்றங்களை ஒத்த அம்சங்களையே இதிலும் காணப்படுகிறதாம்.

மேலும் இந்த ஐபேட் மினியில் ஏ 6 புரொசசர், நனோ சிம் ட்டரே, முகப்பு கெமரா என பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளதோடு 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட பதிப்புக்களையும் பெறலாம்.

அத்துடன் இதன் இயங்குதளம் ஐ.ஓ.எஸ் 6 என்ற புதிய பதிப்பினையும் கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற இதேவேளை 10 மில்லியன் ஐபேட் மினியினை தயாரித்துள்ளதோடு இம்மாதம் 17 திகதி அறிமுகம் செய்து நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதலே விற்பனைகளை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் எதிபார்த்திருப்பதாவும் கூறப்படுகின்றது.

அப்பிள் உற்பத்திகளுக்கு விளம்பரம் என்பது தேவையில்லை போல் தெரிகிறது ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திகளுக்குமான கிசுகிசுக்களே அந்த பணியை செவ்வனே நிறைவேற்றிக்கொள்கிறதே!


Thursday, October 4, 2012

தொழில்நுட்ப உலகின் சரித்திர நாயகன் ஸ்டீவ் ஜொப்ஸ்


வாழும் போதே இறப்பவர் பலர் இறந்த பின்னர் பெயரை நிலைநாட்ட உழைப்பவர் சிலர் இறந்த பின்னும் வாழ்பவர்கள் மிகச் சிலர் அவ்வாறு இறந்தும் இறவாமல் வாழ்பவர்களில் தொழில்நுட்ப உலகில்மறக்க முடியாத மறக்கப்படக்கூடாத நாமமாய் என்றும் ஜொலிப்பவர் அப்பிளின் தந்தை 'ஸ்டீவ் ஜொப்ஸ்'.

வித்தியாசமான சிந்தனையாளன் எப்போதும் வித்தியாசமாகவே உலகை தன்வசப்படுத்துவான் என்பதற்கு ஸ்டீவ் ஜொப்ஸ் சிறந்த உதாரணமாக வாழ்ந்தார். இதனாலேயே இறந்த பின்னும் வாழ்வோர் வரிசையில் இடம் பிடித்ததார் என்றால் அது அவருக்கு மட்டுமல்ல அந்த வரிசைக்கும் பெருமைதான்.

தொழில் நுட்ப உலகில் தனக்கென தனி முத்திரை படைத்த அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான ஸ்டீவ் ஜொப்ஸ் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு கடந்த வருடம் 2011இல் ஒக்டோபர் 5ஆம் திகதி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். அன்னாரின் மறைவு தொழில்நுட்ப உலகிற்கு என்றும் மீள் நிரப்ப முடியாத இழப்பு என்பதனை அவரது படைப்புக்கள் இன்றுவரை பறைசாற்றி நிற்கின்றது.


ஸ்டீவ் ஜொப்ஸ் உடலளவில் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரின் தொழில் நுட்பங்களினூடாக எம்முடன் வாழ ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது என்தே நிஜம். 


மறைந்த பின்னும் மறக்காமல் இன்றும் நினைக்கத் தோன்றும் அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸ் கடந்து வந்த பாதை மலர்கள் நிறைந்தவை அல்ல மாறாக முட்கள் நிறைந்த பாதைதான். முட்களை மலர்களாக மாற்றும் மந்திரம் ஸ்டீவ் ஜொப்ஸிடம் கொட்டிக் கிடந்ததாலே இன்று அவர் இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.

இத்தனை உயரிய இடத்தை தக்க வைக்க அவர் கடந்து வந்த 'Be Crazy Be Hungry' என்ற வெற்றிப் பாதையை நாமும் அறிந்துகொள்வோம். திருமணமாகாத சோ ஆன் சீப்லே மற்றும் அப்துல் வட்டா சண்டாலி என்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்களால் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி 1955ஆம் இம்மண்ணில் சாதனைகளை நிகழ்த்த சென் பிரான்ஸிஸ்கோவில் பிறந்திருந்தாலும் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளக் குடும்ப இணையர் போல் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் என்பவர்களே தத்து எடுத்து ஸ்டீவ் ஜொப்ஸினை ஆளாக்கினர்.

