சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, May 11, 2016

அப்போது விக்கிலீக்ஸ், இப்போது பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ்

உலகயே அதிர்ச்சிக்குள்ளாக்கி தற்போது பேசு பொருளாக மாறியுள்ள பனாமா பேப்பர்ஸ் எனும் பணப்பதுக்கலுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்கள் ஓப்சோர்லீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய அதே அளவிலானதொரு அதிர்ச்சியையே இந்த பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியுள்ளது.




முழுமையான தகவலுக்கு தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியைப் பார்க்கவும்.














Wiki leaks then, The Panama Papers now

The Panama papers create shocking waves all over the word as revealed the names that connect with the most controversial panama papers by The international consortium of investigation journalism via offshore website, last night.


for more information watch this video.

Wednesday, October 31, 2012

சாதா கதைகளை மெகா கதைகளாக்கும் ஊடகங்கள் : பீதியை கௌப்புறாய்ங்களே...


பிந்திய செய்திகளை முந்திங்கொண்டு தரும் ஊடகங்கள் பல இன்றைய நாட்களில் தேவையான செய்திகளை எமக்கு தெரியப்படுத்துவதை விட சாதா செய்திகளை மெகா செய்திகளாக்கி பீதியை வரவழைக்கும் ஊடகங்கள் எதிர்பார்ப்புக்கள்தான் என்ன? எதற்காக இந்த ஷங்கர் பட ஸ்டைல்?

ஊடகங்கள் உண்மையில், உண்மைகளை மக்களிடத்தில் சேர்ப்பதை விட மக்களை ஊடகங்களை நோக்கி சேர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது என்பது அண்மைய கால பல செய்திகள் உறுதி செய்கின்றது.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையச்செய்திகள் என எவ்வகை செய்தி ஊடகங்களை எடுத்துக்கொண்டாலும் கடந்த ஒரு வாரமாக தங்களது ஊடகங்களின் பக்கம் எம்மை ஈர்க்க பெரும்பாலான ஊடகங்கள் பயன்படுத்தி வருகின்ற விடயம் 'காலநிலை மாற்றம்' என்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.

வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் இதனால் மக்கள் பீதி, நாடுபூராகவும் அடை மழை அடுத்த 3 நாட்களும் காற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை என்ற பாணியிலமைந்த செய்திகள் இடம் பெறாத ஊடகங்களே இல்லை எனலாம் அதுவும் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்து... என்பது போல ஹை பிட்ச்சில் உச்சரித்து நல்லாத்தான் கௌப்புறாய்ங்கடா பீதிய... (ஆனா எங்களுக்கிட்ட நடக்குமா? நாங்கெல்லாம் சுனாமியில ஸவிம்மிங் போடுறவங்க ஆச்சே)

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் இருப்பினும் இவை சீரற்ற காலநிலை மாற்றமோ அச்சத்தை ஏற்படுத்தும் மாற்றங்களோ என்றால் இல்லை என்பதே நிதர்சனம். சாதரணமாக பருவப்பெயர்ச்சிக் காலத்தில் ஏற்படுகின்ற சீரான மாற்றங்களும் மழையுமே.

ஆனாலும் குறிப்பாக இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் இக்காலநிலை மாற்றத்திற்கு அளவுகடந்த முக்கியத்துவம் கொடுத்து அலாட்டாகிக்கடா ஆறுமுகம் என்று அலார்ட் பண்ணுறதுதான் கொஞ்சம் ஓவரா தெரியுது.

இதனால் மக்கள் அநாவசியமாக அச்சத்திற்குள்ளாகி இருப்பதே வருத்தமாக உள்ளது. இதற்கா காலநிலை மாற்றம் பற்றிய செய்திகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நடைபெறும் மாற்றங்களை மட்டும் தெரியப்படுத்தினால் போதும் ஏனெனில் ஒன்றை ஒன்பதாய்ச் சொல்ல ஏற்கனவே பலர் இங்கே இருக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் எம்மவர்கள் கடலினை அதிகமாகவே அவதானிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். காரணம் கடலிலிருந்து சிறிய சிப்பி கரையொதுங்கினால் போதும் அதிசயம், ஆச்சரியம் என்று சொல்லிக்கொண்டு அதனை பார்க்க சும்மா கூட்டம் பிச்சுக்குது.

2004 இற்கு முன்னரும் பலமுறை வெள்ளமும், பாரிய மழை, பாரிய வெயில், பெரிய காற்று, வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறியாகிவிட்டது. ஆனால் அப்போது இப்போதுள்ள அளவிற்கு மக்கள் அச்சம் கொள்ளவில்லை. காரணம் அப்போது நிறைய ஊடகங்களும் இல்லை போட்டியும் இல்லை.

ஆனால் இன்று ஊடகங்களிடமிருந்து அறிவுறுத்தல்களுக்கு பதில் அச்சுறுத்தல்கள் வெளிவருவது ஊடகங்களின் வளர்ச்சி அல்ல செய்திகளுக்கான வரட்சி என்பது தெளிவாகின்றது.

மேலும் காமச் செய்திகளில் சிக்கியிருந்த ஊடகங்கள் காலநிலைச் செய்திகளிற்கு தாவி ஆறுதலளிப்பார்கள் என்ற நினைப்பில் மழையை அள்ளிப்போட்டு மக்களிடையே பீதிய கௌப்புறாய்ங்களே...

கோடை என்டா வெயிலடிக்கிறதும் மாரி என்டா மழையடிக்கிறதும் சகஜம்தானே... இதுக்கெதுக்கு புதுப் புரளிய கௌப்புறீங்க...