Total Pageviews

Monday, October 8, 2012

அதிகரித்த மாற்றானின் உத்தரவாதத்தொகை


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள மாற்றான் திரைப்படத்தின் அதிகுறைந்த உத்தரவாதத் தொகையாக 50 லட்சம் வரை கொடுக்க திரையரங்க உரிமையாளர் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கே.வி. ஆனந்த் - சூர்யா கூட்டணியின் உருவாகியுள்ள மாற்றான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதனால் திரையரங்க உரிமையாளர்கள் படத்திற்கான அதிகுறைந்த உத்தரவாதத் தொகையினை வழங்க சம்மதித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

அண்மையில் பல பெரிய பட்ஜெட் படங்களில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமையினால் இனி எந்த படத்திற்கு மினிமம் கெரண்டி எனப்படும் உதிகுறைந்த உத்தரவாதத்தொகை கொடுக்கமுடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த போதிலும் தற்போது மாற்றான் படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பினால் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் 50லட்சம் வரை வழங்க சம்மதித்துள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சிறிய திரையரங்கு உரிமையாளர்கள் 10லட்சம் வரை கொடுத்து படத்தினை வாங்க முன்வந்துள்ளனராம். இதற்கு முதல் இந்தளவு பெரிய தொகையில் உத்தரவாதப்பணம் கொடுத்து ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது தற்போது சூர்யாவின் படத்திற்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.