பள்ளிப்படிப்பை நிறைவு செய்துவிட்டு பட்டப்படிப்பினை மேற்கொள்ளவென கல்லூரியில் இணைந்தார் வறுமையினால் அவருக்கு அப்பட்டப்படிப்பினை ஒரு தவணைக்கு (Semester) மேல் கல்வி கற்கமுடியாமல் போய்விட்டது. பாடசாலையை பூர்த்தி செய்யாத தோமஸ் அல்வா சாதிக்கையில் நான் சாதிக்க என்ன என்ற எண்ணமோ தெரியவில்லை. ஸ்டீவ் ஜொப்ஸ் வறுமையிலும் எதற்கும் கதிகலங்கவில்லை.

உணவுக்காக அவரது நண்பர்களின் அறைகளில் கிடைக்கும் போத்தல்களை சேகரித்து விற்று காசாக்கினார். மேலும் வாராந்தம் கோயில்களில் கிடைக்கும் இலவச உணவின் மூலம் பசியாறினார்.

இவ்வாறு வாழ்க்கையில் பயணித்துக்கொண்டிருக்கையில் அற்றரிக் எனும் நிறுவனத்தில் ஒரு டெக்னீசியனாக இணைந்தார். இந்த சந்தர்ப்பத்திலேயே கல்லூரி நண்பருடன் இந்தியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பயணத்தின் போதே ஜொப்ஸ் நீம் கரோலி பாபவின் போதனைகளினால் புத்த மதத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.

இப்பயணித்தின் பின்னர் தாயகம் திரும்பிய ஸ்டீவ் ஜொப்ஸ், தற்போதைய தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனத்தினை இசுட்டீவ் வோசினியாக் மார்க் மார்குலா ஆகியோருடன் இணைந்து சாதாரண கராஜ் ஒன்றினுள் ஆரம்பித்தார். இதன் பின்னரே ஸ்டீவ் ஜொப்ஸின் வெற்றிப் பயணம் ஆரம்பமானது. 1976ஆம் ஆண்டில் தனது முதலாவது கண்டுபிடிப்பான த அப்பிள் 1 கணனியினை 666.66 அமெரிக்க டொலருக்கு சந்தைக்கு அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து வெற்றிமுகத்தில் இருந்த அப்பிள் நிறுவனத்தினை 1977ஆம் ஆண்டு கூட்டு நிறுவனமாக மாற்றி அப்பிள் 2 கணனியினையும் சந்தைக்குக் கொண்டுவந்தார். தொடர்ந்து அப்பிள் நிறுவனம் வணிக ரீதியாக சந்தையில் தனக்ககென ஒரு இடத்தினை தக்கவைத்துக்கொண்டது. இதனால் 1980ஆம் முதல் முறையாக தனது பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்தது. இந்த அறிமுக விற்பனையின் போதே 110 மில்லியன் அமெரிக்க டொலிரினை திரட்டி அனைவரினது கவனத்தினை தன் பக்கம் ஈர்க்கச் செய்தது. இதற்கெல்லாம் முதுகெலும்பாக ஸ்டீவ் ஜொப்ஸின் கண்டுபிடிப்புக்களே காரணமாக இருந்தது.

இல்லாததை உருவாக்குபவனே சிறந்த சாதனையாளன் அவ்வாறான சாதனையாளனான ஸ்டீவ் ஜொப்ஸின் அயராத உழைப்பினால் அப்பிள் நிறுவனத்தின் வருமானத்தினை பலமடங்காக அதிகரித்து அப்பிளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். 1983ஆம் ஆண்டு தனது அடுத்த படைப்பான லிசா கணனியினையும் சந்தையில் தவழவிட்டார்.

தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு அச்சுக்கலையினை (Typography) பயன்படுத்தி உருவாக்கிய அவரது வெற்றிகரமான படைப்புக்களில் ஒன்றான அப்பிள் மெக்கின்டோஸ் கணனியினை உலகிற்கு அறிமுகம் செய்து தொழில்நுட்ப உலகில் ஆச்சரிக்குறியாக மாறினார். இந்த படைப்பு வெளியாகி அடுத்த வருடம் அப்போதைய நிறைவேற்று அதிகாரி ஸ்கூலியுடனான கருத்து வெறுபாட்டினால் ஜொப்ஸுடன் அவரது நண்பரான வோசினியாக்கும் அப்பிள் நிறுவனத்திலிருந்து தமது பதவிகளை துறந்தனர்.


சொந்த நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்படும் போது ஏற்படும் வலியானது சொல்லிடங்காத் துயரினை தரும். அவ்வாறானதொரு நிலையிலும் சற்றும் மனம் தளாராது மீண்டும் தனது வாழ்கையில் புது அத்தியாயத்தினை ஆரம்பித்தார். 1986ஆம் ஆண்டு தற்போதைய பிக்ஸர் கிராபிக்ஸ் நிறுவனத்தினை கொள்வனவு செய்தார். இக்காலப்பகுதியிலேயே ஜொப்ஸ் நெக்ஸ்ட் நிறுவனத்தினை தோற்றுவித்து உயர்ரக கணனிகளை பல்கலைக்கழகங்களுக்காக கண்டுபிடித்து தனது சேவையினை விரிவுபடுத்த ஆரம்பித்தார். 1989ஆம் ஆண்டில் தனது முதலாவது நெக்ஸ்ட் கணனியினை 6500 அமெரிக்க டொலருக்கு சந்தைக்கு அறிமுகம் செய்தார்.

இவ்வாறு பீனிக்ஸ் பறவை போல பிரம்மாண்டமாக மீண்டெழுந்தார் ஜொப்ஸ். அதே ஆண்டு இறைவன் அவருக்கு கொடுத்த வரம் தனது காதலியான லொரன் பவலை அவரது சட்டப்படி மனைவியாக்கினார். திருமணத்திற்கு முன்னரே இவர்கள் இருவருக்கும் குழந்தை இருந்தது. 4 குழந்தைகள் மனைவி என மண வாழ்க்கையும் அவருக்கு சிறப்பாகவே இருந்தது.

இது இவ்வாறிருக்க 1995ஆம் ஆண்டு ஜொப்ஸ் கொள்வனவு செய்த கிராபிக்ஸ் நிறுவனத்தினை டிஸ்னி நிறுவனத்துடன் இணைத்து முப்பரிமாண கார்ட்டுன்களை தாயாரிக்க ஆரம்பித்தார். இதில் வெளியிடப்பட்ட கார்ட்டுன்கள் வசூலில் பெரிய சாதனைகள் படைத்தது. இதனால் ஜொப்ஸ் பெரிய வருமானம் ஈட்டினார். பின்னாளில் டிஸ்னி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு பிக்ஸர் நிறுவனத்தினை டிஸ்னியே மொத்தமாக வாங்கிக்கொண்டது. அப்போது டிஸ்னியின் அதிகூடிய தனிநபர் பங்குதாரராக ஜொப்ஸ் விளங்கினார்.

1996ஆம் அப்பிள் நிறுவனம் நெக்ஸ் கணனியின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யும் தனது திட்டத்தினை அறிவித்தது ஏனெனில் ஜொப்ஸின் நெக்ஸ்ட் கணனிகள் சந்தையில் நிலையான ஒரு இடத்தினை உருவாக்கி வருவதனை உணர்ந்திருந்தது காரணம் இதுவும் ஜொப்ஸின் படைப்பாயிற்றே.

பின்னர் மீண்டும் தனது தாய் வீடான அப்பிளிடமிருந்து வந்த அழைப்பினை ஏற்று இடைக்கால நிறைவேற்று அதிகாரியாக 1997ஆம் ஆண்டு முதல் மறுபடியும் தனது பணிகளை ஆரம்பித்தார் ஜொப்ஸ். இவரது அசாத்திய வெற்றிக் கண்டுபிடிப்புக்களால் 2000ஆம் ஆண்டு பிரதம நிறைவேற்று அதிகாரியாக உத்தியோகபூர்வமாக பதவி உயர்வு பெற்றார்.

