Total Pageviews

Wednesday, October 3, 2012

இந்திய அணி மீது கொலைவெறி தாக்குதல்!

நடைபெற்றுவரும் 4ஆவது இருபதுக்கு 20 உலக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 8 போட்டிகளுடன் நேற்றுமுன்தினம் தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணி.

இதனையடுத்து ரசிகர்கள் ஆத்திரமடைந்து இந்திய அணி வீரர்கள் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்துவர் என ஏற்கனவே பரவலாக பேச்சுக்கள் வெளியாயின இருப்பினும் இம்முறை ரசிகர்கள் தங்களை மறந்து உணர்ச்சிவசப்பட்டு வீரர்களின் வீடுகளை தாக்கவோ வீரர்களை தாக்வோ இதுவரையில் முற்படவில்லை என்பதால் சாதரண கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதனை வரவேற்றதோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக இம்முறை புதிய முறையில் இந்திய அணிக்கு எதிரான தாக்குதல்களை கொலைவெறியாக ஆரம்பித்துள்ளனர் இந்திய அணி ரசிகர்கள் அல்லது ரசிகர்கள் போலி என்பது மட்டும் நிதர்சனம்.

காரணம் கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் இந்திய அணியின் ரசிகர்கள் மற்றும் தற்போது இந்திய அணியை எதிர்ப்பதற்காகவே இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என அனைவரும் இந்திய அணி வீரர்களை கிழி கிழி எனக் கிழித்துவருவதை நாம் காணலாம்.

குறிப்பாக இம்முறை இந்திய அணி விளையாடிய போட்டிகளில் இந்திய அணியை எதிர்த்தாடிய அணிகளுக்கே மைதானத்தில் ஆதரவு அதிகமாக இருந்தது உண்மையில் இவர்கள் ஏனைய அணிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில் உருவான இந்திய அணிக்கு எதிரான ஆதரவாளர்களே என்பதை இப்போது உணர்த்துகின்றது சமூகவலைத்தளங்கள்.

என்றுமில்லாவது இம்முறை இந்திய அணியை கேலி செய்து படங்கள் மற்றும் வசனங்கள் என வசைபாடுகின்றனர். இதில் ஆச்சரியம் இந்திய அணியின் ரசிகர்கள் கூட இதில் களமிறங்கியதுதான்.

ஒரு முறை கிண்ணத்தை கைப்பற்றலாம் ஒவ்வொரு முறையும் நடக்கிற காரியமா இதெல்லாம்... என்ன கொடுமை சார்! 

இனி என்ன செத்தாண்டா சேகர் என்ற பாணியில் ரசிகர்கள் வெறி ஆட்டத்தை சொல்லும் போதே கண்ணக்கட்டுதே செப்பா... அப்படின்னா பார்க்க உங்களுக்கு எப்படி கண்ணக்கட்டும்... 

அந்த கண்ணைக்கட்டும் கொலைவெறித் தாக்குதல்கள் இதோ...