2001ஆம் ஜொப்ஸ் தான் ஒரு தனி ரகமான சிந்தனையாளன் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐ பொட் மற்றும் அதற்கான மென்பொருளான ஐ டியூன்சையும் வெளியிட்டு மீண்டும் தன் பக்கம் உலகத்தை ஈர்த்துக்கொண்டார். இதன் பின்னரும் இவரின் தேடல் ஓய்ந்தபாடில்லை. இதனால் இவரது அடுத்த வெளியீட்டுக்கு உலகம் காத்திருந்தது, இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில இவருக்கு கணையப்புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சையின் பின்னர் 2007இல் அப்பிள் நிறுவனத்தினை கையடக்கத் தொலைபேசி உலகத்திற்குள் ஐ போனுடன் கொண்டு சென்றார். இது கையடக்கடத் தொலைபேசி வரலாற்றில் கவனிக்கத்தக்க படைப்பாக உருவானது. இதற்கான மோகம் இன்றைய நாட்களில் மிக அதிகம் இதற்கு முக்கிய காரணம் ஜொப்ஸ் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

பின்னர் ஐ போன் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் தற்போது அப்பிள் 4எஸ் எனும் வடிவமே இவரின் இறுதி படைப்பாக இருந்தது. இந்த ஐ போன் விவகாரத்தில் பெரிதும் புதுமைகளை புகுத்தி சாதனை பல படைக்கவென அவர் எடுத்த முயற்சிகளுக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.

இதனால் 2011ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் வைத்திய விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்துவிட்டு சென்று ஓய்வெடுக்கும் வேளைகளில் கூட அவர் அவரது முயற்சிகளை கைவிட்டபாடில்லை. அப்பிளிற்காக ஏராளமான குறிப்புக்களை எழுதியதாக கூறப்படுகிறது. இருந்தும் அவரது உடல் நிலை புற்றுநோயால் மேலும் மோசமடைந்ததனால் தான் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இவ்வறிவித்தலின் பின்னர் சுமார் ஒரு மாத இடைவெளியில் ஜொப்ஸ் என்ற சரித்திரத்தின் இறுதிக் கட்டம் நெருங்கியது. 2011 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 05ஆம் திகதி தொழில் நுட்ப உலகை ஆட்டிவைத்தாலும் கணையப்புற்றுநோயின் ஆளுகையினால் தொழில்நுட்ப உலகினை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு சரித்திரமாக மாறினார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

இவ்வாறு அப்பிள் நிறுவனத்திற்காகவே வாழ்ந்து, பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் தானே ஒரு பல்கலைக்கழகம் என நிரூபித்துக்காட்டிய அந்த மாமனிதருக்கு கிராபி சொப்ட் நிறுவனம் அவரை கௌரவிக்கும் வகையில் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டிலுள்ள கிராபி சொப்ட் சயன்ஸ் பார்க்கில் வெண்கலத்தினாலான 6.5 அடி உயரமான சிலை ஒன்று முதன் முதலாக 2011ஆம் டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது.

வாழ்கையில் வெற்றிபெற்றவர்களுக்கே சிலைகள் வைக்கையில் வாழ்கையையே வென்றவருக்கு சிலை வைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றாலும் அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு அப்பிள் நிறுவனம் செய்ய வேண்டிய மரியாதையினை கிராபி சொப்ட் முந்திங்கொண்டதில்தான் ஆச்சரியம்.

மேலும் மெடமே டுசாட்ஸ் (Madame Tussauds) என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஓராண்டு முடிவறும் இத்தருணத்தில் அவருடைய உருவத்தை 15 லட்சம் ஹொங்கோங் டொலர் செலவில் மெழுகில் வடித்திருக்கிறது.

ஆனாலும் ஜொப்ஸ் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை யாருக்காக ஒதுக்கினரோ அந்த அப்பிள் நிறுவனம் அவரை கௌரவப்படுத்த நினைக் மறந்தாலும் அவரை கொண்டு தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த மறக்கவில்லை எனப்பதாக அமைந்துள்ளது அண்மைய செயற்பாடுகள்.

காரணம் அப்பிள் 4எஸ் அல்ல 5எஸ் தான் ஜொப்ஸின் இறுதி படைப்பு என அப்பிள் 5எஸ் அமைப்பிற்கு ஜொப்ஸின் பெயரில் அப்பிள் நிறுவனம் விளம்பரம் தேடியதாகவும் குற்றச்சாட்டுட்டுகள் எழுந்தது. எனவே தொழில்நுட்பத்துடன் சஞ்சரித்து ஒரு வருடத்தினை முன்னிட்டாவது  ஜொப்ஸினை கௌரவிக்கும் வகையில் நடந்து, அப்பிள் தன் களங்கத்தினை துடைக்குமா என்பதே தற்போது அனைவரினதும் கேள்வியாக உள்ளது. எந்தவொரு மனிதனின் மகிமையும் அவனின் மறைவிற்கு பின்னரே தெரியும் என்பார்கள் ஆனால் ஜொப்ஸின் விடயத்தில் இது பொய்யாகிவிடும் போலிருக்கிறது. எனவே இனியாவது ஸ்டீவ் ஜொப்ஸ் என்ற சரித்திரத்தை மறக்காமல் கௌரவிக்குமா அப்பிள்!



Thursday, September 20, 2012

ஸ்டீவ் ஜொப்ஸ் மெழுகுச் சிலையை உருவாக்கும் மெடமே டுசாட்ஸ் நிறுவனம்


அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபரான ஸ்டீவ் ஜொப்ஸ் உடலளவில் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவரின் தொழில்நுட்பங்களினூடாக உலக மக்களிடையே இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

இவவாறான ஒரு மேதைக்கு ஹொங்கொங்கிலிருக்கும் மெடமே டுசாட்ஸ் (Madame Tussauds) என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஓராண்டு முடிவறும் இத்தருணத்தில் அவருடைய உருவத்தை மெழுகில் வடித்திருக்கிறது.

இந்த மெழுகு உருவச் சிலையை செப். 27ல் திறந்து வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீவ் ஜொப்ஸ் இறந்த போது அப்பிள் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் (Home Page) வெளியிட்ட படத்தினை ஒத்த உருவத்தையே குறித்த நிறுவனம் மெழுகில் வடிவமைத்திருக்கின்றனர்.

இந்த மெழுகுச் சிலையை வடிவமைக்க 15 லட்சம் ஹொங்கொங் டொலர்கள் செலவானதாக இதனை வடித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சிலையை வடிவமைக்க 3 மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஸ்டீவ் ஜொப்ஸின் மெழுகுச் சிலையை இம்மாதம் 27 முதல் நவம்பர் 26 வரையில் இதனை வடிவமைத்த ஹொங்கொங் நிறுவனத்திலும் பின்னர் ஷாங்காயிலுள்ள அதன் கிளை நிறுவனத்திலும் வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு முதல்  ஹங்கேரியிலுள்ள  கிராபி சொப்ட் என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸின் வெண்கல சிலை ஒன்றினை ஹங்கேரியிலுள்ள கிராபி சொப்ட் பார்க்கில் நிறுவிமை குறிப்பிடத்தக்கது.

அப்பிள் நிறுவனத்தினை உருவாக்கியருக்கு இதுவரையில் அப்பிள் நிறுவனம் மட்டும் மரியாதை நிமித்தமாக எதுவும் பெரிதாக செய்ததாகத் தெரியவில்லை. அது சரி மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கு மணம் கொஞ்சம் தூக்கல் என்பது உண்மைதான் போல தெரிகிறது.

வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஓர் ஆண்டாவதை முன்னிட்டாவது அப்பிள் நிறுவனம் ஏதாவது செய்யுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.




Madame Tussauds Unveils Pictures of Steve Jobs Wax Figure

To commemorate the one-year anniversary of Steve Jobs's death, Madame Tussauds Hong Kong will have on display a wax figure of the Apple co-founder starting at the end of September. To give fans a glimpse at what they could expect, the wax museum today unveiled some photos of the Jobs wax figure in the process of being made.

According to Madame Tussauds, the figure's pose was inspired by photographs Jobs took for the cover of Fortune magazine ins 2006. The statue will have him wearing his signature black mock turtleneck, blue jeans, and Lunor glasses. The museum says it took artists three months to create the statue and ran up a bill of $193,476.

That Steve Jobs wax figure will be on display at Madam Tussauds Hong Kong from September 27 to November 26. After that, it's going on a tour to Madame Tussauds Bangkok and then Madame Tussauds Shanghai.

Thursday, September 13, 2012

வெளியானது அப்பிள் ஐ போன் 5 : ஸ்டீவ் ஜொப்ஸின் அருமையை புரிய வைக்கிறதா? (Apple I Phone 5 Release : Will it Challenge?)


தொழில்நுட்ப உலகின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனமானது தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 இனை நேற்று அறிமுகப்படுத்தியது. சென்பிறான்ச்சில் கோலாகலமா இடம்பெற்ற இந்நிகழ்வினை Wonders நேரடியாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அப்பிளின் நிறைவேற்று அதிகாரியான டிம் குக் ஐ போன் 5 இனை அறிமுகப்படுத்த உலகளாவிய சந்தைப்படுத்தலுக்கான சிரேஷ்ட உப தலைவரான பில் ஸ்ஸிலர் ஐ போன் 5 இன் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐ போன் 4 எஸ் வெளியாகியது. அப்பிளின் இந்த 4எஸ் மாதிரியானது 2010 ஆண்டில் ஜூன் மாதம் வெளியான ஐ போன் 4 இன் தோற்றத்தினை ஒத்திருந்ததுடன் எதிர்பார்த்தளவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கவில்லை என்ற கருத்து நிலவியது.

எனவே அப்பிளின் தீவிர விசிறிகள் ( Apple Fan boys) ஐ போன் 5 இனை மலை போல் நம்பி ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் வைத்திருந்தனர். பல புதிய வசதிகளையும் தோற்றத்தினையும் அப்பிள் ஐ போன் கொண்டுவருமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது இவர்களின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையினையும் அப்பிள் பூர்த்திசெய்ததா? மேலும் தற்போதைய ஐ போன் 4எஸ் மற்றும் ஐ போன் 4 பாவனையாளர்களுக்கு ஐ போன் 5 சிறந்த மாற்றுத்தெரிவாக அமையுமா? எனப் பார்ப்போம்.

ஐ போன் 5



தோற்றம்

ஐ போன் 5 ஆனது கண்ணாடி மற்றும் அலுமினியத்தாலான வெளிப்புறத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் பருமன் 123.8 x 58.6 x 7.6 mm.

இதுவரை வெளியாகிய ஐ போன்களில் மிக மெல்லியதாக இது கருதப்படுகின்றது. இது 7.6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பானது.

மேலும் இதன் நிறை வெறும் 112 கிராம்கள் மட்டுமேயாகும்.

முன்னைய வெளியீடான ஐ போன் 4 எஸ் இன் பருமன் 115.2 x 58.6 x 9.3 mm என்பதுடன் ஐ போன் 3 ஜிஎஸ் இன் பருமன் 115.5 x 62.1 x 12.3 mm ஆகும்.

ஐ போன் 5 ஆனது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளன.

ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தில் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் திரையாகும்.  ஐ போன் 5 ஆனது 4 அங்குல ரெட்டினா திரையைக்கொண்டுள்ளது.

இதன் ரெசலுயுஷன் 1136x640 பிக்ஸல்ஸ் என்பதுடன் 326 (Pixels per inch) படவணு அடர்த்தியைக் கொண்டது.


தொழில்நுட்ப அம்சங்கள் 


புரசசர் (Processor) 

ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 ஐ புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

இது மேம்பட்ட கிராபிக்ஸ் செயற்பாடுகளுக்கும் ஏற்றதென அப்பிள் தெரிவிக்கின்றது.

எனினும் புரசசர்களின் கோர்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் தொடர்பில் அப்பிள் எதனையும் தெரிவிக்கவில்லை.
                
கெமரா (Camera)

 ஐ போன் 4எஸ் கொண்டிந்ததனைப் போல ஐ போன் 5 உம் 8 மெகாபிக்ஸல் ( 3264x2448 pixels) கெமராவினையே கொண்டுள்ளது.

ஐ போன் 5  சென்சரானது 4எஸ்ஸினை விட சற்று சிறியதாகும்.

8 மெகாபிக்ஸல் கெமாராவினைக் கொண்டுள்ள போதிலும் 28 மெகாபிக்ஸலில் பரந்த தோற்ற (பெனோரமிக்) ஷொட்களை இதன்மூலமாக படம்பிடிக்க முடியும்.

மேலும் மேம்படுத்தப்பட்ட 1.2  மெகா பிக்ஸல் புரண்ட் கெமராவினையும் ஐ போன் 5 கொண்டுள்ளது.

இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே.

சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அப்பிள். இந்த மாற்றம் அப்பிள் வாடிக்கையாளர்களிடம் பெரியளவில் அதிருப்தியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 21.09.2012 வெள்ளிக்கிழமை அன்று முதல் இந்த அப்பிள் ஐ போன் 5எஸ் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அப்பிள் ஐ போன் 5 வெளியீட்டு நிகழ்வின் போது புதிய வடிவிலான ஹெட்போன்கள், புதிய ஐ பொட் டச், ஐ பொட் நெநோ மற்றும் மேம்படுத்தப்பட்ட டெக்ஸ்ட் டொப் ஐ டியூன்ஸ் அப்ளிகேஷன் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியிருந்தனர் அப்பிள் நிறுவனத்தினர்.

தற்போதைய அப்பிள் பாவனையாளர்கள் ஐ போன் 5 க்கு மாறவிரும்பினால் மாறுவதற்கான பல நல்ல தொழில்நுட்ப அம்சங்கள் அதில் உள்ளன. இருப்பினும் அப்பிள் ஐ போன் 5இன் வசதிகளிலிருந்து வேறுபட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட செம்சுங் கெலக்ஸி எஸ்3,  அண்மையில் நொக்கியா அறிமுகப்படுத்திய லுமியா920 போன்ற ஸ்மார்ட் போன்களும் சந்தையில் உள்ளன.

இதனால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அப்பிள் ஐ போன் 5 ஒப்பீட்டு ரீதியில் புரட்சிகரமான படைப்பாக இல்லை என்றே ஸ்மார் போன் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் தங்களது ஒவ்வொரு பிரதான ஸ்மார்ட்போனிலும் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. வடிவத்திலும் அவை நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அப்பிள் அதன் திரையில் அளவை சற்று அதிகரித்து, கண்ணாடி மற்றும் அலுமினியத்தை உபயோகித்தபோதும் பெரிய அளவிலான ஐ போன் 4எஸ் என்ற எண்ணத்தை மட்டுமே தருகின்றது.

செம்சுங், எச்.டி.சி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்பிடும் போது  புரட்சிகரமானதும் சந்தையில் புதுமைகளைப் புகுத்திய நிறுவனம் என்ற வகையிலும் அப்பிளின் தொழில்நுட்ப அம்சங்கள் சற்றுக் குறைவே என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஸ்டீவ் ஜொப்ஸின் தேவையை உணர்த்தி நிற்கும் மற்றுமொரு படைப்பாகவே இந்த ஐ போன் 5 களமிறங்கியிருப்பதாக எண்ணத்தோன்றுகிறது.

எதுவாகினும் ஸ்டீவ் ஜொப்ஸ் ஆரம்பித்த இந்த அப்பிள் தொழில்நுட்பத்திற்கான மதிப்பின் காரணமாக போட்டிபோட்டுக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டு கொள்வனவு செய்ய இருக்கும் கூட்டம் ஐ போன் 4எஸ் படைப்பை தூக்கியது போல இதனையும் தூக்கிவிடலாம் எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓவர் confident உடம்புக்கு ஆகாமல் போயிருமோ!!!



Post has been summerised in English

Apple I Phone 5 Release : Will it Challenge?

Despite the excitement surrounding the new iPhone5. But after the i Phone 5 launch it getting mixed review from technology marcket analysers end.

***Many fans were left angry last month when images allegedly showing the iPhone 5's new design leaked out, showing the traditional 30-pin dock connector - used for charging, syncing files and pumping audio to hi-fis - had been re-designed into a smaller shape.

***There will be adapters available so that the new phone will be able to connect to sound docks and other accessories designed for the old phones.
Speaking at today's launch, Phil Schiller, Apple's senior vice president of worldwide marketing, said: '
‘The iPhone from its start used the 30 pin connector, and it has served us well. A lot has changed and it is time for the connector to evolve - and our new connector is called Lightning.’

***The 'nano-SIM' slot, containing the SIM card which connects a phone to the carrier network, has also been redesigned to be thinner, although this will be unlikely to cause much disruption to users as networks will provide replacements SIMs if necessary.

There are also rumours, reported on iMore, that the iPad 3, which was released in the Spring, will get a slight tweak this Autumn to brink the dock connector in-line with the rest of the range.

***The 4G network - which offers speeds up to five times faster than 3G - will be available on HTC, Samsung, Nokia and Huawei devices, as well as 'one more to come', widely expected to be the Apple product.

***The 4G services will allow uninterrupted access to the web on the go, high definition movies to be downloaded in minutes and TV to be streamed without buffering.

***The battle for domination of the mobile market has become increasingly heated recently with Apple's competitors taking it on with a series of new products.

***Nokia and Microsoft recently joined forces to launch two new phones which will run on the Windows operating system.

***The Nokia Lumia 920 and Nokia Lumia 820 are the Finnish company's attempt to claw back lost ground since it lost its position as the world's biggest phonemaker to Samsung.

***Now experts believe the iPhone 5 could dwarf them all, with 'unprecedented demand' expected for the handset.

***Today Apple was preparing to open online pre-orders for the hugely anticipated gadget, which goes on sale on Friday 21st September.







Wednesday, September 12, 2012

அப்பிள் 5எஸ் வெளியீடு : நேரலை (Apple iPhone 5 Release: LIVE EVENT STREAM)


தொழில்நுட்ப உலகில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்பிள் 5எஸ் இன்று புதன் கிழமை வெளியிடப்படுகிறது.

மறைந்த அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸை தொடர்ந்து தலைமை நிருவாக அதிகாரியாக பதியேற்றுக்கொண்ட டிம் குக் அப்பிள் 4எஸ் ஸ்மார்ட் போனை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வெளியிட்டு வெற்றியும் கண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள அப்பிள் தொழில்நுட்பத்தில் உருவான மற்றுமொரு படைப்பான அப்பிள் ஐ போன் 5எஸ் இனை இன்று புதன் கிழமை உத்தியோகபூர்வமாக அப்பிள் நிறுவனம் வெளியிடுகிறது.

இதன் விலை? சந்தையில் எப்போது கிடைக்கும்? இதில் புகுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் என்ன? என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

அப்பிள் ஐ போன் 5எஸ் வெளியீட்டின் நேரலையினை இங்கு காணலாம்...

Live video from your iPhone using Ustream

Apple iPhone 5 Release: LIVE EVENT STREAM
The day has finally arrived.
Apple enthusiasts around the world are buzzing as the Northern California-based tech company unveils their last phone with the iPhone 5 release on Wednesday.
The company doesn't appear to have lost much speed under the leadership of chief executive officer Tim Cook. Following the death of Steve Jobs, Cook announced theiPhone 4s in October 2011 and sales for the iPhone have remained strong. When Cook introduced the iPhone 4s, he was also introducing himself to millions of tech fans around the world.
This time Cook, will deliver a new phone, as many expect specific additions to the iPhone 4s. 
The 1 PM eastern time event will look to answer several questions, as Apple execs take the stage. 
Will there be more power in the new casing? Will the screen be larger? What adjustments will be made to Siri? When will the phone hit stores? Will T-Mobile be a carrier? What adjustments will be made to the camera? How much will it cost? 
Certainly, there will be faster 4G data speeds. The iPhone 4s was an enormous success, as Apple seemed to take a bigger bite out of the highly profitable smart phone industry.
Here is a link to the live event: